Showing posts with label கட்டுரைகள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label கட்டுரைகள் (பாகம் - 1). Show all posts

Saturday, November 23, 2013

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களுக்கு உதவி தேவை.

இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. அவற்றிற்கு பலமடங்கு பணம் வசூலிக்கின்றன. ஒரு ரூபாய் செலவில்லாமல் நாமே நம்முடைய இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்தலாம் என்பதைத்தான் செவிவழி தொடுசிகிச்சை சொல்லித்தருகிறது. 'நம்முடைய இரத்தத்தை மட்டும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருந்தால், உடல் உறுப்புகள் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்துவது?' என்பதை சொல்லித்தருவதே செவிவழி தொடுசிகிச்சையின் நோக்கம்.

இந்த மின்னஞ்சலை செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. பாஸ்கர் அவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்கள் கழித்தபிறகு அவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. நாகை பாலமுரளி அவர்களின் அண்ணாவைப் பற்றி கேட்டறிந்தார். அவரின் அலைபேசி எண்களை கேட்டார். கொடுத்தேன். 

சில மணிநேரம் கழித்தபிறகு நாகை பாலமுரளி அவர்களிடம் பேசினேன். 'சென்னையில் இன்னும் சில தினங்களில் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பேசுகிறேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.' என்று திரு. பாஸ்கர் சொன்னதாக பாலமுரளி ஐயா சொன்னார்.

அதன்பிறகு திரு. பாஸ்கர் அவர்கள் என்னிடம் பேசினார்.

'http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ என்ற வலைத்தளம் யாருடையது?' என்று கேட்டார். 'என்னுடையது' என்று பதிலளித்தேன். 'எதற்காக கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். விரிவாக பதிலளித்தார்.

'எனக்கு இணையம் பற்றி தெரியாத காலகட்டத்தில் உதவி செய்வதாக ஒருசிலர் பழகினர். ஆரம்பத்தில் எனக்கு ஒருசில உதவிகள் செய்தாலும் காலப்போக்கில் அவர்கள் என்பெயரைச் சொல்லியும் செவிவழி தொடுசிகிச்சை பெயரைச் சொல்லியும் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களிடமிருந்து நமக்கான http://anatomictherapy.org/ என்ற இணையத்தை என் பெயருக்கு மாற்றினேன். உங்களின் பதிவில் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/blog-post_23.html) youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை கொடுத்திருக்கிறீர்கள்.  நம்முடைய http://anatomictherapy.org/ சென்று அங்கிருந்து காணொளிகளை தரவிறக்கம் செய்யச்சொல்லி பரிந்துரை செய்யுங்கள். youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். அப்படி செய்தால், அந்த காணொளிகளில் உள்ள எண்களுக்கு மக்கள் அழைப்பார்கள். அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் பாஸ்கர் அவர்கள் இங்கிருக்கிறார். இவ்வளவு பணம் கொண்டு வாருங்கள். அவரைப் பார்க்கலாம். என்று என் பெயரைச் சொல்லி பணம் பறிக்கின்றனர். 

நான் வெளிநாடு செல்ல வேண்டிய தகவல்களை சேகரித்துக்கொண்டு நான் அங்கு போகும் முன்னரே அவர்கள் அங்கு சென்று என் பெயரைச் சொல்லி பொடி, மருந்து என்ற பெயரில் விற்று மக்களிடம் பணம் பறிக்கின்றனர். 

செவிவழி தொடுசிகிச்சை மருத்துவத்தில் மருந்தே இல்லை என்று நான் பரப்புரை செய்கிறேன். ஆனால், சென்னையில் ஒரு வீட்டில் ஒருவர் என்பெயரைச் சொல்லி பொடி, மருந்து போன்றவற்றை விற்று பணம் பறிக்கிறார். சென்னை சென்றபோதெல்லாம் கூட்டத்தில் இவரை பற்றி சொல்வேன். யாரும் அந்த மோசடிப் பேர்வழியை தட்டிக் கேட்பதில்லை. மக்கள் அனைவரும் நான் பேசுவதை பார்க்கின்றனர். சென்று விடுகின்றனர். 

இதனாலேயே, கூட்டத்தில் பேசும்போது அந்த மோசடிப் பேர்வழிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சேர்த்தே சொல்கிறேன். 

உலக மருத்துவத்தில் நடக்கிற தில்லுமுல்லுகளை எதிர்த்து நாங்கள் பரப்புரை செய்கிறோம். ஒரு தனிமனிதனுக்காக பயந்து முடங்கினால், நாளை உலக அளவில் பிரச்சனைகள் உருவாகும்போது எப்படி அவற்றையெல்லாம் தீர்ப்பது? அதனாலேயே அவர்களிடமிருந்து எங்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களை படிப்படியாக நாங்கள் எங்கள் வசம் கொண்டுவர வேண்டும்.' என்றார்.

என்னிடம் அலைபேசி ஊடாக ஒருசிலமுறை தான் பேசினார். ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 'வாழ்க இவ்வையகம்' என்ற வாக்கியத்தை உச்சரிக்கிறார்.

திரு. பாஸ்கர் அவர்களின் மனம்போலவே அவருக்கும் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும் என்றே நான் கருதுகிறேன். மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

-----------

Dear Sir/Madam, My brother Mr.Devarajan admitted in GH, chennai for kidney transplant which cost Rs.2 Lks. I request you to help. Thanks&regards Balamurali Ct. 
8098858383, 9944527480 
S.DEVARAJAN. AXIS BANK, TRICHY BRANCH. A/C NO.137010100267908 IFS CODE: UTIB0000137

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களின் அண்ணனுக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டி ஒரு மாதத்திற்கு முன்பு வரை முகநூலின் ஊடாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார். 

ஒரு வாரத்திற்கு முன்பு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் 'அகரமுதல' இணைய இதழில் உதவி தேவை என வெளியிட திரு. பாலமுரளி அவர்களின் கடவுச்சீட்டு (Passport size) புகைப்படம் கேட்டார். இதனால் நான், பாலமுரளி ஐயா அவர்களிடம் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டேன்.

தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய அண்ணனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், காலை வெட்டி எடுத்து விட்டதாகவும்  அதனால் அறுவைசிகிச்சை செய்ய இயலவில்லை என்றும் வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.

இந்தத் தகவலை இலக்குவனார் திருவள்ளுவன் ஐயாவிடம் சொன்னேன். அவரும், பாலமுரளி ஐயாவிடம் செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக பாலமுறை ஐயாவை அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதாகவும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நான் பாலமுரளி ஐயாவை தொடர்பு கொண்டேன். அவர் அதிகமாகத் தயங்கினார். என்ன யோசித்தார் என்பது தெரியவில்லை.

திண்டுக்கல் ஓவியா பதிப்பகம் மூலமாக சென்னை புத்தகக் கடையிலிருந்து என்னுடைய குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் ஹைக்கூ நூல் சிங்கப்பூரில் விற்பனையில் மூலம் கிடைத்த பணம் சில வாரங்களுக்கு முன்பு இணைய வங்கிக்கணக்கு உதவியுடன் அதன் உரிமையாளர் திரு. வதிலைபிரபா அவர்களின் மூலமாக எனக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

அந்தத் தொகையை திரு. பாலமுரளி ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு என்னுடைய இணைய வங்கிக் கணக்கின் உதவியுடன் சற்றுமுன் அனுப்பி வைத்தேன். 

ஏற்கனவே, சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இருநூல்கள் விற்பனையின் மூலம் கிடைத்த தொகையை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

வித்யாசாகர் அண்ணாவும் பணம் அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன். 

உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள அன்பர்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள்.

இந்தத் தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் உதவி செய்ய, பரிந்துரை செய்யுங்கள்.

குறிப்பு:
=============

செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. கோவை பாஸ்கர், ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது என்பது தவறான மருத்துவம். அப்படி வெட்டிஎடுத்தால் மற்ற உடல் உபாதைகள் (side effects) ஏற்படும். நம் உடல் உறுப்புகளே அவற்றை சரி செய்து கொள்ளும்.அறுவை சிகிச்சையோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ தேவையில்லை என்கிறார்.

ஆனால், வேறு வழியில்லாததால் தான், திரு. பாலமுரளி ஐயா அவர்களின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.

ஒரு ரூபாய் செலவில்லாமல், அறுவை சிகிச்சை செய்யாமல்,  எந்தவித மருந்து மாத்திரையும் உட்கொள்ளாமல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த இந்தப் பதிவை பாருங்கள், படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_20.html



வருமுன் காப்போம் என்பது நம் கடமையன்றோ...
வந்தபின் பார்ப்போம் என்பது நம் மடமையன்றோ...

Wednesday, November 20, 2013

United States of Tamizh (UST - தமிழர் ஐக்கிய நாடுகள்)

Few days ago, my facebook friend has talked with me over the mobile from chennai and he informed me the following.

"I have shown your posts and the images on which tamizhnadu and tamizheezham have been highlighted and pointed by the finger to my college friends. Most of us felt happy. Somebody said we will combine both the states tamizhnadu and tamizheezham and we can call it as United States of Tamizh - UST".

After he said the above, i really delighted and i excited.

He continued,

"A non tamizhan asked me are you a tamilian?. I responded i am not a tamilian or tamilan. I am a tamizhan. You should not be calling me tamilian or tamilan. You should have to call me tamizhan."

While he informed the above, an incident in my life has been recalled by my mind.

Nine years ago, during april 2004 i sent the applications for studying my M.C.A., to azhagappa university and pondicherry university. When i was writing my address on the cover, i wrote tamizhnadu instead of tamilnadu.

காலத்தை மீறி கனவு கண்டவன் பாரதி. இங்கு நம் தமிழிளைஞர்கள் காலத்தை மீறி கனவு காண்கின்றனர். நியாயமான கனவுதான். நாமும் வாழ்த்துவோம்.

தமிழர் ஐக்கிய நாடுகள் (UST - United States of Tamizh) என்ற அமைப்பின்கீழ் உள்ள நாடுகள்
அ. தமிழ்நாடு அல்லது தமிழர் நாடு.

ஆ. தமிழீழம்.

UAE க்கும் USA க்கும் UK க்கும் படைஎடுத்தவர்கள் எல்லாம் நாளை UST க்கு படையெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.



Tuesday, November 19, 2013

உயிர்மை மாத இதழில் மெட்ராஸ் கபே திரை பற்றிய கட்டுரைக்கு என்னுடைய மாற்றுக்கருத்து.

கடந்த அக்டோபர் மாதம் நான்கு, ஐந்து தேதிகளில் சென்னையில் தங்கியிருந்த போது, திருவல்லிக்கேணி நூலகத்தில், உயிர்மை மாத இதழ் என் பார்வைக்குக் கிடைத்தது.

அதில் "மெட்ராஸ் கபே திரைப்படம் பற்றியும் அதனை திரையிட விடாமல் தடுக்கும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் அதனை எதிர்ப்பதன் மூலம் அதில் என்ன தான் அப்படி இருக்கிறது பார்த்து விடுவோம் என்ற ஆர்வத்தை தூண்டி எப்படியாவது பார்க்க வைத்து விடும். திரையிடக் கூடாது என்று தடுப்பதன் மூலம் அந்தப் படம் அவர்களுக்கு தெரியாமலேயே விளம்பரப்படுத்தப் படுகிறது. இப்படி போராட்டங்களினால் தடுப்பதை விட, நாமும் தரமான படைப்புகளின்மூலம் மெட்ராஸ் கபே போன்ற படங்களை, படைப்புகளை தவிடுபொடியாக்கலாம்." என்று பொருள்பட ஒரு கட்டுரையாளர் எழுதியிருந்தார்.

என்னுடைய மாற்றுக்கருத்து இதுதான்.

"நீங்கள் சொன்னதுபோல், படைப்புகளின் மூலம் பதில்சொல்ல, சமீபத்தில் வெளிவந்த பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படைப்புகள் எத்தனை பேரால் பார்க்கப் பட்டன? வெறுமனே தமிழ் படைப்பாளிகளை மட்டுமே குறை சொல்லாமல், நன்றி கெட்ட, தமிழ்நாட்டு ஈனத்தமிழர்களையும் குறை சொல்லுங்கள். 

ஒரு படம், படைப்பு வெற்றியடைய சந்தைப்படுத்துதல் இன்றைய நவீன உலகில் மிகமிக அவசியமானதாகும். ஒரு விநியோகஸ்தர் சொல்கிறார் படம் எடுக்க ஆன செலவை விட மூன்றுமடங்கு அதனை விளம்பரப்படுத்த, சந்தைப்படுத்த ஆனது என்று.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? 

கேட்டால், அப்படியா? இப்படிப்பட்ட பெயர்களில் படங்கள் வந்தனவா? என்று கேட்போர் தான் அதிகம்.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்களே பெரும்பாலான பிரபஞ்சத் தமிழர்களுக்கு தெரியவில்லையே ஏன்? ஏனெனில் இவர்களிடம் சந்தைப்படுத்த (Marketing) ஆளில்லை. அப்படியே செய்தாலும், தமிழ் உணர்வுள்ள ஈனத்தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு.

காங்கிரஸ் துணையோடு, மெட்ராஸ் கபே படம் எடுத்தவனுக்கு, சந்தைப்படுத்துவதற்கு (Marketing) பணபலமும் ஆள்பலமும் அரசியல் செல்வாக்கும், அரசியல் பலமும் நிறைய இருந்ததால், எளிதாக சந்தைப்படுத்தி விட்டான். 
ஏழைசொல் அம்பலம் ஏறாது என்பதைப் போல், தமிழனுக்கு உண்மையாக ஆதரவு தெரிவிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, போராடியவர்களை முழுக்க முழுக்க குறை சொன்னது தவறு. போராடியவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? தமிழனை தவறாக சித்தரித்த படம் என்பதால் போராடினார்கள். அவர்களில் அதன்மூலம் தமிழ்நாட்டு அரசியலில் எதிர்காலத்தை தேடிய கட்சிகளும் உண்டு என்ற உண்மையையும் நாம் நடுநிலையோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

Saturday, November 9, 2013

மூன்று பேருக்கு வேலை - ரூபாய். ஒன்பது இலட்சம் வரை கொள்ளை - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையம் (டி.ஆர்.பி).

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாட்டின் ஆசிரியர் தேர்வாணையம் செய்த குளறுபடியால் கடந்த ௨௦௧௨ (2012) நவம்பரில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் பலருக்கு (B.A communicative English போன்ற பல படிப்புகள் தகுதியற்றவை என முடிவெடுத்து ) வேலை கிடைக்காமல் அலைக்கழிக்கப் பட்டனர். 

கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (TRB - Teachers Recruitment Board) எதிரான வழக்கில் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியான தீர்ப்பை ஆ. தே. ஆ (TRB) மதிக்காததால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றுபேர் நீதிமன்றத்தில் ஆ.தே . ஆ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். 

மதுரை நீதிமன்ற நீதிபதிகளின் கைவரிசை 

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மூன்று பேருக்கும் ஆ. தே . ஆ பணிநியமன ஆணை வழங்கி மூன்று பேரும் வேலையில் சேர்ந்து விட்டனர். 

ஆனால், கடந்த நவம்பர் ௨௦௧௩ 2013 ல் தேர்ச்சியடைந்தவர்கள் என்று பணிநியமன ஆணையில் உண்மையை மறைத்து தற்போது வேலை வழங்கப் பட்டது போல் ஏற்பாடு செய்திருக்கிறது ஆ.தே .ஆ.

அந்த மூன்று பேரும் சரியாக ஒரு ஆண்டிற்கு முன்பே வேலையில் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். அப்படி சேர்ந்திருந்தால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய மாதம் ஏறத்தாழ ரூபாய். இருபத்து ஆறாயிரம் வீதம் 12x 26000 = ௩௨௧௦௦௦ (321000) வரை மூன்று பேருக்கும் சேர்த்து ரூபாய் ஒன்பது இலட்சம் வரை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

அந்த அன்றாடங்காய்ச்சிகள் மூன்று பேருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் ரூபாய் ஒன்பது இலட்சத்தைத் தராமல் நீதிபதிகளும், ஆ.தே.ஆ ஊழியர்களும் பகிர்ந்து கொண்ட உண்மை அம்பலமாகியுள்ளது. 

வேடிக்கை பார்க்கும் அரசியல் விபச்சாரி ஜெயலலிதா 

காமராஜர் வாழ்ந்த காலத்தில் அரசியல்வாதிகள் தேசத் தலைவர்களாக மதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போதைய ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரை அரசியல் வியாபாரிகள் என்று எழுதத் தொடங்கினோம். 

உண்மையை சொல்லப்போனால் ஜெயலலிதா, கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, தமிழனின் மானத்தைக் கப்பலேற்றிய ப. சிதம்பரம் போன்ற பலரையும் அரசியல் விபச்சாரிகள் என்று அழைப்பதே சாலச்சிறந்தது. விபச்சாரிகள் கூட வாங்கிய பணத்திற்கு நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

அரசியல் விபச்சாரியான கன்னடச்சி ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கிறேன்.

"நீ கொள்ளையடித்த என்னைப் போன்ற கீழ் நடுத்தர (Lower Middle Class) மற்றும் ஏழை, அன்றாடங்காய்ச்சிகள் கட்டும் வரிப்பணத்தை வைத்து நீ மஞ்சக்குளி, பேருந்து விழா என்ற பெயரில் விவசாயிகளின் (தமிழ்நாட்டில் ஏறத்தாழ விவசாயம் அழிந்து விட்டது. ஒப்பந்தம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து தண்ணீர் தர மறுக்கும் கேரள கர்நாடக அரசுகளைக் கேட்பதற்கு யாருக்கும் திராணி இல்லை.) வாழைமரங்களை வைத்து சுயவிளம்பரம் செய். இலவசத் தண்ணீரை பத்து ரூபாய் நன்னீர் என்ற பெயரில் விற்பனை செய்து கல்லா கட்டு. 

இவர்கள் மூன்று பேர்களுக்கும் தரவேண்டிய ரூபாய். ஒன்பது இலட்சத்தைத் தராமல் ஏன் கொள்ளையடித்தாய்? அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வழக்கறிஞர்களுக்கு ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்துள்ளனர். 

நீ பதுக்கி வைத்திருக்கும் எங்களின் வரிப்பணம் எங்கே? கோடி கோடியாய் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் கொள்ளையடி. இவர்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளிடம் கொள்ளையடித்து ஏன் அந்த மூன்று பேர்களின் வயிற்றில் அடிக்கிறாய்?

உன்னைப் போன்ற விபச்சாரிகளை விடக் கேவலமான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஈனத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கும்வரை உன்னைப் போன்றவர்களின் வியாபாரம் மன்னிக்கவும் விபச்சாரம் சூடுபிடிக்கும்."

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் 

கரன்சிக்கு கற்பிழக்கும் வேசிபோல தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்படுகின்றன. ஏற்கனவே செய்தித்தாள் என்ற பெயரில் வெளிவரும் தாள்களில் செய்திகள் எங்கே என்று தேட வேண்டியுள்ளது? அந்த அளவுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் போதாதென்று ஜெயலலிதாவைப் போன்ற அரசியல் விபச்சாரிகளைப் போன்றவர்களின் படங்களை வெளியிட்டு  கல்லா கட்டும் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்களே, பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யான செய்தியை வெளியிடுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதும் உங்கள் தொழிலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

இந்தத் தமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்கள் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளை, நான் அனுப்பும் உண்மைகளை கண்டுகொள்ள மாட்டார்கள், வெளியிட மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 

இருந்தாலும் உண்மைகளை எழுத்தின் மூலம் வெளியுலகிற்குத் தெரிவிப்பதும் எழுதுவதும் என் கடமை. என் உரிமை.

மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

"எங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் மூன்று இலட்சம் வீதம் மூவருக்கும் கிடைக்க வேண்டிய ரூபாய் ஒன்பது இலட்சத்தை ஆ. தே. ஆ ஊழியர்களுடன் சேர்ந்து எங்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகளே கொள்ளையடித்து விட்டனர் அண்ணா. ஏற்கனவே, வழக்கறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய். முப்பதாயிரம் வரை செலவழித்து இந்த வேலையை வாங்கியிருக்கிறோம். இனி அந்த ஒன்பது இலட்சத்தைப் பெறுவதற்கும் கடந்த நவம்பரில் இருந்து வேலையில் சேர்ந்ததாக ஆணை வாங்கவும் வழக்குப் பதிவு செய்ய, வழக்கறிஞர்களுக்கு செலவு செய்ய எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை அண்ணா, கொள்ளையடித்த நீதிபதிகளிடமே மறுபடியும் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எங்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளைப் பொறுத்தவரை மூன்று இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை. 

இந்த வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று எங்கள் பெற்றோர் ஆறுதல் அடைகின்றனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே, எங்கள் பெற்றோர் எங்களைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்தனர். ஆனாலும் கிடைக்க வேண்டிய மூன்று இலட்சம் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. யாரிடம் சென்று நீதி கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முப்பதாயிரம் செலவு செய்த பிறகுதான், ஐம்பது சதவீத நீதியே கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கிறது." என்று அந்த மூன்று பேர்களும் என்னிடம் தனித்தனியே அலைபேசி ஊடாக அழுது புலம்பினர். 

"வருத்தப் படாதீர்கள், என்னுடைய எழுத்தின் மூலமாக உங்களைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வந்திருக்கிறேன். தற்போது, நீங்கள் சொன்ன செய்தியையும் கட்டுரையாக எழுதி மனித உரிமைகள் ஆணையம், தலைமைச் செயலகம் என அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன். எங்காவது ஒரு மூலையில் நிச்சயம் யாராவது ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். நிச்சயம் நீதி முழு வெற்றியடையும்." என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்.



குறிப்பு:
==========

கன்னடச்சி ஜெயலலிதா போன்ற அரசியல் விபச்சாரிகள் பலருக்கும் எனக்கும் சொத்துத் தகராறோ வாய்க்கால் வரப்புத் தகராறோ எதுவுமில்லை. இங்கு நியாயம் மறுக்கப் படுகிறது. நீதி சிதைக்கப் படுகிறது. அவ்வளவுதான், இந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு, கன்னடச்சி ஜெயலலிதாவிற்கோ மற்ற அரசியல் விபச்சாரிகளுக்கோ படிக்கக் கிடைத்தால், என்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக, கொஞ்சம் தனிமையில் அமர்ந்து சிந்திப்பார்கள், அவர்கள் மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கும். அங்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும். இந்த ஒற்றை நம்பிக்கை தான் என் மனதில் உள்ளது.

அரசியல் தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். அரசியலைத் தவிர்த்து விட்டு மக்கள்நலனைப் பற்றி சிந்திப்பது முட்டாள்தனம். அரசியலை சீர்படுத்தி விட்டால் மற்ற அனைத்தும் நேராகி விடும்.






-----------------------------------------------------------

இது குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. அதில் public service என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு சார்ந்த நிறுவனங்களையும் குறிக்கும். TRB என தனியே அரசாணையில் குறிப்பிடப்படத் தேவையில்லை. எனவே ஆசிரியர்தேர்வாணையம் (TRB - Teachers Recruitment Board) தமிழக அரசின் ஆணையை மதித்து இந்த தீர்ப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆக அரசாணையையும் அவமதித்து நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்துக் கொண்டிருக்கிறது ஆசிரியர் தேர்வாணையம். இது குறித்து எந்த நாளிதழும் வார இதழும் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அந்தப் பொறுப்பை நான் ஏற்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த இழையில் நடந்தவற்றை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வரும்  ஆகஸ்டு மாதம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அரசாணையை வெளியிட்டு விட்டு அதனை மதிக்காத ஆசிரியர் தேர்வாணையம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தலைமைச் செயலகம் மீதும் தமிழ்நாடு அரசு மீதும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மதித்து பணி நியமன வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தும் TRB மீதும் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். TRB மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணமாக பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் தான். அவர்களைத்தான் முதலில் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிடம் தொடர்பு கொண்டு அரசாணையை வெளியிட்ட பிறகு அந்த அரசாணை நடைமுறைப் படுத்தப் பட்டதா என்று பார்க்கவில்லை. மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் என்று கடனுக்கு வேலை பார்க்கும் இவர்களும் தண்டனைக்குரியவர்களே.
இவர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். எங்கெல்லாம் நீதி ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை வெடிக்க ஆரம்பிக்கும். 
நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்.
தாமதப்படுத்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதியும் அநீதிக்குச் சமமானது. சில மாதங்களுக்கு முன் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் சார்பில் போராட்டம் வெடித்தது. மீண்டும் ஒரு முறை இன்னும் சில மாதங்களுக்குள் இன்னும் ஒரு போராட்டமோ வன்முறையோ வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயகத்திற்கும் இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளை உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளது. TRB நீதிமன்ற தீர்ப்பை மதித்தாலே போதும். பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கத் தேவையில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் கடந்த டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன செய்தி இதுதான்.
'அண்ணா, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பணிநியமன ஆணை வழங்கப்படாததிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள கல்லூரி முதல்வரையும் பல்கலைக் கழக துணைவேந்தரையும் அணுகினோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். அதன்பிறகு அவர்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 
ஒன்று சேர்ந்து சென்னைக்கு சென்றோம். TRB அலுவலகம் சென்று கேட்டோம். அங்குள்ள ஊழியர்கள் எங்களின் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு எங்களை விரட்டியடித்தனர். பொதுவாக ஒவ்வொரு அலுவலகத்திலும் சந்தேகம் தீர்க்கும் பிரிவு (enquiry section) இருக்கும். ஆனால் TRB ஊழியர்கள் எங்களை விரட்டியடித்தனர். அரசாணையை கையில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கேள்வி கேட்க அனுமதிக்க வில்லை. மீறி அங்கேயே நின்ற போது இங்கே நிற்கக் கூடாது. முடிந்தால் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடருங்கள். என்று கூறி விரட்டியடித்தனர். நீதிமன்றம், வழக்கு என்று போவதற்கு நிறைய செலவாகும். அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே அண்ணா போவோம்?' என்றார்.
நான் பதிலளித்தேன் 'கவலைப்படாதீர்கள் இதற்கெல்லாம் அதிக செலவாகாது உங்கள் பக்கம் நீதி உள்ளது தொடர்ந்து போராடுங்கள் இது குறித்து நான் மின்னஞ்சல் ஊடாக செய்தியாக என்னால் முடிந்தவரை நாளிதழ்களுக்கும் ஊடகங்களுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கிறேன். நம்பிக்கையோடு போராடுங்கள்.' 

இதன் அடிப்படையில் இது தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். மனித நேயமுள்ள ஊடக நிருபர்கள் இது குறித்து செய்தி வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமில்லாத நீதி வழங்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் என்னுடைய விருப்பம்.
சீமான் அண்ணா, அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், மதிப்பிற்குரிய திரு. இறையன்பு ஆகிய மூவருக்கும் என் அன்பான வேண்டுகோள். ஏனெனில் நீங்கள் மூவரும் ஊடகங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் மக்களோடு மக்களிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள்.


சீமான் அண்ணாவுக்கு, வணக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய ஒரு பதிவில் இந்தியா என் பக்கத்து நாடு என்று நான் சொல்லியிருந்தேன். அதனை நீ படித்து விட்டு சில மாதங்களுக்குப் பிறகு போராளிகளைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்பட விழாவில் நீ பேசும் போது இந்தியா என் பக்கத்து நாடு என்று ஒரு அன்புத் தம்பி சொன்னார் என என் பெயரைச் சொல்லாமல் நான் சொன்ன வார்த்தையை நீ சொன்னது குறித்து நான் முகநூலில் காணொளியில்  (video) எட்டு மாதத்திற்கு முன் பார்த்தேன். அதே போல் TRB குறித்து என்னுடைய இந்த செய்தியையும் உனக்கான நேர்காணலில் நீ சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஈழத்தமிழர் பற்றியே போராடாமல் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் நீ பேச வேண்டும். போராட வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டுத் தமிழர்களே பலர் அன்றாட வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கும் இழிநிலையில் நீ ஈழத் தமிழர்களுக்காக மட்டும் போராடுவது நியாமல்ல. தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நலமோடு வேதனையில்லாமல் வாழ்ந்தால் தான் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுகூடி போராட முடியும்.
ஒரு காலத்தில் காமராஜர் மக்களுக்காக வாழ்ந்தார். அவரை இந்த நன்றி கெட்ட மக்கள் தோற்கடித்தனர். மக்கள் மறந்து விட்டனர். ஆனால் காலம் அவரை தத்தெடுத்து நினைவில் வைத்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளான நமக்கு நினைவூட்டியிருக்கிறது. அதே போல் தமிழர்களின் நலனுக்காக போராடும் உன்னைப் போன்றவர்களை மக்கள் கண்டுகொள்ளா விட்டாலும் காலம் நினைவில் வைத்துக் கொள்ளும். என்னைப் போன்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

அன்பு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு, வணக்கம். எல்லா தொலைக்காட்சி நிலைய நேரடி நேர்காணல் நிகழ்விலும் தாங்கள் கலந்து கொள்கிறீர்கள் மக்களின் அவல நிலை பற்றி, ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து (இது ஒரு தனிப்பட்ட இனத்திற்கான கொடுமைகள் அல்ல, ஒட்டுமொத்த மனித உரிமைக்கு எதிரான வன்முறை, படுகொலை என ) தங்களின் சிந்தனையை மக்களின் பார்வைக்கு முன் வைக்கிறீர்கள். தங்களின் நேர்காணலை பார்த்து கேட்டு பலரும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதே போல் TRB யால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருப்பதைக் குறித்தும் நீங்கள் பேச வேண்டும் அதனை கேட்கும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு அடைவார்கள் என்பது என்னுடைய விருப்பம். என்னுடைய வேண்டுகோள்.


மதிப்பிற்குரிய திரு. இறையன்பு அவர்களுக்கு, வணக்கம். மாணவர்களின் கல்வி குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களின் தேர்வுமுறை பாடத்திட்டம் குறித்தும் IAS தேர்வு குறித்தும் அக்கறைப் படும் தாங்கள் இது குறித்தும் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.


முகநூல் குழுமங்கள் சிலவற்றில் அரசியலைப் பற்றிய பதிவுகள் நீக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளன. படித்தவர்களின் இப்படிப்பட்ட அறியாமை குறித்து எனக்கு மனதிற்கு வேதனையாக உள்ளது.
'மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி. எனவே அரசியல் பேசுங்கள். நமக்காக நம்மில் ஒருவரால் நடைபெறும் ஆட்சியைப் பற்றி நாம் பேசினால் எழுதினால் சிந்தித்தால் தான் நாம் நலமுடன் எந்தக் குறைகளும் இல்லாமல் வாழ முடியும் ' என மறைந்த ஐயா எம். எஸ். உதயமூர்த்தி அவர்களும் மக்கள் சக்தி இயக்க நண்பர்களும் அடிக்கடி சொல்வார்கள். எழுதுவார்கள்.
எத்தனையோ சுயநலவாதிகள், கொள்ளையர்கள் அரசியலில் வியாபாரிகளாக வலம்வரும்போது ஐயா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப அரசியலைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறேன் எழுதிக் கொண்டிருக்கிறேன். சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இது தெரியாமல் 'அரசியல் பேசாதீர்கள்' என்று சொல்லும் மூடர்களை  நினைத்து நான் எந்த சுவற்றில் முட்டிக் கொள்ள?

முதலமைச்சரின் கவனத்திற்கு:
நாங்கள் வாக்களித்து உங்களை முதலமைச்சராக்கினோம். உங்கள் ஆட்சியில் ஒரு அரசு அலுவலகத்தில் அராசகமும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. உரிய நடவடிக்கை எடுங்கள். 



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/5/10

சில மாதங்களுக்கு முன் இந்தப் பதிவை இட்டவுடன் ஒரு சில குழும நண்பர்கள் இது குறித்து அக்கறையோடு கேட்டார்கள். ஒருவர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை அனுப்பி வைக்கக் கேட்டார்.

அதன்படி இந்த மின்னஞ்சலோடு மதுரை நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை இணைத்திருக்கிறேன்.

எண் 5 மற்றும் 6 வது பத்தியில் சொல்லப்பட்டுள்ளதை வாசித்துப் பாருங்கள்.

அரசாணையில் ஆசிரியர் தேர்வாணையத்திற்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப் படவில்லை என்ற டி. ஆர். பி யின் (puplic services என்ற வார்த்தை டி.ஆர்.பி யை குறிக்காது) பதிலை/வாதத்தை வைத்து மதுரை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

"puplic services என்ற வார்த்தைக்குள் டி.ஆர்.பி யும் அடங்கும் என்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தீர்ப்பு வெளியாகிய இரண்டு வாரங்களுக்குள் பணிநியமன ஆணை வழங்கப் படவேண்டும்" என டி.ஆர். பி க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆக மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் டி.ஆர். பி க்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனால் டி.ஆர்.பி இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையோ பதிலோ தராததால் பாதிக்கப்படவர்கள் சார்பில் டி.ஆர். பி யின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"puplic services என்றாலே அது ஆசிரியர் தேர்வாணையத்தையும் குறிக்கும் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் டி.ஆர்.பி யும் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதுவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது" என்பது பாதிப்பட்டவர்களின் வாதம்.

இது மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு தான். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை வழங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தார்கள். (சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி எனக்கு இதுவரை கிடைக்கவில்லை).

puplic services என்றால் அதற்குள் டி.ஆர்.பி வராது என்று வாதம் செய்து முரண்டு பிடித்த டி. ஆர். பி யின் இந்த முடிவைப் பார்க்கும் போது டி.ஆர். பி ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இப்படி சப்பைக்கட்டு கட்டுவதாக யூகங்கள் கிளம்புகின்றன. டி. ஆர். பி க்கு ஏன் பாதிக்கப்பட்டவர்கள் மேல் இவ்வளவு கொலைவெறி என்று தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தப் பாவமும் அறியாதவர்கள். அன்றாடம் உழைக்கும் பணத்தையெல்லாம் தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று பணத்தை தண்ணீரைப் போல் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர், தூக்கம் பசி மறந்து படித்து தேர்ச்சியடைந்தும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் ஒரு பக்கம்.

தமிழ்நாட்டிலேயே வாழும் தமிழனுக்கே வாழ்வதற்கும் அன்றாட தேவைகளுக்காகவும் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் அரசாணையே தவறு என்கிறது டி.ஆர்.பி. அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப் பட வேண்டும். இல்லையென்றால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை நந்தனத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சரின் நிகழ்வு பொதுசொத்தில் (மக்களின் வரிப்பணத்தில்) தற்புகழ்ச்சி செய்து கொண்டதாகவும்  சுய விளம்பரம் செய்து கொண்டதாகவும் முதலமைச்சரின் மீது பழி வந்து சேரும். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் முதல்வர் மனதில் வைத்து நியாயமான முறையில் தமிழ்நாடு அரசு பாதிப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

முதலமைச்சரின் பார்வைக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது.

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2013/2/25
Subject: உயர்நீதிமன்ற தீர்ப்பு - அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய் (டி.ஆர்.பி).
To:


ஆசிரியர் தேர்வு ஆணையம் செய்த முட்டாள்த்தனமான செயலை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது.

"இன்னும் இரண்டு வாரம் முதல் ஒரு மாத காலத்திற்குள் அரசாணையை மதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட வேண்டும்" என நீதிபதி தீர்ப்பளித்ததாக கடந்த வாரமே எனக்கு செய்தி கிடைத்தது.

ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிடும் என எதிர்பார்த்தேன். குறிப்பாக தினமலர் கல்விமலர், புதிய தலைமுறை போன்ற ஊடகங்களை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் ஊடகங்கள் அனைத்துமே இது தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்தது மனதில் வேதனையை உண்டாக்கியது.

தற்போது இந்த செய்தியை இந்த இழை மூலமாக வெளி உலகிற்கு தெரிவிக்கிறேன்.

நன்றி.

அனைவருக்கும் வணக்கம்,

ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment).

ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால்,
அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.

இது தொடர்பாக செய்திகளை  ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளன.  தமிழக முதலமைச்சர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் நிச்சயம் மனம் வருந்துவார் என நம்புகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

 பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் உங்கள் அனைவரையும், உங்கள் உதவியையும் பெரிதும் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.

மனித நேயம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற பதிவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பெருந்தன்மையான மனம் வேண்டும். அந்த நல்மனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

கீழ்க்கண்ட நியாயங்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நான் முன்வைக்கிறேன்.

1. 'அரசாணை இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை' என பொறுப்பில்லாமல் காட்டுமிராண்டித் தனமாக பதிலளித்து அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணைய்தின்மீதும் அங்குள்ள ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. வெளிப்படையான இறுதிப் பட்டியல் வெளியீடு இல்லை. திரைமறைவில் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாகத் தெரிகிறது.

3. ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வின் வினாத்தாளின் இரண்டாம் பக்கத்தில் 'சமமான பட்டப்படிப்பு' என அவர்களே சொல்லியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

4. அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் இறுதிப் பட்டியலில் பெயர் வெளியிடாமல் இழுத்தடிக்கும்  ஆசிரியர் தேர்வு ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான சரியான தெளிவான விளக்கமும்ஆசிரியர் தேர்வு ஆணைய ஊழியர்களிடம் இல்லை.


நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்திருக்கிறேன், நானும் ஒரு கவிஞன், எழுத்தாளன் என்ற முறையில் எழுத்தின் பலமும் எழுதுகோலின் பலமும் எனக்கு என்னவென்று நன்றாகவே தெரியும்.

இலக்கிய இதழ் ஆசிரியர்களே, ஒரு வேண்டுகோள். தாங்கள் சிற்றிதழ்களாக இருந்தாலும் சரி. இலக்கியம் = இலக்கு + இயம். ஒரு இலக்கை எடுத்து இயம்புதல்.
சமுதாய மாற்றம் என்ற ஒரு இலக்கை எடுத்து இயம்புங்கள் ஊடக அன்பர்களே.


தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டிலேயே நியாயமான உரிமைகளைப் பெற ஆள்பலமும் இல்லாமல் பணபலமும் இல்லாமல் அதிகார பலமும் இல்லாமல் தன்னந்தனியே போராட வேண்டியிருக்கிறது. வேதனையோடு வாழ வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டை ஒரு தமிழனோ தமிழச்சியோ ஆண்டிருந்தால் தமிழர்களின் வலி வேதனை புரிந்திருக்கும். தற்போது அப்படி இல்லை. காசுக்காக நக்கிப் பிழைக்கின்ற கூட்டம்தான் அதிகம்.

மனித நேயம் உள்ளவர்கள், இந்தப் பதிவைக் குறித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேர்காணல் செய்ய விரும்புகிறவர்கள், என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, October 26, 2013

தனித் தமிழ்நாடு - விரைவில்...

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

'ஆனந்தமழைதிரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ வலைத்தளம் அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார். 

என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும் என்றார்.

அந்த சில நிமிடங்களில் என் மனதிற்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அதற்கான காரணம் இதுதான்.

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் போன்று பலரின் எண்ணங்களை இந்தப் பதிவு பிரதிபலித்தது. பலரின் வரவேற்பை இந்தப் பதிவு பெற்றது. சிலர் அறிவுரை கூறினர். சிலர் எதிர்த்தனர். 

இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் என்னிடம் பேசி முடிக்கும்போது "இது என்னுடைய தனிப்பட்ட அலைபேசி எண். (Personal mobile number). குறித்து வைத்துக் கொள்ளுங்கள்." என்றார்.

சில நாட்களுக்குமுன்பு ஒரு எழுத்தாளரிடம் அலைபேசி ஊடாக பேசும்போது, "உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமாக எழுத வேண்டாம். யார் தனித்தமிழ்நாடு என்று ஆரம்பித்தார்களோ அவர்களே, அதன கைவிட்டு விட்டார்கள்." என்றார். சிலநாட்கள் கழித்த பிறகுதான் ஒரு நண்பர் மூலமாக ௧௯௬௪ ல் (1964) திருடர் முன்னேற்ற கழகத்தினரால் (அதாங்க திமுக) கைவிடப்பட்டது என்பதை தெரிந்துகொண்டேன். 

நான் அவருக்கு சொல்லும் பதில் இதுதான்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.

"உணர்ச்சிவசப் படாவிட்டால், body (பிணம்) என்று சொல்லி விடுவீர்களே."

ஒருவர் சொன்னார். 

பிரிவினை வாதம் ஆபத்தான நோய்.

என்னுடைய பதில் இதுதான்.

நிலப்பரப்பு ஒரு பொருட்டே இல்லை. சிங்கப்பூரை பாருங்கள். இன்றைய விரிவடைந்த சென்னையின் பாதிகூட இருக்குமா என்பது சந்தேகம் தான். இன்று அந்த சிங்கப்பூர் தான் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்திகளில் ஒன்று. துபாயை, குவைத்தை பாருங்கள்.


குழுமத்திலிருந்து ஒருவர் சொன்னார்.

கொங்கு நாட்டை தனியா பிரிச்சு கொடுத்திடுங்க. தெலுகை , கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும். ஆந்திராக்காரன் எங்களை தெலுங்கன் என ஒத்துக்க மாட்டான். கொங்கில் தமிழ் பேசும் தமிழர்கள்  இனிது வாழலாம்.

நாங்கள் எல்லாம் ராஜராஜன் ஆந்திராவை ஆண்ட போது அவனது குடிகள்.

குறிப்பு: நான் ஒரு பச்சைத்தமிழனுடன் என் மரபணுவை ஒப்பிட்டு பார்க்க ஆசை. யாராவது தன்னார்வலர் உண்டா? 

இன்னொருவர் கேட்டார்.

இன்று தமிழ்நாடு. நாளை வன்னிய தேசம் கேட்பதை நீங்க மறுக்க மாட்டீர்களா?

இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்.

மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது, மதுரை மற்றும் பிற ஊர்கள் வழியே என் தாய்த் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து, தமிழ்நாடெங்கும் பரவியவர்கள் நாயக்கர் பிரிவு. தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ஆகிய மூன்று இனங்களிலுமே நாயக்கர் பிரிவு உண்டு. இந்த மூன்று மொழிவாரியான இனங்களும் நாயக்கர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த வந்தேறிகள்.

வந்தேறிகளான உங்களுக்கு தனிநாடு வேண்டுமெனில் உங்கள் பூர்வீகம் எங்கோ அங்கே போய் தனிநாடு கேளுங்கள். தமிழன் சிங்கப்பூரிலிருந்து தனிநாடு கேட்கவில்லை. கனடாவிலிருந்து தனிநாடு கேட்கவில்லை. தமிழன் தன்னுடைய பூர்வீகமான ஆண்டாண்டுகாலமாய் அடிபட்டு மிதிபட்டு இங்கேயே கிடந்தது தவித்து தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் தான் தனிநாடாகக் கேட்கிறான். 

நாயக்கர்கள் என்ற பெயரில் வந்தேறிகளான தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் தங்களுடைய முறையே ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிடம் போய் கேட்பதுதான் முறை. நீங்கள் தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தவர்கள். வந்தேறிகள் குடியேறிய இடத்தில் நாடு கேட்பது முறையல்ல.

தமிழ்நாட்டில் 
வாழ்வது யாராகினும் 
ஆள்வது தமிழனாகட்டும்.

வன்னியர் என்பது ஒரு ஜாதி. ஜாதி வேறு தேசிய இனம் வேறு. நம்முடைய தேசிய இனம் தமிழன். வன்னியர் என்பது ஜாதி அடையாளம். இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

தனித்தமிழ்நாடு கேட்பது என்னுடைய தேசிய இனத்திற்காக. 

தனித் தமிழ்நாடே தனித் தமிழீழத்திற்கான வாசல் 

'தனித் தமிழ்நாடே தனித் தமிழீழத்திற்கான வாசல்' என்ற எண்ணத்தை, சிந்தனையை மனதில் வைத்தே கடந்த இரண்டாண்டுகளாக பதிவுகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று எழுதி எழுத்தின்மூலமாக கருத்தியல் புரட்சி செய்து வருகிறேன். பலருடைய மனதிலும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது என்ற உண்மை இந்தப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பின்மூலம் அறிய முடிகிறது. 

தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக போராடுவதென்பது, இரயில் மறியல் செய்வது என்பது தங்களை சுயவிளம்பரம் செய்வதற்கான யுக்தி, எழத்தமிழர்களுக்கான அனுதாபமாகவே இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.

உண்மையிலேயே ஈழத்தமிழர்களின்மீது அக்கறை உள்ளவர்கள், தமிழ்நாடு தனிநாடு அடைவதற்காகத்தான் முதலில் போராடுவார்கள். நாமே இந்தியர்களிடம் அடிமையாக இருந்துகொண்டு, ஈழத்தமிழர்களுக்காக போராடுவது என்பது விழலுக்கு இரைத்த நீராகும்.

தமிழ்நாடு தனிநாடு அந்தஸ்து அடைந்துவிட்டால், நாம் சொல்வதை மற்ற நாட்டுக்காரன் கேட்பான். ஐ. நா சபையும் கேட்பான். ஆனால், தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்துக்கொண்டு போராடுவது மாற்றங்களை ஏற்படுத்தும். முழுமையான மாற்றங்களை ஏற்படுத்தாது. தமிழீழம் தனிநாடு அடையும் அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தாது. 

இந்தியாவின் பாரபட்சமான நிலைப்பாடு 

உலக நாடுகள் தடைசெய்யும் திட்டங்கள், வியாபாரங்கள் உதாரணத்திற்கு வால்மார்ட், பெப்சி, கோககோலா போன்ற பொருட்கள் இந்திய காங்கிரஸ் கொள்ளைக்காரர்களால் அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களால் தங்களின் நலன்கருதி புறக்கணிக்கப்படும் திட்டங்கள் உதாரணத்திற்கு கூடங்குளம் அணுஉலை தமிழ்நாட்டில் கொண்டுவந்து திணிக்கப்பட்டது. அதனால், எந்த ஆபத்தும் இல்லை என்ற விளம்பரம் வேறு.

நேற்றைய ஈழத்தமிழன் போன்று இன்றைய தமிழ்நாட்டு ஈனத்தமிழன் வாழ்கிறான். இன்றைய ஈழத்தமிழன் அகதியாய், நிர்வாணமாய் சிதைக்கப்பட்டது போல், நாளை தமிழ்நாட்டு ஈனத்தமிழன் தமிழ்நாட்டை விட்டே காங்கிரஸ்காரனின் சூழ்ச்சியாலும் தமிழனின் ஒற்றுமையின்மையாலும் அடித்து விரட்டப்படலாம். ஈழத்தமிழன் நேற்று செய்த அதே தவறுகளை இன்று தமிழ்நாட்டு ஈனத்தமிழன் செய்து கொண்டிருக்கிறான். அமைதியாய் வேடிக்கை மட்டும் பார்க்கிறான். 

கடைசியாய் உன் கோவணமும் களவாடப்படும்முன் விழித்தெழு தமிழ்நாட்டு ஈனத்தமிழா...
--------------------------------------------------------
இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

'தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். எந்த நாய் மனிதர்களை விடக் கேவலமான செயல்களைச் செய்கின்றன? மனிதன் செய்யாத நாய்கள் செய்கின்ற ஒரே ஒரு இழிசெயலைச் சொல்லி விடுங்கள் பார்ப்போம்?' என்றார்.

நான் 'அப்படி எதுவும் இல்லை.' என்றேன்.

'பிறகெதற்கு நாய் என்று மனிதர்களைத் திட்டுகிறீர்கள். மனிதன் என்றே அரசியல்வாதிகளை, கொள்ளையடிப்பவர்களைத் திட்டுங்கள் தோழர். மனிதன் என்று சொல்லித் திட்டுவதை விட வேறு என்ன சொல்லித் திட்டினாலும் அது அவ்வளவு சிறப்பானதாக இருக்க முடியாது தோழர். மாற்றிக் கொள்ளுங்கள்.' என்று முடித்துக் கொண்டார். 


சிந்தித்தேன். நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.
-------------------------------------------------------------


தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று எழுதி, சொல்லிப் பழகுங்கள், பழக்குங்கள். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த ஜெயலலிதாவால் தமிழின் மிக உயர்ந்த வார்த்தையான 'அம்மா' என்பதற்கான பொருள் மாறிப்போனது.

(பதவியில் இருந்து கொண்டு கொள்ளையடிப்பவர்கள், கொள்ளையடித்து விட்டு பதவியில் இருப்பவர்கள் என இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இவர்கள் எல்லாம் நம்முடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்து உழைத்து உண்ண விரும்பாத நக்கிப் பிழைக்கும் நாய்கள்.)

'மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே, மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கேரளத்தில் அரசு வேலை' என கேரளாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சட்டம் இயற்றியுள்ளான். ஏனெனில் அவன் மலையாளி. அதேபோல் தமிழ்நாட்டில் 'தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு மட்டுமே, தமிழைப் பேசுபவனுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் அரசு வேலை' என்று சட்டம் இயற்ற தமிழன் உயர்ந்த பட்ச அதிகாரத்தில் இல்லை. (இருக்கும் தமிழின நாய் ப. சிதம்பரம் என்னுடைய சிறுவயதில் பலமுறை இளையான்குடி சார்பில் என்னுடைய ஊர் முனைவென்றிக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறான். இன்று அவன் பரம்பரைக்கு சொத்து சேர்த்து நம்முடைய பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான்.) தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லை. தட்டிக்கேட்கவும் ஆளில்லை. ஏனெனில் ஜெயலலிதா ஒரு கன்னட நாய், கருணாநிதி ஒரு தெலுங்கின ஓநாய், விஜயகாந்த் ஒரு தெலுங்கினக் குடிகார நாய். 

(மற்ற இனத்தவரை நாய் என்று அழைப்பதை விட தமிழனை தமிழின நாய் என்றும் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தாய், இன்னமுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் தமிழின நாயே என்று தான் கேட்கவேண்டும்.)

என்னுடைய தாயைப் போலவே என் தாய்மொழி தமிழையும் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால், மற்ற மொழிகளுக்குத் யாரும், நானும் எதிரிகள் இல்லை. 

தன்னுடைய மொழியின் சிறப்பை புரிந்து கொண்டவன் மற்ற மொழிகளை வெறுப்பதில்லை. நானும் அப்படித்தான். மனித நேயத்தை, அன்பை, அமைதியை விரும்பும் தமிழர்களில் நானும் ஒருவன். இதே மனித நேயம், அன்பு, அமைதியை விரும்பும் மனம் எதிர்ப்புறமும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் ஏமாளியாக, கோமாளியாக மாறிவிடுவோம். கூடுதல் மொழிகள் தெரிந்தால் மகிழ்ச்சி தான். 

நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நம்முடைய எதிரி தான் தீர்மானிக்கிறான்.
 

பொதுவாக தமிழின நாய்களும் அரசியலின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிந்திப்பதில்லை.

இன்னமும் ஒரே இந்தியா, கூடங்குள அணுமின் உலை என ஆதரிப்பவர்கள் தமிழ் பேசிக் கொண்டு தமிழர்களென இங்கு வெட்கமில்லாமல் திரிகின்றனர். கூடங்குள அணுமின் உலையால் இந்தியாவிற்கு நன்மை என்று சொல்லும் இவர்கள், தமிழர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியும் இல்லை. தமிழனுக்குரிய அடையாளம் ஏறத்தாழ அழித்தொழிக்கப் பட்டுவிட்டது. இனி, கவிஞர்களாகிய படைப்பாளிகளாகிய நாம்தான் எப்போதும் போல் தமிழைத் தொடர்ந்து நேசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும். நானொரு தமிழன், நானொரு தமிழன் என்ற சுவாச உணர்வு (passion) நம் மூளைக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கட்டும்.

Saturday, September 28, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல்கொள்ளை மற்றும் வழிப்பறி செய்யும் நடத்துநர்களும் அரசாங்கமும் (பாகம் - ௩ மூன்று)

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன். 

மதுரை மாநகர வழிப்பறிப் பேருந்து ஓட்டுனரிடம் நேர்காணல் 

கடந்த செப்டம்பர் ஆறு, ௨௦௧௩ (06-09-2013) அன்று காலை மதுரை இரயில்  நிலைய சந்திப்பில் இறங்கி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நியாய விலைக் கட்டணப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். 

அரைமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் நான் எதிர்பார்த்த நியாய விலைக் கட்டணப் பேருந்து வரவில்லை. எனவே, வேறுவழியில்லாமல் வழிப்பறிப் பேருந்திலேயே (அதாங்க சொகுசுப் பேருந்து - இதைத்தான் ஆங்கிலத்தில் deluxe bus என்று சொல்லி நம் அனைவரின் தலையிலும் மிளகாய் அரைக்கின்றனர் ஆளுங்கட்சியினர்) ஏறினேன். ஓட்டுனருக்கு அருகே நின்றபடி வந்த நான் அவரிடம் "ஐயா, தமிழ்நாட்டுப் பேருந்துகளில் நடைபெறுகின்ற பகல்கொள்ளையைப் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது தொடர்பாக தங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்." என்றேன். 

பேருந்தை ஓட்டியபடியே மேற்கொண்டு கேட்குமாறு சைகை காட்டினார். 

"இப்பொழுதெல்லாம் நியாய விலைப் பேருந்துகளை தமிழ்நாட்டில் பார்க்க முடியவில்லையே ஐயா?" என்றேன்.

"white board (நியாயவிலைப் பேருந்துகள்) தற்போது முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன தம்பி" என்றார்.

"யார் இப்படி செய்வது ஐயா?" என்றேன்.

"மேலிருந்து கீழ்வரை அனைத்து அதிகாரிகளும் இந்தக் கொள்ளைக்கு உடந்தை" என்றார்.

"பேருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் அன்றாடங்காய்ச்சிகளும் ஏழைபாளைகளும் தான் ஐயா. ஏற்கனவே இரண்டு மடங்குக் கட்டணமாக உயர்த்தப்பட்ட ஆளுங்கட்சியினரின் வழிப்பறி மற்றும் பகல்கொள்ளை தற்போது நான்கு மடங்காக உயர்த்தி வழிப்பறிப் பேருந்துகளை அதிகரித்து இரண்டு மடங்கு கட்டணமுள்ள நியாயவிலைப் பேருந்துகளை மறைமுகமாக அழித்தொழிக்கின்றனரே" என்றேன்.

"உண்மைதான் தம்பி. ஆளுங்கட்சியில் மேல் தொடங்கி கீழ்வரை அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தை. மேல்மட்ட அதிகாரிகள் முதலமைச்சருக்கு பெட்டி நிறைய கட்சி வளர்க்க கொள்ளையடித்தாவது வசூல் செய்த (collection) பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக இருக்கின்றது தம்பி. நாங்கள் பணிமனைக்குச் சென்றவுடன் வசூல் (collection) எங்கே? இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என எங்களை வற்புறுத்துகின்றனர் தம்பி. நாங்கள் என்ன செய்வோம்? மக்கள் பேருந்துகளில் ஏறி இறங்கினால் வசூல் கிடைக்கும். அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு நியாய விலைப் பேருந்துகளை அழித்தொழிக்கின்றனர் தம்பி" எனவெளியுலகிற்குத் தெரியாத சில உண்மைகளைத் தைரியமாகப் போட்டுடைத்தார்

நான் இறங்க வேண்டிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நெருங்கிவிட்டதால் அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டேன். 

மதுரை - பரமக்குடி நியாயவிலைக் கட்டணப் பேருந்தில் நடந்த வழிப்பறியும் பகல்கொள்ளையும் 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி செல்லும் நியாயவிலைப் பேருந்தில் (முன்பின் எந்தப் பதாகைகளும் ஓட்டப்படாததால் நியாயவிலைப் பேருந்துதான் என உறுதி செய்து கொண்டேன்.) ஏறி நடத்துநரிடம் பயணச்சீட்டிற்கான ௩௪ (34) ரூபாயைக் கொடுத்தேன். 

"௩௫ ரூபாய் (35) தம்பி" என்றார். ௩௪ தானே ஐயா எப்போதிலிருந்து ௩௫? என்றேன். "கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதே விலைதான் தம்பி." என்றார். "என்னடா நடக்குது இங்க" என்று முணுமுணுத்தபடி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு "இனி பயணச்சீட்டை ஆதரத்திற்காகச் சேமித்து வைக்க வேண்டும் போலிருக்கிறதே" என்றேன். என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் வேதனையோடு சிரித்தார். 

பயணிகள் இரயிலின் வேகம் 

கடந்த ௧௧, செப்டெம்பர் ௨௦௧௩ (11-09-2013) அன்று மாலை எட்டு மணிக்கு எனக்கு மதுரை இரயில் நிலைய சந்திப்பிலிருந்து பெங்களூரு செல்லும் தூத்துக்குடி - மைசூர் இரயில். அன்று நான் தங்கியிருக்கும் ஊரான பரமக்குடியில் தியாகி இமானுவேல் குருபூஜை என்பதால் மதியத்திற்கு மேல் பரமக்குடி வழியே செல்லும், பரமகுடியிலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன அல்லது மாற்று வழியில் சுற்றுப்பாதையில் பல மைல் தொலைவில் பல மணி நேரத்திற்குப் பிறகே சென்று சேரும்படி இயக்கப் பட்டிருந்தன. (அன்று தான் மகாகவி பாரதியின் நினைவுதினம். அன்று யாரும் பாரதியை நினைத்தும் வழிபட்டதாகத் தெரியவில்லை.)  அதனால் பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் மதியம் இரண்டு மணிக்கே இராமேஸ்வரம் - மதுரை செல்லும் பயணிகள் இரயிலில் மதுரை செல்ல வேண்டியதாயிற்று. 

பேருந்திலும் சரி, இரயிலிலும் சரி பரமக்குடியிலிருந்து மானாமதுரைக்குச் செல்ல குறைந்த பட்சம் இருபத்தைந்து நிமிடங்கள் ஆகும். ஆனால் நான் சென்ற அந்தப் பயணிகள் இரயில் வெறும் பதினைந்து நிமிடங்களில் சென்று சேர்நதது

அப்போது தான் ஒரு விடயம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து பரமக்குடிக்கு மானாமதுரை வழியாக செல்லும் விரைவு இரயில் (Express), அதிவேக விரைவு இரயில் (Super fast) என்று ஏமாற்றும் இரயில்கள் கூட பரமக்குடிக்கும் மானாமதுரைக்கும் உள்ள தூரத்தை வெறும் பதினைந்து நிமிடங்களில் சென்று சேர்ந்ததில்லை.

எப்படியெல்லாம் நாம் ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

வழிப்பறிப் பேருந்துகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார்?

கடந்த கருணாநிதி ஆட்சிக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலேயே சொகுசுப் பேருந்துகள் என்ற வழிப்பறிப் பேருந்துகள் அறிமுகமாகி விட்டன. ஒருவேளை அதற்கு முந்தைய ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப் பட்டு விட்டனவா என்பது தெரியவில்லை. வழிப்பறி பெருந்துகளுக்கான வேரைத் தேடி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

என்வாழ்வில் சந்தித்த கடமை தவறாத நடத்துநர்கள் 

என் வாழ்வில் நான் சந்தித்த கடமை தவறாத சில நடத்துநர்களைப் பற்றிச் சொல்கின்றேன். கேளுங்கள்.

என்னுடைய சிறுவயதில் என்னுடைய சொந்த ஊரான முனைவென்றியில் எனக்குப் பள்ளி நேரம் முடிந்தபின்பு ஆடு மாடுகளை மேய்ப்பது, என் தாத்தாவின் பலசரக்குக் கடையைப் பார்த்துக் கொள்வது என ஒருநாள் காலையில் கடையில் தாத்தாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் அமர்ந்தேன். வெளியில் எங்காவது யாரையாவது பார்ப்பதற்கு அல்லது வயல்வெளிகளுக்குச் செல்வதற்காக கடையில் ஆளை மாற்றி விட்டு தாத்தா செல்வது வழக்கம். 

அன்று என்னிடம் 'ஐம்பது ரூபாய், இருபத்தைந்து ரூபாய் போன்றவற்றிற்கு இருபத்தைந்து காசுகள், ஐம்பது காசுகள் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களை எண்ணிக் கட்டி வைத்து விடு. நமது ஊருக்கு வரும் பேருந்து நடத்துநர் வந்து கேட்பார். அவரிடம் கொடுத்து விடு. அவர் அதற்கு உண்டான ரூபாய்த் தாள்களைத் தந்து விடுவார்' என்று சொல்லி விட்டுப் போவார். 

என் தாத்தா சொன்னபடி நடத்துநர் கடைக்கு வந்து தனக்குத் தேவையான ஐம்பது ரூபாய்க்கோ அல்லது இருபத்தைந்து ரூபாய்க்கோ சில்லறை வாங்கிச் செல்வார். அவர் கடமையைச் செய்ய தனக்குத் தேவையானதை தானே முன்கூட்டியே தயார்செய்து வைத்துக் கொள்கிறார். 

இன்று சென்னையில் உள்ள நடத்துநர்களை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் அரசு ஊழியர்களை தங்களுக்குத் தொண்டு செய்யும் கடவுளாக அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்திப் பார்க்கிறார்கள்.ஆனால், அரசு ஊழியர்களில் குறிப்பாக பேருந்து நடத்துநர்களில் பயணிகளை பெரும்பாலும் மதிப்பதில்லை. ஏதோ புழுப் பூச்சிகளைப் பார்ப்பது போல பார்க்கின்றனர். என்னவோ இவன் அப்பன் வீட்டுப் பேருந்து போலவும் இவன் தான் அதன் உரிமையாளர் போலவும் நினைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய ஐம்பது பைசா, ஒரு ரூபாய் சில்லறைகளைக் கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளையடித்து பணம் பார்க்கின்றனர். தகாத வார்த்தைகளால் பயணிகளை திட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

சென்னையில் என் சொந்த நேரடி அனுபவத்தில் நான் சந்தித்த நேர்மையான, மனித நேயமுள்ள நடத்துநரைப் பற்றிச் சொல்கிறேன். கேளுங்கள்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் உள்ள என் அக்கா (பெரியம்மா மகள்) வீட்டிற்குச் சென்றுவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள என் அறைக்குத் திரும்புவதற்காக தி.நகர் செல்லும் நியாயவிலைப் பேருந்தில் (whiteboard) ஏறி அமர்ந்தேன். சட்டைப்பைக்குள் ஒரு நூறு ரூபாய்த் தாள், ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் வைத்திருந்தேன். 

பயணச்சீட்டு ஆறு ரூபாய் கொடுப்பதற்கு என்னிடம் இருந்த நூறு ரூபாயை நீட்டினேன். 'சில்லறையாக ஆறு ரூபாய் இருக்கின்றதா பாருங்கள்' என்றார். 'இல்லை. ஐந்து ரூபாய் நாணயமும் இந்த நூறு ரூபாய்த் தாளும் தான் இப்போது என்னிடம் இருக்கின்றது' என்றேன். உடனே நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு பயனச்சீட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு மீதி ரூபாயை தி.நகர் பேருந்து நிலையம் வந்தவுடன் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

கண்ணம்மா பேட்டை விலக்கருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் சிவப்பு விளக்கு (signal) எரிந்ததால் பேருந்து பல நிமிடங்கள் நின்றது. அதன்பிறகு மெல்ல நகர்ந்தது. மீண்டும் அதிகமான போக்குவரத்து நெரிசலால் இன்னும் சில அடி தூரத்தில் இருக்கும் தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, பேருந்து மெதுவாக நின்று நின்று ஊர்ந்து ஊர்ந்து சென்றது.

எனக்கு என்னுடைய அறையில் அவரச வேலை இருந்ததால் 'சரி, இறங்கி நடந்து விடலாம். அடுத்த பேருந்தைப் பிடிக்க வேண்டும்' என நினைத்தவனாய் மீதி தொண்ணூற்று நான்கு ரூபாயை வாங்காமல் இறங்கி வேகமாக நடந்தேன். பேருந்து நிலைய வளைவை நெருங்கி விட்டேன். எப்படியோ பேருந்து ஊர்ந்து ஊர்ந்து எனக்கு முன்னே சென்றது. பேருந்து நின்றது. யாரோ யாரையோ சத்தம் போட்டு அழைப்பது போலத் தோன்றியது. அந்தப் பேருந்தில் இருந்து அந்த நடத்துநர் என்னைப் பார்த்து கையசைத்தார். நடைபாதையில் நின்ற நான் பேருந்தை நோக்கி அந்த நடத்துரை நோக்கி வேகமாக நடந்து அவர் அருகில் நின்றேன். அவர் என்னிடம் தர வேண்டிய தொண்ணூற்று நான்கு ரூபாயைத் தந்து விட்டு 'மறந்து விட்டீர்களோ' என்றபடி பேருந்தில் உள்ளே செல்ல முயன்றார். அவருக்கு நன்றி கூறினேன். அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத, அடுத்தவர் நிலையை உணர்ந்த பண்பான நடத்துநர் அவர்.

பேருந்து நடத்துநரைக் காதலித்தக் கல்லூரி மாணவி 

காதல் எவ்வளவு மேன்மையானது எவ்வளவு மென்மையானது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி என்னிடம் கடந்த அட்டு ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்து கொண்ட உண்மை நிகழ்வு இது. 

அவள் தினமும் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தின் நடத்துரை  வளுக்கு மிகவும் பிடிக்குமாம். அந்த நடத்துநரை மிகவும் நேசித்திருக்கிறார். அவரிடம் சொல்ல முயன்ற நாள் அன்று அந்த நடத்துநர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழை நீட்டியிருக்கின்றார். 

அவள் என்னிடம் சொன்னபோது தான் நேசித்த அந்த நடத்துநரின் திருமண நாளையும் நினைவில் வைத்துச் சொன்னாள். அவரை நினைத்து அதன்பிறகு இரவு உறங்கும்போது போர்வைக்குள் அழுதிருப்பதாகச் சொன்னாள். 

அவள் அவரைப் பற்றிச் சொன்னபோது சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் இருந்த அவளின் வேதனை தாங்கிய அந்த அன்புமுகம் இன்னும் என் மூளைக்குள்ளே கண்ணீரோடு கலந்து நிற்கின்றது. 

(அந்த சகோதரியின் கல்லூரியில் படித்த போது எடுத்த கடவுச் சீட்டு புகைப்படம் (passport size photo) என் பார்வைக்கு ஒரு முறை கிடைத்தது.)

அதன்பிறகு அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார் உயரமா குள்ளமா தோற்றம் எப்படி அவர் குணம் எப்படி என்று அந்தக் கற்பனையில் அந்த வலியில் பல இரவுகளில் பதறி எழுந்திருக்கின்றேன். பயணத்தின்போது, வேலை நேரத்தின்போது, சாப்பிடும்போது, குளிக்கும்போது என பல நேரங்களில் என்னையறிமாலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருப்பதுமுண்டு.

(அந்த வலியில் அந்த சகோதரியின் மனநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதை 'அவள் உயிர் அழுகிறது' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2011/09/blog-post_653.html)

(அந்த வலியில் அந்தத் தாக்கத்தில் ஒரு பெண்ணின் மனநிலையோடு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வைத்திருக்கும் என்னுடைய நான்காவது கவிதைத் தொகுப்பு 'உள்ளம் உருக்கிப் போனாயடா')

அந்த சகோதரி இன்று நல்ல பொருளாதார நிலையில் வாழ்வதாகவும் சமீபத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தேறியதாகவும் தகவல் தெரிந்தது.

இராமேஸ்வரம் - மதுரை பேருந்தில் என் நண்பனுக்கு நேர்ந்த கொடுமை 

என்னுடைய ஊரில் என் நண்பனிடம் 'பேருந்தில் உனக்கு நேர்ந்த ஏதேனும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடர் கட்டுரைக்கு மிகவும் உதவும்.' என்றேன்.

மதுரை செல்வதற்காக இராமேஸ்வரம் - மதுரை செல்லும் பேருந்தில் பரமக்குடி ஓட்டைப் பாலம் நிறுத்தத்தில் ஏறியிருக்கின்றான் என் நண்பன். அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால் அவனிடம் அந்த நேரம் பார்த்து ஐந்நூறு ரூபாய்த் தாள் தான் இருந்திருக்கின்றது. 'நான் இறங்கப் போகும் கடைசி நிறுத்தத்தில் தங்களிடம் மீதிப் பணத்தை வாங்கிக் கொள்கிறேன்' என்று விளக்கமாகக் கூறியும் நடத்துநர் அவனை கண்டபடி மரியாதைக் குறைவாக திட்டிவிட்டு பேருந்தை விட்டு கீழிறங்கச் சொல்லியிருக்கின்றான். அந்த நடத்துநர் நாய்க்கு இருக்கையில் அமர்ந்திருந்த காவல்துறை கவ்வோதியும் சேர்ந்து கொண்டு வக்காலத்து வாங்கியிருக்கின்றான். இவனும் மன வேதனையோடு அடுத்த பேருந்து நிறுத்தமான அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் கீழே இறங்கி விட்டானாம்.

அவன் சொல்லி முடித்த போது நான் அவனை இடைமறித்து 'வட இந்தியாவில் இரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதகர் (TTE - Train Ticket Examiner) பயணச்சீட்டுக் கேட்டால் அவரை பயணிகள் ஓடும் இரயிலில் இருந்து பிடித்துக் கீழே தள்ளி விடுவார்களாம். தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடைபெறுவது இல்லை. உன்னை அப்படிச் செய்யச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அந்த இருவரையும் உன் காலில் கிடந்த செருப்பைக் கழற்றியாவது அடித்து விட்டு கீழே இறங்கியிருந்திருக்க வேண்டும்.' என்றேன்.

பழைய தமிழ்த் திரைப்படத்தின் ஒரு நகைச்சுவைக் காட்சியை இங்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது. 

பேருந்து நடத்துநர் பயணிகளைப் பார்த்து 'சில்லறை இல்லாதர்வர்கள் பேருந்தை விட்டு இறங்கி விடுங்கள்' என்று கத்துவார். அப்போது ஒருவர் அந்த நடத்துநரைப் பார்த்து 'உன்னிடம் சில்லறை இருக்கின்றதா?' என்று கேட்பார். அதற்கு அந்த நடத்துநர் 'இல்லை' என்பார். உடனே அவர் அந்த நடத்துநரைப் பார்த்து 'எங்களோடு சேர்த்து நீயும் இறங்கி விடு' என்பார். இந்தக் காட்சி சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் தான்.

ஒரு வேலையைச் செய்பவன் தனக்குத் தேவையானதை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொண்டு தான் தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அது அவனவன் கடமை. 

கடைக்கு வந்து சில்லறையை வாங்கி வைத்துக் கொண்டு தன்னுடைய நடத்துநர் வேலையை கண்ணும் கருத்துமாய் செய்த நடத்துநர் எங்கே? இப்போது உள்ள நடத்துனர்கள் எங்கே

இன்றும் சென்னையில் இரவு நேரப் பேருந்துகளில் (இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை ) அதிகக் கட்டணம் வசூலிக்கப் படுகின்றது. உதாரணத்திற்கு பகலில் நியாய விலைப் பேருந்துகளில் பேருந்துக் கட்டணம் ஐந்து ரூபாய், (வழிப்பறிப் பேருந்துகளில் ் (deluxe bus) பத்து ரூபாய்) எனில் இரவில் அதே நியாய விலைப் பேருந்துகளில் பத்து ரூபாய், வழிப்பறிப் பேருந்துகளில் இருபது ரூபாய் வசூலிக்கப் படுகின்றது.

ஆனால் இப்படி அரசாங்கத்தாலும் முதலமைச்சராலும் கொள்ளையடிக்கும் பணம் மக்களுக்கு நலத்திட்டங்களாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் குச்சி ஐஸில் ஐஸ் உருகி குச்சி மட்டுமே கிடைப்பது போலவே பலரின் ஊழலுக்குப் பிறகு இடிந்து விழும் பாலமாகவும் தரம் குறைந்த மக்களுக்குப் பயனற்றத் திட்டங்களாகவும் கடைநிலை மக்களுக்குக் கிடைக்கின்றது. 

பெங்களூரு பேருந்தில் வடஇந்தியனின் தைரியமான அணுகுமுறை

சில வாரங்களுக்கு முன்பு நான் என் அலுவலகத்திலிருந்து என் அறைக்குத் திரும்ப, பேருந்தில் (அங்கும் வழிப்பறிப் பேருந்துகள் தான். வேறு வழியில்லை.) ஒன்பது ரூபாய் பயணச்சீட்டிற்குப் பத்து ரூபாயை நீட்டினேன். பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு அந்தக் கன்னட நடத்துநர் ஒரு ரூபாயைத் தராமல் என்னைப் பார்த்து கன்னடத்தில் திட்டினான். நான் அவனிடம் 'If i have the change, i can give you otherwise you have to give me the change. It is your duty. Please do your duty.' என்றபடி அவனைப் பார்த்து முறைத்தேன். ஒரு ரூபாய் வாங்க வேண்டிய என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹிந்தி பேசும் வட இந்திய அன்பர் அந்த நடத்துனரின் பணப்பையைப் பிடித்திழுத்தவாறே 'Show me your bag. Show me your bag. I saw you have lot of one rupee coins.' என்று கத்தினார். சற்றும் எதிர்பார்க்காத அந்த நடத்துநர் நடுநடுங்கியபடி தன்னுடைய பணப்பையில் உள்ள பல ஒரு ரூபாய் நாணயங்களில் இருந்து எனக்கும் அவருக்கும் தனித்தனியே ஒவ்வொரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்து விட்டு பயந்தபடி மற்றவர்களைப் பார்த்து பயணச்சீட்டுக் கேட்க ஆரம்பித்தான். அந்த அன்பர் அவனைப் பார்த்து 'Dont try to make more money from others illegally.' என்றபடி முறைத்தார். 

காவிரி நீரைப் பற்றி என் அலுவலக கன்னடனின் கொக்கரிப்பு 

என் அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் ஒரு அறையில் எனக்குப் பக்கத்தில் ஒரு மலையாளியும் அவனுக்கு அருகில் ஒரு வடஇந்தியனும் எனக்கு நேரெதிரே ஒரு மராட்டியனும் அவனுக்கருகில் ஒரு கன்னடனும் அமர்ந்திருக்கின்றனர். 

நாங்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வோம்.

இணையதளத்தில் ஒரு செய்தியைப் படித்து விட்டு அந்தக் கன்னடன் மராட்டியனிடம் சொல்கின்றான். தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் ஓசூர் தமிழ்மக்கள் (சிந்தும் சிதறும்) காவிரி நீரைப் பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் காவிரி நீர் கிடைப்பதில்லை. ஆனால், தம்ழர்கள் காவிரி நீரைக் கேட்டுப் போராட்டம் நடத்துகின்றனர்.' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு கடைசியாய் அவன் சொல்கின்றான். 'bloody tamilians' என்று.

இவன் மொழியைக் கூட இவன் சொந்தமாக உருவாக்காமல் என் தாய்த்தமிழைக் கடன்வாங்கி அதில் பல மாற்றங்களைச் செய்து கொண்டு கொக்கரிக்கின்றது ஒரு கன்னட நாய் 'bloody tamilians' என்று.

பல மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், மாராட்டி, ஹிந்தி மற்றும் பல) தமிழைக் கடன்வாங்கித்தான் (சமஸ்கிருதமும் தமிழ்ச் சித்தர்கள் பயன்படுத்திய மொழி ஆதலால் சமன்+கிருதம். கிருதம் என்றால் எழுத்து. ஒரு வார்த்தையின் ஒரு எழுத்தைச் சமன் செய்ய சித்தர்களால் உருவாக்கப் பட்ட மொழியே சமஸ்கிருதம். சமஸ்கிருதமும் தமிழ் மொழிக்கு இணையானதே. நம்முடைய தமிழ்ச்சித்தர்கள் சமஸ்கிருதத்தை தமிழுக்கிணையாகப் பயன்படுத்தியதால் சமஸ்கிருதத்தை நாம் வெறுக்க வேண்டாமே என்பது என் கருத்து.) உருவாக்கியிருக்கின்றார்கள். தமிழ் மொழியை சிதைத்து உருவாக்கப்பட்ட மொழிகள் தான் பிற மொழிகள் அனைத்தும். ஆக, மற்ற மொழியின மக்கள் அனைவரும் தமிழர்களாகிய நம்மிடம் கடன் வாங்கிய கடன்கார நாய்கள்.

இந்தக் கடன்காரக் கன்னட நாய் தமிழர்களைப் பார்த்துக் கொக்கரிக்கின்றான் 'bloody tamilians' என்று.

தமிழ்நாட்டில் பாசனத்திற்கும், குடிப்பதற்கும் எத்தனை பேர் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது இந்த கன்னட நாய்க்கு எங்கே தெரியப் போகின்றது புரியப் போகின்றது.

'நானொரு தமிழன், நானொரு தமிழன்' என்ற கர்வம் எப்போதும் என் தலைக்கேறிக் கொண்டிருப்பதுண்டு.

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவன் தமிழன் தான் 

இங்கு யாரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையோடு இருப்பதில்லை. தமிழர்களைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அனைத்து மொழி வாரியான இனங்களும் தங்களை இந்தியர்கள் என்று கருதாமல் மலையாளிகள், தெலுங்கர்கள் என தங்களைத் தங்களின் மொழிவாரியான இனங்களுக்குள் வாழப் பழக்கிக் கொள்கின்றனர். 

ஊர்ப் பெருமைக்காக, உலகப் பெருமைக்காக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்று ஒரு கூட்டம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. 


ஆனால் தமிழன் மட்டும் தமிழின உணர்வோடு வாழ முற்பட்டால் இந்தியக் கயமைவாதிகளால் தீவிரவாதிகள் எனவும் மொழிவெறியர்கள் எனவும் முத்திரை குத்தப்படுகின்றனர். ஏனெனில் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவன் தமிழன் தான்.