Friday, March 14, 2025

பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...

நான் கடந்த 2023 ஜனவரி முதல் வாரம், கவிஞரும் நண்பருமான தம்பி வாலிதாசனால் அழைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி கவிதை பயிற்சிப் பட்டறையில் ஒரு பார்வையாளனாக என் இளைய மகள் நிறைமதியுடன் கலந்துகொண்டேன். கலந்து கொண்ட நான்கு மணி நேரங்களில் அங்கு மேடையில் பேசிய ஐயா மு. முருகேஷ் உட்பட அனைவரும் தி. மு. க வை புகழ் பாடி, முதல் அமைச்சர் ஸ்டாலினை புகழ் பாடி திராவிட ஆதரவாளர்களாக இருந்ததைக் கண்டு மனதளவில் வேதனை அடைந்தேன். 

இன்னும் பலர் தலித்திய ஆதரவாளர்களாக இருந்தனர். 

தலித்தியம், திராவிடம், தான் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த வெங்காய ராமசாமி போன்ற எல்லாமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கப் பிறந்த சித்தாந்தங்கள்.

மத்திய அரசின் பால புரஸ்கார் விருது வாங்கிய ஐயா மு. முருகேஷ் மேடையேறுவதற்கு முன் பேசும்போது "இசைப் பாடகர் கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்" என்று என்னையும் இரண்டு முறை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆனால், அவரும் திராவிட ஆதரவாளர் என்று அறிந்தவுடன் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அதன் பிறகு சில தினங்கள் கழித்து பச்சையப்பன் கல்லூரி குறித்தான whatsapp குழுமத்தில் இருந்த அனைவரையும் என்னுடைய "தமிழினத்தின் வேர்தேடி..." என்ற என் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன்.
நம் இந்த குழுமத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திராவிட, தலித்திய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்திருக்கின்றனர்.

அதில் சிலர் இந்த நம் whatsapp குழுவை விட்டு வெளியேறி விட்டனர்.

விழிப்புணர்வில்லாத அந்த திராவிட, தலித்திய, வெங்காய ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்னால் முடிந்த தூய தமிழ் தேசியக் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது மொழியை வைத்து பொழுதுபோக்குவது அல்ல, பிழைப்புவாதம் அல்ல. 

இலக்கு + இயம் - ஒரு இலக்கை எடுத்து இயம்புதல், கூறுதல்.

இலக்கியம் என்பது அந்த மொழியையும் மொழி பேசும் இனத்தையும் உள்ளன்போடு நேசிப்பதுமே ஆகும்.

இன்று இலக்கியம் என்பது தமிழர்களை அழிக்க வந்த ஆளும் திராவிட, பிராமண சக்திகளை புகழ் பாடுவதும் அவர்களின் காலடி தொழுவதுமாகிப் போனதும் தான் வேதனை.

இலக்கியம் என்பது தூய தமிழ் தேசியத்தை காக்கும் விதமாக இயங்க வேண்டும். மாறாக அந்த இனத்தின் அழிவிற்கு துணை போகும் கூட்டத்தை ஆதரிக்குமெனில், இனம் அழிந்து மொழி எப்படி வாழும்? மொழி இல்லாமல் இலக்கியத்தின் பயனென்ன?

Sunday, March 2, 2025

என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/08mibC8f0IU?feature=share



என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்

கனவு முழுதும் கலைந்து போக 
கவிஞன் மனமும் கவிதை பாட
நினைவு முழுதும் உன்னைச் சேர்க்க
நிலவும் வந்து உளவு பார்க்க 

என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்
---

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்

உறவு என்று உன்னைத்தேட
உலகம் என்று உன்னை நாட 
மலர்கள் மீது பார்வை செல்ல
மனமும் முழுதும் மகிழ்வில் துள்ள 

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்
---

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 

வெல்லம் உன்னை செல்லம் கொஞ்ச
உள்ளம் எங்கும் வெள்ளம் ஆக
கள்ளம் இல்லா உள்ளம் நீயே 
கொள்ளை அழகு கொஞ்சும் தாயே

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 
---

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்

மரணம் என்று ஒன்றும் இல்லை 
மனதில் காதல் கொண்ட பிள்ளை 
பயணம் தொடரும் கவலை இல்லை
பாசம் பொங்கும் அன்பின் எல்லை 

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்
---

Sunday, February 9, 2025

நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆங்கில மொழி

https://www.facebook.com/reel/1669755110278065?mibextid=rS40aB7S9Ucbxw6v

இந்த விழியம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. ஆங்கில மற்றும் பிற மொழிகளின் பெரும்பாலான வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை தான்.

உதாரணத்திற்கு,

அரிசி - rice 

பின்னுதல் - பின்னு - ஸ்பின்னு - spin 

பஞ்சு - ஸ்பஞ்சு - sponge

பீடு நடை (வேகமான நடை) - பீடு (வேகம்) - ஸ்பீடு - speed

தமிழ் வார்த்தைகளுக்கு முன் ஸ் என்ற உச்சரிப்பைச் சேர்த்து பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

என் அம்மாச்சி அடிக்கடி முட்டி வலிக்கிறது என்று சொல்வதற்கு பதில் கிண்ணி வலிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உருவத்தில் சின்னக் கிண்ணம் போலத்தான் முட்டி இருக்கும்.

முட்டிக்கு அதாவது கிண்ணிக்கு ஆங்கிலத்தில் knee. அதாவது, கிண்ணி -> knee. இந்த knee யில் k என்ற எழுத்தை க் என்று உச்சரிக்கக் கூடாது என்று k silence என்று கிண்ணி  யை knee யாக மாற்றியிருக்கிறான் வெள்ளைக்கார யூதன்.

இதே போல் மதுரை என்று சொல்வதற்கு பதில் மருதைக்கு போறியா? என்று கேட்க நான் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மதுரை முன்னொரு காலத்தில் மருத நிலமாக அதாவது ஐந்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமாக அதாவது விவசாய நிலமாக இருந்திருக்கிறது.

மதுரையை மதுரை என்று சொல்லத் தெரியவில்லையே என்று என் அம்மாச்சியை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் தான் புரிந்தது மதுரை அல்ல மருதை என்று.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வட்டார வழக்கு கொச்சைத் தமிழை நான் வெறுத்தேன். முனைவென்றியை முனவண்டி என்று சொல்வது, மதுரையை மருதை என்று சொல்வது, முகத்தை மூஞ்சி என்று சொல்வது போன்ற பல. ஆனால், காலப்போக்கில் இந்த வட்டார வழக்கு கொச்சைத் தமிழ், நம் வரலாற்றை உள்ளடக்கியிருக்கிறது என்று புரிய ஆரம்பித்த போது கொச்சைத் தமிழையும் நான் நேசிக்கத் தொடங்கினேன்.

என் அம்மாச்சியின் இறுதி நாட்களில் சென்னையிலிருந்து என் சொந்த ஊரான முனைவென்றிக்கு என் அம்மாச்சியை பார்க்க வந்திருந்த போது என் மகள்கள் இருவரிடமும் "நம் குல தெய்வத்தை வணங்க ஐந்து மணி நேரம் பயணம் செய்து தஞ்சாவூர், நீடாமங்கலம் அருகில் போய் தான் பார்க்க வேண்டும். பாட்டி தான் நம்மூரில் இப்போது நம் குல தெய்வம் ஆயியாராம்மன். காலில் விழுந்து வணங்குங்கள்." என்று சொல்ல காலைத் தொட்டு வணங்கி நாங்கள் மூவரும் திருநீர் வாங்கினோம்.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.