ஓசையின்றி வளர்ந்த
மீசையையும் நறுக்கமுடியவில்லை!
பாஷையின்றி வளர்ந்த - காதல்
ஆசையையும் வெறுக்கமுடியவில்லை!!
Saturday, May 1, 2010
உண்மைக்காதல்!
வேரில்லாக் காதல்
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 11-02-2006
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 11-02-2006
மூதாட்டி!
அன்பெனும் உணர்வில்
உறைந்து கிடக்கிறேன்
நான்!
ஓர்நாள்
அன்பெனும் உணர்வின்வழியே
அமைதியாய் நடந்தேன்!
அன்பின் எல்லையை
அடைந்தேன்!
அங்கொரு மூதாட்டி
அமைதியாய் அமர்ந்திருந்தாள்!
அவள் பெயரைக் கேட்டேன்!
'தெரசா' என்றாள்!!
உறைந்து கிடக்கிறேன்
நான்!
ஓர்நாள்
அன்பெனும் உணர்வின்வழியே
அமைதியாய் நடந்தேன்!
அன்பின் எல்லையை
அடைந்தேன்!
அங்கொரு மூதாட்டி
அமைதியாய் அமர்ந்திருந்தாள்!
அவள் பெயரைக் கேட்டேன்!
'தெரசா' என்றாள்!!
என்னைவிட...
என்னைவிட உன்மேல்
அன்பாய் இருக்கும்
ஆணொருவன் உனக்கு
கணவனாய்க் கிடைத்துவிட்டால்
யார் அதிகமாய் மகிழ்வார்கள்
என்னைவிட...
அன்பாய் இருக்கும்
ஆணொருவன் உனக்கு
கணவனாய்க் கிடைத்துவிட்டால்
யார் அதிகமாய் மகிழ்வார்கள்
என்னைவிட...
இறைவன்!
உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!
ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!
மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!
காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!
உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!
அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!
கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!
ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!
மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!
காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!
உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!
அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!
கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006
சொல்லமுடியாக் காதல்!
(அன்று 2005, ஜனவரி 13 (வியாழன்) அல்லது 14 (வெள்ளி). அடுத்த சில நாட்களில் தமிழர் திருநாள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்றுதான் அவள் பிறந்தாள். அந்த புகைவண்டி நிலையத்தில் அவளும் அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். அவளுடைய தோழி எனக்கும் தோழிதான். என் காதலியிடம் நான் ஏற்கனவே எழுதிய 'தமிழர் திருநாள்' என்ற சிறு கவிதையை சொன்னேன். உடனே அவள் 'சுரேஷ், நீ பெரிய கவிஞனாயிட்ட' என்று வெட்கம் கலந்த புன்னகையில் சொன்னாள். 'உன்னை காதலித்த பிறகுதான் நான் கவிஞனானேன்' என்று அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். சொல்ல முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் தோன்றிய கவிதை தான் இது. என் தேவதையின் முகத்தைப் பார்த்தேன். அந்த அழகிய முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. 'இது என்ன?' என்ற படி அந்த பருவை தொடுவதற்காக கை விரலை நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். 'எதிரில் நிற்பது என் மனைவி' என்ற நினைவிலேயே அவ்வாறு செய்தேன். அவளும் 'என்ன சுரேஷ் இது?' என்றபடி வெட்கப்பட்டாள். அப்போது தான் நாங்கள் நிற்பது புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையோரம்' என்ற நினைவு வந்து கைவிரலை சுருக்கிக் கொண்டேன். அருகில் நின்று கொண்டிருந்த எங்களின் தோழி சிரித்துக் கொண்டிருந்தாள்.)
கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!
கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!
ஏழைகளின்எதிர்காலம்?
எண்ணெய் பார்த்திராத கேசத்துடன்
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006
2. வெற்றிநடை - 01-01-2013
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006
2. வெற்றிநடை - 01-01-2013
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012
Wednesday, April 28, 2010
காதல் தேர்தல்!
என் இதயநாட்டில்
நடைபெற்ற தேர்தலில்
போட்டியின்றி வென்றவள்
என்னவளே...
நீ மட்டுந்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்தாரம் – 04-06-2006
2. அறிமுகம் – 01-06-2009
3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
நடைபெற்ற தேர்தலில்
போட்டியின்றி வென்றவள்
என்னவளே...
நீ மட்டுந்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்தாரம் – 04-06-2006
2. அறிமுகம் – 01-06-2009
3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
உயிர்!
உனை
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!
உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 10-06-2006
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!
உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 10-06-2006
Subscribe to:
Posts (Atom)