Showing posts with label பதிவுகள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label பதிவுகள் (பாகம் - 1). Show all posts

Wednesday, June 11, 2014

தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

'ஆனந்தமழை' திரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/10/blog-post_7126.html என்ற பதிவு அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார்.

"என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும்" என்றார்.
------------------

எனக்கு நண்பராக இருந்து சில வாரங்களுக்கு முன்பு என் துரோகியாகி என் முதுகில் குத்த நினைத்த  ஒருவர் என்னை இப்படித்தான் மிரட்டினார்.

"தேசத்துக்கு எதிராக உன் பதிவுகள் உன்னை படு பாதாளத்துக்கு கொண்டு  சென்று விடும்."

அவருக்கு நான் பதிலளித்தேன்.

"என்னுடைய நலனில், எம்மினத்திற்கெதிரான நலனில் அக்கறை கொள்ளாத, மக்கள் நலனில் அக்கறையில்லாத சட்ட திட்டங்களை கொண்டு என் உழைப்பை வரிப்பணம் என்ற பெயரில் சுரண்டும் நாடு என் தாய்நாடல்ல. ஒன்று தெரியுமா? என்னுடைய தமிழர் தேசியம் மற்றும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்த படைப்புகள் cmcell, மனித உரிமைகள் ஆணையம் உட்பட எல்லாவற்றிற்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பயமில்லை. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். என் முதுகில் குத்தும் உங்களை போன்றவர்கள் என் தலைமயிரைக் கூட பிடுங்க முடியாது." என்று.

(சபை நாகரீகம் கருதி அந்த நபரின் பெயரை இங்கு குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.)
------------------

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தருணம் என் அறையில் இருந்த தெலுங்கர்கள் (நான் இங்கு தங்கியிருக்கும் இடத்தில் நான் மட்டுந்தான் தமிழன்) அந்த முடிவுகளை  தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். என்னிடம் ஆங்கிலத்தில் இது குறித்துக் கேட்டனர். நான் ஆங்கிலத்தில் சொன்னேன் "என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. இந்தியாவைப் பற்றி எனக்கு கவலையில்லை." என்று.
------------------
ஒரு பொது இடத்தில் ஹிந்தி பேசுபவர்கள் இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் "உனக்கு இந்தியாவை பற்றி பேச விருப்பமில்லையா?" என்றனர். நான் சொன்னேன் "நான் இந்தியனில்லை. பிறகெதற்கு நான் இந்தியாவைப் பற்றி பேசவேண்டும்." என்று. "அப்போது நீ இலங்கைத் தமிழனா? உன் பூர்வீகம் எது?" என்று கேட்டனர். நான் சொன்னேன் "என்னுடைய தேசிய இனம் தமிழன். என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு." என்று. சிரிக்க ஆரம்பித்தனர். இலெமூரியா அல்லது குமரிக் கண்டத்தைப் பற்றி சொல்ல முயற்சித்தேன். அதற்குள் அவர்கள் களைந்து சென்று விட்டனர்.
மறுநாள் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு பெண் (அவளின் தாய்மொழி கன்னடம். அவளுக்கு தமிழும் தெரியும்.) நான் வருவதை பார்த்து பக்கத்தில் நின்றிருந்த தமிழச்சியை பார்த்து சொன்னாள் "காமெடி பீஸ் வந்துருச்சு." என்று.
------------------





நன்றி: கூகிள் குழுமம்.

தமிழ்நாட்டு நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு.



“உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (Transport) 2.உருமாற்றம் / திரிபு (Conversion) 3.நிலையானவை (Memory). இந்தக் கூறுகளனைத்தும் மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருபவை. இந்தக் கூறுகள்தான் மனித வாழ்விற்கும் பொருந்தும் என்பது கவனிக்கவேண்டியது. இந்தக் கூறுகளையே நமது சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்று வகுத்தனர். இந்தக்கூறுகளை நாம் மனித வாழ்வியலோடு ஒப்பிடுகையில் இடமாற்றம் (TRANSPORT) என்பது மனிதனுடைய  விடுதலையை அதாவது மனிதனும் மனிதனின் எண்ணங்களும் எங்கும் செல்லவும் தகுந்த எதையும் செய்யவும் அதற்குத் தேவையான இயக்கத்தினையுமே குறிப்பிடுகின்றன.

இதேபோல் உருமாற்றம்/திரிபு (CONVERSION) என்ற கூற்றை நாம் மனிதனின் எந்தவிதமான தகுந்த மாற்றத்திற்கான  அறிந்தேற்பாகக் கொள்ளலாம். நிலையானவை (MEMORY) என்ற கூற்று நிலையான மனித சமுதாயத்தின் வரலாற்றைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளையும் நாம் தமிழர்களோடு ஒப்பிடுகையில் இவையனைத்திற்கும் தகுதியானவர்களாகவும் இவற்றைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்” என்று தனது உரையைத்தொடர்ந்த சிவா சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையாயச்சிக்கல்களையும் பட்டியலிட்டார்.



இந்தியா விடுதலை பெற்றதாகச் சொல்லப்படுகின்ற காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற நாட்டிற்கு விடுதலை வழங்குவதாகச் சொல்லவில்லை என்பது மவுண்ட்பேடண் பிரபு கொடுத்த வரைவில் இருப்பதாகவும் அவர் எடுத்துக்காட்டினார். அஃதாவது அந்த வரைவில் இங்கு ஆட்சியில் இருக்கின்ற ஆங்கிலேயர்களுக்கு மாற்றாக வேறு ஒரு ஆட்சி அமையும் என்பதையே குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த வேறு ஆட்சியாளர்கள் ஏற்கெனவே  ஆயத்தமாக இருந்ததாகவும் அவர்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட  சார்பாளர்களல்லர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பும் அதன் விளைவாக இந்தி எதிர்ப்புப்போராட்டங்களும் இந்தியத்தின் அடக்குமுறைப்போக்கும்  ஓர் இனத்தை மதிக்காத ஒரு போக்கும் தமிழ் மொழியின் மீதான அலட்சியத்தையுமே காட்டியுள்ளதெனவும் கூறினார். முக்கியமாக குடகு (தலைக்காவிரி) பகுதியைத் திட்டம்போட்டே தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் அதை மைசூர் மாகாணத்தோடு இணைத்ததையும் அதன்மூலம் தமிழர்களின் உயிரான காவிரியை இழக்கச்செய்ததையும் மேலாக இதை ஆட்சியாளர்களே மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இல்லாமல் தன்னிச்சையாக தமிழருக்கு எதிராக முடிவெடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.  அண்மைக்காலமாக நடக்கும் முல்லைப்பெரியாறு அணையின்  சிக்கலையும் கூடங்குள எதிர்ப்புப் போராட்டத்தையும் மேற்கோள் காட்டி அவையனைத்தும்  மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளன என்றும் விளக்கினார். இறுதியாக,  தமிழ்நாடு தனிநாடக வேண்டுமென்றால் அதற்கு, தமிழ்நாட்டிற்கான தன்னுரிமைச் சாற்றுரையை(DECLARATION OF INDEPENDENCE) நாம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முதன்மையான ஒன்று என அவர் கூறினார்.



இந்தப் பகுதி நிறைவுற்று இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் கேட்ட மிக இன்றியமையாத கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுமளித்தார். அவை வருமாறு

கேள்வி: தமிழ்நாடு தனிநாடு ஆகுமென்றால் இப்போது இருக்கும் நீராதரத்திற்கான  சிக்கல்?

அய்யாதுரை:  இன்றியமையானதாகக் கருதப்படும் காவிரி  ஆறானது தமிழர்களுக்கானது. முழு உரிமையும் கொண்ட தமிழர்களுடன்தான் இதை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது இணைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாற்றாக அந்த நிலங்களை கருநாடகத்தோடு இணைத்தது தவறு. ஆக ஏழு கோடி தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு இதை எதிர்நோக்கினால் அனைத்தும் நம்வசப்படும். ஏனென்றால் வரலாற்றின்படி நமது நதி நமது நிலம். சாத்தியம்.



கேள்வி: தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பிற்கு என்ன செய்வது? எந்தப்படை நம்மைக் காப்பாற்றும்?



அய்யாதுரை: அமெரிக்க  விடுதலையின் போது சொல்லப்பட்ட  உரையே இதற்கும் பொருந்தும். நாம் அனைவரும் சேர்ந்துதான் நம் நிலத்தை, நாட்டைப் பாதுகாக்கவேண்டும். இதற்குச்சான்றாக இன்னமும் ஒரு சில நாடுகளில் இன்னமும் அனைத்து குடிமக்களும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் இருக்கவேண்டும் என்பது. ஆக நமக்கான பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: தமிழ்நாடு தனிநாடாக ஆயுதம் தாங்கிய கூட்டம் ஏதாவது வேண்டுமா? அவசியமா?



அய்யாதுரை : நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அறுபது எழுபதுகளில் இருந்த நிலையிலில்லை நாம். இணையம் செழிக்கும் இந்தக்காலகட்டத்தில் நாம் நம்முடைய தேவையிலும் கருத்திலும் முழுமையாக ஒன்றாக நிற்போமேயானால் இஃது  இயலக்கூடியதே. ஆயுதம் இல்லாத ஒரு புரட்சியை நம்மால் ஆற்ற முடியும். அவை நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. புரட்சியென்றால் ஆயுதம் வேண்டும் என்றில்லை.



கேள்வி: இதற்கான பரப்புரைகளை எப்படி மேற்கொள்வது? எல்லோரையும் எப்படி சென்றடையச் செய்வது?



அய்யாதுரை: இப்படித்தான். என்னைப்போல்தான். நான் இராசபட்ச இந்தியா வந்தபோது போட்ட முகநூல் பதிவு இன்றுவரை இரண்டுபேராயிரம்(மில்லியன்) மக்களைச் சென்றடைந்துள்ளது. ஏன் இராசபட்சேவைக்கூட சென்றடைந்திருக்கும். இதேபோல் நாம் நமக்கான தேவைகளையும் தெளிவான கோரிக்கைகளையும் எங்கிருந்தும் எப்படியேனும் எல்லோரையும் சென்றடைய இணையத்தை ஒரு  முதன்மை ஊடகமாகப் பயன்படுத்துங்கள். இணையம் மிகச்சிறந்த ஆயுதமுங்கூட.



கேள்வி: தமிழ்நாட்டின் சாதியையும் மதங்களையும் எப்படி ஒழிப்பது?



அய்யாதுரை: இந்த சாதியும் மதமும் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று, ஆனால் தமிழர்களுக்கென ஒன்றுமே இல்லை. ”காக்கை குருவி எங்கள் சாதி” என்றவன் தமிழன் ஒருவனே. ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழர்கள் இப்படி இருப்பது வருத்தமே. ஆனால் தனிநாடு அடைந்தால் நமக்கான அரசு இதைத் தூக்கி வீச வழிவகைசெய்ய நாம் முனைவோம்.



கேள்வி: நாம் நமக்கான தீர்வைப்பெற உலக நீதிமன்றத்தை அணுக முடியுமா?



அய்யாதுரை: உலகில் தற்போதுள்ள மனிதர்கள் பரந்த அறிவைக்கொண்டுள்ளனர். நாம் எங்கோபோய் யாருடைய இடத்தையோ நமக்கான நாடாகக் கேட்கவில்லை. நாம் ஐந்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த நிலத்தையே கேட்கிறோம். இது நம்மைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமல்ல. அதுமட்டுமல்லாத எல்லோருக்கும் சொந்தமான கடல்வெளியில் நாம் தீவுகட்டி சொந்தம் கொண்டாடப்போவதில்லை. ஆக நமக்கான உரிமைகளை நாம்தான் கேட்கப்போகிறோம். வெல்வது நாம்தான்.



கேள்வி: நாம் இதன்மூலம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாயப்போகிறோமா? அல்லது கிழக்குலக நாடுகளின் பக்கமா?



அய்யாதுரை: நாம் யாரிடமும் சாயப்போவதில்லை. எல்லாமே நம்மிடமேயுள்ளது. நாம் பன்மொழி அறிவை வளர்த்துக்கொண்டு மேற்கு கிழக்கு நாடுகளுக்கு இணையாக இருக்கலாம். நாம் என்றுமே தனிப்பட்டவர்கள்தான்.



கேள்வி: மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்வார்களா?



அய்யாதுரை: நமது முடிவில் நாம் தீர்க்கமாய் இருப்போமேயானால் நமக்கு ஆதரவு கண்டிப்பாக உண்டு. நம்மால் வெல்ல முடியும்.



கேள்வி: தமிழ்நாட்டின் கல்விமுறையை மாற்ற முடியுமா?



அய்யாதுரை: இந்தக்கல்விமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நான் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்வழி கண்டது எல்லாம் செயல்பாட்டுமுறையல்லாத ஒன்றாக உள்ளது. இதை நாம் கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். நாடுபெற்றுவிட்டால் நாமே நம்மைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமையில் இவையனத்தையும் தீர்க்கமுடியும்.



கேள்வி: நீங்கள் ஏதாவது தமிழ்நாட்டுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இதற்காகப் போராடப்போகிறீர்களா?



அய்யாதுரை: திக திமுக எல்லாம் அன்றே தனித்தமிழ்நாட்டிற்கான கோரிக்கையை வைத்துவிட்டனர். ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் இந்தியதிற்கு உட்பட்டுதான் எல்லாம் செய்கின்றன. நான் எவருடனும் சேர்ந்து அரசியலில் நிற்கப்போவதில்லை ஆனால் எவராவது என்னோடு சேர்ந்து இதற்காகப் போராடுவார்களேயானால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்,

கேள்வி: நமக்கான தலைமைக்கூடம்? தலைவன்?

அய்யாதுரை: நமக்கு நாமே தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவன் என்பவன் இன்னும் ஆயிரம் தலைவர்களை உண்டாக்குபவனாக இருத்தல் வேண்டும் ஆக, தலைமை என்பது ஒரு கரம் சார்ந்ததல்ல. காலத்தோடு நாமே தலைமை அமைத்து நம்மை நாமே வழிநடத்தவேண்டுமென்பதுதான் பொருந்தும்.

நிகழ்ச்சியின் இறுதியில் அய்யாதுரை சில உதவிகளை நம்முன் வைத்தார். அவை

1.  தன்னுரிமைச் சாற்றுரையை உருவாக்க உதவுவது

2. அவரது இணையதளமான tamilnadu.com என்ற இணையதளத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தி நம்மை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவது.

3. தனிநாட்டிற்கான தனிவாக்கெடுப்பு நடத்துவதற்காக உதவுவது.



இதற்கான பங்களிப்பை இணையதளம் மூலம் செய்வது.

http://vashiva.com/

என்னால் முடிந்த கேள்விகளை உரிய விடைகளுடன் போட்டுவிட்டேன் ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவேண்டுகிறேன்.



இப்படிக்கு

குட்டிமணி செங்குட்டுவன்



https://www.facebook…94976424&type=1

 நன்றிக்குரியோர்:  யாழ் இணையம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141116&utm_source=yarl_front&utm_medium=yarl_rss&utm_campaign=yarl_eelam_news

https://www.youtube.com/watch?v=JBJbM-amqpg

Saturday, May 31, 2014

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள்.

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளியாகியுள்ளன.


Monday, May 19, 2014

குதித்தாடு எம்மிறையே...

அப்பு, விஷ்ணு, அய்யாவு, அப்புக்குட்டி,

எப்டி டா இருக்க? மாமா உன்ன பார்த்து ஒன்றரை மாதங்களாகப் போகின்றன. உன்னை வீட்டில் வந்து பார்க்கும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு இப்போது நீ மட்டுந்தான் நிரந்தரமான சொத்து.

யார் யாரோ திடீர் திடீரென என்மேல் அக்கறைப்படுகிறார்கள். அதன்பிறகு என்னை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், என் நம்பிக்கைக்குரியவர்களாக மாறி அவர்களுக்கு காரியம் முடிந்தவுடன் என்னை கழற்றிவிட்டுவிடுகின்றனர்.

மனிதர்களின் சூழ்ச்சிகளை முன்கூட்டியே புரிந்துகொள்ள, என்னால் முடியாமலேயே போய்விடுகிறது.

மனிதர்களின் சூழ்ச்சிகளை, துரோகங்களை தாங்கும் மனவலிமையை எனக்கு கொடுடீ தாயீ...

அன்போடு பழகுவதில் உன்னைப்போலவே நானும் இங்கொரு குழவிதான்.

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_7751.html

Monday, May 5, 2014

'பேசுந்தமிழ் குழவி' பாமினி

இப்படியொரு பதிவை கடந்த சில நாட்களாகவே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து நினைவிலிருந்தது. இன்று பதினொன்றரை மணிக்கெல்லாம் உறங்கப் போனேன். எழுதவேண்டுமென்று என்னை தூங்கவிடவில்லை.


என் தங்கச்சிப்பிள்ள பாமினியின் கள்ளங்கபடமில்லாத புன்னைகை கொள்ளையழகு.


ஹிந்து ஆங்கில நாளிதழில் என் தங்கச்சிப்பிள்ள பாமினியை பற்றியும் "தேன் சிந்தும் பூக்கள்" பாடலை பற்றியும் வெளிவந்திருக்கிறது.

http://www.thehindu.com/features/cinema/winning-tunes/article5973177.ece
----

சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய ஸ்கைப் கணக்கில் ஆங்கிலத்தில் உள்ள என்னுடைய பெயரை தமிழில் மாற்ற வேண்டி முயற்சித்தேன். பெயரை தமிழில் மாற்றிவிட்டு நாடு என்ற இடத்தில் தமிழ்நாடு என்று இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. சரி நாடு என்ற இடத்தில் எதுவும் கொடுக்காமல் இருந்துவிடலாம் என்று நினைத்து 'save' என்ற பொத்தானை அழுத்தினேன். நாடு என்ற இடத்தில் ஏதாவது உள்ளீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று வந்தது. "பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?" என்று எனக்குள் ஸ்கைப் பை செல்லமாகத் திட்டிக்கொண்டு இந்தியா என்று கொடுக்க விருப்பமில்லாமல் செர்பியா என்றொரு நாட்டை கொடுத்து விட்டேன். ஏனெனில் தமிழர் தேசியத்திற்கு எதிரானது இந்திய தேசியம். இந்தியா என்பதற்கு பதிலாக வேறொரு நாட்டை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன். குறையாண்மையாகிப்போன இறையாண்மை கொண்ட இந்தியாவை என்னுடைய தாய்நாடாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. என்னுடைய தேசிய இனம் தமிழன்.


இதனை எழுதுவதற்கு ஐந்து மணிநேரத்திற்கு முன்பு என் தங்கச்சிப்பிள்ள பாமினி என்னிடம் ஸ்கைப் ல் பேசினாள். எடுத்த எடுப்பிலேயே "நீங்கள் இந்தியாவில் இருந்துதானே பேசுறீங்க?" என்றாள். காலங்காலமாய் இந்தியா என்றாலே தமிழர் தேசியத்திற்கு (தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எதிரானது. விளையாட்டுக்காகவா பேரறிஞர் அண்ணா தனித்தமிழ்நாடு கேட்டு போராடத் துவங்கினார் என்பதை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.) எதிரானது. "தமிழ்நாட்டிலிருந்தா பேசுகிறீர்கள்? அல்லது பெங்களூருவிலிருந்தா பேசுகிறீர்கள்?" என்று கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை, என்னுடைய இருப்பிடத்தை அடையாளப்படுத்த இந்தியாவை ஏன் இங்கு நுழைக்கிறாள்? என்று சட்டென்று என்னுள்ளே கடுமையான கோபம் எழுந்தது. கேட்பவள் என் தங்கச்சி என்பதால் அவளை எதுவும் திட்ட, அவள்மீது எனக்கு கோபப்பட மனம் வரவில்லை. நான் கோபப்பட்டு அவள் என்னால் வருத்தப்பட்டால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும். என்னுடைய அலுவலகத்தில் என்னைத்தவிர எனக்கு மேலே உள்ள மேலதிகாரிகள் அனைவருமே தமிழர் அல்லாத வேற்று மொழியினத்தவர். விடுப்பு எடுக்க மின்னஞ்சல் அனுப்பும்போது "I have to go to my hometown which is in my tamizhnadu." என்று தொடங்கி எழுதுவதுண்டு. அவர்கள் ஒவ்வொருமுறை நான் அனுப்புவதை படிக்கும்போதும் அவர்கள் தாய்மொழியான மராத்தியில் "இவன் என்ன my tamizhnadu என்று சொல்கிறான்?" என்றும் "tamilnadu என்பதுதானே சரி. tamizhnadu என்று ஏன் எழுதுகிறான்?" என்றும் பேசிக்கொண்டு இருப்பதை அடிக்கடி கேட்க நேர்ந்தது. என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நான் அவர்களிடம் தெளிவாக விளக்கியிருந்திருப்பேன்.

நம்மிடம் அந்த பற்றுதல், my என்ற possessiveness இல்லாததால் பெருமைமிக்க நம் தமிழினம் வீழ்ந்துபோனது. தரணிதனில் தாழ்ந்துபோனது.

என் தங்கச்சிப்பிள்ள பாமினி சில நாட்களுக்கு முன்பு என்னை "my anna" என்று அழைத்தபோதுகூட நான் அதிகமாக மகிழ்ந்ததற்கு காரணம் நானும் இப்படித்தான் "என்னுடைய தங்கச்சி, என்னுடைய அண்ணா, என்னுடைய தமிழ்நாடு" என்று உரிமை கொண்டாடுபவன் (possessiveness).

இந்த என்னுடைய, நம்முடைய என்ற இந்த possessiveness ம் ஒற்றுமையும் தான் நம்முடைய தமிழனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப் போகின்றன.

"ஆத்தா, இந்த இடத்தில் உன்னிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்லணும். நீ என்னை my anna என்று உரிமை கொண்டாடுவதெல்லாம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான் டா. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களையெல்லாம் தங்கள் உறவுகளாக நினைக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவு உங்களின் ஆபத்துக் காலங்களில் உதவ முயற்சித்தார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் சூழ்ச்சிகளால் அந்த முயற்சி எப்போதுமே ஆக்கப்பூர்வமாக மாறாமல் வெறும் அனுதாபம் என்ற நிலையிலேயே நின்றுவிட்டது டா. அதனால், உங்களுக்காக நாங்கள் வெறும் கண்ணீர் மட்டுந்தான் டா வடிக்க முடிந்தது.

நீ என்னை my anna என்று அழைக்கிறாய். நாங்கள் உங்களை எங்கள் சகோதரர்களாக கள்ளங்கபடமில்லாமல் நினைப்பதுபோலவே எத்தனை ஈழத்தமிழர்கள் எங்களை தமிழர்களாக மதிக்கிறீர்கள்? நேசிக்கிறீர்கள்? உங்களின் உறவுகளாக உங்களில் ஒருவராக எங்களை நினைக்கிறீர்கள்? என்று எனக்குத் தெரியல டா.

உண்மையில் நாமெல்லாம் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டத்தின் பிள்ளைகள். நாம் செய்த தீவினைகள் எல்லாம் சேர்ந்து கடற்கோளால் அரிக்கப்பட்டு நீ வேறாய் நான் வேறாய், நீங்கள் ஈழத்தமிழர்களாய் நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாய் மாறிப்போனோம்."

உண்மையில் சொல்லப்போனால் என்னை சிலபேர் அலைபேசி ஊடாக "நீங்கள் ஈழத்தமிழரா?" என்று கேட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முகநூல் கணக்கில் திரு. இராஜமனோகரன் ஐயா கீழ்க்கண்டவாறு பாராட்டி எழுதியிருந்தார். அதாவது என்னை தென்னிலங்கை தீந்தமிழ்க்கவி என்று சொல்லியிருந்தார். எப்படியிருந்தாலென்ன என்னை தமிழன் என்று சொன்னவரை சரி.


பிறகு என் தங்கச்சிப்பிள்ள சொன்னாள் "எனக்கு வாய் மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் அறுவைசிகிச்சை நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே அண்ணா. அதனால் வடிவாக பேச முடியாது அண்ணா." என்றாள்.

"அட லூசு, நீ சுவிட்செர்லாந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது நான் ஸ்கைப்பில் உன்னை நலம் விசாரிக்க உன்னிடம் பேச முயற்சித்து நீ தூங்குவதை பார்த்தபிறகு உன்னை எழுப்ப முயற்சித்தவர்களிடம் பிள்ளையை எழுப்பாதீங்க, அவ நல்லா ஓய்வெடுக்கட்டும். யாரும் அவளை கேட்டாலும் அவ இப்ப இல்லை ன்னு சொல்லிடுங்க ன்னு சொன்னேன். இதெல்லாம் உறக்கத்திலிருந்த உனக்கெப்படி தெரியும்?" என்று நினைத்துக்கொண்டே "நீ சொல்லித்தான் எனக்கு தெரியுமா? எனக்கு தெரியும் ப்பா" என்றேன்.

பொதுவாக வடிவு அல்லது வடிவாக என்பதற்கு அழகு, அழகாக என்பது பொருள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அதிகமாக வடிவு அல்லது வடிவாக என்பதனை பயன்படுத்த மாட்டார்கள். அதற்குப்பதிலாக அழகு என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், யாழ்ப்பாணத் தமிழில் வடிவாக என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. அதாவது என் தங்கச்சிப்பிள்ள சொன்ன "வடிவாக பேச முடியாது" என்ற வாக்கியத்தில் வடிவாக என்பதற்கு பொறுமையாக, நிதானமாக அல்லது மிகத்தெளிவாக என்ற பொருள் வரும் என்பதனை புரிந்துகொண்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் கேட்க வேண்டிய ஒரு சந்தேகம், நாட்டைப்பற்றி அவள் எழுதிய "என் காதல் நீ" என்று தொடங்கும் பாடலில். இசையமைப்பாளர் திரு. இரவிப்பிரியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்தப்பாடலை என்னுடைய அலைபேசியில் வைத்துக்கொண்டு எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பவன் நான். தங்கச்சி பாமினி எழுதியிருக்கிறாள் என்று என் அம்மாவை கேட்கச்சொன்னேன். இதில் "குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம் நீ" என்றால் இப்படிப்பட்ட தட்பவெட்ப நிலை கொண்ட நிலப்பரப்பு நிச்சயமாய் அது என் தாய்நாடான தமிழ்நாடு தான். இன்னொரு வரியில் "அடைக்கலம் தந்து அன்பான தாயும் நீ" என்ற இடத்தில் இந்தியாவாக இருக்குமோ என்பதே என் சந்தேகம்.

ஒரு பக்கம் அடைக்கலம் என்ற பெயரில் தொட்டிலை ஆட்டிவிட்டு இன்னொரு பக்கம் பிள்ளையை கிள்ளிவிட்ட ஈனத்தனமான இந்தியா வெளியிலிருந்து, வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியாகத் தெரியும். ஆனால், உள்ளே என்னைப்போன்று தங்களின் பழம்பெருமை வாய்ந்த தேசிய இனத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கக்கூடியவர்களுக்குத்தான் தெரியும் எங்களுக்குள்ளே தமிழ்த்தேசிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. வெடித்துக் கொண்டிருக்கிறது என்று.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு குழுமத்திலிருந்து என்னிடம் கேட்டார் "இந்தியா தங்களுக்கு எதிரி நாடு என்றால் இந்தியா நடத்தும் இரயிலில் ஏன் பயணிக்கிறீர்கள்?" என்று.

உண்மையில் இந்தியா எனக்கு இலவசமாக இரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கவில்லை. நான் கட்டும் எல்லா வரிப்பணத்தையும் கப்பமாக வாங்கி ஏப்பம் விடுகிறது. இங்கேயே வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்போது தெரியும்.

என்னுடைய சிறுவயதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னிடம் என்னைச்சுற்றியுள்ளவர்கள் வெளிநாட்டுப் பயணம் பற்றி கேட்டபோது "என்னுடைய தாய்நாடான இந்தியாவை விட்டு போக மாட்டேன்" என்று சொன்னதுண்டு. உண்மைகளை உணர ஆரம்பித்தபின்பு எப்படி என்னால் என் தாய்நிலமான தமிழ்நாட்டை விட்டுப் போகமுடியும்?

இனிவரும் காலங்களில் வெளிநாடு போனால்தான் நல்லது என்ற நிலை வரும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு செல்வதற்கு முன்னால் என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் எனக்கிருந்த இக்கட்டான சூழலில் அவளிடம் கோபப்பட்டு விட்டேன். அதிகாலை அவள் வருத்தப்பட்டாள். அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை.

என் அம்மாவுக்கு தெரியும் நான் பசி பொறுக்கமாட்டேன் என்று. என்னுடைய வாழ்நாளில் யாருக்காகவும் நான் இப்படி இருந்ததில்லை.

"உங்களுக்கு இங்கே பெண் பார்க்கவா அண்ணா? இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் நாற்பது வயதிலா அண்ணா திருமணம் செய்யப் போகிறீர்கள்?" என்று என் தங்கச்சிப்பிள்ள பாமினி கேட்டதை நினைவில் வைத்து "என் தங்கச்சி உனக்கு திருமணம் நடைபெறாமல் எனக்கு எப்படிப்பா திருமணம் நடைபெறும்? இதை யோசித்தாயா?" என்று கேட்டிருந்தேன்.

என்னுடைய முகநூல் கணக்கில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன். இதனைப் பார்த்து "பாமினியின் தங்கச்சி பேரென்ன?" என்று யாராவது கேட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.



சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் என்று தங்கச்சி இட்டிருந்த பதிவை பார்த்த அன்று மகிழ்ச்சியில் எனக்கு உறக்கமில்லை. அடுத்தநாள் அலுவலகம் சென்று கணினித் திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தேன் மகிழ்ச்சியில். அந்த அளவுக்கு என்னுள்ளே எங்கும் நீக்கமற நிறைந்து கிடந்தாள் என் தங்கச்சி.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு அன்பர் என்னிடம் "இப்படி சிறுபிள்ளைத்தனமாக, குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறீர்களே?" என்று கேட்டார். நான் சொன்னேன் "சிறுபிள்ளைத்தனமும் குழந்தைத்தனமும் கடவுளின் குணங்கள். அவற்றை ஏன் நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்?" என்று கேட்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியைப் பற்றி வித்யாசாகர் அண்ணாவிடம் பேசும்போதெல்லாம் "அது நம்முடைய தங்கச்சி. நம்மை மறக்காது." என்று அன்பு பொங்க சொல்லுவார்.

நான் எதிர்பார்த்ததுபோலவே என் தங்கச்சி எதிர்காலத்தில் ஒரு குடும்பமாய், கணவர் குழந்தைகள் என தனது கலைப்பயணத்தை தொடரப்போகிறாள் என்ற மனமகிழ்வோடு உறங்கப் போகிறேன்.

ஆத்தா, அண்ணா உனக்கு எழுதிய வாழ்த்துக்கவிதையின் கையெழுத்துப் பிரதியை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்.

தொடர்ந்து நம்முடைய கள்ளங்கபடமில்லாத அன்பாலும் நம்முடைய தமிழாலும் இணைந்திருப்போம்.



.....
.....
.....
.....
.....
.....
அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

Thursday, May 1, 2014

ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள்


ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக தவறாமல் என்னுடைய ஹைக்கூ கவிதைகளை அனுப்பச்சொல்லி வெளியிடும் சீனிவாசன் ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Sunday, April 27, 2014

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA - None Of The Above) வாக்குகள் பதிவு



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதாக ஒரு செய்தி படித்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ ஏழு கோடிப் பேர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் ஏறத்தாழ நான்கரை முதல் ஐந்து கோடிப் பேர்கள் இருப்பார்கள்.

ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதற்கு பதிலாக எழுபத்தைந்து விழுக்காடு அதாவது மூன்றுகோடி பதிவாகியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

கடந்த வாரம் பரமக்குடி சென்றிருந்தபோது என் அம்மாவிடம் "வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA) என்ற சின்னத்தில் வாக்களி" என்று சொன்னேன். "எனக்கும் வரவர வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருக்கிறது. நான் அப்படி செய்தால் என்னுடைய வாக்கு செல்லாத வாக்காகி விடாதா?" என்று கேட்டாள். "அம்மா, நீ வேண்டுமானால் பார். நிறைய பேர் NOTA வில் தான் வாக்களிப்பார்கள். நம்முடைய இந்த வாக்குகள் நிச்சயம் பெருகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்போது அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்." என்று சொன்னேன்.

"யாருக்கு வாக்களித்தாய் அம்மா?" நேற்று என் அம்மாவிடம் கேட்டேன். "நீ சொன்னதுபோலவே NOTA வில் தான் வாக்களித்தேன்." என்றாள்.

தி.மு.க மாற்றும் காங்கிரசுடன் பேரம் பேசி பேரம் படியாததால் பா.ஜ.க. விடம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.க விற்கு ஆதரவாக தே.மு.தி.க தேர்தல் பரப்புரை செய்ததாக செய்திகள் வெளியாயின.

"விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. கார்பரேட் கம்பெனிதான் ஆரம்பித்துள்ளார்." என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்த வைகைப்புயல் வடிவேலு சொன்னது மிகச்சரியான வார்த்தை என்று இப்போது தெரிகிறது.


நஷ்டம் என்கிறார்கள். இலாபம் என்கிறார்கள். இலாபம் வரும்போது மட்டும் ஆளாளுக்கு தின்று ஏப்பம் விட்டுறானுங்க. நஷ்டம் என்று கணக்கு கட்டி எங்களோட தலைல கட்டப்பார்க்கறீங்க? ஏண்டா மொள்ளமாரி நொன்னைகளா?

இந்தியாவின் போதைக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் ஈழத்தமிழர்களும் ஊறுகாய். உங்களோட போதைக்கு நாங்க ஊறுகாயாடா வெண்ணைகளா?

சீமான் அண்ணாச்சி,

அ.தி.மு.க விற்கு தாங்கள் நன்றி நவில்வது வேறு. வாக்களிக்க ஆதரவு தருமாறு பரப்புரை செய்வது வேறு. நம்முடைய தமிழ்நாட்டில் இலாபம் தரும் துறைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு நஷ்டம் நஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த ஜெயலலிதாவால் மத்தியில் என்ன கிழித்துவிட முடியுமென்று நீங்கள் ஆதரவு திரட்டினீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜயகாந்த் பா.ஜ.வி டம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியதுபோலவே தாங்களும் அ.தி.மு.வி டம் வாங்கியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கட்சி ஆரம்பித்த புதிதில் "நாம் தமிழர் கட்சி மற்றுமொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியல் புரட்சி." என்றெல்லாம் சொன்னீர்களே... இன்று நீங்களும் அந்த திராவிடமெனும் குழிக்குள்ளேயே விழுந்து விட்டீர்களே? இது நியாயமா அண்ணாச்சி?

எப்படியாயினும் நம்முடைய தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி நாம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.




தேர்தல் முடிந்தது.. ஆரம்பித்தது 'பவர் கட்'.. ஆங்காங்கு போராட்டத்தில் குதிக்கும் மக்கள்

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/power-cut-looms-large-again-tn-lse-199333.html

​இந்த லட்சணத்தில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறதாம். அதனால் இந்த முடிவாம்.

ஏற்கனவே பஞ்சப்பாட்டு பாடித்தான் பால், பேருந்து கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஜெயலலிதா ஏற்றினாள். இப்போது மீண்டும் அதே மக்கள் விரோத ஆட்சி தொடர்கிறது தமிழகத்தில்.

இந்த இலட்சணத்தில் நாம் தமிழர் அண்ணாச்சி சீமான் அதிமுக விற்கு வாக்களிக்க கேட்டு பரப்புரை செய்தார்.

இங்கு எல்லோரும் சுயநல அரசியலை முன்னெடுக்கத் துவங்கிவிட்டனர். சீமான் உட்பட எல்லோருமே ஈழத்தை வைத்தும் தமிழக மக்களின் ஏழ்மையை சொல்லிச்சொல்லியும் அரசியலில் சொத்து சேர்க்கத் துவங்கிவிட்டனர். ஆதாயம் தேடத் துவங்கிவிட்டனர்.

இளிச்சவாயத் தமிழன் அடுத்தவன் வாயைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் கோட்டைவிடுகிறான். இவனாவது நம் கஷ்டங்களை புரிந்துகொள்வானா என்று ஏங்கிஏங்கி சாகிறான்.

ஏண்டா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். எல்லாமே நஷ்டம் நஷ்டம் என்றால், வருகிற லாபமெல்லாம் எங்கதாண்டா போகுது?

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

Saturday, April 26, 2014

my anna



​நேற்று மதியம் என் தங்கச்சி பாமினியிடம் முகநூல் IM (Instant Message) ல் பேசினேன். 'உன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகி விட்டன. உடல்நிலை எப்படி உள்ளது ப்பா?' என்று கேட்டேன். 'உங்களிடம் பேச இயலாமைக்கு sorry my anna.' என்று அனுப்பினாள்.

'அண்ணாகிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது டா' என்றேன்.

ஆத்தா,

நீயும் நானும் வித்யாசாகர் அண்ணாவின் செல்லப்பிள்ளைகள்.

உன்னுடைய my annaவை நீ பத்திரமாக வைத்துக்கொள். யாரிடமும் உன்னுடைய my annaவை கொடுத்துவிடாதே. சரியா?


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
..........
..........

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
..........
..........
..........
..........
..........
..........
கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
..........
..........
..........
..........
வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு

நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
..........
..........


ஆற்றுங்கவிச் செல்லம் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To:


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.

Tuesday, April 15, 2014

சீமான் அண்ணாவின் நினைவுகளும் அவரிடம் சில கேள்விகளும்

சீமான் அண்ணா,

கடந்த சனிக்கிழமை தங்களின் உரையை தமிழன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் கேட்க, பார்க்க நேர்ந்தது. இங்கு என்னுடைய அறையில் என்னைத்தவிர மற்ற அனைவரும் தெலுங்கு பேசும் அன்பர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களின் ஒருவன் கேட்டான் (ஆங்கிலத்தில்) 'ஏன் அந்த நபர் கத்துகிறார்? அவர் யார்?' என்று.

நான் சொன்னேன். (ஆங்கிலத்தில்) 'அவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தற்போது தமிழர்களுக்காக இயக்கம் மற்றும் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். அவர் கத்தவில்லை. அவர் பேசுகிறார்.' என்று. அவர்கள் என்னுடைய அறையில் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களை வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மாற்ற விடவில்லை.

அன்று நீங்கள் சொல்லியது 'தம்பிகள் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை.' என்று

உங்களுடைய நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா.



அ. தி. மு. க விற்கு இன்று நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாம். நாளை அ. தி. மு. க செய்யும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீங்கள் பலிகடா ஆகப் போகிறீர்களா? அல்லது நீங்களும் அவர்களைப் போன்று மக்களை ஏமாற்றி அரசியல் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறீர்களா? தி. மு. க நமக்கு துரோகி என்றால் அதே அளவுக்கு துரோகி அ. தி. மு. க.

நீங்கள் யாரையும் எதிர்க்காமலோ ஆதரிக்காமலோ இருந்திருந்தால்கூட யாரும் எதுவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் அன்று 'பிரபாகரா, பிராபகரா' என்று தொண்டை கட்டிய பிறகும் சோக இராகத்தில் பாடியதெல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதெல்லாம் பொய் யென்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா.

நான் தங்களின் இயக்கத்திலோ கட்சியிலோ இல்லை. ஆனால், என் மானசீக கட்சியாக 'நாம் தமிழர்' ஐத் தான் கடந்த சனிக்கிழமை வரை நினைத்திருந்தேன்.

நீங்களே பாடலாசிரியராக மாறி, நீங்களே பாடகராகவும் மாறி எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து' என்ற பாடலை என்னுடைய smart phone ல் வைத்திருக்கிறேன்.

நீங்கள் எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து', தங்கச்சி பாமினி எழுதிய 'சூழுகின்ற பகையை வென்று' மற்றும் உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ' என்ற மூன்று பாடல்களும் சமீப காலங்களில் அலைபேசி இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஊடாக நான் அதிகம் கேட்கும் பாடல்கள்.

நீங்கள் இயக்கிய 'பாஞ்சாலங்குறிச்சி' படம் ஏறத்தாழ ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அந்த படத்தில் ஒரு வசனம் வரும் (நடிகர் இளவரசு என்று தான் நினைக்கிறேன்) 'பரமக்குடியில் போய் புரோட்டா சாப்டுட்டு இரவி தியேட்டர்ல படம் பாத்துட்டு வா.'. இந்த வசனம் தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மிகப்பிரபலம்.

நீங்கள் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் அமைக்கப்பட்டிருந்தது. என்போன்ற தமிழை நேசிக்கக்கூடிய பலர் விரும்பி பார்த்த திரைப்படமிது.

இதுவரை நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

என் வீட்டிற்கு போகும்போதெல்லாம் உங்களைப் பற்றி வீட்டில் பேசும்போது அம்மா, அப்பா இருவருக்கும் உங்கள்மீது என்னைப்போலவே அதீத அன்பு உண்டு என்பதை ஒவ்வொரு முறையும் உணர்வேன். ஆனால், இனி அந்த அன்பும் மரியாதையும் அவர்கள் மனதில் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உங்கள் மீது கோபம் நிறைய உள்ளது. ஆனால், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே தமிழ்நாட்டு நேரப்படி அதிகாலை நான்கு முப்பது மணிக்கு தூக்கம் வராமல் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படித்தான். கோபப்படுவேன். பிறகு அன்பு கோபத்தை வென்றுவிடும். ஆனால், உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமே இந்திய தேசியமும் திராவிடமும் தான். இதனை உரக்க நீங்களே சொல்லிவிட்டு அதே திராவிடக் குழிக்குள் விழுகிறீர்களே இது நியாயமா அண்ணா?

உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா. எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் உண்டு.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள் அண்ணா, உங்கள் மீது பலபேர் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சிதையத் துவங்கிவிட்டது அண்ணா.

அதேபோல் உங்கள்மீது என் மனதிலிருந்த அன்பும் மதிப்பும்கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்துவங்கிவிட்டது அண்ணா.




Sunday, April 13, 2014

நேற்று அதிகாலை நான் எழுதிய பதிவிற்கான சில வரவேற்புகளில் ஒன்று.




அருமையான தகவலையே சொல்லியிருக்கிறார் ஒரு அன்பர். நாம் இழந்தவற்றை மறந்துவிட்டோம். நினைத்துப்பார்க்க, சிந்தித்துப்பார்க்க மறந்துவிட்டோம். மாணவர்களிடம் சிலவற்றை பகிர்ந்துகொண்டேன் என்ற செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/70000.html

அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று தண்ணீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன.


http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_12.html

Saturday, April 12, 2014

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் ஈழப்போராட்டத்தில் விடுதலை புலிகளும்

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்

என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று இன்னும் ஆழமாக என் நினைவினில் நிற்கிறது. நான் பிறந்த ஊரான முனைவென்றியில் ஒரு அண்ணன் ஒருமுறை ஏதோ ஒரு சூழலில் என்னிடம் சொன்னார் 'மாநிலங்களுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆந்திராவுக்காக சென்னையை கேட்டார்கள். ஆனால் நாம் திருப்பதியை கேட்டோம். அதனால் சென்னையை நமக்கு கொடுத்து விட்டார்கள்.' என்று திருப்பதியும் நமக்குத்தான் (தமிழர்களுக்குத்தான்) கிடைத்திருக்க வேண்டியது என்ற உண்மை அந்த அண்ணனுக்கு புரியவில்லை. வரலாற்றை தவறாக எனக்கு சொல்லிவிட்டார் என்ற உண்மை சமீப காலங்களில் என்னால் உணரப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நான் பெங்களூரு வந்தபோது ஒரு அண்ணன் என்னிடம் அலைபேசி ஊடாக பேசியபோது சொன்னார் 'பெங்களூரு தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. ஓசூர் அவர்களுக்கு போகவேண்டியது. ஆனால், பெங்களூருவை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.' என்று.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றி சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் அதாவது திருப்பதியும் சரி, பெங்களூருவும் சரி நமக்கு வரவேண்டிய நிலப்பரப்புகள் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'அவர்களுக்கு (தெலுங்கர்களுக்கு) உண்மையிலேயே திருப்பதி சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால்தான் அவர்கள் சென்னையை கேட்டார்கள்' என தவறாக என்னுடைய சிறுவயதில் ஒரு அண்ணன் சொன்னார். கடந்த ஓராண்டிற்கு முன்பு பெங்களூருவும் சரி அவர் சொன்ன ஓசூரூம் சரி தமிழ்நாட்டிற்கே வரவேண்டியவை என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'கன்னடர்களுக்கு உண்மையிலேயே பெங்களூரு சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால் அவர்கள் ஓசூரை கேட்டார்கள்' என தவறாக இன்னொரு அண்ணன் சொன்னார். அவர்களுக்கு எப்படி உண்மை புரியும்? ஏனெனில் இந்த உண்மைகளெல்லாம் ஏற்கனவே மூடி மறைக்கப்பட்டு தவறான செய்திகளை பரப்பி விட்டவர்கள் பலர். அதனையும் உண்மையென நம்பி நாம் உண்மையிலேயே பல நிலப்பரப்புகளை இந்தியாவின் துரோகத்தினால் அண்டை மாநிலங்களிடம் இழந்திருக்கிறோம். அப்படி கோலார், முல்லைப்பெரியாறு, குடகு மலை என நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளங்களும் இந்தியாவின் உதவியோடு மற்றபிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா' என்று நம் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மிகக்கச்சிதமாக பாடப்புத்தகம் தொடங்கி தமிழர்கள் மூளை மழுங்கியவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற உண்மைக்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றே விழித்துக்கொண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மிகச்சரியாகவும் சாதூர்யமாகவும் பயன்படுத்தி நம்முடைய வளங்களையெல்லாம் அபகரித்துக்கொண்டனர். அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று நீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. இதனாலேயே தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பலரும் வேலைவாய்ப்பின்றி தாய்நிலமான தமிழ்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த இரு அண்ணன்களின் மேல் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு உண்மையென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யாரும் தரவில்லை. தமிழர்கள் தொடர்பான பெரும்பாலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் உண்மைகளை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கெப்படி கிடைக்கும்? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும், இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்புகிற என்னைப்போன்ற தமிழர்களுக்கு புரியும் இந்த உண்மைகள்.

உண்மையில் தமிழ்நாடு அண்மையில் அண்டைமாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா விடம் இழந்த நிலப்பரப்புகள் கீழ்க்கண்டவாறு,

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2013/11/70000.html


தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

பத்தோடு பதினொன்றாக 'நாம் தமிழர்' கட்சி:

தமக்கான மேற்சொன்ன இவ்வளவு நிலப்பரப்புகளையும் இழந்துவிட்டு எதுவுமே இழக்காததுபோலவே ஈழத்தமிழர்களுக்காக உச்சுக்கொட்டும் தமிழ்நாட்டில் வாழும் பலர் ஈழத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் உச்சுக்கொட்டியதால் எந்தவொரு மாற்றமும் அங்கு நிகழவில்லை. 

தம்மினத்தின்மீது உண்மையான அக்கறைகொண்ட தமிழன் எப்போதும் ஈழத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டான். தனித்தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்திருப்பான். ஏனெனில் தனித்தமிழ்நாட்டிற்கான தேவை இங்கு பலகாலமாய் இருக்கிறது. அதனை உணர யாரும் முன்வரவில்லை. 

நினைவு முற்றத்தை இடித்து அராஜகம் செய்த ஜெயலலிதாவை, மூவர் தூக்குதண்டனையை நீக்கக்கோரி தீக்குளித்த தோழர் செங்கொடிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பை அரசியல் காய்நகர்த்தி தனக்கு கிடைக்கச் செய்த ஜெயலலிதாவை, தி.மு.க விற்கு எந்தவகையிலும் குறையாமல் கொள்ளையடித்த ஜெயலலிதாவை,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக இலயோலா கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவற்றை திசைதிருப்பி விட்ட இன்ன பிற கட்சிகள் உட்பட ஜெயலலிதாவை மறந்துவிட்டு ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

உண்மையை சொல்லப்போனால், காங்கிரஸ் கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிசமமாக பா.ஜ.க இங்கும் தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிக்கு சமமாக அ.தி.மு.க. 

தமிழர்களின் மீதும் தமிழ்நாட்டின்மீதும் 'நாம் தமிழர்' கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் யாரையும் ஆதரிக்காமலும் யாரையும் எதிர்க்காமலும் இருந்திருக்க வேண்டும். அல்லது, தனித்தமிழ்நாடு கேட்டு போராடியிருந்திருக்க வேண்டும். ஆனால், 'நாம் நமிழர்' கட்சியும் பத்தோடு பதினொன்றாக தனக்கான சுயநலத்தை காட்டத் துவங்கிவிட்டது. 'நாம் தமிழர்' கட்சியின் மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியானது.

உண்மையில் தமிழர்கள் அனைவரும் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற சின்னத்திலேயே வாக்களிக்கலாம். அதுதான் சாலச்சிறந்தது. மனசாட்சிப்படி மிகச்சரியானதும் கூட.

'பண்ணு', 'பண்ணி' தமிழர்களும் 'மாடி' கன்னடர்களும் 'செய்' தெலுங்கர்களும்:

நான் தற்போது பெங்களூருவில் வசித்துவரும் விடுதியில் நான் மட்டுந்தான் தமிழன். என்னைத்தவிர அனைவரும் தெலுங்கர்கள், மராட்டியர்கள் மற்றும் தமிழர் அல்லாத சிலர். சில தினங்களுக்குமுன்பு என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரோடு அவருடைய தாய்மொழியான தெலுங்கில் பேசினேன்.

அவர் ஆச்சர்யப்பட்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (ஆங்கிலத்தில் உரையாடத்துவங்கினோம்.) 'உன்னுடைய தாய்மொழி தமிழ் தானே? நீ எப்படி தெலுங்கில் பேசுகிறாய்?' என்றார். நான் சொன்னேன் 'இங்கு பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பலமொழிகளில் அவர்களின் வட்டார வழக்கு மற்றும் தங்களுக்கான மண்டலம் சார்ந்தவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ்தான் மிஞ்சும் என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பேசும் தெலுங்கிலிருக்கும் தமிழ் அல்லாத சொற்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அவர்கள் பேசும் தெலுங்கை கவனித்தேன். அவற்றிலும் அதிகபட்சமான வார்த்தைகள் இலக்கியத் தமிழ் வார்த்தைகளிலோ அல்லது தமிழர்களின் பேச்சுவழக்கு வார்த்தைகளிலோ தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். உதாரணத்திற்கு அவசரம், அற்புதம், அன்னம், பாம்பு, புலி (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.)' என்றேன்.

அதன்பிறகு அவரிடம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு தெலுங்கில் எப்படி சொல்வீர்கள் என்றும் எவையெல்லாம் தமிழிலிருந்து வேறுபடுகின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

அவற்றில், 'ஆங்கிலத்தில் bus என்பதற்கு தமிழில் பேருந்து என்று சொல்வோம், தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?' என்று கேட்டேன்.

அவர் சொன்னார் 'தெலுங்கிலும் bus என்றுதான் சொல்வோம்'. (அதாவது தமிழர்கள் அனைவரும் தற்போது  மிதிவண்டி என்று சொல்லவேண்டிய cycle ஐ சைக்கிள் என்றும், சாலை என்று சொல்லவேண்டிய road ஐ ரோடு என்றும் சொல்கிறோமே. இதனைப்போலத்தான்.)

நான் சொன்னேன் 'ஆங்கிலம் பேசும்போது மட்டும் ஒரு வார்த்தைகூட பிறமொழி கலக்காமல் பேசும் தமிழர்கள், தன்னுடைய தாய்மொழியான தமிழில் பேசும்போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் (இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல, நானும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நாம் அனைவருமே அப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டோம்.) என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலும் இந்த அக்கப்போர் உள்ளதுபோலவே. கன்னடத்திலும் உண்டு என்பது எனக்கு தெரியும்.' என்றேன்.

நானே தொடர்ந்தேன் 'தமிழில் திற, மூடு, அழை, என்பன போன்றவற்றிற்கு பதிலாக open பண்ணு, close பண்ணு, call பண்ணு அல்லது open பண்ணி, close பண்ணி, call பண்ணி' என்று சொல்கிறார்கள். இதனையே கன்னடத்தில் open மாடி, close மாடி, call மாடி என்றும் தெலுங்கில் open செய், close செய், call செய் என்றும் சொல்கிறார்கள். (தெலுங்கில் செய் என்ற வார்த்தை தூய தமிழ் வார்த்தை. ஆனால், நாம் பண்ணு, பண்ணி என்று பேசுகிறோம்.)

மொழி குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டு வரும் இந்த இடத்தில் சமீபத்தில் எழுதிய ஒரு காதற்கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் எழுகிறது.

எத்தனையோ பேர்
மொழியியல் நிறைஞரென
பட்டம்பெறும் போது

விழியியல் நிறைஞனென
பட்டம்பெற வைத்தாய்.

உன்னை காதலித்த
என்னை...
-------------------------

ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழத்தமிழரோடு உரையாடல்:

கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை சென்னையில் தங்கியிருந்தபோது அங்கு ஒரு ஈழத்தமிழரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நட்பு பாராட்டிக் கொண்டோம். சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தேன். அப்போது தமிழின விடுதலை குறித்து உரையாடத்துவங்கினோம். நான் மேலே சொன்ன தமிழர்கள் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பரப்புகள், தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள், இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பன குறித்து பேசத்துவங்கினேன்.

'அப்படிப் பார்த்தால் முழு இலங்கையையும் நாங்கள் தமிழீழமாகக் கேட்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வடஇந்தியாவில் பாதிக்கப்படும் இன மக்களை விடவா தமிழின மக்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள்?' என்றார்.

'நான் இங்கு முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தாங்கள் இங்கு கடந்த ஒரு வருடமாகத்தான் வாழ்கிறீர்கள். இங்கு நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் தங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இவையெல்லாம் என்னைப்போன்ற தமிழின விடுதலையை உள்ளன்போடு எதிர்பார்த்து உள்ளே நேசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இனத்தைப் பற்றி நீங்கள் முதலில் யோசியுங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்கும் ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்? முதலில் நாம் பத்துப்பேருக்காவது உதவி செய்யும் நிலைக்கு உயரவேண்டும். நமக்கான, நம் இனத்திற்கான விடுதலையை நாம் முதலில் பெற்றாக வேண்டும். அதன்பிறகு மற்ற இனத்தை, இனத்தின் விடுதலையை பற்றி யோசிக்கலாம். முடிந்தால் உதவலாம். ' என்றேன்.

அப்படியே தமிழீழம் குறித்தும் விடுதலை புலிகள் குறித்தும் பேசத்துவங்கினார்.

'நான் மாணவர் பேரவைத் தலைவராக ஈழத்தில் இருந்தவன். அங்கு பலதரப்பட்ட பகுதிகளுக்கு பயணப்படுபவன். போர்க்காலங்களிளெல்லாம் நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒருங்கிணைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். ௨௦௦௪ (2004) ல் சுனாமி இயற்கை சீற்றத்தின்போது ஈழத்தில் சிங்களர்களும் தமிழர்களும் இனவேற்றுமையை மறந்து சுனாமியிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் அங்கு அந்தக் காலகட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்படும் சூழல் நிலவியது. அந்த வாய்ப்பை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் அரசாங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். அப்போது தனித்தமிழீழம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.' என்றார். (இவ்வளவிற்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் விடுதலை புலிகளோடும் இயக்கத்தின் மேல்மட்டக் குழுக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும் சொன்னார்.)

விடுதலை புலிகளின் தீர்க்கதரிசனமான முடிவுகளை, போராட்டங்களை குறைசொல்லும் அளவிற்கு அல்லது விமர்சிக்கும் அளவிற்கு நாம் இன்னும் சிந்திக்கவில்லை என்பதே உண்மை.

Sunday, March 23, 2014

வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா (மொ.மு - மொட்டையடிப்பதற்கு முன், மொ.பி - மொட்டையடித்ததற்கு பின்)



இன்று என் தங்கச்சி பாப்பாவுக்கு பிறந்தநாள்

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவுக்கு பிறந்தநாள்.

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவின் பிறந்தாநாளை  கொண்டாடும் விதமாக ஈரநெஞ்சம் தொண்டு நிறுவனத்திற்கு என்னால்  தொகையை அனுப்பியிருக்கிறேன்.

Saturday, March 22, 2014

ஆஸ்திரேலியா வானொலியில் தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அன்பு வணக்கம். சில நாட்களுக்கு முன்பு நான் அனுப்பிவைத்த தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை இன்று ஞாயிறு ஆஸ்திரேலியா நேரப்படி முற்பகல் பதினொரு மணிக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

இதன்மூலம் பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகள் அனைவரும் தோழர் செங்கொடியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற வித்யாசாகர் அண்ணாவின் எண்ணமும் என்னுடைய விருப்பமும் எண்ணமும் நிறைவேறவிருக்கிறது.

அனுப்பி வைத்த எனக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலி ஊடாக நன்றி சொன்ன நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு. அப்துல் ஜாபர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


---------- Forwarded message ----------
From: Abdul Jabbar
Date: 2014-03-22 23:15 GMT+05:30
Subject: உங்களது செங்கொடிக்கான அஞ்சலி.
To: munaivendri.naa.sureshkumar@gmail.com


வணக்கம்,

மேற்சொன்ன விஷயம் நாளை ஞாயிறு ஆஸ்த்ரேலிய நேரப்படி
முற்பகல் பதொனொரு மணிக்கு ஆஸ்த்ரேலியா தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

--
Sathankulam Abdul Jabbar,

செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..

அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

---------- Forwarded message ----------
From: வித்யாசாகர்
Date: 2014-03-16 18:52 GMT+05:30
Subject: {பகலவன் குழுமம்} - செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..
To: "editor@vidhyasaagar.com"


14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று "தமிழர் பெருமை" எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை 'தியாகி செங்கொடி'யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது.
தலைப்பு - தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி...

யூடியூப் இணைப்பு - http://youtu.be/uCB6HJni8B8
தீயள்ளித் தின்னவ
நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ
யாருக்கோ செத்தவ
எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா
செங்கொடிக்கு வணக்கம்!

எனைச் செந்தீயில் எரித்தாலும்
தீயள்ளி என்மீது தெளித்தாலும்
தமிழாகவே எரிந்து
தமிழாகவே கரிந்து
தமிழாகவே மண்ணிலூறி
தமிழாகவே மணத்து
தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்!

எந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்
பெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்!!

ஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,

கொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..

வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.

அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..

ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..

நாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..

இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.

தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

தன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..

ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..

எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.

கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.

அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.

அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.

இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே...

அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்...

இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?

அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..

பசிநெருப்புக் கொள்ளுதேன்னு
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவ
பட்டுத்துணிப் பாவமுன்னு
கறுப்புச் சட்டையைப் போட்டவ..

கல்லுமுள்ளு மிதித்து
காலத்துள் காலடியைப் பதிந்தவ
ஐய்யய்யோ வலிக்குதேன்னு –
அதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..

சுடும்தீன்னுத் தெரிந்தும்
துணிந்து உடலாலத் தொட்டவ
தூக்குக் கயிறு முடிச்சவிழ்க்க
மொத்தத் தீயிலேறி நின்னவ..

மூவுயிரைக் காக்க
தன்னுயிரைத் தந்தவ
என் தமிழச்சி வீரத்தைக் காட்ட
உயிரேந்திப் போனவ..

மரணதண்டனை தீர்ப்பொழிக்க
தன் தலையெழுத்தைக் கலைத்தவ
இனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்
எம் தாயாக நிலைப்பவள் –

தங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..
குறிப்பு: செங்கொடி பற்றிய அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..

Monday, March 17, 2014

தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் தமிழர் எழுச்சி மாத இதழில்...

கடந்த வாரம் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழர் எழுச்சி மாத இதழில் தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் பின் அட்டையின் உட்பக்கத்தில் வெளிவந்திருந்தது.

என் தங்கச்சி சோபனா என்னிடம் செங்கொடி பற்றி சுருக்கமாகக் கேட்டாள்.

'என்போன்ற தமிழின விடுதலையை விரும்புகிறவர்களுக்கு அன்புத்தங்கையானவள் தோழர் செங்கொடி. இவளுக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் (credit) ஜெயலலிதாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் செங்கொடியை மறந்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. ' என்று சொன்னேன்.


Friday, March 7, 2014

கத்தாரிலிருந்து என் பதிவுகளுக்கான ஒரு வரவேற்பு... (அலைபேசி ஊடாக)

இன்று காலை தமிழ்நாட்டு நேரப்படி மணி பதினொன்று இருக்கலாம், (வளைகுடா நாடுகள்) கத்தாரிலிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பேசுவது சுரேஷ்குமார் தானே... தங்களின் பதிவுகளை, கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக தமிழர்களின் விடுதலை குறித்தான பதிவுகள், கட்டுரைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.' என மனதார வாழ்த்தினார்.

Tuesday, March 4, 2014

ஆழ்ந்த இரங்கல் (பாகம் - இரண்டு)

இந்தப் பதிவை முதல் பாகத்துடனேயே முடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். கடந்தசில நாட்களாகவே இரண்டாம் பாகத்தை எழுதிவிட வேண்டும் என்ற மனநெருக்கடி, கட்டாயம், எழுதவேண்டிய அவசியம் இதுவே என்பன போன்ற காரணங்களால் எழுதத் துவங்குகிறேன்.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/02/blog-post_26.html படித்து விட்டு இந்தப் பாகத்தை தொடரலாம்.

சரியாக பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன் பல வாரங்களுக்குப் பிறகு என் தங்கை என்னிடம் பேசினாள்.

'இடையில் பேசாததனால் வருத்தம் வேண்டாம் அண்ணா. வருத்தப்படாதீர்கள். தங்களின் அடுத்த கவிதைநூலை எப்போது வெளியிடப் போகிறீர்கள் அண்ணா? என்னுடைய முதல் கவிதைநூலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் சில வாரங்களில் அதனை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்துச்செய்தி ஒன்று உங்களிடமிருந்து வேண்டும். பிழைத்திருத்தமும் செய்யவேண்டும் அண்ணா.' என்று தலைப்பை சொல்லி 'நன்றாக இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டு என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.

அவளைப்பற்றி நான் அவளிடம் பகிர்ந்துகொண்டதை, என்னுடைய வலைத்தளத்தில் அவளைப்பற்றி பதிவதை படித்து இப்போதும் நினைவில் நிறுத்தி என்னிடம் அவள் அதனை பகிர்ந்துகொண்ட அந்தசில நிமிடங்களில் அவள்மனதில் என்மீதிருக்கும் அதீத அன்பை ஆழமாக உணர்ந்துகொண்டேன்.

ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு அவள் கேட்டதுபோலவே 'உங்களுக்கு எத்தனை வயது?' என்றாள். 'முப்பது. எதற்காக ப்பா கேட்கிறாய்?' என்றேன். 'திருமணம் ஆகிவிட்டதா அண்ணா?' என்றாள். 'இல்லப்பா' என்றேன். 'இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் நாற்பது வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? நான் வேண்டுமானால் இங்கு பெண் பார்க்கவா அண்ணா?' என்றாள்.

என்மீது அதீத அன்பு கொண்டவர்களிடம் தான் நான் உரிமையோடு உதவி கேட்கமுடியும் என்பதால் உதவி கேட்டேன். 'ஓரிரு நாட்கள் ஆகும் அண்ணா. சொல்கிறேன் அண்ணா.' என்றாள்.

என் தங்கை பல வேலைகளில் இருப்பாள். தற்காலிகமாக மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தொடர்ந்து நினைவுபடுத்த முயன்றும் தொலைபேசி ஊடாக பேச முயற்சித்தும் தோற்றுப்போனேன். அதன்பிறகே பொதுஇடத்தில் உரிமையோடு கோபப்பட வேண்டியதாயிற்று. அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு தெரிந்தது 'சித்தப்பா மரணம்' என்று. அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை. நான் கோபப்பட்டு ஓரிரு வார்த்தைகள் கூடக்குறைய பேசியிருந்தாலும் என்மனதில் அவள் என் தங்கைதான். நான் அவளின் அண்ணா தான்.

அடுத்த சில நாட்களில் நான் அவளிடம் தெரிவித்திருந்தேன்.

'நான் உன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகச் சொன்னாய். அப்படி யாராவது உன்மேல் கோபமாக இருந்தால் அவர்களை என்னிடம் பேசச்சொல். நான் அவர்களிடம் உண்மையை விளக்கி மன்னிப்பு கேட்கிறேன்.' என்று சொல்லியிருந்தேன்.

மேலே அவளுக்கும் எனக்கும் இடையே நடந்தவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் கருத்து கந்தசாமியாக, மாத இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக வலம்வரும் ஒரு 'மனுச' பிரபல எழுத்தாளர் அரைவேக்காடு போல நாட்டாமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கருத்து சொல்வதாக, நியாயம் சொல்வதாக நினைத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஓரிரு பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

'மனுச' பிரபலமானவரைப் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவுகூறவேண்டியது அவசியமாகிப் போகிறது. கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு புதிதாக நான் வந்திருந்தபோது ஒரு நண்பர் வீட்டில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவர், வேறுவேறு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த 'மனுச' பிரபலம் எப்போதும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர் என்பதால் அப்போது நேரலையில் அந்த பிரபலமானவர் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இன்னொரு நண்பர் சானலை மாற்றிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து 'இந்த நாயா? வேறு சானலில் வை' என்றார். எனக்கு அன்று முதல் அவர் சொன்ன வார்த்தை என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. ஏன் அந்த நண்பர் அந்த 'மனுச' எழுத்தாளரைப் பார்த்து நாய் என்று திட்டினார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகவே புரிகிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும், நாய்போல் வாலை ஆட்டிக்கொண்டு ஸ்டாலினுக்கு மாலையிட்டு பிறந்தநாள் சொல்வதும், ஜெயலலிதாவை பார்க்கப் போனால் அங்கு போய் பம்முவதுமாய், தனக்குள் நாய்க்குரிய குணம் அதிகம் இருப்பதால்தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும் பதவியில் இருப்பவர்களிடம் பம்முவதுமாய் வாழ்வதால் தான் அன்று அந்த நண்பர் இந்த 'மனுச' பிரபலத்தை நாய் என்று திட்டினார் என்று தெள்ளத்தெளிவாக இப்போது உணர்கிறேன்.

சில தினங்களுக்குமுன்பு முகநூலில் ஒரு சிலர் இந்த 'மனுச' பிரபலத்தைப் பற்றி 'மங்கூஸ் மண்டையன்' என்று எழுதியிருந்ததையும் பார்க்க நேர்ந்தது.

ஆனந்தவிகடனில் பத்துப்பேரிலோ நூறுபேரிலோ ஒருவராக அவரை வெளியிட்டிருக்கலாம். 'அறிவுமதிக்கு என்ன தெரியும்? நான் எழுத்து, பத்திரிகை, பதிப்பகம் என்று மட்டுமல்லாமல் அரசியலில் பலகாலமாய் இயங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒருசில அடிவருடிகளையும் ஒரு பத்து அல்லது பதினைந்து ஜால்ராக்களையும் கூட்டிகொண்டு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பிரபலம் என்ற போர்வைக்குள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு என்ன செய்வது? அவனவன் புத்தி லட்சணம் அவ்வளவுதான் என்று நினைத்து விலகிப் போகவேண்டியது தான்.

நான் இரண்டு முக்கியமான தகவல்களை இந்த நிகழ்வுகளின்மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அ. 'என்ன நடந்தது?' என்று மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் 'ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்றும் பார்க்கவிடாமல் இவரைப் போன்ற பிரபலங்களின் பொய்யான பிம்பமும் அகந்தையும் அவர்களுடைய அறிவை வேலை செய்யவிடாமல் மழுங்கடித்து விடுகின்றன. அதனால் இவரால் எந்த அளவு மட்டமாக இறங்கமுடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி அவர்களின் பின்புலம் பார்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் திட்டுவதும், வாலாட்டுவதுமாய் இருக்கிறார்.

'என்ன நடந்தது? ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்று பார்க்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ஆ. எதிரியாகப் பார்த்தல், அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்று சொல்வதெல்லாம் இதற்குமுன் பல்வேறு எழுத்தாளர் குழுக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதைப் பார்த்துப் பார்த்து வந்ததனால் எழுதியிருக்கிறார் அந்த 'மனுச' எழுத்தாளர். அவர்கள் அப்படி எதிர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் பிரதிபலனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்விற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மூளை இதற்கு முன் பார்த்தவற்றை தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு 'Artificial Neural Networks - Artificial Intelligence (A.I)' ல் 'Auto associative memory' என்கிறார்கள்.