Thursday, May 8, 2025

பாட்டுப் பாடிட வா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xUHt-sF8DK4


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 09) என் மூத்த மகள் ரிதன்யாவின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துக்களை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.


இந்த மெட்டு என்னிடமிருந்து உருவான போதே இதற்கான வரிகளும் சேர்ந்தே வந்தன. அதோடு சேர்ந்து ஒரு காட்சியும் (scene) கற்பனையாக உருவானது.

அந்தக் கற்பனை இதுதான்.

ஒரு பாடகர் பாடுவதற்காக மேடையில் நின்று கொண்டிருக்கிறார். கீழே இருக்கைகளில் குழந்தைகள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யாருமே பாடலை கேட்க, கவனிக்க விருப்பம் இல்லாதவர்கள் போல தங்களுக்குள் பேசி அரட்டை அடித்துக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

அந்த குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஒரு மெட்டை அந்தப் பாடகர் ரீங்காரமிடுகிறார் (humming). அந்த மெட்டைக் கேட்டு குழந்தைகள் சிரிக்க வேண்டும், கிண்டல் அடிக்க வேண்டும், மகிழ்ச்சி அடைய வேண்டும்  என்பதற்காகவே, நகைச்சுவையை உண்டாக்கும் குரலில் அந்த மெட்டை ரீங்காரமிடுகிறார் (humming). அவர் நினைத்தது போலவே, குழந்தைகள் அவர் பாடிய மெட்டைக் கேட்டு மகிழ்கின்றனர், கிண்டல் அடிக்கின்றனர். சிரிக்கின்றனர்.

அதன் பிறகு அந்தப் பாடலை பாடுகிறார். பாடல் முடியும் வரை குழந்தைகள் முழுவதும் கேட்டு மகிழ்கின்றனர்.

இது தான் எனக்கு கற்பனையில் கிடைத்த காட்சி.

நான் ஒரு இயக்குனராக இருந்திருந்தால், இதை ஒரு விழியமாகவே தயார் செய்து வெளியிட்டிருப்பேன். ஆனால், எனக்கான தொழில் (Profession) வேறு. சரியான பொருதாரச் சூழல், சரியான காலச்சூழல் அமையும் போது நான் நினைத்தபடி இந்தக் காட்சியை ஒரு சிறு விழியமாக வெளியிடுவேன்.

என் ஒவ்வொரு மெட்டுமே எந்த வித பாடல்களின் சாயலின்றி என்னிடமிருந்து உருவாகின்றன. 

இந்த மெட்டுமே வித்தியாசமான மெட்டு தான்.

வரிகளுமே தமிழில் உள்ள எளிமையான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துத்தான் இந்தப் பாடலை நான் எழுதியிருக்கிறேன்.




பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி
பிரியமான உறவுக்கென்று

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா
---

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

பிறந்தபோது அடைந்த மகிழ்ச்சி
என்றும் தொடர வேண்டுமென்று

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா
---

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

அழகு நிலவின் அன்பு மலரின்
பிறந்தநாளை மனதில் வைத்து

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா
---

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

குறும்பு செய்யப் பிறந்த மலரே
கொஞ்சிப் பேசும் அன்பு மகளே

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா
---

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

செல்ல மகளே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே முல்லை மலரே

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 
---

No comments: