Monday, February 27, 2023

பெண்ணே நீ யாரடி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த காதல் பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/qxPI1-zlTmE


வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.

இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன். நன்றி.





உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த
எனது சுவாசம் நீயடி
உறக்கம் நுழைந்து கனவில் கலந்த 
காதல் கவிதை நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் வானும் மண்ணும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வாழ்வும் சாவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் கவியும் இசையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் உயிரும் மூச்சும்

மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த
எந்தன் தாயும் நீயடி
எனது உடலின் உள்ளே ஓடும்
இரத்த நாளம் நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் இரவும் பகலும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வலியும் மருந்தும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வெயிலும் மழையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் அறிவும் மடமும்

அழகு மலராய் அருகில் நிற்கும்
எந்தன் அழகு தேவதை
விழிகள் நனைத்து விரலும் கோர்த்த
எந்தன் நெஞ்சின் மாமழை

பெண்ணே நீ யாரடி
எந்தன் விருப்பும் வெறுப்பும் 
பெண்ணே நீ யாரடி
எந்தன் நீரும் நெருப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் முதலும் முடிவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் பேச்சின் மௌனம் 

Sunday, February 12, 2023

அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/DRE0QoPogWM


தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.

என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...

சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். 





ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே 

ஆண் 
காலொடிஞ்சு நா கெடக்க
கல்லொடைக்க போன புள்ள
நாளுமொரு யுகமாச்சு
நானழுது குளமாச்சு
( அத்த மகளே )

ஆண்
நானுமுன்னப் பிரிஞ்சாலே
உசுருங்கூட என்னதில்ல 
ஆணுங்கொண்ட அன்பு மட்டும்
ஆயுசுக்கும் போவதில்ல
( அத்த மகளே )

ஆண்
பசியா நானிருந்தா
பதறிச்சோறு ஆக்கிடுவ
பக்கம்வந்து பக்கம்வந்து
பக்குவமா ஊட்டிடுவ
( அத்த மகளே )

ஆண்
சோறுதண்ணி சாப்பிடத்தா
சோர்வின்றி நீ உழைச்ச
தேருபோல எம் மனசில்
உசந்து நின்னு நீ சிரிச்ச
( அத்த மகளே )

ஆண்
ஆத்தோரம் தோப்போரம் - நா
நடந்து போகயிலும்
ஒன் நெனப்புத்தானே புள்ள
கட்டயிலே வேகயிலும் 
( அத்த மகளே )

ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே

Saturday, February 4, 2023

வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். 

குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். 

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aVFq7alAV_0





கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா
தமிழ்க்கடவுளுக்கு அரோகரா
அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா
அரோகரா அரோகரா 

அறமானே முருகனே
அறமானே முருகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே 
அறமானே முருகனே

மறவேனே மறவனே
மறவேனே மறவனே
சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் 
கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்
ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்
மறவேனே மறவனே
மறவேனே மறவனே

குறவோனே குறவனே 
மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே 
கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே 
குறவோனே குறவனே
குறவோனே குறவனே

முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே 
கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே
எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே 
விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய் 

Saturday, January 14, 2023

தமிழர் திருநாள் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/vFnk9EZvZbY


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நான் எழுதிய இப்பாடலில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு எதற்காக தோன்றியது என்ற உண்மை வரலாற்றை இப்பாடலின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். 

பாடலை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். பொங்கலை, ஜல்லிக்கட்டை கொண்டாடி மகிழுங்கள். 

என்னுடைய இந்த விழியத்தின் இணைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியை உலகம் முழுதும் பரப்புங்கள். 

இந்தப் பாடலை பாடிப் பதிவு செய்யும்போது மனதில் நிறைய மகிழ்ச்சி பொங்கியது. மகிழ்வான தருணமிது.

மீண்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.






தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தை மாதம் வந்தாச்சு பொங்கலும் பொங்குது
விவசாயம் செழிக்கவே தமிழர்கள் மகிழவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

செங்கரும்பு இனிக்கவே சந்தோசம் நிலைக்கவே
கால்நடைகள் ஆடிடவே கதிரவனும் குளிர்ந்திடவே 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பூர்வீகமாய் மண்பானையில் மணமணக்கும் மஞ்சள் கட்டி 
தித்திக்கும் மண்ட வெல்லம் தட்டித்தட்டி சேர்த்து வச்சு 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பகைவர்கள் ஒளிந்திடவே பகலவனும் ஒளிர்ந்திடவே
பச்சரிசி பொங்கிடவே பொங்கலுந்தான் தித்திக்கவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

காளைமாட்ட உழுது பழக்க காடுவயலில் ஏரும் பூட்ட
காளையைத் தான் தோழனாக்க கண்டுபிடித்த ஏறுதழுவல் 
பட்டிக்காட்டில் ஜல்லிக்கட்டு எங்க ஊரில் மஞ்சுவிரட்டு
தொட்டுப்புட்டா சீருமடா தழுவிப்புட்டா வீரனடா

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

வெட்டி வச்ச செங்கரும்பும் அவிச்சு வச்ச பனைக்கிழங்கும்
பச்சரிசி சர்க்கரைப் பொங்கும் பரம்பரையாய் நிம்மதி தங்கும்
சர்க்கரையில்லா வெண்பொங்கல் ஆநிரைக்கோர் மாட்டுப்பொங்கல் 
அக்கறையாகக் காணும்பொங்கல் அகிலமெங்கும் அதிரு மெங்கள் 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

Sunday, December 25, 2022

கீழடிக்கு இணையாக நான் பிறந்த ஊர் முனைவென்றி. நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர் - அழகு ராட்சசி கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய இளையான்குடி முதிய கவிஞர்


 
















என் சிறு வயதில் என் தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) என் ஊர் முனைவென்றி யின் பெயர்க்காரணம் குறித்து கேட்டேன். அவர் இரு விதமான பதில்களை பெயர்க்காரணங்களாக கூறினார்.

1. முனைவண்டி - என் ஊர் வழியே பழங்காலத்தில் மாட்டு வண்டிகள் வரிசையாக செல்லும்போது என் ஊர் வரும்போது ஒரு வண்டியின் அச்சாணி உடைந்ததாம். அதனால் முனை உடைந்த வண்டி முனைவண்டி என்று பெயர் சூட்டப்பட்டு முனைவென்றி யானது.

2. பழங்காலத்தில் ஒரு போர் நடந்து வெற்றி பெற்ற முனை இந்த ஊர். ஆதலால் இந்த ஊருக்கு வெற்றி முனை என்றாகி முனைவெற்றி -> முனைவென்றி என்றானது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இளையான்குடியிலிருந்து கவிஞர். ஹிதாயத்துல்லா என்ற முதியவரிடமிருந்து என் முதல் கவிதை நூலான "அழகு இராட்சசி" க்கு விமர்சன கடிதம் வந்தது.

அந்த விமர்சனத்தில் என் ஊர் முனைவென்றியை பற்றி சில வரிகள் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

தன பெயரிலேயே வெற்றியைப் பெற்றிருக்கின்ற முனைவென்றி கிராமம் ஒரு கீர்த்தியுள்ள கிராமம். நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர்.

ஆக, என் ஊர் முனைவென்றியில் ஏதோவொரு போர் நடந்திருக்கிறது. அந்தப் போரில் வெற்றி பெற்றதால் வெற்றி முனை -> முனைவெற்றி -> முனைவென்றி என்றாகியிருக்கிறது. ஆக, என் தாத்தா சொன்ன இரண்டாவது காரணப்பெயர் தான் சரி. அவர் ஏதோவொரு போர் நடந்ததாகச் சொன்னார். ஆனால் என்ன போர் நடந்தது எதனால் நடந்தது என்பது சொல்லவில்லை. 

இப்போது இந்த இளையான்குடி கவிஞர் சொன்னபிறகு அந்தப் போர் நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக நடந்த போர் என்பது உறுதியாகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவு.

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.  செய்தி. - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

சில மாதங்களில் என் ஊரில் முதுமக்கள் தாழியை கண்டறிந்த ஐயா ராசேந்திரன் என்ற தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியருடன் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பி வைத்த தரவுகளை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்ச்சாலை தொல்லியல் துறையில் நேரில் சென்று சமர்ப்பித்தேன். சில மாதங்களில் எழும்பூரிலிருந்து அவருக்கு அழைப்பு வந்து அதில் "அக்கறை வரிசைப்படி நீங்கள் கொடுத்த முனைவென்றி மற்றும் இன்னொரு ஊரிலும் தொல்லியல் துறை சார்பில் அரசாங்கத்திலிருந்து ஆராய்ச்சி துவங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் என்னிடம் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், முனைவென்றியை குறித்து ஒரு ஆய்வுநூல் எழுதி முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அரபு நாடான ஷார்ஜாவில் முனைவென்றி குறித்து பேசப்போகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை (26-12-2022) இளையான்குடிக்கு பயணமாகிறேன் அந்தக் கவிஞர் ஹிதாயத்துல்லா என்ற முதியவரை சந்த்திக்க... என் ஊரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள...

இன்னுமொரு செய்தி.

என் அப்பாவிடம் சில தினங்களுக்கு முன் என் அப்பத்தா வீரம்மாள் என்றாய் சிட்டுவைப் பற்றி (என் அப்பாவின் அம்மா) கேட்டேன்.

"என் அப்பத்தாவின் சொந்த ஊர் முனைவென்றி. என் அப்பத்தாவின் அம்மா அப்பா தங்களின் சிறு வயதிலேயே முனைவென்றியிலிருந்து பர்மா சென்று அங்கு தான் என் அப்பத்தா பிறந்ததாகவும் என் அப்பத்தாவின் அப்பா அம்மா பர்மாவிலேயே நிலங்கள் வாங்கி அந்த நிலங்களில் விவசாய வேலை செய்ய அந்த நாட்டு மக்களை பணியாட்களாக அமர்த்திருந்தனர். அந்த காலத்திலேயே பர்மா வேறு ஒரு நாட்டில் சொந்த வீடு மற்றும் நிலங்களோடு விவாசாயப் பணியாளர்களை நியமித்து பெரும் செல்வந்தர்களாக நம் முன்னோர்கள் பர்மாவில் வாழ்ந்து வந்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், பர்மாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பத்தா போன்ற தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் பிறநாட்டு மக்களையும் பார்மா நாடு விரட்டி விட்டதாகவும் அங்கிருந்து என் அப்பத்தா கட்டிய துணியோடு மீண்டும் முனைவென்றிக்குத் திரும்பியதாவும் இங்கு தன் மாமா முறையான கமுதிக்கு அருகிலுள்ள நீராவிக் கரிசல்குளம் என்ற ஊரில் வசித்த என் ஐயா தர்மலிங்கம் சேர்வை (என் அப்பாவின் அப்பா) யை திருமணம் செய்து கொண்டாள்." என அப்பா தெரிவித்தார்.

இன்னும் சில தினங்கள் என் ஊரான முனைவென்றியில் தான் இருப்பேன். என் அப்பத்தாவைப் பற்றியும் என் ஊரைப் பற்றியும் இன்னும் நிறைய செய்திகளை சேகரித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

நன்றி.

Friday, November 25, 2022

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து - https://youtu.be/4QNlQAGzOm0

கருணாநிதியால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரிகள் திருத்தப்பட்டு (உதாரணத்திற்கு தமிழர்நல் திருநாடு என்பதற்கு பதில் திராவிட நல் திருநாடு ), வரிகள் நீக்கப்பட்டு ( ஆரியம் போல் உலக வழக்கொழிந்து ) மீதமுள்ள வரிகள் தான் நம் பாடப் புத்தகத்தில் உள்ளன. இந்த பாடப் புத்தகங்களை உருவாக்குவபர்கள் திராவிட சித்தாந்தத்தை நல்லது என்று நம்பி ஏற்றுக் கொண்டவர்களே. என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு சிறுவயதில் தலைவர் பிராபாகரனை பற்றி நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். தினமும் இரவு 9.15 முதல் 9.30 வரை வானொலி சிற்றலையில் (Short wave) BBC லண்டனிலிருந்து விடுதலை புலிகள் தொடர்பான செய்திகள் ஒலி பரப்பாவதாக சொன்னார். ( சில வருடங்களுக்கு முன்பு அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது ). அவர் சொன்னதிலிருந்து வானொலி என் நண்பனாகிப் போனது. 

அன்று என் ஆசிரியர் விதைத்த விதை இன்று ஆலமரமாக என்னுள் வளர்ந்து நிற்கிறது.

எனவே, இதை படிக்கும் ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையல்ல என்ற உண்மையை சொல்லிக் கொடுங்கள்.

மேலும், சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற பெயரில் தமிழர் பெயரில் உள்ள தெருப்பெயர்கள் அழிக்கப்பட்டு தெலுங்கர்கள் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

எனவே, தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்தை தேடுங்கள். உங்கள் குடிப்பட்டத்தை மறக்காதீர்கள்.

தமிழர் என்ற நம்மினம் தமிழ் நாட்டில் நம் கண்முன்னே அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, November 3, 2022

👉 துர்க்கை எனும் விபச்சாரக் கடவுளும் (Sex worker) நவ ராத்திரி எனும் இழிவான பண்டிகையும் கலப்பிரர் படையெடுப்பும்




துர்க்கை என்ற இந்து மதக் கடவுள் விபச்சாரி தான் என்று  2014 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டதாம். அந்த துண்டறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் ஸ்மிதி இராணி படித்துக் கான்பித்தார்.

துர்க்கை ஒரு விபச்சாரி தான் என்பதற்கான ஆதாரம் இந்தக் காணொளி (video). இதனை முழுமையாக பாருங்கள். உண்மை புரியும்.

துர்க்கை என்ற விபச்சாரி மைசூர் அரசனான மகிசாசுரன் என்ற தமிழ் அரசனை ஏமாற்றி ஒன்பது நாட்கள் உடலுறவு கொண்டு பத்தாவது நாளில் மைசூர் அரசனின் குஞ்சை அறுத்துக் கொன்றாள் இந்த விபச்சாரி துர்க்கை. இதன் பிறகு தான் கர்நாடக மைசூர் தமிழர்களான கவுண்டர்களை அதாவது கவுடா, கவுடர்களை (உதாரணத்திற்கு தேவகவுடா, கவுடா என்பது குடிப்பெயர்) கவுண்டர் என்ற தமிழ்க்குடிப் பெயரில் உள்ள ண் ன்னை நீக்கி கவுடர் கவுடா வாக்கி துர்க்கையின் கணவனான பரசுராமன்  கவுடர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு படையெடுத்து(தமிழர்களை வைத்தே தமிழர்களை அழித்த திட்டம்) அம்மை நோயை பரப்பி 10000 தமிழ் சித்தர்களை அழித்து இந்து மதம் எனும் இழிவான மதம் உருவானது என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.

Sunday, October 23, 2022

Master movie and Lord muruga - The great scientist




Coming 30th October, 2022, we are going to remember "Sasti viratham" - சட்டி விரதம் to keep fasting for lord muruga. On this day, he attained nirvana - ஜீவ சமாதி. We need to remember about him and his inventions too.

The tamil word "மா சித்தர்" is converted as Master, Maestro in english. The tamil word "மா சித்தர்" indicates lord muruga. Because, he invented a lot. He is a great scientist. The tamil word "வாத்தி" (Vaaththi) also indicates lord muruga. In master movie, there is a song "vaaththi coming" (வாத்தி coming). After you read this small article fully, you could really know why lord muruga called as "மா சித்தர்", "Master", "Maestro", வாத்தி.

We are calling Loard muruga as "அப்பனே முருகா" in tamil which is "muruga, my father". This term spreaded to word wide term like "father of nation", "father of this", "father of that", etc... to invent something.

Lot of movies including tamil and even hollywood movies like "around the world in 80 days" explains the real history of lord muruga indirectly.

Lord muruga invented the following.

1. Father of Agriculture & Neolithic Civilization/விவசாயத்தின் தந்தை/புதிய கற்காலத்தின் தந்தை. ( i.e. The tamil movie "kadaisi vivasaayi" - கடைசி விவசாயி. It explains about lord muruga, peacock and agriculture )

2. Father of Medicine, Botany & Zoology/மருத்துவம், தாவரவியல் மற்றும் விலங்கியலின் தந்தை. ( i.e. The tamil movie "eazhaam arivu" - ஏழாம் அறிவு. It explains about medicine, botany, zoology, martial arts, medidation, etc...  Lord muruga invented a medicine called panjamirtham - பழநி பஞ்சாமிர்தம் which is a instant energy booster for soldiers under him. Nowadays,  we are all eating it )

3. Father of Ceramics and Pottery/மண்பாண்டத் தொழிலின் தந்தை. ( Lord muruga invented disk wheel )

4. Father of Dam Building & Water Management/அணை கட்டிடக் கலை மற்றும் நீர் மேலாண்மையின் தந்தை. ( i.e. The tamil movie "Linga" - லிங்கா. It explains about dam building and water management )

5. Father of Electricity/மின்சாரத்தின் தந்தை. ( Additionally, lord agaththiyar invented battery ) ( In hinduism, we have a topic called "mithra varuna sakthi" )

6. Father of Transport (Disk Wheel, Bullock Cart, Bicycle, Sailing Ships)/போக்குவரத்தின் தந்தை ( உருளைச்சக்கரம், மாட்டு வண்டி, மிதிவண்டி, கப்பல் ) ( Lord muruga invented cycle and he called as atlas. Thats why, a famous cycle company choosen his name "atlas" and the famous cycles are from "atlas" cycle company )

7. Father of Alphabetic Writing System (Tamil letters)//அகர முதல எழுத்து முறையின் தந்தை.

8. Father of Mathematics, Physics & Chemistry/கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலின் தந்தை.

9. Father of Astronomy, Astrology & Modern Calendar/விண்ணாய்வு, சோதிடம் மற்றும் நவீன நாட்காட்டியின் தந்தை.

10. Father of Geography and Cartography/புவியியல் மற்றும் வரைபடக் கலையின் தந்தை. ( Lord muruga invented latitude/ longitude. He called as atlas. Thats why, the world map is called as atlas. He designed world map. He is a first person in the world to fly around the world by using hot air balloon. In hinduism, somebody said that lord muruga flied around the world by using peacock to get a fruit. In another tamil old movie "உலகம் சுற்றும் வாலிபன்", M. G. R acted as hero who is a scientist. His character name is Murugan. Have you thought who chosen this title, this character and his name? )

11. Father of Aeronautics ( Kites, Hot Air and Gas Balloons )/காற்று மண்டல விஞ்ஞானத்தின் தந்தை. ( பட்டம், பலூன் )

12. Father of Meteorology & Weather Prediction/வானிலை கணிப்பின் தந்தை.

13. Father of Navigation/கடற்பயணக் கலையின் தந்தை.

14. Father of Genetic Science & DNA/மரபணு விஞ்ஞானத்தின் தந்தை. ( Lord muruga is holding a weapon called "வேல்" - Vel. He invented microscope and by using microscope, he designed a weapon vel "வேல்" which is similar to male sperm. Thats why, in kandha sasti kavasam, we have slogans like "விந்து விந்து மயிலோன் விந்து/முந்து முந்து முருகவேள் முந்து" )

15. Father of  Psychology & Psychiatry/மனோதத்துவ மற்றும் மன நோய் சிகிச்சையின் தந்தை. ( Thats why, kandha sasti kavasam is asking lord muruga to save the body parts from head to foot. Because, he might have lived as a physiotherapist too. i.e. The tamil movie "Chandramukhi" - சந்திரமுகி. It explains about Psychology & Psychiatry via a character "Saravanan" - Rajinikanth. The character saravanan - Rajinikantha always says "Yaamirukka payamen? Saravanan irukka payamen?" which is about lord muruga  )

16. Father of Ornithology/பறவையியலின் தந்தை. ( i.e. The tamil movie "2.0". It explains about to save birds via "Pakshiraajan" - பட்சிராசன் character )

17. Father of 7-Note Music/ஏழு சுவர இசையின் தந்தை. ( i.e. The tamil movie "Chandramukhi" - சந்திரமுகி. It explains about music too via "Aththtinthom thinthiyom thomthana" - அத்திந்தோம் திந்தியும் தோம்தன song )

18. Father of Classic Dance Forms/பாரம்பரிய நடனக் கலைகளின் தந்தை.

19. Father of Martial Arts/தற்காப்புக் கலைகளின் தந்தை.

20. Father of Chakra Medidation & Kundalini Yoga/சக்ரா தியானம் மற்றும் குண்டலினி யோக அறிவியலின் தந்தை.

21. Father of Modern Arts & Science/அனைத்து விதமான கலைகள் மற்றும் நவீன அறிவியலின் தந்தை. ( i.e. The tamil movie 24. It explains about watch and time. Villain surya tells about hero surya as "ஞானக் கொழுந்தே, ஞானப் பழமே". Villain of one more tamil movie "Legend" tells about hero as the great scientist. The hero name in real is "Saravana stores" Saravanan )

Courtesy: Tamil Chinthanaiyalar Peravai & சுசித்ரா ஆசீவகர்.

Tuesday, August 30, 2022

விநாயகர் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=womXDbB7JWI


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது.

குபேரன் என்ற மன்னன் ஈழத்தின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண நகரை விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக ஆண்டார். அவரின் நினைவுகூறும் விதமாகவே வாழ்க்கை சாத்திரம் என்றழைக்கப் படும் வாஸ்து சாஸ்திரத்தில் வட மூலை குபேர மூலை என்றழைக்கப் படுகிறது.

ஆனால், குபேரனுக்கு விநாயகருக்கும் என்ன தொடர்பு? என்பதை நான் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே நான் மெட்டமைத்துப் பாடிய 

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

கிருஷ்ணன் துதி - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw

போன்ற பாடல்களைப் போலவே இந்தப் பாடலும் ஒரே இருப்பில் மெட்டும் பாடலும் என்னிடமிருந்து வெளிவந்தது. மகிழ்வான தருணமிது.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நன்றி. 




ஆசீவகச் சின்னந்தானே
அறிவான யானை
அறிவான யானை - எங்கும்
அமைதியாக வணங்கிடுவோம் 
அழகுப்பிள்ளை யாரை
அழகுப்பிள்ளை யாரை
ஆசீர்வாதம் தருகின்ற
அப்பன் பிள்ளையாரே
அப்பன் பிள்ளையாரே - அவன்
அருளாலே தொடங்கும் செயல்
அனைத்தும் வெற்றிதானே
அனைத்தும் வெற்றிதானே

விவசாயம் செய்து
பணக்காரனானான்  குபேரன்
பணக்காரனானான் குபேரன் - யாழ்ப்
பாண நகரை சீருஞ்சிறப்பாய் 
ஆண்டவனே குபேரன்
ஆண்டவனே குபேரன்
அவன் செல்வச் செழிப்பை உருவகமாய் 
குறிக்கும் தொப்பை வயிறு
பிள்ளையார் தொப்பை வயிறு - நம்
பிள்ளையாரின் தலையென்பது
யானையாரின் தலையே
யானையாரின் தலையே

பிள்ளையாரின் உடலென்பது
குபேரன் செழிப்பின் வயிறே
குபேரன் செழிப்பின் வயிறே - இங்கே
வி என்பது வெற்றிதானே
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
வெற்றிக்கு நாயகன் விநாயகன்
இல்லங்களில் மகிழ்ச்சி பெறுக
எங்கள் பிள்ளையார் வருவார்
எங்கள் பிள்ளையார் வருவார் - வந்தே
இன்பம் பொங்கிப் பெருகிடவே 
வெற்றிகளையே தருவார்
வெற்றிகளையே தருவார் 

விநாயகர் என்பவர் முருகன் போல
மண்ணில் வாழ்ந்தவரில்லை
மண்ணில் வாழ்ந்தவரில்லை - அவர்
தமிழர் மதமாம் ஆசீவகத்தை
குறிக்கும் உருவகச் சின்னம்
குறிக்கும் உருவகச் சின்னம்
விநாயகர் சதுர்த்தி நாளில் நாமும்
விநாயகரையே நினைப்போம்
விநாயகரையே அழைப்போம் - அவரை
நினைத்தபடியே நினைத்த காரியம்
வெற்றிபெறவே உழைப்போம்
வெற்றிகளில் திளைப்போம்

Thursday, August 18, 2022

கிருஷ்ணன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw


தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது. சற்றுமுன் ஒரே இருப்பில் என்னிடமிருந்த பிறந்த மெட்டும் பாடலும்...

கேட்டு மகிழுங்கள். கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுங்கள். கிருஷ்ணன் கோனார்களுக்கு மட்டும் சொந்தமில்லை. அவர் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம். அவர் தமிழர்களான நமக்காகவே பாடுபட்டார்.

இந்தப் பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த காணொளி மற்றும் வலைத்தள இணைப்பை அனுப்பி கேட்டு மகிழச் சொல்லுங்கள். உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் பரப்புவோம்.




கண்ணனே மன்னனே கார்முகில் வண்ணனே 
கண்களின் முன்னே வா - நீ 
கண்களின் முன்னே வா - எங்கள் 
எண்ணமே  திண்ணமே ஏழிசை வண்ணமே
எங்களின் முன்னே வா - நீ
எங்களின் முன்னே வா

ஆயனே மாயனே ஆண்களில் அழகனே
ஆசீவகச் சித்தன் வா - நீ
ஆசீவகச் சித்தன் வா - எங்கள் 
ஐயனே மெய்யனே ஐயப்ப சித்தனே
ஐயங்கள் தீர்க்கவே வா - உள்ள
ஐயங்கள் தீர்த்திட வா

குருகுலம் தருகின்ற பொதிகைமலைச் சித்தன்
குருவே சரணம் வா - நீ
குருவே சரணம் வா - இங்கு
கருத்தான கறுப்பான கருத்தண்ண சாமியே
கருத்தினன் நீயே வா - எங்கள்
கிருட்டினன் நீயே வா

கண்ணுக்கு ஒப்பான கண்ணனே கிருஷ்ணனே
கீதம் இசைத்திட வா - உன் 
பாதம் பதித்திட வா - எங்கள்
முன்னவன் தென்னவன் கண்ணவன் கண்ணன்
கண்ணா மன்னா வா - என்
முன்னே முன்னே வா 

புல்லாங் குழலிசை கீதத்தைப் போலவே 
பாட்டினி லிங்கே வா - என்
பாட்டினி லிங்கே வா - எங்கள்
இல்லமெங்கும் உள்ளோர் உள்ளமதில் தங்கும்
இறையே அருளே வா - நீ
இறையே அருளே வா