தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்!
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!
பச்சிளங்குழந்தை கதறினால்
பதறுவாள் தாய்! - தன்
குருதியை பாலாய் மாற்றுவாள்! - மன
உறுதியை பால்வடிவில் ஊட்டுவாள்!!
வயிற்றுப் பிழைப்பிற்காய்
கயிற்றில் நடக்கும் வாழ்க்கையை
பயிற்றுவித்தது வறுமை!
ஒருவேளை உணவிற்காய்
குருதியை பணமாக்கவைக்கிறது வறுமை! - மன
உறுதியை விற்கவைக்கிறது வறுமை!!
தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்! - உறுதியாய்
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!
Friday, June 25, 2010
இரத்ததானம்!
கத்தும் குயிலுக்கு - யாரும்
இராகம் கற்றுக்கொடுப்பதில்லை!
நித்தம் தனம் வருமென்று - யாரும்
இரத்ததானம் செய்வதில்லை!!
சிவப்பணு இரத்தத்தின் சுவாசப்படை!
வெள்ளையணு இரத்தத்தின் அதிரடிப்படை!!
நம்நினைவில் என்றுமே குருதிக்கொடை!!
நித்தம் நித்தம் ஊறுதே இரத்தம்! - அதை
சத்தமின்றி கொடுப்பது நம் சித்தம்!!
வாழ்க்கைப்பாடங்கள் கொஞ்சமாய்க் கற்றும்
இரத்தத்தை விற்றால் அதுபெரும் குற்றம்!
இரத்ததானத்தின் புகழ் பரவட்டும் திக்கெட்டும்!
இத்துடன் இக்கவிதை முற்றும்!!
இராகம் கற்றுக்கொடுப்பதில்லை!
நித்தம் தனம் வருமென்று - யாரும்
இரத்ததானம் செய்வதில்லை!!
சிவப்பணு இரத்தத்தின் சுவாசப்படை!
வெள்ளையணு இரத்தத்தின் அதிரடிப்படை!!
நம்நினைவில் என்றுமே குருதிக்கொடை!!
நித்தம் நித்தம் ஊறுதே இரத்தம்! - அதை
சத்தமின்றி கொடுப்பது நம் சித்தம்!!
வாழ்க்கைப்பாடங்கள் கொஞ்சமாய்க் கற்றும்
இரத்தத்தை விற்றால் அதுபெரும் குற்றம்!
இரத்ததானத்தின் புகழ் பரவட்டும் திக்கெட்டும்!
இத்துடன் இக்கவிதை முற்றும்!!
உன்னைப் பற்றி!
அவளுடைய பிறந்தநாள் 15-01-1984. 2005 ம் ஆண்டு ஜனவரி 16 திங்களன்று அவளிடம் பிறந்த நாளுக்கு மிட்டாய் கேட்டேன். 'விடுதியில் உள்ளது' என பொய் சொல்லிவிட்டு போனாள். என் குழந்தை உள்ளம் ஏங்கி ஏமார்ந்து போனதை அவள் அறியவில்லை.
கண்களிலே ஓவியமாய் நுழைந்துவிட்டாய்!
இதயத்தில் காவியமாய் நிலைத்துவிட்டாய்!!
பட்டாம்பூச்சியாம் இம்மண்ணில் பறக்கிறாய்!
பார்வைகளால் என்மனக்கண்ணை திறக்கிறாய்!!
உன்னை மறக்கவும் முடியவில்லை!
இவ்வுலகில் இறக்கவும் முடியவில்லை!!
கறுப்பாய்த்தான் பிறந்துவிட்டேன்! - தமிழ்க்
கவிதையால்நான் சிறந்துவிட்டேன்!!
சுத்தமாய் உறக்கமே இல்லை! - உன்னிடம்
நித்தமும் இரக்கமே இல்லை!!
உன் அழகான முகத்தை இரசித்துக்கொண்டே
நீ பழகுவதில் பரிவுகண்டேன்!
மெல்லத்தான் சிரிக்கிறாய்! - எனைக்
கொல்லத்தான் சிரிக்கிறாய்!!
காலையில் பூவாய் பிறந்துவிடுவாய்!
என் கண்ணைவிட்டு
மாலையில் மாயமாய் மறைந்துவிடுவாய்!!
பார்க்குமிடமெங்கும் 'நலமா?' என்பாய்!
புகைவண்டி நிலையத்திலும்
புன்னகை சிந்துவாய்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வாங்கித்தருவதாய்
இனிப்பாய்க் கூறுவாய்!
'இனிப்பு எங்கே?' என்று கேட்டால்
'தங்கிய இடத்திலிருக்கிறது' என்று
தயங்காமல் பொய் கூறுவாய்!!
உன்னை நினைக்கும்போது
உள்ளம் அழுகிறது!
உதடு சிரிக்கிறது!
கண்ணீரால் என் நெஞ்சம் நனைகிறது!
நம் காதலால் என் உயிர் வாழ்கிறது!!
கண்களிலே ஓவியமாய் நுழைந்துவிட்டாய்!
இதயத்தில் காவியமாய் நிலைத்துவிட்டாய்!!
பட்டாம்பூச்சியாம் இம்மண்ணில் பறக்கிறாய்!
பார்வைகளால் என்மனக்கண்ணை திறக்கிறாய்!!
உன்னை மறக்கவும் முடியவில்லை!
இவ்வுலகில் இறக்கவும் முடியவில்லை!!
கறுப்பாய்த்தான் பிறந்துவிட்டேன்! - தமிழ்க்
கவிதையால்நான் சிறந்துவிட்டேன்!!
சுத்தமாய் உறக்கமே இல்லை! - உன்னிடம்
நித்தமும் இரக்கமே இல்லை!!
உன் அழகான முகத்தை இரசித்துக்கொண்டே
நீ பழகுவதில் பரிவுகண்டேன்!
மெல்லத்தான் சிரிக்கிறாய்! - எனைக்
கொல்லத்தான் சிரிக்கிறாய்!!
காலையில் பூவாய் பிறந்துவிடுவாய்!
என் கண்ணைவிட்டு
மாலையில் மாயமாய் மறைந்துவிடுவாய்!!
பார்க்குமிடமெங்கும் 'நலமா?' என்பாய்!
புகைவண்டி நிலையத்திலும்
புன்னகை சிந்துவாய்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வாங்கித்தருவதாய்
இனிப்பாய்க் கூறுவாய்!
'இனிப்பு எங்கே?' என்று கேட்டால்
'தங்கிய இடத்திலிருக்கிறது' என்று
தயங்காமல் பொய் கூறுவாய்!!
உன்னை நினைக்கும்போது
உள்ளம் அழுகிறது!
உதடு சிரிக்கிறது!
கண்ணீரால் என் நெஞ்சம் நனைகிறது!
நம் காதலால் என் உயிர் வாழ்கிறது!!
Thursday, June 24, 2010
இயற்கையை இரசிக்கலாமே!
யாரும் இராகம் கற்றுக்கொடுத்து
புதுக் கீதம் பாடவில்லை
குயில்!
யாரும் நடனம் கற்றுக்கொடுத்து
புது நாட்டியம் ஆடவில்லை
மயில்!
குளிர்தென்றல் மேனிதொட
மணம்வீசும் மழையை
தண்ணீராய்... - ஆனந்தக்
கண்ணீராய்...
மானுடத்திற்கு பொழியவிட்டு
மரஞ்செடிகொடிகளை தளிர்க்கவைத்து
உயிர்களின் உயிரைக்காத்து
சோகந்தனை சாகடித்து
தாகந்தனை தீர்த்துவைத்து
தேகம் சிலிர்க்கவைக்கிறது
மேகம்!
கூடிவாழும் வாழ்க்கையை
கோடிவருடத்திற்கு முன்பே
தேடிப்பிடித்து வாழ்கிறது
காகம்!
வேதியியல் மாற்றத்தால்
வீதிகளில் பரவுகிறது
மண்வாசம்!
சுவாசத்தில் மூச்சாகிறது
பூவாசம்!
என் தாய்த்தமிழால்
தலைநிமிரட்டும் நம்தேசம்!
ஆபத்துள்ள வீடுகளில்
குகைபோன்ற கூடுகளில்
சத்தமாய் ஒலிஎழுப்பி
சந்தோசமாய் வாழ்கிறது
தூக்கணாங்குருவி!
பூமித்தாயின் பாறைக்கருவில் பிறந்து
உற்சாகத்தை தற்செயலாய்த் தருகிறது
தூய்மையான அருவி! -பின்னர்
தரணியெங்கும் தண்ணீரால் சிறந்து
மானுடத்திற்கு வாழ்க்கைப்பாடத்தை
வெள்ளோட்டமாய் வாழ்ந்துகாட்டுகிறது
ஆறு!!
உழைத்துக் களைத்தவனுக்கு
இதமான குளிர்தென்றல் காற்றை - பல
விதமான பூக்களின் பாட்டை
நிழலோடு தருகிறது
மரம்!
இவையெல்லாம் கற்றுக்கொடுப்பதை
சற்றே உற்றுநோக்கினால்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான்!
செயற்கையோடு சேராத வாழ்க்கைதான்!!
மானுடப்பிறவிகளான நாமும்
எவரையும் எதிர்க்காமல்
எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால்
மறுப்பேதும் இல்லாமல்
வெற்றி நமக்குத்தான்!!
புதுக் கீதம் பாடவில்லை
குயில்!
யாரும் நடனம் கற்றுக்கொடுத்து
புது நாட்டியம் ஆடவில்லை
மயில்!
குளிர்தென்றல் மேனிதொட
மணம்வீசும் மழையை
தண்ணீராய்... - ஆனந்தக்
கண்ணீராய்...
மானுடத்திற்கு பொழியவிட்டு
மரஞ்செடிகொடிகளை தளிர்க்கவைத்து
உயிர்களின் உயிரைக்காத்து
சோகந்தனை சாகடித்து
தாகந்தனை தீர்த்துவைத்து
தேகம் சிலிர்க்கவைக்கிறது
மேகம்!
கூடிவாழும் வாழ்க்கையை
கோடிவருடத்திற்கு முன்பே
தேடிப்பிடித்து வாழ்கிறது
காகம்!
வேதியியல் மாற்றத்தால்
வீதிகளில் பரவுகிறது
மண்வாசம்!
சுவாசத்தில் மூச்சாகிறது
பூவாசம்!
என் தாய்த்தமிழால்
தலைநிமிரட்டும் நம்தேசம்!
ஆபத்துள்ள வீடுகளில்
குகைபோன்ற கூடுகளில்
சத்தமாய் ஒலிஎழுப்பி
சந்தோசமாய் வாழ்கிறது
தூக்கணாங்குருவி!
பூமித்தாயின் பாறைக்கருவில் பிறந்து
உற்சாகத்தை தற்செயலாய்த் தருகிறது
தூய்மையான அருவி! -பின்னர்
தரணியெங்கும் தண்ணீரால் சிறந்து
மானுடத்திற்கு வாழ்க்கைப்பாடத்தை
வெள்ளோட்டமாய் வாழ்ந்துகாட்டுகிறது
ஆறு!!
உழைத்துக் களைத்தவனுக்கு
இதமான குளிர்தென்றல் காற்றை - பல
விதமான பூக்களின் பாட்டை
நிழலோடு தருகிறது
மரம்!
இவையெல்லாம் கற்றுக்கொடுப்பதை
சற்றே உற்றுநோக்கினால்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான்!
செயற்கையோடு சேராத வாழ்க்கைதான்!!
மானுடப்பிறவிகளான நாமும்
எவரையும் எதிர்க்காமல்
எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால்
மறுப்பேதும் இல்லாமல்
வெற்றி நமக்குத்தான்!!
காதல் யாசகம்!
உன்னை நினைத்து
கண்ணீர்வழி அழுகிறேன்!
கவிதைவழியும் தொழுகிறேன்! - காலையில்
காதல்வலியுடன் எழுகிறேன்!!
காதலைப் பற்றி யோசித்தேன்!
கன்னியுனை நேசிக்கிறேன்!!
தேங்கிய நீரில்
என்றுமே படியும் பாசம்! - என்னுடலில்
தேங்கிய உயிரில்
என்றுமே படியும் உன் பூவாசம்!
என்னகமெலாம் உன்வசம்!
என்றுமே நீதான் என்சுவாசம்!!
கண்ணீர்வழி அழுகிறேன்!
கவிதைவழியும் தொழுகிறேன்! - காலையில்
காதல்வலியுடன் எழுகிறேன்!!
காதலைப் பற்றி யோசித்தேன்!
கன்னியுனை நேசிக்கிறேன்!!
தேங்கிய நீரில்
என்றுமே படியும் பாசம்! - என்னுடலில்
தேங்கிய உயிரில்
என்றுமே படியும் உன் பூவாசம்!
என்னகமெலாம் உன்வசம்!
என்றுமே நீதான் என்சுவாசம்!!
அழியாமல் வாழ்கிறது!
விண்ணில்
பறக்கும் பட்டமாய்
உன்னைச் சுற்றியே பறக்கிறது
என்னுயிர்!
குட்டிபோட்ட பூனைபோல்
உன்நிழலையே வட்டமடிக்கிறது
என்பார்வை!
நிறைமாத கர்ப்பிணிபோல்
என்நினைவுகளிலே சுமக்கிறேன்
உன்னை!
வாடாமலராய் பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலைபோல்
என்மனதில்
அழியாமல் வாழ்கிறது
உன்புன்னகை!!
பறக்கும் பட்டமாய்
உன்னைச் சுற்றியே பறக்கிறது
என்னுயிர்!
குட்டிபோட்ட பூனைபோல்
உன்நிழலையே வட்டமடிக்கிறது
என்பார்வை!
நிறைமாத கர்ப்பிணிபோல்
என்நினைவுகளிலே சுமக்கிறேன்
உன்னை!
வாடாமலராய் பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலைபோல்
என்மனதில்
அழியாமல் வாழ்கிறது
உன்புன்னகை!!
தமிழர் திருநாள்!
காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006
2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
4. இராணி - 15-01-2012
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006
2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
4. இராணி - 15-01-2012
Wednesday, June 23, 2010
குடியரசை போற்றுவோம்!
மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!
விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!
பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! - அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!
சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! - இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! - இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! - நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!
மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 26-01-2012
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!
விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!
பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! - அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!
சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! - இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! - இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! - நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!
மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 26-01-2012
Subscribe to:
Posts (Atom)