Monday, September 20, 2010

இளைஞனே போராடு!

இளைஞனே...
பகலில் உன்நிழலும்
உனக்கு உறுதுணையாய்
உன்னுடனேயே
இருப்பதாய்த் தோன்றும்!

பகல் இரவாவதுபோல்
வெற்றி மாறி தோல்வி வந்துவிடடால்
உன் நிழல்கூட
உன்னைவிட்டு விலகிவிடும்!

பிறரின் விமர்சனங்கள்
உன்னை சித்ரவதை செய்யும்!
உற்ற நண்பர்கள்கூட
உன்னைப்பற்றி தவறாய்
விமர்சிப்பார்கள்!
காலனின் பாசக்கயிறுகூட
உன்தோளில் ஏற
முயற்சிக்கும்!

என்றுமே உனக்கு
உறுதுணையாய் நிற்பது
உன்னில் இருக்கும்
மனஉறுதியும்
தன்னம்பிக்கையுந்தான்!

இதைப்புரிந்துகொண்டு போராடு!
வெற்றிக்கடலில் நீ நீராடு!!

No comments: