Thursday, May 25, 2023

செறிவூட்டப் பட்ட பாலும் மாற்றான் திரைப்படமும்...





உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இந்த விழியத்தைப் பரப்புங்கள். தமிழர் விழிப்புணர்வு ஒன்றே தமிழருக்கான விடியல். 

"நீ இப்படியெல்லாம் அனுப்பினால் உன்னை எல்லோரும் பைத்த்தியம் என்பார்கள்" என்று என் அப்பா சொன்னார். உண்மையில், மாற்றான் திரைப்படத்தில் வரும் மூளை பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஜடங்களாக அதாவது சுயநினைவில்லாத விலங்குகளாக நாம் யாரும் மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய வழி விழிப்புணர்வை தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியனை தொடர்ந்து பின்பற்றி என்னால் முடிந்த விழிப்புணர்வை/மறைக்கப்பட்ட, மடை மாற்றப்பட்ட தமிழர் உண்மை வரலாற்றை கவிதைகள் வழியும், மெட்டமைத்துப் பாடல்கள் வழியும், சிறு பதிவுகளாகவும் தொடர்ந்து சமரசமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

நம்முடைய விழிப்புணர்வு தான் நமக்கான ஒரே ஆயுதம்.

கடந்த ஏப்ரல் 8 அன்று நான் வெளியிட்ட செறிவூட்டப் பட்ட அரிசி குறித்தான பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2023/04/one-world-order.html

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு என் அத்தை ( அப்பாவின் அக்கா ), என் தங்கையின் மாமியார், என் சின்னம்மா ( என் அப்பாவின் தம்பி மனைவி ) என மூன்று உறவினர்கள் என் கண்முன்னே ஊனுருகி அதாவது உடலில் உள்ள சதை வ
வற்றி முகம் கோரமாகி பல நாட்கள் வலியால் துடி துடித்து செத்துப் போனார்கள். நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது சராசரியாக 45 முதல் 50 தான். அவர்களில் இருவரை நான் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுப் போனேன். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு புற்று நோய் வந்தது என்பது தெரிந்ததே புற்றுநோயின் கடைசி நிலையில் தான். 

இன்றும் என் நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பரவலாக திருமணம் ஆகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் குழந்தையில்லை என்று வாழ்வதை நான் என் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இவையெல்லாம் ஏதோ எதேச்சையாக நடப்பதாக எண்ண வேண்டாம்.

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவன் காலத்திற்குப் பிறகு கடந்த 15,000  ஆண்டுகளாக தமிழர்களை, தமிழினத்தை வேரோடு அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது யூத பிராமண இல்லுமினாட்டி கும்பல். ஆனால், இன்று வரை அவர்களால் தமிழர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக மாற்ற முடிந்ததே தவிர வேரோடு அழிக்க முடியவில்லை.

உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்று வாழ்வதும் எதேச்சை ஆனது அல்ல. இவையெல்லாமே தமிழர்களாகிய நம்மை அழிக்கும் சதி தான். 

நாம் விழிப்புணர்வற்ற முட்டாள்களாக இருக்கும்வரை நாமும் நம் தமிழினமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் படுவோம்.

நம்முடைய விழிப்புணர்வே நாம் நம் கைகளில் எடுக்கும் பேராயுதம்

No comments: