Sunday, August 28, 2011

அன்பு!

ஒருமுறை காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் என் பாண்டிலக்ஷ்மி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஏதோ பேச்சுவாக்கில் தன்னுடன் U.G யில் படித்த தோழி ஒருத்தியைப் பற்றி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் சொன்னாள். அந்த நிமிடங்களில் என் எதிரே பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் உயிர் மட்டும் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் பேசியது. முழுக்க முழுக்க அன்பினால் செய்யப்பட்ட ஒரு உயிர் என் பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் உடலில் புகுந்திருப்பதாகவே தோன்றியது. அந்த நிமிடங்களில் என் மகளெனவே தோன்றினாள் அவள். அந்த தோழியின் பிரிவை தாங்க முடியாமல் இரவு தூங்கும்போது தூங்கமுடியாமல் போர்வைக்குள் அழுது கண்ணீர் வடித்து தன் தோழியின் நினைவை மறக்க முயற்சி செய்திருக்கிறாள். அந்த அளவுக்கு அந்த தோழியின் மேல் பாசமாக இருந்திருக்கிறாள் பாண்டிலக்ஷ்மி. அவளின் அருகில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அவள் தலைமேல் கைவைத்தபடி ‘அழாதே அக்கா’ என்று ஆறுதல் சொன்னேன். அதன்பிறகு ம்மா படிகளிருந்து அழுதபடி கீழே இறங்கினாள். அழுதபடி என்னை திரும்பி பார்த்தபடியே புகைவண்டியில் ஏறி அமர்ந்தாள். அந்த பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் முகம் இப்போதும் என் கண்களுக்கு முன்னால் தெரிகிறது. அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த என் பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் முகம் அப்படியே என் மூளைக்குள் பதிந்திருக்கிறது. அந்த தாக்கத்தில் தோன்றிய கவிதை இது. பாண்டிலக்ஷ்மிம்மா வருத்தப்படுவாள் என்பதற்காக ஒரு உண்மையை மறைத்து வேறுவிதமாக சொல்ல வேண்டியிருக்கிறது.


உயிர் பேசும்
மழலைமொழி!

No comments: