Sunday, May 16, 2010

நேதாஜி!

வீரத்தின் விளைநிலமாய்...
விவேகத்தின் தலைமகனாய்... - நாம்
நேசிக்கின்ற பாரதத்தை
சுவாசிக்கப் பிறந்தவன்
நம் நேதாஜி!!

வெள்ளையனின்
வஞ்சந்தனை வீழ்த்த... - இந்தியனின்
அச்சந்தனை சாகடிக்க... - அந்நியனை
துச்சமென மிதிக்க... - இந்திய
தேசியப் படைதனை நிறுவியவன்
நம் நேதாஜி!!

வேற்று நாட்டிலும்
வெள்ளையனை எதிர்க்க...
இளைஞர்கள் படை அமைத்து
இளைஞர்களுக்கு வழிகாட்டியவன்
நம் நேதாஜி!!

இன்றும்
நெஞ்சில் உரமிக்க இளைஞர்களின்
நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறான்
நம் நேதாஜி!!

No comments: