Showing posts with label கவிதைகள் (பாகம் - 4). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 4). Show all posts

Wednesday, August 31, 2011

நாய்க்குட்டி!

நான் உன்
வீட்டிற்கு வந்திருந்தபோது
உன் நாய்க்குட்டியை
கொஞ்சிக்கொண்டிருந்தாய்!

ச்சே...
நானும் ஒரு
நாய்க்குட்டியாய்
பிறந்திருக்கலாம்!
நீ என்னை
உன் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடுவதற்கு...

காதல் சுனாமி!

வெள்ளைநிற சுடிதாரில்
விண்ணிலிருந்திறங்கிய
தேவதைபோலவே
என் கண்முன்னே வந்தாய்!
எனைக்கடந்து போனாய்!
நாமிருவரும் பல்கலையில்
பயிலும்போது...

உன்னை நான்
கடந்துபோன
ஒவ்வொருமுறையும்
சுனாமி வந்து போனதடி!!

புரிந்துகொண்டாள்!

எப்போதும்
என் கவிதை ஏடுகளை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் வைத்திருப்பேன்!

அன்றொருநாள்
நான் உறங்கியபின்
என்தங்கை
என்கவிதைகள் அனைத்தையும்
படித்துவிட்டாள்!
மறுநாள் காலை
என்னருகில் வந்தமர்ந்தபடி
சொன்னாள்!

‘சிறுவயதில்
எதுவுமே பேசமாட்டாய்
காரணமே இல்லாமல்
கோபப்பட்டு என்னை அடிப்பாய்!
உன் உருவத்தைப்போலவே
உன்னை
முரடன் என
நினைத்திருந்தேன்!
ஏண்ணே...
நீ இவ்வளவு மென்மையானவனா?’

தங்கையின் கேள்வி!

உனைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளை
ஒன்றுவிடாமல்
படித்துவிடுவாள் என்தங்கை!

உன்னிடம் தொலைபேசியில்
பேசியபோது
என் தங்கையிடம்
பேசச் சொன்னேன்!
அவள் உன்னோடு
பேசிமுடித்தவுடன்
விளையாட்டுக்கு
கைகொட்டி சிரித்தாள்!
‘அவள் குரல்
பெண்குரல் போல் இல்லையே?
இனிமையாக இல்லையே?’
என்று...

எனக்கு அவள்மீது
கடுங்கோபம் வந்து
திட்டிவிட்டு
அடிக்க கை ஓங்கிவிட்டேன்!
அழுவிட்டாள் அவள்!!

சிறிதுநேரம் கழித்து
என்னிடம் சொன்னாள்!
‘ஏண்ணே
அவள்மீது உனக்கு
இவ்வளவு அன்பா?’
என்று...

அண்ணி!

உன்னைப் பற்றிய
நினைவுகளை
என் தங்கையிடம்
ஒரே ஒருமுறை
சொல்லியிருக்கிறேன்!
அப்போதிலிருந்து இன்றுவரை
நான் ஊருக்கு
போகும்போதெல்லாம்
உன்னைப்பற்றி என்னிடம்
தவறாமல் கேட்டுவிடுகிறாள்!
அவள் விசாரிக்கும்
ஒவ்வொருமுறையும்
கண்களில்
ஏக்கத்தை கவனித்தேன்!
தெரிந்துகொண்டேன்!

அவள் உனைதன்
அண்ணியெனவே
நினைத்திருக்கிறாள் என்று...!!

அரசியல்!

நம்மிந்திய அரசியல்
சாக்கடையல்ல...
அது ஒரு பூக்கூடை!

குரங்குகையில் கிடைத்த
பூமாலையைப் போல்
நம்முடைய நாடு
அரசியல்வாதிகளின்
கைகளில் சிக்கி
சாக்கடையாகிறது!

எனவே
நம்மிந்திய அரசியல்
சாக்கடையல்ல...
அது ஒரு பூக்கூடை!

தீக்குளிக்கட்டுமா?

உன்னை
மறக்கவேண்டுமென
நினைத்து
என்னிடமிருந்த
உன் புகைப்படத்தை
தீயிலிட்டுக் கொளுத்தினேன்!

உன் புகைப்படம்
தீக்குளித்து இறந்துபோனது!

அதன்பிறகும்
உன்நினைவுகள்
என்னைவிட்டு அகலவில்லை!

அப்போதுதான்
புரிந்துகொண்டேன்!

உன்னை
மறக்கவேண்டுமெனில்
நானே தீக்குளிக்க வேண்டுமென்று...!!

கடவுள்!

கடவுளைக்
காணவேண்டுமென்ற
ஆசை போய்விட்டது!

என்காதலி உனை
பேருந்தில் பார்த்த
அந்த நிமிடத்திலிருந்து...

வடிவேல் முருகா!

சிவனின் மகனே!
உமைபா லகனே!!
முத்தமிழ் அழகா!
வடிவேல் முருகா!!

அமிழ்தினு மினிய
தமிழ்மொழி தருவாய்!
வணிகம் செய்ய
ஆங்கிலம் தருவாய்!!

முந்தி வந்தோரின்
முன்வினைகள் தீர்ப்போனாம்
தொந்தி வயிற்றோனின்
தம்பி வேலவனே! – என்
சிந்தையை சீர்படுத்தி – எனை
சிறப்புடனே வாழவைப்பாயே!!

துள்ளிவருகுது வேல்!

துள்ளிவருகுது வேல்!
தள்ளிப்போ பகையே!
சொல்லிப்பார் தினமிதையே!
உன்னை அண்டாது பகையே!
உன்னை அண்டாது பகையே!!