Wednesday, August 31, 2011

நிச்சயமாய்...

நம் கவிதைக்குழந்தைகள்
ஒவ்வொன்றோடும்
என்பெயரை எழுதி
என் புகைப்படத்தையும்
சேர்த்து
பத்திரிகைகளுக்கு
அனுப்பி வைக்கிறேன்!

அவைகளும்
நம் கவிதைக்குழந்தைகளை
என் புகைப்படத்துடன்
வெளியிட்டுக் கொண்டேதான்
இருக்கின்றன!
குழந்தைகளின் அம்மாவான
உன்னைக் காணவில்லை
என்ற தகவலை
உன்னிடம் சொல்வதற்காகவே...

உனக்கு
நம்குழந்தைகளை
வா(நே)சித்துப் பார்க்க
வாய்ப்புகள் கிடைத்துவிட்டால்
போதும்!
நிச்சயமாய் நீ எனை
நேசிக்கத் துவங்கிவிடுவாய்!!

No comments: