Friday, April 3, 2020

என் மறுமகளே

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

பொன்னான பெண்ணழகே கண்ணான கண்ணழகே
பொக்கைவாய் சிரிப்பழகே புதுமையான மொழியழகே
பெண்ணாகப் பேரழகே பேரழகின் அழகழகே
அமுதூறும் வாயழகே அழகூறும் சேயழகே
(......அம்மாயி)

தத்திவரும் நடையழகே தாமரைப்பூ முகமழகே
புத்தியுரைத் தமிழழகே புத்தம்புது மலரழகே
தத்தைமொழிப் பேச்சுழகே தாலாட்டும் பாட்டழகே
முத்துமுத்தாய் பல்லழகே முழுநிலவின் முகமழகே
(......அம்மாயி)

மாமனென்று நீயழைக்க மனமெங்கும் மகிழ்வாகும்
பூமணக்கும் காய்கனியும் பிஞ்சுமலர் சிரிப்பினிலே
ஆமெனக்கு அதிசயமே அழகான சித்திரமே
வாமனனாய் வடிவெடுத்த என்தங்கை மகளே வா

அத்தையென நீயுரைக்க உறவிங்கே அழகாகும்
முத்துமுத்தாய் நீபேச முழுநிலவின் புகழ் மங்கும்
சொத்துசுகம் அதிகமில்லை சோகமிங் கெனக்கில்லை
தத்தையிவள் தமிழ்பேச சித்தமதில் கர்வமடி
(......அம்மாயி)

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

Thursday, November 28, 2019

கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்? வீடுகளில் நாம் தீபமேற்றுவது ஏன்?






கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.

அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.

ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?

முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.

ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.

கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.

விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.

விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான்  நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர். 

ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.

மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.

முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.

நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.

Friday, July 5, 2019

Oh my baby

Yesterday night i wrote the following english rhyme to my daughter Ritanya Servai.



👉 Oh my baby


Oh my baby oh my baby
Writing poems is my hobby

See my face see my face
Life is not a running race
God is only our own boss
Live your life like a sage

Come for a while come for a while
On your face keep always smile
Make your life with a different style
Live with pleasure in my soil

Oh my baby oh my baby
Writing poems is my hobby

ஒரு வருடத்திற்கு முன்பு மெரினா கடற்கரையில் என் மகள் ரிதன்யா சேர்வையோடு நான்...
























Tuesday, July 2, 2019

முப்பாட்டன் கதிர்காம முருகனும் விந்தணுவின் வடிவில் முருகன் கைகளில் உள்ள வேலும் கிறித்தவ இசுலாமியனின் பூர்வீகமும்

என்னுடைய சமீபத்திய பதிவுகள்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு என்னுடைய முப்பாட்டன் முருகனின் பெயரையே சொல்லி "வேல்முருகன்" என்று பெயர் வைத்தாள். வேல்முருகன் என்பதே என்னுடைய ஜாதகத்தில் இருக்கும் பெயர்.

என்னுடைய முதற்பெயர் முனைவென்றி நா. வேல்முருகன் என்பதே.

என்னுடைய முதற்பெயர் வேல்முருகன் என்ற என் முப்பாட்டன் பெயர் தான். என் பெயரை நா. வேல்முருகன் சேர்வை என்று சான்றிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆறு வயதில் என்னை முதல் வகுப்பில் சேர்க்கப் போகும்போது என்னுடைய அப்பா எனக்கு சுரேஷ்குமார் என்று பெயர் மாற்றம் செய்ததாக கூறினாள் என்னுடைய அம்மா.

ஆணின் விந்தணுவின் வடிவிலேயே தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் என்னுடைய முப்பாட்டன் முருகன். குமரிக் கண்ட அழிவின் போது தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தில் உள்ள கதிர்காமத்திற்கு வந்து குடியேறி விவசாயத் தொழில் நுட்பத்தை முதன்முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே.

நீருழிப் பேரழிவால் மக்கட்தொகை குறைந்ததைக் கண்டு முருகன் மக்கட்தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் வளர்க்கச் சொல்லி அதன் இலைகளை காய்களை உண்ணும்படி சொன்னார் முருகன். அந்த மரத்தின் பெயர் முருகன் மரம். அந்த மரமே இன்று நாம் வளர்க்கும் முருங்கை மரம். 

விந்தணுவின் வடிவத்தை ஒரு விஞ்ஞானி போல் ஆராய்ச்சி செய்து தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் முப்பாட்டன் முருகன்.

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஒரு வெள்ளைக்காரர் இங்கு வந்து நூறு ஆண்டுகள் தங்கிய பிறகு அவரின் பேரன் தமிழ் மொழி மீது பற்றுதலால் தனுடைய பேரை தூய தமிழில் வைப்பதால் அவரை நாம் தமிழராக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பூர்வ குடிகளே தூய தமிழர்கள்.தமிழரின் பூர்வ குடிகளை எப்படி தெரிந்து கொள்வது? தமிழரின் குலம் மற்றும் குடி அதாவது தமிழரின் ஜாதி அடையாளங்களை தேடுங்கள். தூய தமிழரை இனங்காணலாம்.

தமிழில் பெயர் வைக்கும் அனைவரையும் தமிழாராய் பார்க்கும் பெருந்தன்மை மனம் உள்ளதாலேயே தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழன் வீழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார பலமின்றி அடிமையாகக் கிடக்கிறான்.

இங்குள்ள பெரும்பான்மை தமிழர்கள் கிறித்தவர்களாகவும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியவர்கள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர். தமிழர்கள் குல தெய்வ வழிபாட்டாளர்கள். அதாவது, தமிழர்கள் பெருங்கோயில்களுக்குச் செல்லும் வழமை இல்லாதவர்கள். ஆதித்தமிழர்கள் ஆசிவக மார்க்கத்தை பின்பற்றியவர்கள். ஆசிவகத்தின் பாலைவன வடிவமே இசுலாம்.

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் நம்மை எல்லாம் அவன் வசதிக்காக இந்துவாக, கிறித்தவனாக, இசுலாமாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு பிரிவினர் தாங்கள் இந்துக்கள் அல்லர், தாங்கள் லிங்காயத்துக்கள் என்று சொல்லி பிரிந்ததை நினைவு படுத்தினால் கொஞ்சமாவது அந்தந்த தேசிய இனங்களின் தொன்மையும் வரலாறும் புரியும்.

சாதி என்பது தமிழனின் குலம் மற்றும் குடி சார்ந்த அடையாளம். தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிற இனத்தவர்  குறிப்பாக தெலுங்கர்களும் யூத  பிராமணர்களும் ஊடுருவியுள்ளனர். பிற இனத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு என்னுடைய குலம் மற்றும் குடிப்பட்டம் ஏனைய ஒரு சில கருவிகளோடு சேர்ந்து ஒரு கருவியாக செயல்படுகிறது.

வெங்காய ராமசாமி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி இல்லாத சாதிக் கலவரத்தை தூண்டி தமிழர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள குல மற்றும் குடி வரலாற்றைத் தாங்கி நிற்கும் சாதிப் பட்டத்தை அழித்து தமிழ் தேசிய வரலாற்றை அழிக்கும் வேலையை தொடங்கி வைத்தவரே வெங்காய ராமசாமி தான்.

அடுத்தடுத்த பதிவுகளில் வெங்காய ராமசாமியின் துரோகங்களை விரிவாக சொல்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்.