Wednesday, August 31, 2011

குழந்தைகள்!

நானும் நீயும்
உடலால் இணையவில்லை!
என்னுள்ளம்
உன்னுள்ளத்தை விரும்பியது!

நான் உன்னை
விரும்பத் துவங்கியதிலிருந்தே
நான் கர்ப்பம் தரித்தேன்!
நமக்கு இன்னும்
கவிதைக்குழந்தைகள்
பிறந்து கொண்டேதானிருக்கின்றன!

ஒருநாள்
நம் குழந்தைகளை
அவர்களின் அம்மாவான நீ
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய்
அவர்களே கூறினார்கள்!

என்மனமும்
ஒரு குழந்தைதான்!

என் மனக்குழந்தையையும்
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சுவாயாடா
என் செல்லம்?

No comments: