Friday, August 27, 2010

உயிர் செல்லும் பாதை!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?
என் உறவைக் கொல்லும் பாதை காதல்!
இந்த மானுடத்தைக் கொல்லும் பாதை காதல்!!

உன்னை நினைத்து நினைத்து
கண்களில் வழிந்தோடுகிறது இரத்தம்!
மரத்துப் போனது என்னிதயம்! - உன்னை
மறக்க மறுக்கிறது என்னிதயம்!!

மனம் வெதும்பி நின்றேன்!
கண்ணீர் ததும்ப சென்றேன்!!

சொல்லிலே இன்பந்தான்! - உன்னால்
உள்ளத்திலே துன்பந்தான்!!

காதலை உணர்ந்தேன்! - என்னுள்
கவிதை பிறந்தது!! - நீ
என்னை உணர்ந்தால்
உன்னுள் காதல் பிறக்கும்!!

இளமையில் வேகம்!
முதுமையில் சோகம்!
உன்மேல் கொண்ட காதலெலாம்
வாழ்விலொரு பாகம்!!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?

Wednesday, August 11, 2010

ஆசை!

அன்பே...
நான்
அமைச்சராகலாமென்று
ஆசைப்பட்டேன்!

இடைத்தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
இடைபார்த்துத் தோற்றேன்!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
ஜடைபார்த்துத் தோற்றேன்!!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்!
உன்
நடைபார்த்துத் தோற்றேன்!!

உன் கணவனாகலாமென்று
ஆசைப்பட்டேன்!
உன்னை
காதலித்துக் கொண்டிருக்கிறேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இராணி – 27-08-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

3. தமிழ்ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 23-10-2011

4. தமிழ்நலக்கழகம் - 01-01-2012

எழுந்து வா நண்பா!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!

ஒரு பெண்ணை
காதலிக்கத் தெரிந்த உனக்கு
இம்மண்ணில்
சாதிக்கத் தெரியாதா என்ன?
எழுந்து வா நண்பா!!

தமிழனக்கு
அச்சத்தை துச்சமென
மதிப்பது வழக்கம்!
விடிந்தபின்னும்
ஏன் இன்னும் உறக்கம்?
எழுந்து வா நண்பா!!

முயற்சி முயற்சி முயற்சி!
இதுதானே வெற்றியின் பயிற்சி!
இறுதிவரை போராடினால்
உறுதியாய் உனக்கு வெற்றி!
எழுந்து வா நண்பா!!

உன்னில்
ஒன்றும் இல்லை
எனும் சொல்லை
இனி நீநினைத்தால்
உனக்கது தொல்லை!
எழுந்து வா நண்பா!!

தொடங்கியதை முடிக்க
தொடர்ந்து போராடு! - வீட்டில்
முடங்கிக் கிடந்தால்
முன்னேற முடியாது!
எழுந்து வா நண்பா!!

மண்ணைக் கொஞ்சம் தட்டி
விண்ணைக் கொஞ்சம் முட்டி
மனவுறுதியைப் பற்றி
ஏங்கும் போராடு சுற்றி!
உனக்கிறுதியாய் வெற்றி!
எழுந்து வா நண்பா!!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-05-2006

2. இலங்கை வானொலி – 25-06-2006

மௌன யுத்தம்!

பீரங்கிக் குண்டுகளின்
சத்தத்தை விட
உன் மௌனம்
என்னுள்
சத்தமில்லா யுத்தத்தை
நித்தம் நித்தம்
உண்டாக்குவதை
நீ அறிய வாய்ப்பில்லை
கண்மணி!

Saturday, August 7, 2010

காதல்!

ஒலியின்றியே
விழிகள் பேசும்
புதுமொழி!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 22-10-2006

2. முத்தாரம் – 05-11-2006

3. முத்தாரம் – 11-02-2007

4. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Friday, June 25, 2010

மறக்கமுடியாது உன்னை!

தமிழகத்தின் தலைநகரம்
ஏற்றமிகு எழிலோடுஞ் சென்னை! - இந்தத்
தமிழ்மகனுக்கு என்றும் நீதானே அன்னை! - இம்மண்ணில்
கண்டதில்லை உன்னைப் போலொரு பெண்ணை! - பேருந்தில்
உன்னைக் கண்டவுடன் நம்பவில்லை என் கண்ணை! - யாருக்கும்
கொடுக்கமாட்டேன் நீ கொடுத்த தொலைபேசி எண்ணை!
என் உயிர்பிரிந்தாலும் மறவேனே உன்னை!!

ஏக்கம்!

எதிர்பார்ப்புகள்
ஏக்கமாகி
தூர்ந்துபோனது
என் தூக்கம்!
வேறொருத்தியை
எப்படி என்னிதயம்
ஏற்கும்?

உயிர்த்துடிப்பு!

உன்
இடுப்பு மடிப்பில்
என்னிதயத் துடிப்பு!!

காத்திருந்தேன்!

கோடைவெயிலிலும்
குளிர்ச்சி தருகிறது
உன் நினைவு!

என்மேனிதொடும்
தென்றலிலும்
சுவாசிக்கிறேன்
உன் மூச்சுக்காற்றை!

உன்
செவ்விதழிலிருந்து வரும்
தமிழ் வார்த்தைக்காகத்தான்
காத்திருந்தேன்
இருபத்தொரு வருடம்!!

என்ன சொல்லப்போகிறாய்?

நீ என்காதலை ஏற்பாயா? - இல்லை
நான் என்காதலில் தோற்பேனா?
அருகிலிருந்தே உடலை
வேகவைக்கிறாய்! - என்னை
விரும்பாமலே உயிரை
சாகவைக்கிறாய்!!

என் கண்ணில் விழுந்தது உன் பிம்பம்!
என் மனதில் என்றுமே தீராத துன்பம்!!

கண்களின் மோதலால் பிறந்த நம்காதல்
உள்ளங்களின் தேடலால் முடிவது வேண்டாம்
காதலி!

நிறைவேறாத காதல்!
கரைசேராத ஓடம்!
உவமையில் பழமை இருக்கிறது! - அந்தப்
பழமையில் புதுமை நம் காதல்!!

பேருந்து நகர - என்விழிகள்
உன்னை நுகர - என்னுள்
நுழைந்தது காதல்! - நமக்குள்
வேண்டாமே ஊடல்!!

உன் புகைப்படம்
வேண்டாமே கண்மணி!
உன் புன்னகை
மட்டும் போதும் வெண்மதி!!