Thursday, May 20, 2010

என் தோழியே...

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த முதல் கவிதை.





உன்
மழலைமொழி கேட்டு
தாய்மொழி மறந்தவன்...

உன்
நட்பின் ஆழம்கண்டு
தலைவணங்கியவன்...

உன்
பாசம்கண்டு
உளப் பூரிப்படைந்தவன்...

உன்
தைரியம் கண்டு
அச்சமடைந்தவன்...

உன்
புன்னகை கண்டு
மனதுக்குள் சிரித்தவன்...

உன்
திறமை கண்டு
பாராட்டியவன்...

உன்
சிறுபிள்ளைத்தனம் கண்டு
சினந்தவன்...

உன்
தொலைபேசிக்குரல் கேட்டு
அகமகிழ்ந்தவன்...

உன்
'நீ யார்?' கேட்டு
மனம் வெதும்பியவன்...
நான்தான்!

என் தோழியே...
ஏனிந்த கோபம்?
நீ கேட்டால் 
நான் என் உயிர்தர மாட்டேனோ...!!

No comments: