Wednesday, August 31, 2011

புரிந்துகொண்டாள்!

எப்போதும்
என் கவிதை ஏடுகளை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் வைத்திருப்பேன்!

அன்றொருநாள்
நான் உறங்கியபின்
என்தங்கை
என்கவிதைகள் அனைத்தையும்
படித்துவிட்டாள்!
மறுநாள் காலை
என்னருகில் வந்தமர்ந்தபடி
சொன்னாள்!

‘சிறுவயதில்
எதுவுமே பேசமாட்டாய்
காரணமே இல்லாமல்
கோபப்பட்டு என்னை அடிப்பாய்!
உன் உருவத்தைப்போலவே
உன்னை
முரடன் என
நினைத்திருந்தேன்!
ஏண்ணே...
நீ இவ்வளவு மென்மையானவனா?’

No comments: