தண்ணீரில் மணம்வீசுவது அகில்! - மழையாய்
கண்ணீரைச் சிந்துவது முகில்!!
இரவின் மரணம் பகல்! - நமக்கு
இரவின் ஒளியாய் அகல்!!
மன்னர்களுக்கு என்றுமே அரியாசனம்! - மனித
மதங்களுக்கு இனிமேல் சரியாசனம்!!
பாசத்திற்கு பிரிவு ஒருபாலம்! - நம்
தேசத்திற்கு இனிஇல்லை மரணஓலம்!
பயிர்களைக் காப்பவன் உழவனே! - உலக
உயிர்களை காக்கவாடா எம்மிளைஞனே!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 03-12-2005
Monday, June 14, 2010
நீ!
அன்று UNIX வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். அவளின் பின்னழகை இரசித்தபடி அமர்ந்திருந்தேன். அவள் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.
கைவளை குலுங்க...
கனியிதழ் சிரிக்க...
காற்சிலம்பு அழைக்க...
கொடியிடை தடுக்க...
விழிச்சிறை அடைக்க...
கார்கூந்தல் உலுக்க...
தனிநடை இழுக்க...
முகிலெடுத்து செய்த அகமோ!
அகிலேடுத்து செய்த முகமோ!!
என்உயிரெடுக்க வந்த தங்கமோ..!!
நீ!!!
கா(சா)தல் பார்வை!
ஒருநொடியில்
உன்பிம்பம்
என்கண்ணில் விழுந்தது!
மறுநொடியில்
என் இன்பம்
துன்பமாய் மாறியது!!
உன்பிம்பம்
என்கண்ணில் விழுந்தது!
மறுநொடியில்
என் இன்பம்
துன்பமாய் மாறியது!!
காதல் இனம்!
கோபப்படும்போது
நீ வல்லினமென்று
தோன்றினாய்!
அன்பாய் பேசியபோது
நீ மெல்லினமாய் தோன்றினாய்!
நீ
வல்லினமா?
மெல்லினமா?
குழப்பம் வந்தது
எனக்கு!
ஓர்நாள்
உன் இடையைப்பார்த்த போது
தெரிந்துகொண்டேன்!
நீ
இடையினமென்று!!
நீ வல்லினமென்று
தோன்றினாய்!
அன்பாய் பேசியபோது
நீ மெல்லினமாய் தோன்றினாய்!
நீ
வல்லினமா?
மெல்லினமா?
குழப்பம் வந்தது
எனக்கு!
ஓர்நாள்
உன் இடையைப்பார்த்த போது
தெரிந்துகொண்டேன்!
நீ
இடையினமென்று!!
வாய்ப்பில்லை!
கொஞ்சுதமிழ் பேசும்
வஞ்சியுனைக்கான
படபடக்கும் நெஞ்சுடன்
அனைவரும் அஞ்சும் வெயிலில்
நிற்கிறேன்!
மௌனமாய் பயணிக்கிறாய்
எனைக்கடந்து!
என் நிழலிலிருந்து
கத்தியின்றி யுத்தமின்றி
சத்தமின்றி
நித்தம் நித்தம்
இரத்தம் வழிந்தோடுவதை
நீ
அறிந்திருக்க வாய்ப்பில்லை! - உனக்கு
புரிந்திருக்க வாய்ப்பில்லை!!
வஞ்சியுனைக்கான
படபடக்கும் நெஞ்சுடன்
அனைவரும் அஞ்சும் வெயிலில்
நிற்கிறேன்!
மௌனமாய் பயணிக்கிறாய்
எனைக்கடந்து!
என் நிழலிலிருந்து
கத்தியின்றி யுத்தமின்றி
சத்தமின்றி
நித்தம் நித்தம்
இரத்தம் வழிந்தோடுவதை
நீ
அறிந்திருக்க வாய்ப்பில்லை! - உனக்கு
புரிந்திருக்க வாய்ப்பில்லை!!
காதல் பாசறை!
உன்
மௌன யுத்தத்தில்
கொஞ்சம்கொஞ்சமாய்
தூக்கிலிடப்படுவது
என்
உறக்கங்கள் மட்டுமல்ல...
உயிரணுக்களும்தான்!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. இராணி – 08-10-2006
மௌன யுத்தத்தில்
கொஞ்சம்கொஞ்சமாய்
தூக்கிலிடப்படுவது
என்
உறக்கங்கள் மட்டுமல்ல...
உயிரணுக்களும்தான்!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. இராணி – 08-10-2006
என் வாழ்க்கை!
2005 ம் ஆண்டிலிருந்து நான் கவிதைகல் எழுத துவங்கினேன். நான் பலமுறை என்னுடைய கவிதைகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பியும் முதல் முறை வெளிவர சற்று கால தாமதமானது. அந்த வருத்தத்தில் நான் எழுதியது.
மாற்றத்தைத் தருவது பொதுவாழ்க்கை!
ஏமாற்றத்தைத் தருவது என்வாழ்க்கை!!
தூக்கத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
துக்கத்தைக் கொடுப்பது என்வாழ்க்கை!! - மனிதனோடு
ஒட்டிவாழவைப்பது பொதுவாழ்க்கை!
எட்டாக்கனியைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
அமுதத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
அழுகையைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
கதைசொல்ல வைப்பது பொதுவாழ்க்கை!
கவிதைசொல்ல வைப்பது என்வாழ்க்கை!!
மாற்றத்தைத் தருவது பொதுவாழ்க்கை!
ஏமாற்றத்தைத் தருவது என்வாழ்க்கை!!
தூக்கத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
துக்கத்தைக் கொடுப்பது என்வாழ்க்கை!! - மனிதனோடு
ஒட்டிவாழவைப்பது பொதுவாழ்க்கை!
எட்டாக்கனியைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
அமுதத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
அழுகையைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
கதைசொல்ல வைப்பது பொதுவாழ்க்கை!
கவிதைசொல்ல வைப்பது என்வாழ்க்கை!!
விடியலை நோக்கி...
சிவம் பெரிதா?
சிலுவை பெரிதா?
தொழுகை பெரிதா?
நிறுத்துவோமே சமயப்பூசலை!
திறப்போமே இதயவாசலை!!
மனஉறையில் உள்ள
மதக்கறைகளை
புதுப்பறையடித்து
தனிச்சிறையில் வைப்போம்!
சமயம் பார்த்து
சமயங்களை சாய்ப்போம்!
சாதிக்காய்கள் போதைதருவதுபோல்
சாதிப்பேய்கள் பேதைகளாக்குகின்றன
நம்மை!
சாகடிப்போம் சாதியை!!
தீர்த்துக்கட்டும் தீவிரவாதத்தை
தீயிலிட்டுக் கொளுத்துவோம்!
உறுதிதரும் குருதியால்
உள்ளங்கள் இணையட்டும்! - அன்பு
வெள்ளங்கள் பொங்கட்டும்!!
சிரிப்பதை குறைப்போம்!
சிந்தித்து செயல்படுவோம்!!
இந்தியாவின் விடியல்
இளைஞர்கள் கைகளில்...
சிலுவை பெரிதா?
தொழுகை பெரிதா?
நிறுத்துவோமே சமயப்பூசலை!
திறப்போமே இதயவாசலை!!
மனஉறையில் உள்ள
மதக்கறைகளை
புதுப்பறையடித்து
தனிச்சிறையில் வைப்போம்!
சமயம் பார்த்து
சமயங்களை சாய்ப்போம்!
சாதிக்காய்கள் போதைதருவதுபோல்
சாதிப்பேய்கள் பேதைகளாக்குகின்றன
நம்மை!
சாகடிப்போம் சாதியை!!
தீர்த்துக்கட்டும் தீவிரவாதத்தை
தீயிலிட்டுக் கொளுத்துவோம்!
உறுதிதரும் குருதியால்
உள்ளங்கள் இணையட்டும்! - அன்பு
வெள்ளங்கள் பொங்கட்டும்!!
சிரிப்பதை குறைப்போம்!
சிந்தித்து செயல்படுவோம்!!
இந்தியாவின் விடியல்
இளைஞர்கள் கைகளில்...
Tuesday, May 25, 2010
நீ மட்டுந்தான்!
வானில் விண்மீன்களாய்
என்னைக் கடக்கலாம்
பல பெண்கள்!
இரவில் நிலவாய்
என் உள்ளத்தில்
குளிர்பவள்
நீ மட்டுந்தான்!!
என்னைக் கடக்கலாம்
பல பெண்கள்!
இரவில் நிலவாய்
என் உள்ளத்தில்
குளிர்பவள்
நீ மட்டுந்தான்!!
துளிப்பா
நட்சத்திரப் பெண்களில்
நிலா!
என்னவள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012
2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012
3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012
நிலா!
என்னவள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012
2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012
3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012
Subscribe to:
Comments (Atom)