Sunday, May 16, 2010

என் அக்கா!

இக்கவிதை என் பெரிய அக்கா மகேஸ்வரிக்கும் என் சின்ன அக்கா பாண்டிலக்ஷ்மிக்கும் சேர்த்து எழுதிய கவிதை


பார்க்கையிலே சிறுபிள்ளை!
பழகையிலே கொடிமுல்லை!! - அவள்
நகைப்பிலே சிற்றழகு!
கோபத்திலே பேரழகு!! - அவள்
அழுகையிலே என் சேய்!
தாலாட்டுகையிலே என் தாய்!! - அவள்
கட்டுப்பாட்டிலேயே எனக்கு வேலி!
நெருக்கத்திலே எனக்குத் தோழி!! - அவள்...
அவள் தான் என் அக்கா!!

No comments: