Monday, May 19, 2014

குதித்தாடு எம்மிறையே...

அப்பு, விஷ்ணு, அய்யாவு, அப்புக்குட்டி,

எப்டி டா இருக்க? மாமா உன்ன பார்த்து ஒன்றரை மாதங்களாகப் போகின்றன. உன்னை வீட்டில் வந்து பார்க்கும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு இப்போது நீ மட்டுந்தான் நிரந்தரமான சொத்து.

யார் யாரோ திடீர் திடீரென என்மேல் அக்கறைப்படுகிறார்கள். அதன்பிறகு என்னை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், என் நம்பிக்கைக்குரியவர்களாக மாறி அவர்களுக்கு காரியம் முடிந்தவுடன் என்னை கழற்றிவிட்டுவிடுகின்றனர்.

மனிதர்களின் சூழ்ச்சிகளை முன்கூட்டியே புரிந்துகொள்ள, என்னால் முடியாமலேயே போய்விடுகிறது.

மனிதர்களின் சூழ்ச்சிகளை, துரோகங்களை தாங்கும் மனவலிமையை எனக்கு கொடுடீ தாயீ...

அன்போடு பழகுவதில் உன்னைப்போலவே நானும் இங்கொரு குழவிதான்.

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_7751.html

Wednesday, May 14, 2014

பிரிவு



எழுதிய கவிதைகளை
படிக்கச்சொல்லி
உன் கண்முன்னே வைத்துவிட்டுப்
போகிறேன்
கண்கள் மூடிக் கடந்துபோகிறாய்

என் மனதின் வலிகளை
வார்த்தைகளாய் கோர்த்து
உதிர்க்கிறேன்
கேட்டும் கேட்காமலேயே
விலகி நடக்கிறாய்

கடும்வெயிலில் நிற்கிறாய்
நிழலாய் வந்துன்முன் நிற்கிறேன்
நிராகரித்தே நிற்கிறாய்

மழையில் நனைகிறாய்
குடையோடு வந்துனை
அழைக்கிறேன்
கண்கள் உருட்டி
கைகள் உயர்த்தி மிரட்டி
நடைபோடுகிறாய் நதிபோல...

உன் கண்ணீர் கண்டு
கைக்குட்டையோடு வருகிறேன்
கரம் தடுத்து முறைக்கிறாய்

வீட்டு நினைவு வந்ததாய்
வருந்தி நிற்கிறாய்
நீ சாய தோள்கொண்டு வருகிறேன்
உன் வேல்விழியால்
என்மனதை குத்திக் கிழிக்கிறாய்

நான் இறந்தேதான் கிடக்கிறேன்
உன் கண்களில்
கண்ணீர் வந்தும்கூட
கல்நெஞ்சத்தோடு பிரிகிறாய்

Tuesday, May 13, 2014

தவிப்பு


உன் காலடிசப்தம் கேட்டு
கதவிடுக்கில் ஒளிந்துகொண்டு
புன்னகைக்கிறேன்
ஒளிந்து விளையாடும்
குழந்தையைப் போல..

வேகமாய் உள்ளே நுழைந்தாய்
ஒவ்வொரு அறையாய்
தவிப்புடன் தேடுகிறாய்

பரண்மேல் ஏறிப் பார்க்கிறாய்
ஒவ்வொரு தளமாய் தேடுகிறாய்

களைத்துப்போய் ஓய்வெடுக்கிறாய்

விரக்தியுடன் கடந்துபோகிறாய்
என்னை பார்க்காமலேயே...

உன்னை அழைத்தபடி
பின்தொடர்ந்து ஓடிவருகிறேன்

தொடர்ந்து நடக்கிறாய்
என்னை திரும்பிப் பார்க்காமலேயே...

Thursday, May 8, 2014

கேட்காத என் ஓலக்குரல்



இங்கு நானிருந்தேன்

என்னுடைய வளங்கள்
அனைத்தையும்
என்னகத்தே வைத்துக்கொண்டு
இங்குதான் நானிருந்தேன்

செழிப்போடுதான் நானிருந்தேன்

சலசலப்பாய் ஓயாமல்
அசைந்தாடிக் கொண்டிருந்தேன்

துள்ளிக் குதித்திடவும்
அள்ளியணைத்திடவும்
எல்லாமுமாய்
நானே நானாயிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்னை இழக்கத் தொடங்கினேன்

வந்தவர்கள்
என்னை மண்ணிட்டு மூடினார்கள்

கண்ணீர்வழி எனக்குள்ளேயே
உருகிஉருகிக் கண்ணீராகவே
உயிரறுந்து கிடந்தேன்

எனக்குள்ளேயே
சிதைந்துசிதைந்து முடங்கிப்போய்
மூச்சிருந்தும் பேச்சிச்சின்றிக்
கிடந்தேன்

நான் கதறி
கூக்குரலிட்ட போதெல்லாம்
கேட்காமலேயே போனது
என் ஓலக்குரல்

நான்
பொங்கி எழாமலேயே
போய்விட்டேன்

இன்று நான்
நிரந்தரமாகவே இல்லையெனினும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான தடயங்கள்
அழிக்கபட்டுவிட்ட போதினிலும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான
அடையாளங்களை அழித்துவிட்டு
எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை
இங்குதான் நானிருந்தேனென்று...

Monday, May 5, 2014

'பேசுந்தமிழ் குழவி' பாமினி

இப்படியொரு பதிவை கடந்த சில நாட்களாகவே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து நினைவிலிருந்தது. இன்று பதினொன்றரை மணிக்கெல்லாம் உறங்கப் போனேன். எழுதவேண்டுமென்று என்னை தூங்கவிடவில்லை.


என் தங்கச்சிப்பிள்ள பாமினியின் கள்ளங்கபடமில்லாத புன்னைகை கொள்ளையழகு.


ஹிந்து ஆங்கில நாளிதழில் என் தங்கச்சிப்பிள்ள பாமினியை பற்றியும் "தேன் சிந்தும் பூக்கள்" பாடலை பற்றியும் வெளிவந்திருக்கிறது.

http://www.thehindu.com/features/cinema/winning-tunes/article5973177.ece
----

சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய ஸ்கைப் கணக்கில் ஆங்கிலத்தில் உள்ள என்னுடைய பெயரை தமிழில் மாற்ற வேண்டி முயற்சித்தேன். பெயரை தமிழில் மாற்றிவிட்டு நாடு என்ற இடத்தில் தமிழ்நாடு என்று இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. சரி நாடு என்ற இடத்தில் எதுவும் கொடுக்காமல் இருந்துவிடலாம் என்று நினைத்து 'save' என்ற பொத்தானை அழுத்தினேன். நாடு என்ற இடத்தில் ஏதாவது உள்ளீடு கொடுத்தே ஆக வேண்டும் என்று வந்தது. "பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?" என்று எனக்குள் ஸ்கைப் பை செல்லமாகத் திட்டிக்கொண்டு இந்தியா என்று கொடுக்க விருப்பமில்லாமல் செர்பியா என்றொரு நாட்டை கொடுத்து விட்டேன். ஏனெனில் தமிழர் தேசியத்திற்கு எதிரானது இந்திய தேசியம். இந்தியா என்பதற்கு பதிலாக வேறொரு நாட்டை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன். குறையாண்மையாகிப்போன இறையாண்மை கொண்ட இந்தியாவை என்னுடைய தாய்நாடாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. என்னுடைய தேசிய இனம் தமிழன்.


இதனை எழுதுவதற்கு ஐந்து மணிநேரத்திற்கு முன்பு என் தங்கச்சிப்பிள்ள பாமினி என்னிடம் ஸ்கைப் ல் பேசினாள். எடுத்த எடுப்பிலேயே "நீங்கள் இந்தியாவில் இருந்துதானே பேசுறீங்க?" என்றாள். காலங்காலமாய் இந்தியா என்றாலே தமிழர் தேசியத்திற்கு (தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எதிரானது. விளையாட்டுக்காகவா பேரறிஞர் அண்ணா தனித்தமிழ்நாடு கேட்டு போராடத் துவங்கினார் என்பதை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.) எதிரானது. "தமிழ்நாட்டிலிருந்தா பேசுகிறீர்கள்? அல்லது பெங்களூருவிலிருந்தா பேசுகிறீர்கள்?" என்று கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை, என்னுடைய இருப்பிடத்தை அடையாளப்படுத்த இந்தியாவை ஏன் இங்கு நுழைக்கிறாள்? என்று சட்டென்று என்னுள்ளே கடுமையான கோபம் எழுந்தது. கேட்பவள் என் தங்கச்சி என்பதால் அவளை எதுவும் திட்ட, அவள்மீது எனக்கு கோபப்பட மனம் வரவில்லை. நான் கோபப்பட்டு அவள் என்னால் வருத்தப்பட்டால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும். என்னுடைய அலுவலகத்தில் என்னைத்தவிர எனக்கு மேலே உள்ள மேலதிகாரிகள் அனைவருமே தமிழர் அல்லாத வேற்று மொழியினத்தவர். விடுப்பு எடுக்க மின்னஞ்சல் அனுப்பும்போது "I have to go to my hometown which is in my tamizhnadu." என்று தொடங்கி எழுதுவதுண்டு. அவர்கள் ஒவ்வொருமுறை நான் அனுப்புவதை படிக்கும்போதும் அவர்கள் தாய்மொழியான மராத்தியில் "இவன் என்ன my tamizhnadu என்று சொல்கிறான்?" என்றும் "tamilnadu என்பதுதானே சரி. tamizhnadu என்று ஏன் எழுதுகிறான்?" என்றும் பேசிக்கொண்டு இருப்பதை அடிக்கடி கேட்க நேர்ந்தது. என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நான் அவர்களிடம் தெளிவாக விளக்கியிருந்திருப்பேன்.

நம்மிடம் அந்த பற்றுதல், my என்ற possessiveness இல்லாததால் பெருமைமிக்க நம் தமிழினம் வீழ்ந்துபோனது. தரணிதனில் தாழ்ந்துபோனது.

என் தங்கச்சிப்பிள்ள பாமினி சில நாட்களுக்கு முன்பு என்னை "my anna" என்று அழைத்தபோதுகூட நான் அதிகமாக மகிழ்ந்ததற்கு காரணம் நானும் இப்படித்தான் "என்னுடைய தங்கச்சி, என்னுடைய அண்ணா, என்னுடைய தமிழ்நாடு" என்று உரிமை கொண்டாடுபவன் (possessiveness).

இந்த என்னுடைய, நம்முடைய என்ற இந்த possessiveness ம் ஒற்றுமையும் தான் நம்முடைய தமிழனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப் போகின்றன.

"ஆத்தா, இந்த இடத்தில் உன்னிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்லணும். நீ என்னை my anna என்று உரிமை கொண்டாடுவதெல்லாம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான் டா. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களையெல்லாம் தங்கள் உறவுகளாக நினைக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவு உங்களின் ஆபத்துக் காலங்களில் உதவ முயற்சித்தார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் சூழ்ச்சிகளால் அந்த முயற்சி எப்போதுமே ஆக்கப்பூர்வமாக மாறாமல் வெறும் அனுதாபம் என்ற நிலையிலேயே நின்றுவிட்டது டா. அதனால், உங்களுக்காக நாங்கள் வெறும் கண்ணீர் மட்டுந்தான் டா வடிக்க முடிந்தது.

நீ என்னை my anna என்று அழைக்கிறாய். நாங்கள் உங்களை எங்கள் சகோதரர்களாக கள்ளங்கபடமில்லாமல் நினைப்பதுபோலவே எத்தனை ஈழத்தமிழர்கள் எங்களை தமிழர்களாக மதிக்கிறீர்கள்? நேசிக்கிறீர்கள்? உங்களின் உறவுகளாக உங்களில் ஒருவராக எங்களை நினைக்கிறீர்கள்? என்று எனக்குத் தெரியல டா.

உண்மையில் நாமெல்லாம் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டத்தின் பிள்ளைகள். நாம் செய்த தீவினைகள் எல்லாம் சேர்ந்து கடற்கோளால் அரிக்கப்பட்டு நீ வேறாய் நான் வேறாய், நீங்கள் ஈழத்தமிழர்களாய் நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாய் மாறிப்போனோம்."

உண்மையில் சொல்லப்போனால் என்னை சிலபேர் அலைபேசி ஊடாக "நீங்கள் ஈழத்தமிழரா?" என்று கேட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முகநூல் கணக்கில் திரு. இராஜமனோகரன் ஐயா கீழ்க்கண்டவாறு பாராட்டி எழுதியிருந்தார். அதாவது என்னை தென்னிலங்கை தீந்தமிழ்க்கவி என்று சொல்லியிருந்தார். எப்படியிருந்தாலென்ன என்னை தமிழன் என்று சொன்னவரை சரி.


பிறகு என் தங்கச்சிப்பிள்ள சொன்னாள் "எனக்கு வாய் மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் அறுவைசிகிச்சை நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே அண்ணா. அதனால் வடிவாக பேச முடியாது அண்ணா." என்றாள்.

"அட லூசு, நீ சுவிட்செர்லாந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது நான் ஸ்கைப்பில் உன்னை நலம் விசாரிக்க உன்னிடம் பேச முயற்சித்து நீ தூங்குவதை பார்த்தபிறகு உன்னை எழுப்ப முயற்சித்தவர்களிடம் பிள்ளையை எழுப்பாதீங்க, அவ நல்லா ஓய்வெடுக்கட்டும். யாரும் அவளை கேட்டாலும் அவ இப்ப இல்லை ன்னு சொல்லிடுங்க ன்னு சொன்னேன். இதெல்லாம் உறக்கத்திலிருந்த உனக்கெப்படி தெரியும்?" என்று நினைத்துக்கொண்டே "நீ சொல்லித்தான் எனக்கு தெரியுமா? எனக்கு தெரியும் ப்பா" என்றேன்.

பொதுவாக வடிவு அல்லது வடிவாக என்பதற்கு அழகு, அழகாக என்பது பொருள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அதிகமாக வடிவு அல்லது வடிவாக என்பதனை பயன்படுத்த மாட்டார்கள். அதற்குப்பதிலாக அழகு என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், யாழ்ப்பாணத் தமிழில் வடிவாக என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. அதாவது என் தங்கச்சிப்பிள்ள சொன்ன "வடிவாக பேச முடியாது" என்ற வாக்கியத்தில் வடிவாக என்பதற்கு பொறுமையாக, நிதானமாக அல்லது மிகத்தெளிவாக என்ற பொருள் வரும் என்பதனை புரிந்துகொண்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் கேட்க வேண்டிய ஒரு சந்தேகம், நாட்டைப்பற்றி அவள் எழுதிய "என் காதல் நீ" என்று தொடங்கும் பாடலில். இசையமைப்பாளர் திரு. இரவிப்பிரியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்தப்பாடலை என்னுடைய அலைபேசியில் வைத்துக்கொண்டு எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பவன் நான். தங்கச்சி பாமினி எழுதியிருக்கிறாள் என்று என் அம்மாவை கேட்கச்சொன்னேன். இதில் "குளிருக்கும் வெயிலுக்கும் இடைப்பட்ட காலம் நீ" என்றால் இப்படிப்பட்ட தட்பவெட்ப நிலை கொண்ட நிலப்பரப்பு நிச்சயமாய் அது என் தாய்நாடான தமிழ்நாடு தான். இன்னொரு வரியில் "அடைக்கலம் தந்து அன்பான தாயும் நீ" என்ற இடத்தில் இந்தியாவாக இருக்குமோ என்பதே என் சந்தேகம்.

ஒரு பக்கம் அடைக்கலம் என்ற பெயரில் தொட்டிலை ஆட்டிவிட்டு இன்னொரு பக்கம் பிள்ளையை கிள்ளிவிட்ட ஈனத்தனமான இந்தியா வெளியிலிருந்து, வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியாகத் தெரியும். ஆனால், உள்ளே என்னைப்போன்று தங்களின் பழம்பெருமை வாய்ந்த தேசிய இனத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கக்கூடியவர்களுக்குத்தான் தெரியும் எங்களுக்குள்ளே தமிழ்த்தேசிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. வெடித்துக் கொண்டிருக்கிறது என்று.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு குழுமத்திலிருந்து என்னிடம் கேட்டார் "இந்தியா தங்களுக்கு எதிரி நாடு என்றால் இந்தியா நடத்தும் இரயிலில் ஏன் பயணிக்கிறீர்கள்?" என்று.

உண்மையில் இந்தியா எனக்கு இலவசமாக இரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கவில்லை. நான் கட்டும் எல்லா வரிப்பணத்தையும் கப்பமாக வாங்கி ஏப்பம் விடுகிறது. இங்கேயே வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்போது தெரியும்.

என்னுடைய சிறுவயதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னிடம் என்னைச்சுற்றியுள்ளவர்கள் வெளிநாட்டுப் பயணம் பற்றி கேட்டபோது "என்னுடைய தாய்நாடான இந்தியாவை விட்டு போக மாட்டேன்" என்று சொன்னதுண்டு. உண்மைகளை உணர ஆரம்பித்தபின்பு எப்படி என்னால் என் தாய்நிலமான தமிழ்நாட்டை விட்டுப் போகமுடியும்?

இனிவரும் காலங்களில் வெளிநாடு போனால்தான் நல்லது என்ற நிலை வரும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு செல்வதற்கு முன்னால் என் தங்கச்சிப்பிள்ள பாமினியிடம் எனக்கிருந்த இக்கட்டான சூழலில் அவளிடம் கோபப்பட்டு விட்டேன். அதிகாலை அவள் வருத்தப்பட்டாள். அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை.

என் அம்மாவுக்கு தெரியும் நான் பசி பொறுக்கமாட்டேன் என்று. என்னுடைய வாழ்நாளில் யாருக்காகவும் நான் இப்படி இருந்ததில்லை.

"உங்களுக்கு இங்கே பெண் பார்க்கவா அண்ணா? இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் நாற்பது வயதிலா அண்ணா திருமணம் செய்யப் போகிறீர்கள்?" என்று என் தங்கச்சிப்பிள்ள பாமினி கேட்டதை நினைவில் வைத்து "என் தங்கச்சி உனக்கு திருமணம் நடைபெறாமல் எனக்கு எப்படிப்பா திருமணம் நடைபெறும்? இதை யோசித்தாயா?" என்று கேட்டிருந்தேன்.

என்னுடைய முகநூல் கணக்கில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறேன். இதனைப் பார்த்து "பாமினியின் தங்கச்சி பேரென்ன?" என்று யாராவது கேட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.



சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் என்று தங்கச்சி இட்டிருந்த பதிவை பார்த்த அன்று மகிழ்ச்சியில் எனக்கு உறக்கமில்லை. அடுத்தநாள் அலுவலகம் சென்று கணினித் திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தேன் மகிழ்ச்சியில். அந்த அளவுக்கு என்னுள்ளே எங்கும் நீக்கமற நிறைந்து கிடந்தாள் என் தங்கச்சி.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு அன்பர் என்னிடம் "இப்படி சிறுபிள்ளைத்தனமாக, குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறீர்களே?" என்று கேட்டார். நான் சொன்னேன் "சிறுபிள்ளைத்தனமும் குழந்தைத்தனமும் கடவுளின் குணங்கள். அவற்றை ஏன் நான் மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்?" என்று கேட்டேன்.

என் தங்கச்சிப்பிள்ள பாமினியைப் பற்றி வித்யாசாகர் அண்ணாவிடம் பேசும்போதெல்லாம் "அது நம்முடைய தங்கச்சி. நம்மை மறக்காது." என்று அன்பு பொங்க சொல்லுவார்.

நான் எதிர்பார்த்ததுபோலவே என் தங்கச்சி எதிர்காலத்தில் ஒரு குடும்பமாய், கணவர் குழந்தைகள் என தனது கலைப்பயணத்தை தொடரப்போகிறாள் என்ற மனமகிழ்வோடு உறங்கப் போகிறேன்.

ஆத்தா, அண்ணா உனக்கு எழுதிய வாழ்த்துக்கவிதையின் கையெழுத்துப் பிரதியை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்.

தொடர்ந்து நம்முடைய கள்ளங்கபடமில்லாத அன்பாலும் நம்முடைய தமிழாலும் இணைந்திருப்போம்.



.....
.....
.....
.....
.....
.....
அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

Thursday, May 1, 2014

ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள்


ஜனவரி - மார்ச் ௨௦௧௪ (2014) அருவி காலாண்டிதழ் (ஹைக்கூ சிறப்பிதழ்) - ல் என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக தவறாமல் என்னுடைய ஹைக்கூ கவிதைகளை அனுப்பச்சொல்லி வெளியிடும் சீனிவாசன் ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Sunday, April 27, 2014

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA - None Of The Above) வாக்குகள் பதிவு



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதாக ஒரு செய்தி படித்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ ஏழு கோடிப் பேர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் ஏறத்தாழ நான்கரை முதல் ஐந்து கோடிப் பேர்கள் இருப்பார்கள்.

ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதற்கு பதிலாக எழுபத்தைந்து விழுக்காடு அதாவது மூன்றுகோடி பதிவாகியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

கடந்த வாரம் பரமக்குடி சென்றிருந்தபோது என் அம்மாவிடம் "வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA) என்ற சின்னத்தில் வாக்களி" என்று சொன்னேன். "எனக்கும் வரவர வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருக்கிறது. நான் அப்படி செய்தால் என்னுடைய வாக்கு செல்லாத வாக்காகி விடாதா?" என்று கேட்டாள். "அம்மா, நீ வேண்டுமானால் பார். நிறைய பேர் NOTA வில் தான் வாக்களிப்பார்கள். நம்முடைய இந்த வாக்குகள் நிச்சயம் பெருகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்போது அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்." என்று சொன்னேன்.

"யாருக்கு வாக்களித்தாய் அம்மா?" நேற்று என் அம்மாவிடம் கேட்டேன். "நீ சொன்னதுபோலவே NOTA வில் தான் வாக்களித்தேன்." என்றாள்.

தி.மு.க மாற்றும் காங்கிரசுடன் பேரம் பேசி பேரம் படியாததால் பா.ஜ.க. விடம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.க விற்கு ஆதரவாக தே.மு.தி.க தேர்தல் பரப்புரை செய்ததாக செய்திகள் வெளியாயின.

"விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. கார்பரேட் கம்பெனிதான் ஆரம்பித்துள்ளார்." என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்த வைகைப்புயல் வடிவேலு சொன்னது மிகச்சரியான வார்த்தை என்று இப்போது தெரிகிறது.


நஷ்டம் என்கிறார்கள். இலாபம் என்கிறார்கள். இலாபம் வரும்போது மட்டும் ஆளாளுக்கு தின்று ஏப்பம் விட்டுறானுங்க. நஷ்டம் என்று கணக்கு கட்டி எங்களோட தலைல கட்டப்பார்க்கறீங்க? ஏண்டா மொள்ளமாரி நொன்னைகளா?

இந்தியாவின் போதைக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் ஈழத்தமிழர்களும் ஊறுகாய். உங்களோட போதைக்கு நாங்க ஊறுகாயாடா வெண்ணைகளா?

சீமான் அண்ணாச்சி,

அ.தி.மு.க விற்கு தாங்கள் நன்றி நவில்வது வேறு. வாக்களிக்க ஆதரவு தருமாறு பரப்புரை செய்வது வேறு. நம்முடைய தமிழ்நாட்டில் இலாபம் தரும் துறைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு நஷ்டம் நஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த ஜெயலலிதாவால் மத்தியில் என்ன கிழித்துவிட முடியுமென்று நீங்கள் ஆதரவு திரட்டினீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜயகாந்த் பா.ஜ.வி டம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியதுபோலவே தாங்களும் அ.தி.மு.வி டம் வாங்கியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கட்சி ஆரம்பித்த புதிதில் "நாம் தமிழர் கட்சி மற்றுமொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியல் புரட்சி." என்றெல்லாம் சொன்னீர்களே... இன்று நீங்களும் அந்த திராவிடமெனும் குழிக்குள்ளேயே விழுந்து விட்டீர்களே? இது நியாயமா அண்ணாச்சி?

எப்படியாயினும் நம்முடைய தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி நாம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.




தேர்தல் முடிந்தது.. ஆரம்பித்தது 'பவர் கட்'.. ஆங்காங்கு போராட்டத்தில் குதிக்கும் மக்கள்

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/power-cut-looms-large-again-tn-lse-199333.html

​இந்த லட்சணத்தில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறதாம். அதனால் இந்த முடிவாம்.

ஏற்கனவே பஞ்சப்பாட்டு பாடித்தான் பால், பேருந்து கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஜெயலலிதா ஏற்றினாள். இப்போது மீண்டும் அதே மக்கள் விரோத ஆட்சி தொடர்கிறது தமிழகத்தில்.

இந்த இலட்சணத்தில் நாம் தமிழர் அண்ணாச்சி சீமான் அதிமுக விற்கு வாக்களிக்க கேட்டு பரப்புரை செய்தார்.

இங்கு எல்லோரும் சுயநல அரசியலை முன்னெடுக்கத் துவங்கிவிட்டனர். சீமான் உட்பட எல்லோருமே ஈழத்தை வைத்தும் தமிழக மக்களின் ஏழ்மையை சொல்லிச்சொல்லியும் அரசியலில் சொத்து சேர்க்கத் துவங்கிவிட்டனர். ஆதாயம் தேடத் துவங்கிவிட்டனர்.

இளிச்சவாயத் தமிழன் அடுத்தவன் வாயைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் கோட்டைவிடுகிறான். இவனாவது நம் கஷ்டங்களை புரிந்துகொள்வானா என்று ஏங்கிஏங்கி சாகிறான்.

ஏண்டா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். எல்லாமே நஷ்டம் நஷ்டம் என்றால், வருகிற லாபமெல்லாம் எங்கதாண்டா போகுது?

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

Saturday, April 26, 2014

my anna



​நேற்று மதியம் என் தங்கச்சி பாமினியிடம் முகநூல் IM (Instant Message) ல் பேசினேன். 'உன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகி விட்டன. உடல்நிலை எப்படி உள்ளது ப்பா?' என்று கேட்டேன். 'உங்களிடம் பேச இயலாமைக்கு sorry my anna.' என்று அனுப்பினாள்.

'அண்ணாகிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது டா' என்றேன்.

ஆத்தா,

நீயும் நானும் வித்யாசாகர் அண்ணாவின் செல்லப்பிள்ளைகள்.

உன்னுடைய my annaவை நீ பத்திரமாக வைத்துக்கொள். யாரிடமும் உன்னுடைய my annaவை கொடுத்துவிடாதே. சரியா?


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
..........
..........

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
..........
..........
..........
..........
..........
..........
கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
..........
..........
..........
..........
வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு

நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
..........
..........


ஆற்றுங்கவிச் செல்லம் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To:


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.

Thursday, April 24, 2014

பிறந்தநாள் வாழ்த்து



௨௬-௦௪-௨௦௧௪ அன்று என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் மூன்றாவது பிறந்தநாள். அவனின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய வாழ்த்துக்கவிதை.

வாழ்த்துகிறேன் பிறந்தநாளில் வந்துதித்த எங்களய்யா
தாழ்த்திதலை வணங்குகிறேன் தங்கச்சி மகனாரே
ஆழ்ந்துரைக்க முடியுமெனில் அழகான குழவியடா
வாழ்க்கையிங்கு உன்னோடு வரம்நூறு தாயேன்டா

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே
விளையாடும் அழகைத்தான் விழியசந்து பார்ப்போமே
பழம்பெருமைத் தமிழ்பேசி பண்புடனே வளர்வாயே

அம்பாரி யானையாகி உனையாட்டிடவே நானுண்டு
கொம்புடைய மான்போலே குதித்தோடும் பொன்வண்டு
நம்முடைய தமிழ்போலே நானிலத்தில் நீநின்று
தெம்புடனே நடைபோடு தமிழெங்கள் மூச்சென்று

அம்மையென அப்பனென அழகாக வகுத்தளித்த
செம்மையான சிறப்புடனே சீர்மிகுந்த தமிழைத்தான்
பொம்மையுடன் விளையாடும் புதுமையான பொம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எப்போதும் கற்பாயே

மாமனென்று அழைத்திட்ட மருமகனே மலைத்தேனே
உம்மைவிட அன்பான உறவில்லை இங்கெனக்கு
ஆமென்றும் இல்லையென்றும் ஆராயும் மனிதர்காள்
நமக்குள்ளே இறையுண்டு நீங்காத அன்பினிலே

மழலையிலே தமிழ்பேச மலைத்தேனும் செவிமுட்டும்
அலைகடலும் ஆர்ப்பரிக்கும் அழகேயுன் நடைபார்த்து
சிலைகெஞ்சும் சிரிப்பழகே சொத்தான நல்முத்தே
மலைமுட்டும் வான்போலே மனங்கொண்டே வாழ்வாயே 

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையில் அழகிய கலை உணர்வை வெளிப்படுத்துவதாகவும், தொழில்நுட்பம் மிக்கதாகவும், அறிவை போதிக்கக் கூடியதாகவும், இந்தியப் பண்பாட்டின் புகழை உயர்த்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர் என திரைப்படத் துறையின் வெவ்வேறு துறைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தங்கத் தாமரை, வெள்ளித்தாமரை, வெண்கலத் தாமரை விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள்:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ். இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை.

சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார்.

சிறந்த கதையமைப்பிற்காக ‘தலைமுறைகள்’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த எடிட்டிங்கிற்காக வல்லினம் படத்திற்கு வி.ஜே.சபு ஜோசப் தேர்வாகியுள்ளார்.

விருதுப் பட்டியல்:

* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (Ship of Theseus) (ஆங்கிலம் - இந்தி)

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (Fandry) (மராத்தி)

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்

* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்

* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (Tuhya Dharma Koncha) (மராத்தி)

* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (Perariyathavar) (மலையாளம்)

* சிறந்த குழந்தைகள் படம் - காபல் (Kaphal) (இந்தி)

* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)

* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)

* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - Liar's Dice - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)

* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)

* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி (Liar's Dice - இந்தி)

* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Location Sound Recordist): நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Sound Design) - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Re-recordist of the final mixed track) - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)

* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் (Jaatishwar) - பெங்காலி)

* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)

* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)

* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)

* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)

* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)

* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ (Ajeyo)

* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ (Bakita Byaktigato)

* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி

* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1

* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்

* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்

* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா (Aajcha Diwas Majha)

* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்

* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி (Na Bangaaru Talli)

* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர் (The coffin Maker)

தங்க மீன்கள் குறித்து:

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500 என்று மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான். “விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா?” என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .

தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைக்கு ஃபீஸ் கட்ட முடியாத ஒரு தந்தைக்கும் மற்ற குழந்தைகள் போலல்லாமல் சற்று கற்றல் குறைபாடுடைய மகளுக்கும் இடையிலான அன்பையும், கூடவே சீர்கெட்டுப்போயிருக்கும் கல்வி சூழலையும் பற்றி பேசுகிறது தங்க மீன்கள்.

சிறந்த மாநில மொழிப் படம் என்ற பரிசுபெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். உடன் பதக்கமும் சான்றிதழும் தரப்படும்.

நா. முத்துக்குமார்:

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

தலைமுறைகள்:

அமரர் பாலு மகேந்திராவின் கடைசிப் படம். தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துடாதப்பா... என்று தழுதழுத்தபடி பேரனிடம் சொல்லும் பாலு மகேந்திரா குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. சின்ன பட்ஜெட்டில், ஆனால் பெரிய விஷயத்தை எளிமையாய்ச் சொன்ன படம்தமிழ் தெரியாத தன் பேரனுக்கு தாத்தா எளிமையாக தமிழ் கற்றுத் தந்ததும், பதிலுக்கு தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருவதுமான காட்சிகள் இந்தத் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டியவை. அடுத்த தலைமுறையில் எந்த தமிழ்க் குழந்தையும் தமிழ் தெரியாது என்று சொல்லும் அவலமே இருக்கக் கூடாது என்ற பாலு மகேந்திராவின் ஆதங்கத்துக்கு வெள்ளி ரஜத் கமல் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு!



வல்லினம்:

கூடைப் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் வல்லினம். நகுல் - மிருதுளா நடித்த இந்தப் படத்தில் முதல் பாதியைவிட, பின் பாதியில் எடிட்டருக்கு சவால் இருந்தது. அதற்காகவே சிறந்த எடிட்டருக்கான விருது சாபு ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளை வாங்கிய நம்முடைய தமிழ் திரைப்படக் கலைஞர்களை நாமும் மனதார வாழ்த்துவோம்.

Tuesday, April 22, 2014

என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதை




தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/12/blog-post_29.html என்ற என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி கடந்த ௨௦௧௩ ஜூன் மாதம் என் தங்கச்சிப்பிள்ள பாமினி கவிதைநூல் வெளியிடுவது தொடர்பாக என்னிடம் கேட்டாள்.

அதன்பிறகு கடந்த ௨௦௧௪ பிப்ரவரி மாத இறுதியில் என்னிடம் பேசும்போது 'அடுத்த கவிதைநூலை எப்போது அண்ணா வெளியிடப் போகிறீர்கள்?' என்றாள். 'இப்போது இல்லப்பா' என்றேன். 'என்னுடைய முதல்கவிதைநூலை வரும் ஏப்ரல் ௨௭ அன்று வெளியிட வேண்டும். அனைத்தும் ஈழம் சார்ந்த கவிதைகள். அதற்கு தங்களின் வாழ்த்துச்செய்தியொன்று வேண்டும் அண்ணா' என்றாள். 'மகிழ்ச்சிப்பா. விரைவில் அனுப்பி வைப்பா' என்றேன். 



வரும் ஞாயிறு (ஏப்ரல் ௨௭, வ௦௧௪) அன்று நடைபெறும் 'கலைகளுக்குள் ஓர் சங்கமம்' விழாவில் தன்னுடைய 'உன்னிடம் திருடிய பொய்கள்' பாடல் தொகுப்பு வெளியிடுவதோடு தன்னுடைய முதல் கவிதைநூலையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தங்கச்சி இருந்தாளென்று இப்போது புரிகிறது. 

அவள் என்னிடம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேசியபிறகு சில நாட்களில் மருத்துவமனை, சிகிச்சை என கடந்த ஒன்றரை மாதங்கள் ஓடிப்போயின. 

தங்கச்சி,

இந்த அண்ணா எழுதிய "‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html" என்ற என்னுடைய இந்த கவிதையை என்னுடைய கையெழுத்துபிரதியோடு பத்திரமா வச்சுக்கடா. சரியா? 

நான் முதுநிலை கணினிப்பயன்பாட்டியல் (M.C.A.,) படிக்கும்போது ௨௦௦௬ ல் அழகப்பா பல்கலைக்கழக தமிழ் நண்பர்களோடு சேர்ந்து 'புதிய சிற்பி' என்ற மாத இதழை நடத்தினோம். அந்த இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராக என்னை நியமித்த அந்த இதழின் ஆசிரியர் முதல்மாத இதழின் தலையங்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர் என்னுடைய கவிதையேடுகளை படித்துவிட்டு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார். 

ஒரு சங்கீதக் கலாநிதியைப் போல், தொடையில் தட்டிப் பாடச்சொல்லும் கவிதைகளைத் தருபவர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

சந்தமும் தொடைநயமும் துள்ளலோசையும் சேர்ந்துவருவதே நான் எழுதும் கவிதைகளுக்கான இயல்பான கவிதைநடை. இந்த எனக்கான இயல்பான கவிதைநடையிலேயே உனக்கான வாழ்த்துக்கவிதையும் என்னால் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துச்செய்தி கேட்டாய். வாழ்த்துக்கவிதை அனுப்பியிருக்கிறேன். 

முதல் கவிதைநூலை வெளியிட முடியவில்லை என நீ வருத்தப்படாதே. விரைவில் நல்லபடியாக வெளியிடுவோம். 

ஒரு மாதத்திற்கு முன்பு நீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது skype IM ல் நலம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து 'பாமினியில்லை' என்று பதில் வந்தது. 'தங்கச்சியை நான் மிகவும் கேட்டேன் என்று சொல்லுங்கள்" என்றேன். 'சரி' என்று பதில் வந்தது. சில நாட்கள் கழித்தபிறகு skype IM ல் 'தங்கச்சி எப்டி இருக்கா? அவளுக்கு என்மேல ரொம்ப பாசம்' என்று அனுப்பினேன். மறுமுனையிலிருந்து 'நீங்கள் நலம் விசாரித்ததை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாமினி சிரிச்சுக்கிட்டே சொன்னவ, அண்ணாவுக்கு என்மேல ரொம்ப பாசம் என்று.'

பிறகொருநாள் நான் skype IM ல் பேச முயற்சித்தேன். காணொளி அழைப்பு வந்தது. மருத்துவமனையில் நீ நன்றாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாய். நான் ஞாபகமில்லாமல் 'தங்கச்சி ஏன் தூங்குது?' என்று கேட்டபிறகே எனக்கு புரிந்தது நீ இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாய் என்று. அதற்குள் யாரோ பக்கத்தில் உன்னை எழுப்ப முயற்சித்தனர். 'தங்கச்சி நல்லா ஓய்வெடுக்கட்டும். அவள தொந்தரவு செய்யவேண்டாம்' என்று சொன்னேன். 

நீ சென்னைக்கு வரும்போது மறக்காம என்னுடைய அலைபேசிக்கு அழைத்து நீ வந்த தகவலை சொல்லிவிடு. உன்னை நேரில் சந்திக்க நான் எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுகிறேன். சரியா? உனக்கு பொம்மைகள் வேணும் னா நான் வாங்கித்தர்றேன். நீ ஏற்கனவே ஒரு புலிபொம்மை வச்சிருக்கிற தானே. உனக்கு கரடி பொம்மை பிடிக்குமா? நான் ஏற்கனவே சொன்னமாதிரி ஒரு பெரிய்ய்ய கரடி பொம்மை வாங்கித்தர்றேன்.

ஆத்தா, நம்முடைய பாசமும் மழலைகள் போன்ற அன்பும் நம்முடைய மரணத்தைத்தாண்டியும் இப்படியே தொடரணும். இதுதான் இந்த அண்ணாவோட விருப்பம்.

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html

------------



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To: 


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். 

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.


‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி








என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய கவிதையிது.


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
வண்ணவண்ணக் கவியிசைக்க வார்த்தைவழி கங்கை
அன்னையிங்கு தூரநிற்க அரவணைக்கும் செங்கை

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
சொல்லச்சொல்லக் கரைந்துவிழும் கள்ளமிலா உள்ளம்
அள்ளஅள்ளக் குறையாமல் ஆற்றுங்கவிச் செல்லம்

கங்கைநதி வைகைநதி காவிரியும் காயும்
தங்கையிவள் தமிழ்கேட்க திரையுலகே சாயும்
மங்கையிவள் மொழிகேட்டே மாண்டபுலி பாயும்
சிங்களவன் சிங்கத்தின் செருக்கெல்லாம் மாயும்

கற்பனையின் உச்சம்நின்று கவிக்குயிலும் பாடும்
சொற்குவியல் வற்றாமல் சிந்தைவழிந் தோடும்
கற்றதமிழ் பாடல்களில் களிநடன மாடும்
உற்றதுணைச் சுற்றமெலாம் இவளெங்கே தேடும்

கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
தெவிட்டாத வார்த்தைகளில் துள்ளுமிசை நாணும்
புவியிலிங்கு கூவுகின்ற புதுக்குயிலின் கானம்

அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

ஆனந்த யாழை மீட்டியவன் கைகளில் தேசியவிருது

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்




எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. மூன்றரை அல்லது நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து ஒவ்வொரு நிலையமாக மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு ஈழதேசத்து தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஒரு பாடலாசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தார். தன்னுடைய பாடல்கள் தொடர்பான விழாவின்போது தன்னுடைய தந்தை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதாக நெகிழ்ச்சியோடு அந்த பாடலாசிரியர் பகிர்ந்துகொண்டார். (நிகழ்ச்சியை பாதியிலிருந்தே கவனிக்க முடிந்ததால் இதுகுறித்து இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக கிரீடம் திரைப்படத்தில் இவர் எழுதிய “கனவெல்லாம் பலிக்குதே” என்ற பாடலை தொடர்புபடுத்தியே இருக்கும்.) அதுமட்டுமின்றி “வளர்ந்துவரும் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு படத்தின் எல்லா பாடல்களையும் எழுத வாய்ப்பு தரவேண்டும். அதுவே அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” எனவும் பதிவுசெய்தார்.

அந்த பாடலாசிரியரும் கவிஞருமான திரு. நா. முத்துக்குமார், ஆனந்த யாழை மீட்டி ௨௦௧௪ (2014) ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருதை (‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை இயற்றியதன்மூலம்) வாங்க தேர்வாகியிருக்கிறார். அனைத்து தமிழர்களும் அவரை உச்சிமுகர வேண்டிய தருணமிது.

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

ஒரு பிரபலமான வாரஇதழுக்கு அவர் தன்னைப்பற்றி கூறியவை

“1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!”

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் திகதி அவரது தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் பிறந்தார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜு.


ஆதவன் நெல்லுபடத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தன் பெயரையே முதல் வார்த்தையாகக் கொண்ட பாடல்மூலம் தன் வாசல் திறந்து கொண்டவர் நா. முத்துக்குமார்.  திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும் இவருக்குரிய சிறப்பாகும்.

முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற ஆசையில் இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி இருக்கிறார் என்பதை விட திருப்பப்பட்டார் என்பது பொருந்தும். 

அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின் மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. அவரது நண்பரான இயக்குனர் சீமானின் "வீர நடை" என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர் 2000 க்கு மேல் பாடல் எழுதியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் வாய்ப்பும் பெருமையும் முத்துக்குமார் பெற்றுள்ளார். 2007 இல் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனமும் எழுதியுள்ளார்.

இவரது தந்தை ஒரு தமிழாசிரியர் தந்தையின் லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையே பயணமான சிறுவயது, அவரை ஆறுவயதில் இருக்கையிலேயே கவிதை எழுதத் தூண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தற்போதும் இயக்குனராக கதை தயார்படுத்தலில் தீவிரமாகவே உள்ளார்.

வீரநடையில் "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவை புடிச்சிருக்கு.." என்ற அந்தத் திரைப்படப் பாடல், இதுவரை வந்த அவரது மற்ற பாடல்களை விட அதிக உவமைகளை கொண்டிருப்பதாக இலக்கியவாதிகள் கூறுகிறார்கள்.  கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல், வரிகளுக்காக தவமிருக்காமல், வேகமாக  வார்த்தைகளை இறக்குமதி செய்து பத்தே நிமிடங்களில் பாடலை எழுதி முடிக்கும் திறமைகொண்டவர் என முத்துக்குமார் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜி.வி ப்ரகாஷ் வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கும் இவர் பல இசை அமைப்பாளரின் பாராட்டுக்களை பெற்றவர்.

அவரின் காதல் கவிதைகளும், பாடல்களும் இன்றைய இளைஞர்களின் காதலுக்கு உதவியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் அவர் கையாளும், அவரின் எளிய வரிகளில் காதலை எல்லோராலும் உணரக்கூடியதாக இருக்கிறது. பாடல்களில் கவிதை இருக்கும், கவிதைகளில் எளிமையான வார்த்தைகள், வரிகளில் கதை, பளிச்சென முகம் காட்டும் கருத்துகள். இவரின் பாடல் வெற்றிக்கு காரணமாகும்.

Sunday, April 20, 2014

காங்கிரசை கருவறுப்போம்



தமிழக வாக்காளர்களே, வாக்களிக்கும் நாள் நெருங்கும் வேளையில் சிந்தித்து செயல்படுவது நம் கடமையாகும்.

பரமக்குடியில் நேற்றுமாலை நானொரு வாசகம் கண்டேன் ‘வாக்களிக்க பணம் வாங்கினால் சட்டப்படி குற்றம்’ என்று.

உண்மையில் சொல்லப்போனால் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். கொடுப்பது, ழல் செய்வது குற்றமில்லை. வாங்குவது குற்றமா என்ற கேள்வி என்னுள்ளே எழுகிறது. அவையெல்லாம் நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கிவைக்கப்பட்ட பணந்தான். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.

வாக்களிக்கும்போது நாம் சிந்திப்பதில்லை. நம்முடைய இந்த முட்டாள்தனத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘அடி கொள்ளை’ என ஊழல் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் சோனியாகாந்தி பேசியிருக்கிறாள் ‘காங்கிரசு ஈழத்தமிழர்களை ஆதரித்த கட்சியென்று’. இந்தியாவின் போதைக்கு தமிழர்கள்தான் ஊறுகாய்.

காங்கிரசை கருவறுத்து விடுங்கள்.

‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.


காங்கிரசை கருவறுக்க களமாற்றும் வீரர்காள்
கவனமுடன் செய்வீரே கணக்கைத்தான் முடிப்பீரே
ஆங்காங்கே கூடிநின்ற ஆதித்தமிழ் தோழர்காள்
அறுத்திடுவோம் அவள்நாக்கை அனுமதியோம் அவள்வரவை

ஈழத்தில் தமிழர்களை ஆதரித்த கட்சியென்று
இனிப்பாக பேசிநின்ற இத்தாலி சிறுக்கிதனை
கால்வேறு கைவேறாய் கொடுவாளால் அறுத்திடுவோம்
கொலைமுடிந்த பின்னாலே காங்கிரசு இல்லையிங்கு

ஈழத்தில் அவர்வாழ்வு ஏற்றமிங்கு பெற்றிடவே
இருவிழிகள் எதிர்பார்த்து இதயமுந்தான் கனக்குதடா
இழந்தநிலம் அதிகந்தான் இந்தியாவின் துரோகத்தை
எப்போதும் மறவாமல் இருப்போமே தமிழர்களாய்

புலிகளுடன் போரிட்டு புறமுதுகைக் காட்டித்தான்
புண்ணான புண்ணாக்கு பழம்பெருமை(??) பாரதமே
அலிகளையே ஆசனத்தில் அமர்த்திவிட்டுப் புகழ்பாடும்
அசிங்கத்தைப் பாடிடவே எழுதுகிறேன் இக்கவிதை

நெருநெருப்பாய் எழுதோழா நெஞ்சமெலாம் கொதிக்குதடா
நினைவினிலே தமிழீழம் நிச்சயமாய் நீதிவெல்லும்
செருசெருப்பாய் இந்தியாவில் செந்தமிழும் மெதுமெதுவாய்
சாவதற்கு முன்னாலே சிந்திப்போம் செயல்படுவோம்