2006 ம் ஆண்டு எழுதிய கவிதை இது. ஒரு இளைஞன் தன் உறவுகள் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் தன் சொந்தங்களோடு வாழ்ந்தபோது நல்ல பணவசதியுடன் இருந்தபோது அனைவருக்கும் உதவினான். இப்போது அவன் ஏழையாகவும் அனாதையாகவும் ஆகியிருக்கிறான். அவன் பிழைக்க வழி தேடுகிறான். அன்று பொங்கல் வருகிறது. இது ஒரு கற்பனை கவிதை. இதற்கான கவிதை இதுதான்.
வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!
இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!
பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!
வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!
சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!
உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!
எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!
ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!
'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'
உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!
கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!
இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011
Thursday, June 17, 2010
வாழ்கிறேன்!
நீ நடந்தால்
உன் நிழலாய்
நானிருக்கிறேன்!
நீ சுவாசித்தால்
உன் மூச்சுக்காற்றில்
நான் கலந்திருக்கிறேன்!
நீ புன்னகைத்தால்தான்
என் ஆயுட்காலம் நீள்வதாய்
நான் உணர்கிறேன்!
நீ என்னுடன் பேசினாலோ
காற்றில் மிதப்பதாக
கனவுகள் பலகாண்கிறேன்!
நீ கேட்ட கேள்விகளுக்கு
பதில்கள் சொல்ல வாய்திறந்தால்
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்க...
திக்கித் தடுமாறுகிறேன்!
நீ
என் உயிராகவே இருப்பதால்
நான் இன்னும்
இம்மண்ணில் உயிர்வாழ்கிறேன்!!
உன் நிழலாய்
நானிருக்கிறேன்!
நீ சுவாசித்தால்
உன் மூச்சுக்காற்றில்
நான் கலந்திருக்கிறேன்!
நீ புன்னகைத்தால்தான்
என் ஆயுட்காலம் நீள்வதாய்
நான் உணர்கிறேன்!
நீ என்னுடன் பேசினாலோ
காற்றில் மிதப்பதாக
கனவுகள் பலகாண்கிறேன்!
நீ கேட்ட கேள்விகளுக்கு
பதில்கள் சொல்ல வாய்திறந்தால்
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்க...
திக்கித் தடுமாறுகிறேன்!
நீ
என் உயிராகவே இருப்பதால்
நான் இன்னும்
இம்மண்ணில் உயிர்வாழ்கிறேன்!!
காதல் ஓவியம்!
என் காதலை
சொல்லித்தான் பார்த்தேன்! - உன்னை
பார்த்தேதான் சொன்னேன்!!
நகைத்துவிட்டாய்! - முகம்
புதைத்துக்கொண்டாய்!!
பள்ளிக்குழந்தைபோல்
எள்ளி நகையாடினாய்!
மெல்லச்சிரித்த கள்ளியாய்
தள்ளித்தான் போனாய்!
எதையெதையோ நினைத்தாய்! - எனை
அள்ளிவந்து அணைத்தாய்!!
இதுதான் என் காதல் ஓவியம்!
நிஜமாகுமா என் காதல் காவியம்?
சொல்லித்தான் பார்த்தேன்! - உன்னை
பார்த்தேதான் சொன்னேன்!!
நகைத்துவிட்டாய்! - முகம்
புதைத்துக்கொண்டாய்!!
பள்ளிக்குழந்தைபோல்
எள்ளி நகையாடினாய்!
மெல்லச்சிரித்த கள்ளியாய்
தள்ளித்தான் போனாய்!
எதையெதையோ நினைத்தாய்! - எனை
அள்ளிவந்து அணைத்தாய்!!
இதுதான் என் காதல் ஓவியம்!
நிஜமாகுமா என் காதல் காவியம்?
நீ பேசினாய்!
நீ என்னிடம்
'பள்ளத்தில் விழுந்துவிட்டாயா?
இல்லை என்
உள்ளத்தில் விழுந்துவிட்டாயா?'
என்றாய்!
'இரண்டில்
எதில் விழுந்திருந்தாலும்
எழுந்திருப்பது கடினம்'
என்றேன்!!
'பள்ளத்தில் விழுந்துவிட்டாயா?
இல்லை என்
உள்ளத்தில் விழுந்துவிட்டாயா?'
என்றாய்!
'இரண்டில்
எதில் விழுந்திருந்தாலும்
எழுந்திருப்பது கடினம்'
என்றேன்!!
Wednesday, June 16, 2010
சுனாமியின் நினைவால்...
ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005
2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005
2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011
நம்நினைவில் சுனாமி!
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005
2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005
2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011
காதலே சொர்க்கம்!
கண்ணை காப்பது இமை!
உன்னைக் காப்பதென்ன சுமை?
கண்ணில் இல்லை புவிகாந்தம்!
உன்னில் கண்டேன் புதுசொந்தம்!!
உன்னைக்கண்டால் என்வாழ்வே சொர்க்கம்!
உன்னைக் காணாவிடில் அகிலமே அற்பம்!!
உன்னைக் காப்பதென்ன சுமை?
கண்ணில் இல்லை புவிகாந்தம்!
உன்னில் கண்டேன் புதுசொந்தம்!!
உன்னைக்கண்டால் என்வாழ்வே சொர்க்கம்!
உன்னைக் காணாவிடில் அகிலமே அற்பம்!!
உனக்கொரு கடிதம்!
சுவரின்றி இல்லை சித்திரம்! - எனக்கு
நீயின்றி உலகிலில்லை விசித்திரம்!!
விண்ணில் கண்டேன் பலநட்சத்திரம்! - என்
கண்ணில் கண்டேன் ஒரு பெண்சித்திரம்!!
உன்னை பேருந்தில் கண்ட அத்தினம்
உன்நினைவே என்மனதில் நித்தம்நித்தம்!!
நீயின்றி உலகிலில்லை விசித்திரம்!!
விண்ணில் கண்டேன் பலநட்சத்திரம்! - என்
கண்ணில் கண்டேன் ஒரு பெண்சித்திரம்!!
உன்னை பேருந்தில் கண்ட அத்தினம்
உன்நினைவே என்மனதில் நித்தம்நித்தம்!!
காதல்வெடி!
என் இதயமென்ற வெடியை
உன் கண்களென்ற திரியால்
பற்ற வைத்துவிட்டாய்!
அதனால்தானோ
துண்டுதுண்டாய் சிதறுகிறது
என்னிதயம்!!
இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012
உன் கண்களென்ற திரியால்
பற்ற வைத்துவிட்டாய்!
அதனால்தானோ
துண்டுதுண்டாய் சிதறுகிறது
என்னிதயம்!!
இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012
என் உயிர்!
உன்னை
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!
உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!
உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!
உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!
உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!
உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!
உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!
Subscribe to:
Comments (Atom)