Sunday, May 16, 2010

தெரசா!

உணர்வுகளில் உன்னதமானது
அன்னையின் அன்பு!
அந்த அன்பின் விதை
உன்னிலிருந்துதான் துவங்கியதோ...!!

மண்ணுலக உயிர்கள்
வாழ்வதன் நோக்கம்
மகத்துவமான அன்பிற்காய் தான்!
ஆத்மாவின் தாகம்கூட
அன்புதானே அம்மா!!

உன்னைப்பற்றி
சொல்லநினைக்கும்போது
உள்ளம் உருகுகிறது!
கண்ணீர் பெருகுகிறது!!

அன்பின் திருவுருவமாய்
கருணையின் மறுவுருமாய்...
நீ!!

அனைவருக்கும்
தனித்தனியே அன்புகாட்ட
அவரவர்க்கு அன்னையுண்டு!
இப்பிரபஞ்சத்திற்கே அன்னையென
நீ உதித்திருக்கிறாய்!!

இப்பிரபஞ்சத்தின்
எல்லை எதுவென
எனக்கு தெரியாது!
அன்பின் எல்லையும்
அதுபோலத்தான்!!

உணர்வுகள் அனைத்துமே
சிற்றின்பத்தைத் தரக்கூடியதுதான்!
பெருந்துன்பத்தைத் தரக்கூடியதுதான்!!
இவ்வுணர்வுகளில்
அன்புமட்டும் விதிவிலக்கு!
அன்பைத்தேடும் உயிர்களின்
உள்ளங்களில் நீ ஓர் ஒளிவிளக்கு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. நந்தலாலா (இணைய இதழ்) - 14-01-2012

No comments: