Saturday, August 27, 2011

பாண்டிலக்ஷ்மி!

பாசத்தில் பிறந்தவளே!
பாரினில் உயர்ந்தவளே!!
நேசத்தில் சிறந்தவளே! – என்
நெஞ்சத்தில் நிறைந்தவளே!! – என்னைவிட

குள்ளமாய் இருந்தாலும் – என்னை
குறையேதும் சொல்லமாட்டாய் நீ! – அன்பு
வெள்ளத்தில் மிதந்தாலும் – என்னிடம்
வெஞ்சினம் கொள்ளமாட்டாய் நீ!! – என்னைப்போல்

கறுப்பாய் இருந்தாலும் – புதுக்
காவியம் படைப்பவள் நீ! – என்மேல்
வெறுப்பை உமிழ்ந்தாலும் – நேச
வரலாற்றை உடைப்பவள் நீ!! – எனக்கு

தாயிருக்கும் வேளையிலே – என்னுள்
நோய்தீர்க்க வந்தவளே!
நீயிருக்கும் இடமெல்லாம் – எனக்குக்
கோயிலாகத் தோன்றுதம்மா!!

No comments: