Thursday, May 15, 2025

சைனா பொம்மை பிரகதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/AoWQRGIMoM0


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 16) என் மறுமகள் பிரகதியின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துகளை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.

விசிலடித்து இந்த பாடலை ஆரம்பித்திருக்கிறேன். மெட்டு வித்தியாசமாக வந்திருக்கிறது.

என் மறுமகள் பிரகதி எப்போதுமே "மாமா, நீ பாட்டுல்லாம் நல்லா தான் எழுதுற. ஆனா, நீ பாடாத மாமா. உன் குரல் நல்லா இல்ல" என்று சொல்லுவாள். உண்மைதான். என் குரல் மற்றவர்களை வசீகரிக்கும் அளவு இல்லை. நான் பாட ஆரம்பித்ததே என் மெட்டுகளைத் தான். நான் உண்மையில் சிறந்த பாடகன் இல்லை. ஆனால், என்னிடமிருந்து நல்ல நல்ல மெட்டுகள் வருவதால் நான் ஒரு இசையமைப்பாளர் என்ற உண்மை சமீப காலங்களில் எனக்குத் தெரிய வருகிறது. 

என்னிடம் பாடகர்கள் இல்லை. என்னிடமிருந்து உருவாகும் மெட்டுகளுக்கு பாடல் வரிகளும் என்னிடமிருந்தே வருகின்றன. பாடிக் காட்டுவதற்கு ஆள்கள் இல்லை. என்னிடருந்து உருவாகும் மெட்டுகளை என்னை விட சிறப்பாக பாடகர்களுக்கு பாடிக் காட்ட, மற்றவர்களுக்கு எப்படிப் பாடுவது என்று வேறு யாராலும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. ஏனெனில், இவையெல்லாம் என்னிடமிருந்தே உருவாகும் மெட்டுகள். 

உதாரணத்திற்கு, ஓராண்டுக்கு முன்பு என் மகள் ரிதன்யாவின் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு தலைப்பில் அந்த வாரத்தில் வரும் நிகழ்வுகள் தொடர்பாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசச் சொல்லி இருந்தார்கள். அந்த வாரம் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி. என்னிடமிருந்து தேவர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு பற்றி உருவான மெட்டையும் பாடல் வரிகளையும் என் மகள் ரிதன்யாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். எப்படிப் பாட வேண்டும்? எப்படி தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்? எந்த இடத்தில் எந்த அளவு ஏற்ற இறக்கத்தோடு பாட வேண்டும்? என நானே பயிற்சி கொடுத்து பள்ளியில் அனைவரின் முன்னிலையில் பாடியிருந்தாள். அதன் பிறகு பள்ளி ஆசிரியை ஒருவர் என் மகள் பாடிய விதம் குறித்து, அவள் தமிழை உச்சரித்த விதம் குறித்து பள்ளி சார்ந்த எல்லா whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொண்ட நிகழ்வு குறிப்பிடத் தக்கது. 




உந்தன் பிறந்தநாளில் நானும்
உனக்கு வாழ்த்துச் சொன்னேனே

எந்தன் அருகில் வந்தே நீயும்
முத்தம் தந்தே செல்வாயே 

கண்ணே மணியே குறும்பின் தலைவி
முன்னே வருவாய் வாயாடி

முத்தே அழகே சைனா பொம்மை
அசைந்தே ஆடி வாயேண்டி 

சொத்தே சுகமே சுட்டிப் பெண்ணே
சொல்லும் தமிழே அமுதமடி

மாமா மாமா சொல்லும் ரோபோ
மண்ணில் பிறந்த கவிதையடி

மழலை கொஞ்சும் அழகிய கண்ணே
மகிழ்வாய் துள்ளும் மான் தானே

கவலைகள் மறந்து கானமும் பாடும் 
குக்கூ குக்கூ குயில் தானே

நெஞ்சம் மகிழ்ந்து கொஞ்சம் எழுந்து
ஆடிடும் பாடல் நீ தானே

உள்ளம் குளிர்ந்து பள்ளம் நிறைந்து
வெள்ளம் ஆகிடும் நீர் தானே

அங்கம் எங்குமே பொங்கிடும் கங்கை
மழையைப் போல பொழிவாயே 

அழகாய் மலராய் அழகிய தமிழாய் 
என்றும் உயர்ந்தே நிற்பாயே

உந்தன் பிறந்தநாளில் நானும்
உனக்கு வாழ்த்துச் சொன்னேனே

Thursday, May 8, 2025

பாட்டுப் பாடிட வா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xUHt-sF8DK4


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 09) என் மூத்த மகள் ரிதன்யாவின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துக்களை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.


இந்த மெட்டு என்னிடமிருந்து உருவான போதே இதற்கான வரிகளும் சேர்ந்தே வந்தன. அதோடு சேர்ந்து ஒரு காட்சியும் (scene) கற்பனையாக உருவானது.

அந்தக் கற்பனை இதுதான்.

ஒரு பாடகர் பாடுவதற்காக மேடையில் நின்று கொண்டிருக்கிறார். கீழே இருக்கைகளில் குழந்தைகள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யாருமே பாடலை கேட்க, கவனிக்க விருப்பம் இல்லாதவர்கள் போல தங்களுக்குள் பேசி அரட்டை அடித்துக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

அந்த குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஒரு மெட்டை அந்தப் பாடகர் ரீங்காரமிடுகிறார் (humming). அந்த மெட்டைக் கேட்டு குழந்தைகள் சிரிக்க வேண்டும், கிண்டல் அடிக்க வேண்டும், மகிழ்ச்சி அடைய வேண்டும்  என்பதற்காகவே, நகைச்சுவையை உண்டாக்கும் குரலில் அந்த மெட்டை ரீங்காரமிடுகிறார் (humming). அவர் நினைத்தது போலவே, குழந்தைகள் அவர் பாடிய மெட்டைக் கேட்டு மகிழ்கின்றனர், கிண்டல் அடிக்கின்றனர். சிரிக்கின்றனர்.

அதன் பிறகு அந்தப் பாடலை பாடுகிறார். பாடல் முடியும் வரை குழந்தைகள் முழுவதும் கேட்டு மகிழ்கின்றனர்.

இது தான் எனக்கு கற்பனையில் கிடைத்த காட்சி.

நான் ஒரு இயக்குனராக இருந்திருந்தால், இதை ஒரு விழியமாகவே தயார் செய்து வெளியிட்டிருப்பேன். ஆனால், எனக்கான தொழில் (Profession) வேறு. சரியான பொருதாரச் சூழல், சரியான காலச்சூழல் அமையும் போது நான் நினைத்தபடி இந்தக் காட்சியை ஒரு சிறு விழியமாக வெளியிடுவேன்.

என் ஒவ்வொரு மெட்டுமே எந்த வித பாடல்களின் சாயலின்றி என்னிடமிருந்து உருவாகின்றன. 

இந்த மெட்டுமே வித்தியாசமான மெட்டு தான்.

வரிகளுமே தமிழில் உள்ள எளிமையான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துத்தான் இந்தப் பாடலை நான் எழுதியிருக்கிறேன்.




பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி
பிரியமான உறவுக்கென்று

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா
---

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

பிறந்தபோது அடைந்த மகிழ்ச்சி
என்றும் தொடர வேண்டுமென்று

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா
---

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

அழகு நிலவின் அன்பு மலரின்
பிறந்தநாளை மனதில் வைத்து

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா
---

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

குறும்பு செய்யப் பிறந்த மலரே
கொஞ்சிப் பேசும் அன்பு மகளே

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா
---

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

செல்ல மகளே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே முல்லை மலரே

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 
---

Saturday, May 3, 2025

கள்ளழகர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

வரும் மே 11 மற்றும் 12 தேதிகளில் சித்திரைத் திருவிழா - கள்ளழகர் விழா தென் மாவட்டங்களான மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. 

கள் என்றால் கருப்பு. கள்ளழகர் என்றால் கருப்பு அழகர் என்று பொருள். 

அனைவரின் "வீட்டில் இருப்பவன்" என்ற வார்த்தை சுருங்கி வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்றானது. 

மெட்டு அருமையாக வந்திருக்கிறது. பாடும்போது எழுந்து நின்று ஆடிக்கொண்டே பாடியது போன்ற ஒரு உணர்வு. எனக்குள்ளே இதற்கான பின்னணி இசையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் இசை தெரியாத, இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாத இசையமைப்பாளர். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன். இசை என்ற மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன்.

என்னுடைய இரு பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. கோபி என்னிடம் என் இசை பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் இசையை கற்றுக் கொண்டோம். ஆனால், இசை உங்களுக்குள்ளேயே ஏற்கனவே இருக்கிறது." என்று.

எனக்குத் தோன்றும் இசையும் மெட்டும் பாட்டும் என்னை உறங்க விடவில்லை. நானே இசையை விட்டு அமைதியாக விலகி விட நினைத்தாலும் என்னுடைய இசையே என்னை இசைக் கருவிகள் வாசிக்க வைத்து பின்னணி இசை அமைக்கும் அளவிற்கு ஒரு முழுமை அடைந்த இசையமைப்பாளராக என்னை மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்து இல்லை.



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/MRwDLjmtzHg






வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே

அழகா கள்ளழகா அழகர் கோயிலிலே 
அழகாய் அமர்ந்திருக்கும் பாரதப் பேரரசன் 

சிறார் பள்ளி எனும் குருகுலம் நடத்தியவன்
இன்று அது மருவியதோ திருச்சிராப்பள்ளி என்றே

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்தே தான்
வானத்தை ஆராய்ந்த விஷ்ணுவே எம் தலைவன்

ஓணம் பண்டிகையின் உண்மை நாயகனே 
அரச ஆல மரம் தந்த விநாயகனே

பாம்புப் பஞ்சாங்கம் பாரதம் முழுமைக்கும் 
படைத்தவர் கள்ளழகர் போற்றுவோம் போற்றுவோமே 

வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே