Saturday, July 20, 2013

நமக்கு நாமே மருத்துவர் – செவிவழி தொடு சிகிச்சை மருத்துவ நிபுணர் திரு. கோவை பாஸ்கர்

அனைவருக்கும் வணக்கம்.

ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு நான் வேலைபார்த்த பழைய அலுவலகத்தில் என்னோடு வேலைபார்த்த அன்பர் திரு. கமாலுதீன் என்பவர் திரு. கோவை பாஸ்கர் அவர்களின் ‘செவிவழி தொடு சிகிச்சை’ குறித்த காணொளிகளை (video) எனக்குக் கொடுத்து பார்க்கச் சொன்னார். ‘பாருங்கள். தங்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணா.’ என்றார்.

என்னுடைய மெத்தனத்தினாலும் வேறுசில காரணங்களாலும் அவர் எனக்குக் கொடுத்த காணொளிகளை பார்க்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து அந்த காணொளிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பார்த்து முடித்து விட்டேன். மீண்டும் பலமுறை பார்க்க வேண்டும். அப்போதுதான் மருத்துவ அறிஞர் திரு. கோவை பாஸ்கர் சொன்ன பல கருத்துகள் மனதில் ஆழமாக பதியும். புரியும்.
எட்டு மாதங்களுக்கு முன்பே அந்த அன்பர் கொடுத்த காணொளிகளை பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் இருந்தது. அதன் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது.

‘அரசாங்கமும் பணமுதலைகளும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்? எப்படியெல்லாம் மருத்துவம், அறுவை சிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்து நம்முடைய பணப்பையை பதம் பார்க்கின்றனர்’ என்பது இவர் குறித்த அனைத்து காணொளி கோப்புகளையும் கேட்பர்களுக்கு, பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் அக்காமாலா, கப்சி யை வெள்ளையர்களிடம் பேரம் பேசும்போது புலிகேசியாக வரும் வடிவேலு நகைச்சுவைக்காக ‘மக்கள் எப்படி நாசமாய் போனால் நமக்கென்ன? நமக்குக் கிடைக்கக் கூடிய பங்குத்தொகை (commission) கிடைத்தால் போதும்’ என்பார். அந்த வசனங்கள் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, நிஜத்திலும் அது உண்மை. அரசாங்கம் பணமுதலைகளுக்கு ஜால்ரா தட்டுகின்றன. அரசாங்கத்தை தன் கைகளுக்குள் போட்டுக் கொண்டு மக்களிடம் மருத்துவம், அறுவைசிகிச்சை என்ற பெயரில் வழிப்பறி செய்கின்றன.

உலக மருத்துவமே தவறு என்கிறார் இவர்.

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றார்கள் நம் முன்னோர்கள். இவர் உணவை எப்படி உண்ண வேண்டுமோ அப்படி உண்டால்தான் அது மருந்து’ என்கிறார்.

ஜெயா தொலைக்காட்சி, இலங்கையின் சக்தி தொலைக்காட்சி உட்பட பல நிலையங்கள் இவரை நேர்காணல் செய்திருக்கின்றன.
‘நாம் குடிக்கும் குடிநீரை கொதிக்க வைக்க வேண்டும் என்பது தவறு. சாதரன் தண்ணீரில் பல சத்துப் பொருட்களும் சில கிருமிகளும் உள்ளன. குடிநீரை கொதிக்க வைப்பதால் கிருமிகளோடு சத்துப் பொருட்களும் இல்லாமல் போகின்றன. ஒரு நாளைக்கு நாம் சுவாசிக்கும் சாதாரண காற்றில் பல இலட்சம் கிருமிகள் உள்ளே செல்கின்றன. ஆனால் அவை நம் உடலை பாதிப்பதில்லை. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமிகள் நம் உடலை பாதிக்காத வகையில் நம் உடலே மருத்துவராக செயல்படுகையில் தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்? தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும் என்றால் காற்றையும் கொதிக்க வைத்துத் தானே சுவாசிக்க வேண்டும்.’ என்ற தர்க்க ரீதியான வாதத்தை நம் முன்னே வைக்கிறார்.
பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பில் விலங்கியல் (zoology) பாடத்தில் மதிப்பெண்களுக்காக படித்தோம். ஆனால் அது மதிப்பெண்கள் வாங்க மட்டுமே பயன்பட்டதே தவிர நம் உடலைப் பற்றிய அறிவை, நம் உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவர் என்ற அறிவை நமக்கு தரவே இல்லை. ஏனெனில் இத்தனையும் தெரிந்தால், மாத்திரை மருந்துகள் விற்பனையாகாமல் போய்விடும் என்று பயந்து போய் அரசாங்கத்தை கைக்குள் போட்டுக் கொண்ட பணமுதலைகள் அதற்கு மேல் மருத்துவம் (M.B.B.S.,) சார்ந்து படிப்பவர்களுக்கே சொல்லித் தரவில்லை என்பதே உண்மை.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.

‘பள்ளியில் கற்ற கல்வி
சொல்லிக் கொடுக்கவில்லை
வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று...’

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே என்றார் திருமந்திரத்தை எழுதிய திருமூலர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் உயிர் என்ற பறவை இந்த உடம்பெனும் கூட்டினுள் குடிகொள்ளும். இந்தக் கருத்தை வைத்தே நான் எழுதிய பிணம் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/09/blog-post_6352.html) என்ற கவிதையில் எழுதிய இரண்டு வரிகள்.

'உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!'

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது தமிழர்களின் பொன்மொழி. இது உடல்நலத்திற்காக சொல்லப்பட்டது. சுவர் என்பது இங்கு உடல்நலத்தைக் குறிக்கிறது.

திரு. பாஸ்கர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டு போகையில் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப தான் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார். அதற்கேற்ப தற்போது பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணமாகி மேடைகளில் பேசுகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

என்னைப் போலவே இந்த இழையைப் படிப்பவர்கள் மெத்தனமாக இருந்து விட வேண்டாம். உடனடியாக பார்க்கவும்.

இந்த இழையை என்னால் முடிந்த வரை பலருக்கும் அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளிகளை பார்த்துக் கேட்டு விட்டு உங்கள் பதில்களைச் சொல்லுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள், தாய்மார்கள், மூத்த குடிமக்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வரிசைக்கிரமமாக பார்த்தால் தான் பார்ப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு புரியும் என்பதால் வரிசைக்கிரமமாக செவிவழி தொடு சிகிச்சை (Anatomic Theraphy) குறித்தான காணொளிகளுக்கான இணைய இணைப்புகளை இங்கு தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இணையத்தின் மூலம் வெகுநேரம் செலவு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் Mozilla Firefox உலவியில் (Browser) Easy Youtube Video downloader என்ற கூடுதல் செயல்பாட்டு நிறுவியை (Additional Add on) நிறுவுவதன் (install) மூலம் இந்த காணொளிகளை தரவிறக்கம் (download) செய்து இணைய இணைப்பு இல்லாமல் பார்க்கலாம், கேட்கலாம். என்னால் காணொளிகளை பல மணிநேரம் அமர்ந்து பார்ப்பது கடினம். நான் அடிக்கடி பயணம் செய்பவன் என்று நினைப்பவர்கள் கேட்பொலி கோப்புகளாக (Audio files) தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் அலைபேசியில் பாடல்கள் கேட்பது போலவே இதனையும் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இவர் தன்னுடைய மருத்துவத்தின்மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், சிறுநீரகக் கல் போன்றவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார். காணொளிகளை பல முறை கேளுங்கள்.

உடலில் உள்ள உறுப்புகளில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் இறந்து புதிய செல்கள் உருவாகும்போது ஐந்தாண்டுகளாக கண்ணில் குறைபாடு என்று சொல்வது தவறானது என்கிறார்.

தொண்ணூறு விழுக்காடு சிறுநீரகம் பழுதடைந்த ஒருவர் இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் அடுத்த நாற்பத்தெட்டு மணிநேரத்தில் மாற்றங்கள் தெரியும் என்கிறார்.

 இவர் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு ரூபாய் செலவில்லாமல் புற்றுநோய், கேன்சர், எய்ட்ஸ் முதலான பலவற்றை எளிதில் குணப்படுத்த முடியும் என்கிறார்.

வெளியிலிருந்து வராமல் (தீக்காயம், விபத்து, குண்டு பாய்தல், கத்தி பாய்தல் தவிர) உடலுக்குள்ளேயே வந்த நோய்களை இந்த வழிமுறைகளால் குணப்படுத்த முடியும் என்கிறார்.

இலாப நோக்கமில்லாமல், வியாபார நோக்கமில்லாமல் சமூக அக்கறையோடு ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

http://anatomictherapy.org/tamilbookdownload.html

-----------------------------------------------

http://www.anatomictherapy.org/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று இவரைப் பற்றிய தகவல்களை அறியலாம்.

இவருக்கான முகநூல் பக்கம் - https://www.facebook.com/pages/Healer-Baskar/184740001572861

No comments: