Sunday, May 16, 2010

காதல் குற்றவாளி!

தொலைக்காட்சியில்
தொல்லை செய்தேன்
தொலைந்து போனது
என்னிதயமென்று...!

வானொலியில்
வழக்கு தொடுத்தேன்
வரவில்லை
என்னிதயமென்று...!

நாளிதழில்
நான் எழுதினேன்
நினைவில் இல்லை
என்னிதயமென்று...!

காவலகத்தில்
கர்ஜித்தேன்
காணவில்லை
என்னிதயமென்று...!

எங்கிருந்தோ
ஒரு குரல் வந்தது!
என்னிடத்தில் தான்
என்னவன் இதயமென்று!!

இப்போது
புரிந்துவிட்டது எல்லாம்!
எனக்கும்
ஒருத்தி இருக்கிறாளென்று...!

அனைவரிடத்திலும்
அழுதுவிட்டேன் நான்!

சொல்லிவிட்டேன்
சொர்க்கத்தில்!
இவள்
என்னவள் தானென்று...!

நான்தான் குற்றவாளி
என்னவளே...
உன்னை புரிந்துகொள்ளாத
நான் மட்டுந்தான்
குற்றவாளி!!

No comments: