Saturday, April 16, 2022
தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )
Monday, February 28, 2022
எனக்காகப் பிறந்தவள்
Tuesday, January 25, 2022
வெள்ளையாடை தேவதைகள்
Friday, January 14, 2022
வயலோடு உறவாடி... புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு
கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்
ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது
இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு
மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)
Monday, November 29, 2021
வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.
இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.
இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.
என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.
மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.
2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.
2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது.
கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.
அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.
என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.
இவை தவிர DTH (Direct To Home) என்ற செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
Saturday, November 20, 2021
புயல்மழையும் பெருவெள்ளமும்...
Wednesday, October 27, 2021
உன் சுவாசக் காற்றாய்...
அன்பு மழையில்
நனைந்து நனைந்து
கரைந்துருகிக் கொண்டிருக்கிறேன்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க...
உருகி உருகி - நீயெனைப்
பருகிப் பருகி
உன் இதழ்வழி
தொண்டைக்குழி நனைக்கிறேன்
நான்.
உன் இதழோரேம்
உடல்சூட்டால்
நான் சில துளிகளாய்
ஆவியாகி
காற்றோடு கலந்து
உன் மூச்சின்வழி
உன் இதயம்தொட்டு
உன் நுரையீரல் தொட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும்
Friday, October 22, 2021
(பாகம் - இரண்டு) கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்
Monday, October 4, 2021
நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு. செய்தி.
செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to
நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7
நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.
செய்தி.
நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.
எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.
எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."
முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.
கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.
Friday, July 30, 2021
செல்லக்குட்டி நிறைமதி
என் இரண்டாவது மகள் நிறைமதியின் பிறந்தநாளிற்கான பாடல் - https://www.youtube.com/watch?v=dntXiT9ohs8
வாடியம்மா வாடி - எங்க
கூட்டம்கூடும் பாட்டுப்படி கூடச்சேர்ந்து ஆட்டம்பிடி
தேடியுகம் தேடி - பெத்த
செல்லமடி வெல்லமடி செல்லக்குட்டி நிறைமதி
ஆடியோடி வாடி - எங்க
கள்ளமில்லா உள்ளமடி கன்னுக்குட்டி நிறைமதி
கூடி விளையாடி - எங்க
குறும்பான தேனீ
கன்னமதில் வண்ணமடி எண்ணமதில் நிறைமதி
பாடலாகப் பாடி - எங்கும்
பரவசமாய் ஆடி
கண்ணெதிரே என்னுலகம் உன்னுருவம் நிறைமதி
காற்றாக மாறி - எங்கும்
ஊற்றாக ஊறி
வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி நெஞ்சமதில் நிறைமதி
வானவில்லைத் தேடி - எங்கும்
காணவில்லை வாடி
கொஞ்சுமொழி விஞ்சுமெழில் தஞ்சமடி நிறைமதி
கோலமயில் வாடி - எங்க
குலசாமித் தாயி
கால்முளைத்த தென்றலொன்று கண்ணெதிரே நிற்குதிங்கு
கூவுங்குயில் வாடி - இங்கு
கட்டிமுத்தம் தாடி
எல்லையில்லா அன்பினிலே எங்கும்நிறைக் கடவுளரே
இறைவனையே பாடி - அன்பில்
இறையருளைத் தேடி