Wednesday, August 31, 2011

காதல் விஞ்ஞானி!

அன்பே...
நம் காதலை பொருத்தவரை
நானும் ஒரு விஞ்ஞானிதான்!
உன் மனதின் ஆழத்தை
அறிந்துகொள்ள
இடைவிடாது முயற்சிப்பதால்... !!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 10-10-2010

காதல் கங்காரு!

அன்பே...
கங்காரு
தன் குட்டிகளை
வயிற்றுப்பைக்குள்
தூக்கிக்கொண்டு
சுமப்பதைப் போலவே
நானும்
உன் நினைவுகளை
சுமந்துகொண்டு நடக்கிறேன்
வீதிகளில்...

காதலித்துப் பார்!

பனிக்கட்டியின் உறைநிலை
0 டிகிரி செல்சியஸ்!

அன்பின் உறைநிலை?

காதலித்துப் பார்...
உணர்ந்து கொள்வாய்!!

செவ்வாய்!

ஆம்ஸ்ட்ராங்
நிலவிற்கு முதல்முதலில்
சென்று திரும்பியதைப் போல
நான் ஒவ்வொருமுறையும்
செவ்வாய்க்கு சென்று
திரும்பிக் கொண்டிருக்கிறேன்!
உன் ‘செவ்’வாயில்
சிரிப்பைக் காணும்
ஒவ்வொருமுறையும்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

மழலைத்தமிழ்!

‘எம்பு கக்கிதும்மா
எம்பு கக்கிதும்மா’
என்று
அழுதது குழந்தை!

பதறிப்போய்
‘எங்கடா எறும்பு?
எங்கடா எறும்பு?’
என்றாள் தாய்!

வயிற்றைத் தடவியபடி
வேறு எதுவும்
சொல்லத்தெரியாமல்
மறுமுறையும் சொன்னது
குழந்தை
‘எம்பு காக்கிதும்மா’
என்று!

வேகுநேரமாய்
எறும்பைத் தேடியவள்
பின்னர்தான் தெரிந்துகொண்டாள்
தன் குழந்தைக்கு பசிக்கிறது
என்பதை...!!

ஆனந்தக் கண்ணீர்!

சென்றவாரம்
நான் என் வீட்டிற்கு
சென்றிருந்தேன்!
நெடுநாள் பிரிந்த
ஏக்கத்தில்
என்னருகில் வந்த
அம்மா
என்மடியில் தலைசாய்த்து
உறங்க ஆரம்பித்தாள்!

கண்ணீர் வந்தது
கண்களிலிருந்து...!!

நாய்க்குட்டி!

நான் உன்
வீட்டிற்கு வந்திருந்தபோது
உன் நாய்க்குட்டியை
கொஞ்சிக்கொண்டிருந்தாய்!

ச்சே...
நானும் ஒரு
நாய்க்குட்டியாய்
பிறந்திருக்கலாம்!
நீ என்னை
உன் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடுவதற்கு...

காதல் சுனாமி!

வெள்ளைநிற சுடிதாரில்
விண்ணிலிருந்திறங்கிய
தேவதைபோலவே
என் கண்முன்னே வந்தாய்!
எனைக்கடந்து போனாய்!
நாமிருவரும் பல்கலையில்
பயிலும்போது...

உன்னை நான்
கடந்துபோன
ஒவ்வொருமுறையும்
சுனாமி வந்து போனதடி!!

புரிந்துகொண்டாள்!

எப்போதும்
என் கவிதை ஏடுகளை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் வைத்திருப்பேன்!

அன்றொருநாள்
நான் உறங்கியபின்
என்தங்கை
என்கவிதைகள் அனைத்தையும்
படித்துவிட்டாள்!
மறுநாள் காலை
என்னருகில் வந்தமர்ந்தபடி
சொன்னாள்!

‘சிறுவயதில்
எதுவுமே பேசமாட்டாய்
காரணமே இல்லாமல்
கோபப்பட்டு என்னை அடிப்பாய்!
உன் உருவத்தைப்போலவே
உன்னை
முரடன் என
நினைத்திருந்தேன்!
ஏண்ணே...
நீ இவ்வளவு மென்மையானவனா?’

தங்கையின் கேள்வி!

உனைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளை
ஒன்றுவிடாமல்
படித்துவிடுவாள் என்தங்கை!

உன்னிடம் தொலைபேசியில்
பேசியபோது
என் தங்கையிடம்
பேசச் சொன்னேன்!
அவள் உன்னோடு
பேசிமுடித்தவுடன்
விளையாட்டுக்கு
கைகொட்டி சிரித்தாள்!
‘அவள் குரல்
பெண்குரல் போல் இல்லையே?
இனிமையாக இல்லையே?’
என்று...

எனக்கு அவள்மீது
கடுங்கோபம் வந்து
திட்டிவிட்டு
அடிக்க கை ஓங்கிவிட்டேன்!
அழுவிட்டாள் அவள்!!

சிறிதுநேரம் கழித்து
என்னிடம் சொன்னாள்!
‘ஏண்ணே
அவள்மீது உனக்கு
இவ்வளவு அன்பா?’
என்று...