Tuesday, August 30, 2022

விநாயகர் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=womXDbB7JWI


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது.

குபேரன் என்ற மன்னன் ஈழத்தின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண நகரை விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக ஆண்டார். அவரின் நினைவுகூறும் விதமாகவே வாழ்க்கை சாத்திரம் என்றழைக்கப் படும் வாஸ்து சாஸ்திரத்தில் வட மூலை குபேர மூலை என்றழைக்கப் படுகிறது.

ஆனால், குபேரனுக்கு விநாயகருக்கும் என்ன தொடர்பு? என்பதை நான் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே நான் மெட்டமைத்துப் பாடிய 

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

கிருஷ்ணன் துதி - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw

போன்ற பாடல்களைப் போலவே இந்தப் பாடலும் ஒரே இருப்பில் மெட்டும் பாடலும் என்னிடமிருந்து வெளிவந்தது. மகிழ்வான தருணமிது.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நன்றி. 




ஆசீவகச் சின்னந்தானே
அறிவான யானை
அறிவான யானை - எங்கும்
அமைதியாக வணங்கிடுவோம் 
அழகுப்பிள்ளை யாரை
அழகுப்பிள்ளை யாரை
ஆசீர்வாதம் தருகின்ற
அப்பன் பிள்ளையாரே
அப்பன் பிள்ளையாரே - அவன்
அருளாலே தொடங்கும் செயல்
அனைத்தும் வெற்றிதானே
அனைத்தும் வெற்றிதானே

விவசாயம் செய்து
பணக்காரனானான்  குபேரன்
பணக்காரனானான் குபேரன் - யாழ்ப்
பாண நகரை சீருஞ்சிறப்பாய் 
ஆண்டவனே குபேரன்
ஆண்டவனே குபேரன்
அவன் செல்வச் செழிப்பை உருவகமாய் 
குறிக்கும் தொப்பை வயிறு
பிள்ளையார் தொப்பை வயிறு - நம்
பிள்ளையாரின் தலையென்பது
யானையாரின் தலையே
யானையாரின் தலையே

பிள்ளையாரின் உடலென்பது
குபேரன் செழிப்பின் வயிறே
குபேரன் செழிப்பின் வயிறே - இங்கே
வி என்பது வெற்றிதானே
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
இல்லங்களில் மகிழ்ச்சி பெறுக
எங்கள் பிள்ளையார் வருவார்
எங்கள் பிள்ளையார் வருவார் - வந்தே
இன்பம் பொங்கிப் பெருகிடவே 
வெற்றிகளையே தருவார்
வெற்றிகளையே தருவார் 

விநாயகர் என்பவர் முருகன் போல
மண்ணில் வாழ்ந்தவரில்லை
மண்ணில் வாழ்ந்தவரில்லை - அவர்
தமிழர் மதமாம் ஆசீவகத்தை
குறிக்கும் உருவகச் சின்னம்
குறிக்கும் உருவகச் சின்னம்
விநாயகர் சதுர்த்தி நாளில் நாமும்
விநாயகரையே நினைப்போம்
விநாயகரையே அழைப்போம் - அவரை
நினைத்தபடியே நினைத்த காரியம்
வெற்றிபெறவே உழைப்போம்
வெற்றிகளில் திளைப்போம்

Thursday, August 18, 2022

கிருஷ்ணன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw


தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது. சற்றுமுன் ஒரே இருப்பில் என்னிடமிருந்த பிறந்த மெட்டும் பாடலும்...

கேட்டு மகிழுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுங்கள். கிருஷ்ணன் கோனார்களுக்கு மட்டும் சொந்தமில்லை. அவர் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம். அவர் தமிழர்களான நமக்காகவே பாடுபட்டார்.

இந்தப் பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த காணொளி மற்றும் வலைத்தள இணைப்பை அனுப்பி கேட்டு மகிழச் சொல்லுங்கள். உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் பரப்புவோம்.




கண்ணனே மன்னனே கார்முகில் வண்ணனே 
கண்களின் முன்னே வா - நீ 
கண்களின் முன்னே வா - எங்கள் 
எண்ணமே  திண்ணமே ஏழிசை வண்ணமே
எங்களின் முன்னே வா - நீ
எங்களின் முன்னே வா

ஆயனே மாயனே ஆண்களில் அழகனே
ஆசீவகச் சித்தன் வா - நீ
ஆசீவகச் சித்தன் வா - எங்கள் 
ஐயனே மெய்யனே ஐயப்ப சித்தனே
ஐயங்கள் தீர்க்கவே வா - உள்ள
ஐயங்கள் தீர்த்திட வா

குருகுலம் தருகின்ற பொதிகைமலைச் சித்தன்
குருவே சரணம் வா - நீ
குருவே சரணம் வா - இங்கு
கருத்தான கறுப்பான கருத்தண்ண சாமியே
கருத்தினன் நீயே வா - எங்கள்
கிருட்டினன் நீயே வா

கண்ணுக்கு ஒப்பான கண்ணனே கிருஷ்ணனே
கீதம் இசைத்திட வா - உன் 
பாதம் பதித்திட வா - எங்கள்
முன்னவன் தென்னவன் கண்ணவன் கண்ணன்
கண்ணா மன்னா வா - என்
முன்னே முன்னே வா 

புல்லாங் குழலிசை கீதத்தைப் போலவே 
பாட்டினி லிங்கே வா - என்
பாட்டினி லிங்கே வா - எங்கள்
இல்லமெங்கும் உள்ளோர் உள்ளமதில் தங்கும்
இறையே அருளே வா - நீ
இறையே அருளே வா

Monday, May 9, 2022

அன்பு மகள் ரிதன்யா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் (09-05-2022) வாழ்த்துப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/2dHNHVKGzgQ


5வது பிறந்தநாள் வாழ்த்து (09-05-2022)
====================================

பெயர்: ரிதன்யா  
பெற்றோர் பெயர்: நா. வேல்முருகன் - ஆனந்தி  
சொந்த ஊர் - முனைவென்றி  
இருப்பு - பரமக்குடி 
பெற்றோர் தற்காலிகமாக: சூளைமேடு, சென்னை.

என் முதல் மகள் ரிதன்யா தன்னுடைய 5வது பிறந்தநாளை தன்னுடைய இல்லத்தில் சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கிறாள். அப்பா முனைவென்றி நா. வேல்முருகன், அம்மா ஆனந்தி, தங்கை நிறைமதி, அத்தை சோபனா, மாமா நே. சுரேந்தர், அத்தை மகன் விஷ்ணு சபரீஷ், அத்தை மகள் பிரகதி, அம்மப்பா த. நாகராசன், அம்மம்மா கமலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.



கண்ணுமணியே காலைநிலவே
கண்ணான கண்ணே - எந்தன்
கன்னத்தில் முத்தம் வைக்கு மழகே
பொன்னான பொன்னே
நெல்லுமணியே நீலக்குயிலே 
நெஞ்சத்தில் நீயே - அன்பைச்
சொல்லுமயிலே சொக்குமழகே 
செல்லமே தாயே

அன்னையைப் போலே அன்பைப் பொழியும்
அன்பே நிலவே - எந்தன் 
திண்ணையில் தெய்வம் வந்ததைப் போலே
தேனே அழகே
பொன்னினு முயர்ந்த பெண்ணே கண்ணே
பூவே கனியே - இங்கு
மண்வாசந் தந்திடும் மழையைப் போலே
நீயே தாயே

நடக்கும் நிலவே நிலவின் ஒளியே
அமுதே தமிழே - இங்கே
அடிக்கும் மழையே ஆனந்தக் காற்றே
அழகே மலரே
கொடுக்கும் கரமே குழந்தை மனமே
கொஞ்சல் மொழியே - என்னுள்
கிடக்கும் அறிவே கனவின் நிஜமே
நீடுழி வாழ்க

Friday, April 22, 2022

மறுமகன் விஷ்ணுவின் 11வது பிறந்தநாள் - 26-04-2022 (புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்)

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/5aQsAs0Q6SM


11வது பிறந்தநாள் வாழ்த்து (26-04-2022)
====================================

பெயர்: விஷ்ணு சபரீஷ் 
பெற்றோர் பெயர்: நே. சுரேந்தர் - சோபனா 
சொந்த ஊர் - சிவகங்கை 
இருப்பு - பரமக்குடி

என் மறுமகன் விஷ்ணு சபரீஷ் தன்னுடைய 11வது பிறந்தநாளை தன்னுடைய இல்லத்தில் பரமக்குடியில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கிறார். அவரை அப்பா நே. சுரேந்தர், அம்மா சோபனா, தங்கை பிரகதி, தாய்மாமன்  முனைவென்றி நா. வேல்முருகன், அத்தை ஆனந்தி, மாமன் மகள்கள் ரிதன்யா, நிறைமதி மற்றும் அம்மப்பா த. நாகராசன், அம்மம்மா கமலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.




பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி கூட்டத்திலே
பக்கம்வந்து போனவனே 
புத்தம்புது தோட்டத்திலே
புதுமலராய் பூத்தவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

எந்நாளும் சந்தோசமாய்
எங்கவீட்டு மருமகனே
சொன்னாலும் பாட்டுக்குள்ளே 
சொக்கும் முத்தம் தருபவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

எட்டியோடும் குட்டிப்பையா 
எங்க வீட்டு சுட்டிப்பையா 
பட்டிதொட்டி கலகலக்கும் 
நம்ம பாட்டு தூள் பறக்கும்

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

துள்ளியோடும் செல்லக்குட்டி
பள்ளியோடும் வெல்லக்கட்டி
வெள்ள மனம் நல்ல குணம்
விஷ்ணு எங்க செல்லக்குட்டி 

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

Saturday, April 16, 2022

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

நான் பாடிய பாடலை கேட்டு மகிழ, பார்த்து மகிழ, பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

இந்த பாடலின் பல இடங்களில் சந்தம் துள்ளி விளையாடியிருக்கிறது. 

ஆங்கில வார்த்தையான "Orion" என்பது நம்முடைய தமிழின் ஓரையோன் என்ற வார்த்தையிலிருந்தே வந்திருக்கிறது. ஓரையோன் என்பது உலகின் முதல் சித்தனான சிவனையே குறிக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களும் விஞ்ஞானிகளுமான கீழ்க்கண்ட சித்தர்களை இந்த தமிழ் சித்திரைப் புத்தாண்டில்  நினைவு கூறவேண்டும். 

1. சிவன்
-------------

சித்தரான சிவன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், இரும்பை உருக்கி காய்ச்சும் தொழில்நுட்பத்தை உலகிற்கு முதன்முதலில் உருக்கு வேதமென்று (ரிக் வேதம்) நமக்களித்தவர் சிவன்தான். ஆல மரத்தடியில் அமர்ந்தே சிவன் போதித்தார். அதனாலேயே, நம்முடைய கோயிலுக்கு ஆலயம் (ஆல் + அயம்) என்ற பெயரும் வந்தது.

2. முருகன் 
----------------

வேலை தன்னகத்தே வைத்த முருகன் வேல் + தன் -> வேந்தன் என ஆரம்ப காலகட்டத்தில் அழைக்கப்பட்டு பின்னர் அரசாட்சி செய்யும் மன்னர்களுக்கும் வேந்தன் என்ற பெயர் பொதுவானது.

சித்தரான முருகன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே. குமரிக்கண்ட அழிவின்போது, நம் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தின் கதிர்காமம் வந்து அங்கே முருகன் முதன்முதலில் விவசாயத்தைத் தொடங்கி வைத்தார். இனத்தைப் பெருக்க இரும்புச் சத்து மிகுந்த முருங்கை மரத்தின் இலைகளை, காய்களை உண்ணச் சொன்னார். தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற படைத்தளபதி என்றபோதும் கொல்லாமையை போதித்தவர். மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தியவர். சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக அறுகோண நட்சத்திர வழிபாட்டை (star of david) உருவாக்கியவர்  முருகனே.

3. இராவணன் (இரவு + வானன்) 
-------------------------------------------------

சித்தரான இராவணன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், புஷ்பக விமானம் என்ற விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் இவரே. ஆனால், இராவணன் கண்டறிந்த விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தை ரைட் சகோதரர்கள் தான் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

4. கும்ப கரணன்
--------------------------

சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக கும்ப வழிபாட்டை உருவாக்கியவர்  கும்ப கரணனே.

5. இந்திரன்
------------------

லெகிமம் கரிமம் அணிமம் மகிமம் வியாபியம் என்ற பஞ்சமா சித்திகள் அதாவது ஐந்திறன் -> இந்திரன், ஐந்திற சித்தன் -> இந்திர சித்தன் -> இந்திரஜித் -> இந்திரசித். ஆக இந்திரனும் இந்திரஜித்தும் ஒருவனே. அவன் இராவணனின் மகனே.

சக்கரத்தைக் கண்டறிந்தவர் இந்திரனே. தவ வலிமையினால் உடலை இலகுவாக்கி லெகிமம் சக்தியின் மூலம் மேகங்களுக்கு மேலே பறந்து மழை வரப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வாராம் இந்திரன். அதனாலேயே இந்திரலோகம் மேகங்களுக்கிடையே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

6. கிருஷ்ணன்
----------------------

நல்ல கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் -> கிருட்டிணன் -> கிருஷ்ணன்.

7. தர்மன், பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தரைபதி என்ற திரௌபதி (பாஞ்சாலி)

8. விஷ்ணு என்ற திருமால்
-----------------------------------------

அனைவர் வீட்டிலும் வசிப்பவன் -> வீட்டினன் -> வீ ட்ணு -> விஷ்ணு.

விஷ்ணு விண்ணாராய்ச்சி செய்த சித்தர். அவர் கண்டறிந்த புவியீர்ப்பு விசை குறித்தான பல அறிவியல் உண்மைகள் (e=mc2) நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

9. பிள்ளையார் மற்றும் முருகனின் ஏழு சப்த கன்னிகள்
------------------------------------------------------------------------------------------

பிள்ளையார் ஆசீவத்தைக் குறிக்கும் ஒரு உருவகக் கடவுளே.


மேற்ச்சொன்னவற்றை முடிந்தவரை இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். தமிழர் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.

தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி

ஆதிசிவனாய் பாதியுமையாய்
சோதியில் தானே - அப்பன்
ஆதியில் தோன்றி நீதியும் போதித்த
தத்துவ ஞானி
போதிமரமாய் ஆலமரத்தில்
போதித்த தெக்கன் - அவனே
சித்தமு மொத்தமும் சிந்தையில் வைத்த
சிவந்த முக்கண்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரும்பை உருக்கும் தொழிலின் நுட்பம்
அறிந்த சிவன் - அதனை
உருக்கு வேதமாய் தொகுத்தே அளித்த
அறிவின் மகன்
பிரம்பை எடுத்த குருவின் வடிவம்
தக்சினா மூர்த்தி - உனையே
மறந்த பிறப்பை சிறந்ததென்று 
சொல்லாது கீர்த்தி

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

நீரூழியில் கடல் பேரலையில் அழிந்த
குமரிக்கண்டம் - அங்கே
அழிவின் விளிம்பில் தவித்த மக்களை
காத்த கந்தன்
கதிர்காமம் தஞ்சம் விவசாயம் செய்த
கதிர்வேலன் - இவன்
முருங்கை வைத்து இனத்தை வளர்த்த
மொழிக்காவலன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற 
படைத்தளபதி - சித்தன்
முற்போக்காக அகிம்சையை போதித்த
மக்கள் அதிபதி 
முருக னழகன் கடம்பன் கந்தன்
வேல் தன் - வேந்தன்
அறுபடைகளில் மருகி உருகும் மக்கள்
பாலகன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்த
இரவு வானன் - இராவணன்
இசையை அறிந்து மொத்தமும் கற்ற
யாழின் பாணன்
பறப்பதற்கு புஷ்பக விமானம் கண்டிட்ட
சித்தன் - தமிழர்
உறவின் நிலங்கள் உரிமை காத்த
சிவனின் பக்தன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

கருத்தினன் கிருட்டினன் கிருஷ்ணன் மன்னன்
அழகுக் கண்ணன் - எங்கள் 
மக்களைக் காக்க சகுனியைக் கொன்ற
இனக்காவலன்
விவசாயம் செழிக்க பாண்டியர் ஐவர்
பக்கத்தில் நின்றான் - பாரதப்
போரினில் குறவர் கௌரவர் தோற்றிடத் தானே
உதவி செய்தான் 

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

திருமாலின் பெருமை மறந்தாருக் கில்லை
அருமை பெருமை - திருச்
சிறார் பள்ளியில் குருகுலச் சித்தர்கள் தந்த
விஷ்ணுவின் கருணை
ஆலமர மெங்கும் அரசமர மெங்கும்
பிள்ளையார் வைத்தான் - அவனே
ஆசீவகச் சித்தன் பாம்புப் பஞ்சாங்கம் தந்த 
பாரத ராசன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இன்னும் சித்தர்கள் பலர் வாழ்த்திட்ட
எங்கள் குமரிக்கண்டம் - அவர்கள்
சிறப்பைப் பாடியே குதித்து ஆடியே
கும்பிட வந்தோம்
மண்ணில் சித்திரைத் தமிழர் புத்தாண்டை
நாமும் கொண்டாடுகிறோம் - எங்கள்
மண்ணில் சித்தர்கள் செய்த அற்புதங்களையே
நினைத்தே வாழ்வோம்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி

Monday, February 28, 2022

எனக்காகப் பிறந்தவள்

விழியத்தைக் காண - https://www.youtube.com/watch?v=I8c_CJBBwtA




எனக்காகப் பிறந்தவளே
என் மனதில் நிறைந்தவளே
உனக்காக நானிருப்பேன்
உன்னுள்ளே நிறைந்திருப்பேன்

ஆண்குழந்தை நமக்கில்லை
ஆனாலும் குறைவில்லை
எனையுன் பிள்ளையென
ஏற்றுக்கொண்ட என்னுயிரே

எனக்குத்தான் பசியென்றால்
துடித்தே தான் சமைக்கின்றாய்
கொஞ்சமெனக்குக் காய்ச்சலென்றால்
நெஞ்சந்தான் பதறுகின்றாய்

சண்டை போட்டுத் திட்டினாலும்
சமாதானம் செய்வதற்கு
முதலில் வந்து நானழுவேன்
பிறகுனையே சிரிக்க வைப்பேன்

இன்றுனக்குப் பிறந்தநாள்
எனக்கின்று சிறந்த நாள்
மனையாளே இனியவளே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

Tuesday, January 25, 2022

வெள்ளையாடை தேவதைகள்

கவி பாடிய காணொளி - https://youtu.be/hI4ZhReRR6Y


வெள்ளைநிறச் சீருடையில் 
வந்தாளெங்கள் தேவதையே
முல்லைமலர் சிரிப்புடனே
முகமெல்லாம் புன்னகையே

உணவும் மறந்து உறக்கம் மறந்து
உயிர்கள் காத்திடும் தேவதைகள்
கனவும் கலைந்து கணவன் மறந்து
கருணை பொங்கும் காவியங்கள்

குடும்பம் மறந்து குழந்தை மறந்து
புன்னகை செய்யும் தாதியர்கள்
கவலை மறந்து கண்ணீர் மறைத்து
நோய்கள் விரட்டும் தூதுவர்கள்

கொட்டும் மழையை அடிக்கும் வெயிலைக்
கடந்தே செல்லும் காவலர்கள்
சொட்டும் கண்ணீர் உடல்வலி தாங்கி
பிணிகள் போக்கும் செவிலியர்கள்

ஊரும் அடங்க வீட்டில் முடங்க
கொடும்நோய் தீர்க்கும் ஓவியங்கள்
சிறுநீர் அடக்கி அமர மறந்து
நடந்தே திரியும் நல்லுள்ளங்கள்

உதிரப்போக்கும் கால்கள் வழிய
உயிரும் உருக உதிரமும் உருக
விடுப்பென்பதே கனவில் மட்டும்
மூன்றுநாள் கடந்தும் ரத்தம் சொட்டும்

உன்னைப்போல செவிலியர் பார்த்தால்
அன்னையைப் பார்த்தது போலாகும்
கண்ணைமூடி விசமும் குடித்து
உன் கை பட்டால் நோய்தீரும்

மண்ணில் வாழும் கடவுளையெல்லாம்
உன்றன் உருவில் காண்கின்றேன்
எல்லையில்லா ஆனந்தம் பெருகி
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்


Friday, January 14, 2022

வயலோடு உறவாடி... புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளுக்கான காணொளி - https://youtu.be/OfQaLfJHcQ4

என்னிடமிருந்து வெளிவந்த புத்தம்புது மெட்டு இது. நான் ஒரு ஆகச் சிறந்த பாடகனுமில்லை. எனக்கு இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கவிதைகளை, பாடல்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சிறுவயதில் என் அம்மா, அப்பா சொல்லித் தந்த தமிழ், சிறுவயதில் பாடசாலை வகுப்பறைகளில் நான் உன்னிப்பாக கவனித்தவை இவை மட்டுமே தமிழ் மீது தீராத காதலை உண்டாக்க வைத்தவை. மற்றபடி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நான் கணினித்துறையில் படித்தமையால் தமிழை தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது. 

இருந்தபோதிலும் சமீப காலமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, இணையம் வழியே தூய தமிழ் தேசியம் குறித்த ஆராய்ச்சிக் காணொளிகள், கட்டுரைகள் போன்றவற்றை படித்ததன் விளைவாய் கவனித்ததன் விளைவாய், நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் "நாம் ஆரம்ப காலகட்டத்தில் நம்முடைய கவிதைகளில், கவிதை நூல்களில் தவறான வரலாற்றை முன்னுதாரணமாக பல இடங்களில் உவமையாக எழுதியிருக்கிறோம். இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது. உவமையாகச் சொல்ல வேண்டிய இடங்களில் தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை மட்டுமே முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும். ஒரு போதும் நாம் சிறுவயதில் படித்த தமிழர்களைப் பற்றிய தவறான, கட்டுக் கதையான வரலாற்றை எந்த இடத்திலும் என்னையறிமல் கூட என் கவிதைகளில், பாடல்களில், பதிவுகளில் வெளிவந்து விடக்கூடாது, எழுதக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

நம்மிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில் அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்தால் போதும். அந்த வார்த்தைகளே தனக்குள் ஒரு மெட்டை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு நம்மை துள்ளலிசையோடு மெல்லிசையோடு பாட வைத்து விடும். அப்படித்தான் இந்தப் பாடலும். 

நான் கவிதை எழுதத் துவங்கிய 2004 ஆண்டு தொடங்கி என்னுடைய கவிதைகளை எழுதும் போதும் சரி, எழுதி முடித்தவுடன் மனதிற்குள் வாசிக்கும் போதும் சரி, என்னுடைய பெரும்பாலான கவிதைகள் பாடல்களாக ஏதோவொரு மெட்டுடன் ஒலித்ததை நான் கவனித்தே வந்திருக்கிறேன். அன்று முதல் கடந்த ஆண்டு வரை "நாம் எழுதும் கவிதைகளும் சரி. நமக்கு கிடைக்கும் மெட்டும் சரி, படிக்கும் வாசகர்களாலும் அதே மெட்டை பாடலாக பாடி உணர முடியும்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 அன்று என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடலை குரல் பதிவாக பகிரியில் (whatsapp) என் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். 

மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/04/blog-post_25.html

நான் B.Sc (C.S) படிக்கும்போது என்னோடு எமனேஸ்வரத்திலிருந்து B.Com படித்த என் நண்பர் சபரீஷ் பாண்டியன் பதில் அனுப்பியிருந்தார் "நீ அனுப்பியதை நாங்களாவே வாசித்திருந்தால் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும். ஆனால், நீ குரல் பதிவில் அனுப்பியதை கேட்ட பிறகு தான் அந்த மெட்டோடு கேட்கும் பாடல் வரிகள் இனிமையாகவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் ".

இவரின் பதிலை கேட்ட பிறகுதான் "நமக்குக் கிடைத்த மெட்டோடு பாடலை நாமோ அல்லது யாரோ ஒருவரோ பாடிக் காட்டினாலோ தான் வாசகர்களுக்குப் புரிகிறது. அவர்களாகவே வாசித்தால் பெரும்பான்மையோருக்கு அந்த மெட்டு புலப்படுவதில்லை. அவர்களுக்கு பாடிக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்" என்ற பேருண்மையை புரிந்து கொண்டேன். 

இந்தக் காணொளி என்னுடைய இரண்டாவது காணொளி. என்னுடைய முதல் காணொளி என் இரண்டாவது மகள் நிறைமதிக்கு எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/07/blog-post.html

ஒரு இசையமைப்பாளரின் அடிப்படைத் திறமையே புதிது புதிதான மெட்டுக்களை உருவாக்குவது தான். குறிப்பிட்ட உணர்விற்கேற்ப குறிப்பிட்ட மெட்டு தான் பாடலுக்கு அடிப்படை. அதன் பிறகுதான், பாடல் வரிகள், பக்க வாத்தியங்கள், துணை இசைக்கருவிகள் அனைத்தும். மெட்டு மக்களுக்குப் பிடித்திருந்தால், அந்தப் பாடல் வெற்றியடைகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

கடந்த செப்டம்பர் 19, 2021 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. பாடல் முதலில் வெளிவந்ததா மெட்டு முதலில் வெளிவந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மெட்டோடு சேர்ந்தே பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெளிவந்தன.

இந்தப் பாடல் உருவான விதத்தை இங்கு சொல்வது மிகவும் விறுவிறுப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இங்கு தொடர்ந்து சொல்கிறேன்.

கடந்த செப்டம்பர் 18, 2021 சனி மாலை 3.30 மணிக்கு மஞ்சள்பட்டினத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து என் இரு சக்கர வாகனத்தில்  (bike) முனைவென்றிக்கு என் அம்மாச்சிக்கு (அம்மம்மா) சாப்பாடு கொடுத்து விட்டு நெல் விதைத்த வயலையும் பார்த்தது விட்டு வரலாம் என கிளம்பி ஊர் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே உள்ள எங்கள் வயலை பார்த்தேன். அப்போது தான் நெல் விதைத்திருந்தோம். பயிர்கள் முளை விட்ட நிலையில் மழையில்லாமல் கருகிப் போயிருந்தன. மிகவும் நான் அப்போது அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதே வேதனையோடு அம்மாச்சியைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு வீடு வந்தபிறகு வயலில் விழுந்து கிடந்த பனம்பழத்தை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ருசித்துத் தின்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். 

எங்கள் கடை மற்றும் வீட்டிற்கு எதிரே உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தை புகைப்படக் கருவியால் பத்தி செய்து கொண்டிருந்தார். நான் "நீங்கள் யார்?" என்று கேட்டேன். இரண்டு நபர்களில் ஒருவர் என்னருகே வந்து "என் பெயர் இராஜேந்திரன். நான் ஒரு தமிழ் பேராசிரியர். கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறேன். இங்கு முனைவென்றி கொளஞ்சித் திடலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியை நான் கண்டறிந்தேன். இது குறித்து பதிவு செய்து செய்தியாக வெளியிட News TN என்ற ஊடகத்திலிருந்து வந்தவர் அவர்" என சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன செய்திகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரியாமலும் மிகவும் நம்ப முடியாமல் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் சென்ற பிறகு மாலை 5 மணியளவில் கடுமையான மழை. மாலை 5  மணிக்குத் துவங்கி 7.30 மணி வரை இரண்டரை மணி நேரமாக வெளுத்து வாங்கியது. 

எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சற்றுமுன் தான் கருகிய பயிர்களை பார்த்து விட்டு "மழை பெய்தால் தான் பயிர்கள் பிழைக்கும். மழை பெய்ய வேண்டும்." என வேண்டிக் கொண்டே மிகவும் மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வேதனையில் இருந்த எனக்கு இரண்டரை மணி நேரமாக பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாலை ஆறு மணிக்கு இருள் சூழ்வதற்குள் மஞ்சள்பட்டணம் செல்ல வேண்டும் என நினைத்த எனக்கு இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவிற்கு வாசலில் அன்று வெள்ளம் கரை புரண்டோடியது. அதனால் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமக்குடிக்கு செல்லும் பேருந்தில் இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். "கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பயிர்கள் நன்றாக வந்து விடும்." என்ற மகிழ்ச்சியில் உறங்கினேன். 

அடுத்த நாள் ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. இந்தப் பாடலை எழுதும்போது எனக்குக் கிடைத்த மெட்டும் பாடல் வரிகளும் என்னை அளவு கடந்த மகிழ்ச்சியை அடைய வைத்தன. சில நாட்கள் கழித்து, முகநூலிலும் தினமணி, indian express போன்ற செய்தித்தாள்களிலும், youtube லும் என் சொந்த ஊர் முனைவென்றியைப் பற்றி 3500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியைப் பற்றி செய்திகள் வெளிவந்ததை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. அன்று இராஜேந்திரன் சொன்ன செய்திகள் முழுமையாகப் புரிந்தன. 

முதுமக்கள் தாழி பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இந்தப் பாடல் வரிகளில் என் ஊரைப் பற்றியும் வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தபோது ஏதோவொரு உள்ளுணர்வும் என் ஊரின் மேல் உள்ள அளவு கடந்த பற்றுமே என் ஊரைப் பற்றியும் இந்தப் பாடலில் எழுத வைத்திருக்கின்றன என்பதை அதன்பிறகு உணர்ந்து மகிழ்ந்தேன்.

அதன்பிறகு என் ஊர் முனைவென்றியின் முதுமக்கள் தாழி குறித்து நான் நேரில் சென்று எடுத்த புகைப்படத்துடன் கூடிய என்னுடைய பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

வைகை ஆற்றின்  நீர் ஆயூர் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயின் கரையில் தான் எங்கள் வயல் அமைந்துள்ளது. ஆனாலும் அந்த நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்ச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். முனைவென்றி கண்மாயும் எங்கள் வயலிலிருந்து சுமார் மூன்று மைல் கல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சலாம் என நினைத்தால் அந்த நீர் எங்கள் வயலுக்கு வருவதற்கு பழைய வாய்க்காலும் பாராமரிக்கப் படவில்லை. அதைத்தாண்டியும் வரும் வழியில் உள்ள வயல் காரர்கள் மறைத்துக் கொள்வார்கள். எனவே எங்கள் ஊர் கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவது என்பது கடினமான ஒன்று. மழையை மட்டுமே நம்பி நாங்கள் நெல் விவசாயத்தை மேற்கொள்கிறோம். எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டிலிருந்த படியே வேலை (work from home) என்பதால் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் கடந்த 2020 ல் வயலில் நான் களையெடுத்தேன். நாற்று நட்டேன். உதவி செய்தேன். அதோடு கடந்த ஆண்டு எங்கள் ஊரிலும் சரி சென்னையிலும் சரி நல்ல மழை. ஆனால் இந்த 2021 ல் கடந்த செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையைப் போல் சென்னையில் பெய்தாலும் எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் எங்கள் வயல் நான்கில் மூன்று பங்கு பயிர்கள் கருகி வீணானது.

செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சி தொடர்ந்து இன்று வரை நிலைக்கவில்லை. நான் எழுதிய இந்தப் பாடலை கடந்த செப்டெம்பருக்குப் பின் நான் சென்னையில் அதிக நாட்களும் பரமக்குடியில் எப்பொழுதாவதும் இருக்கும்படியான சூழலாலும் அதன்பிறகு "சென்னையில் வீடுகளில் நீர் புகும் அளவிற்கு பெய்த தேவையில்லாத மழை நம்மூரில் பெய்யாமல் போனதே. விவசாயத்திற்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவில் தேவைப்படும் மழைநீர் போன ஆண்டைப் போல் இந்த ஆண்டு பெய்யவில்லையே" என்ற வருத்தத்தாலும் இந்தப் பாடலை காணொளியாக பதிவு செய்யாமல், செய்ய மனம் வராமல் வைத்திருந்தேன். 

இன்று தமிழர் திருநாள். நம் வயல் தான் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணானது. மற்ற வயல்கள் நல்ல செழிப்புடன் இருக்கிறதே என்ற மன மகிழ்வோடு விவசாயத் தொழில்நுட்பத்தை கதிர்காமத்தில் முதலில் தொடங்கிய நம் முப்பாட்டன் முருகனை வணங்கி இந்தப் பாடலையும் காணொளியையும் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.


பொன்வண்டின் பாட்டு பூங்காற்றும் கேட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு

கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்

ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது

இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு

மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்

ஏ உச்சி வெளுக்குது மச்சும் குளிருது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது

என்னோடு ஆடும் மழையிங்கு பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்

கண்கூசும் அழகினைப் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்

ஏ தென்றலடிக்குது சிலுசிலுக்குது
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)

Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...