Thursday, May 8, 2025

பாட்டுப் பாடிட வா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xUHt-sF8DK4


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 09) என் மூத்த மகள் ரிதன்யாவின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துக்களை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.


இந்த மெட்டு என்னிடமிருந்து உருவான போதே இதற்கான வரிகளும் சேர்ந்தே வந்தன. அதோடு சேர்ந்து ஒரு காட்சியும் (scene) கற்பனையாக உருவானது.

அந்தக் கற்பனை இதுதான்.

ஒரு பாடகர் பாடுவதற்காக மேடையில் நின்று கொண்டிருக்கிறார். கீழே இருக்கைகளில் குழந்தைகள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யாருமே பாடலை கேட்க, கவனிக்க விருப்பம் இல்லாதவர்கள் போல தங்களுக்குள் பேசி அரட்டை அடித்துக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

அந்த குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஒரு மெட்டை அந்தப் பாடகர் ரீங்காரமிடுகிறார் (humming). அந்த மெட்டைக் கேட்டு குழந்தைகள் சிரிக்க வேண்டும், கிண்டல் அடிக்க வேண்டும், மகிழ்ச்சி அடைய வேண்டும்  என்பதற்காகவே, நகைச்சுவையை உண்டாக்கும் குரலில் அந்த மெட்டை ரீங்காரமிடுகிறார் (humming). அவர் நினைத்தது போலவே, குழந்தைகள் அவர் பாடிய மெட்டைக் கேட்டு மகிழ்கின்றனர், கிண்டல் அடிக்கின்றனர். சிரிக்கின்றனர்.

அதன் பிறகு அந்தப் பாடலை பாடுகிறார். பாடல் முடியும் வரை குழந்தைகள் முழுவதும் கேட்டு மகிழ்கின்றனர்.

இது தான் எனக்கு கற்பனையில் கிடைத்த காட்சி.

நான் ஒரு இயக்குனராக இருந்திருந்தால், இதை ஒரு விழியமாகவே தயார் செய்து வெளியிட்டிருப்பேன். ஆனால், எனக்கான தொழில் (Profession) வேறு. சரியான பொருதாரச் சூழல், சரியான காலச்சூழல் அமையும் போது நான் நினைத்தபடி இந்தக் காட்சியை ஒரு சிறு விழியமாக வெளியிடுவேன்.

என் ஒவ்வொரு மெட்டுமே எந்த வித பாடல்களின் சாயலின்றி என்னிடமிருந்து உருவாகின்றன. 

இந்த மெட்டுமே வித்தியாசமான மெட்டு தான்.

வரிகளுமே தமிழில் உள்ள எளிமையான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துத்தான் இந்தப் பாடலை நான் எழுதியிருக்கிறேன்.




பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி
பிரியமான உறவுக்கென்று

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா
---

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

பிறந்தபோது அடைந்த மகிழ்ச்சி
என்றும் தொடர வேண்டுமென்று

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா
---

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

அழகு நிலவின் அன்பு மலரின்
பிறந்தநாளை மனதில் வைத்து

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா
---

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

குறும்பு செய்யப் பிறந்த மலரே
கொஞ்சிப் பேசும் அன்பு மகளே

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா
---

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

செல்ல மகளே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே முல்லை மலரே

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 
---

Saturday, May 3, 2025

கள்ளழகர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

வரும் மே 11 மற்றும் 12 தேதிகளில் சித்திரைத் திருவிழா - கள்ளழகர் விழா தென் மாவட்டங்களான மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. 

கள் என்றால் கருப்பு. கள்ளழகர் என்றால் கருப்பு அழகர் என்று பொருள். 

அனைவரின் "வீட்டில் இருப்பவன்" என்ற வார்த்தை சுருங்கி வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்றானது. 

மெட்டு அருமையாக வந்திருக்கிறது. பாடும்போது எழுந்து நின்று ஆடிக்கொண்டே பாடியது போன்ற ஒரு உணர்வு. எனக்குள்ளே இதற்கான பின்னணி இசையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் இசை தெரியாத, இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாத இசையமைப்பாளர். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன். இசை என்ற மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன்.

என்னுடைய இரு பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. கோபி என்னிடம் என் இசை பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் இசையை கற்றுக் கொண்டோம். ஆனால், இசை உங்களுக்குள்ளேயே ஏற்கனவே இருக்கிறது." என்று.

எனக்குத் தோன்றும் இசையும் மெட்டும் பாட்டும் என்னை உறங்க விடவில்லை. நானே இசையை விட்டு அமைதியாக விலகி விட நினைத்தாலும் என்னுடைய இசையே என்னை இசைக் கருவிகள் வாசிக்க வைத்து பின்னணி இசை அமைக்கும் அளவிற்கு ஒரு முழுமை அடைந்த இசையமைப்பாளராக என்னை மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்து இல்லை.



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/MRwDLjmtzHg






வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே

அழகா கள்ளழகா அழகர் கோயிலிலே 
அழகாய் அமர்ந்திருக்கும் பாரதப் பேரரசன் 

சிறார் பள்ளி எனும் குருகுலம் நடத்தியவன்
இன்று அது மருவியதோ திருச்சிராப்பள்ளி என்றே

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்தே தான்
வானத்தை ஆராய்ந்த விஷ்ணுவே எம் தலைவன்

ஓணம் பண்டிகையின் உண்மை நாயகனே 
அரச ஆல மரம் தந்த விநாயகனே

பாம்புப் பஞ்சாங்கம் பாரதம் முழுமைக்கும் 
படைத்தவர் கள்ளழகர் போற்றுவோம் போற்றுவோமே 

வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே

Friday, April 25, 2025

மச்சக்காள விஷ்ணு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/jqTwRC_5Scw?feature=share


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

இன்று (26-04-2025) என் மறுமகன் விஷ்ணுவின் பிறந்தநாள்.



காலையிளம் கதிரே நீ வாடா
கதிரவனின் வெளிச்சம் நீ தான்டா
கதவு திறந்தால் கதிரின் வெளிச்சம்
கண்கள் திறந்தால் உந்தன் உருவம் 

அழகுமகன் அருகே நீ வாடா
அன்புடனே முத்தம் நீ தாடா
மனதில் நிறைந்த மகிழ்ச்சித் தீவே 
மாமன் தோளில் மலர்ந்த பூவே

சேட்டைகளின் அரசன் நீ வாடா
பாட்டிலுள்ள பொருளும் நீ தான்டா
மார்பில் தவழ்ந்த தங்கம் நீயே
மதிப்பில் உயர்ந்த வைரம் நீயே

தங்கை மகன் துள்ளும் மீன் வாடா
அங்குமிங்கும் குதிக்கும் மான் தான்டா
கனவில் தோன்றும் கவிதை நீயே
கணத்தில் தோன்றும் இசையும் நீயே

பார்வை படும் தூரம் நீ தான்டா
பூக்கள் தரும் தேனும் நீ தான்டா
மகிழ்ச்சி பொங்க நீயும் வாழ்வாய்
பிறந்தநாளில் நீடு வாழ்வாய்

Sunday, April 13, 2025

வெங்காய ராமசாமியை புகழ்ந்து எழுதுபவர்கள் கவனத்திற்கு

திருக்குறளை மலம் என்று சொல்லி தமிழர்களுக்கு பல தீமைகளை செய்து தமிழர்களிடையே சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்த சாதி ஒழிப்பு என்று போலியாக வேசம் போட்ட தமிழனல்லாத வெங்காய ராமசாமி மட்டுந்தான் பகுத்தறிவு வாதியா?

20,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உருவாக்கி நமக்கு பேசக் கற்றுக் கொடுத்த பேச்சியப்பனாகிய நம் முப்பாட்டன் விஞ்ஞானியான சிவன் தான் முதல் பகுத்தறிவாளர். 

இனியாவது தமிழரின் உண்மையான ஆன்மீக வரலாறை, தூய தமிழ் தேசியத்தைத் தெரிந்து கொண்டு உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். 

நம்மை அழிக்க வந்த திராவிடமும் வெங்காய ராமசாமி நாயுடுவும் ஆரியமும் சேர்ந்துதான் நம் தமிழ் மண்ணில் நிலப்பிரபுக்களாக வாழ்ந்த பள்ளர்களை பறையர்களின் நிலங்களை பிடுங்கி அவர்களை தினக்கூலிகளாக்கி தீண்டாமையை உண்டாக்கி சாதி ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி நம் மண்ணின் மைந்தர்களான பாள்ளர்களை பறையர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் மூல மதமான ஆசீவகத்தை அழித்து அவர்களை கிருத்துவ இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறச்செய்து தமிழர்களின் பெரும்பான்மையை குறைத்து இன்று வரை தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வைத்திருப்பதை உணர்கிறீர்களா? அந்த ஈனப் பிறவி வெங்காய ராமசாமி செய்த சதித்திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்து கொண்டு எழுதுங்கள். நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். தவறான கருத்துகளை பரப்பி விடக் கூடாது என்பதில் தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

Friday, March 14, 2025

பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...

நான் கடந்த 2023 ஜனவரி முதல் வாரம், கவிஞரும் நண்பருமான தம்பி வாலிதாசனால் அழைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி கவிதை பயிற்சிப் பட்டறையில் ஒரு பார்வையாளனாக என் இளைய மகள் நிறைமதியுடன் கலந்துகொண்டேன். கலந்து கொண்ட நான்கு மணி நேரங்களில் அங்கு மேடையில் பேசிய ஐயா மு. முருகேஷ் உட்பட அனைவரும் தி. மு. க வை புகழ் பாடி, முதல் அமைச்சர் ஸ்டாலினை புகழ் பாடி திராவிட ஆதரவாளர்களாக இருந்ததைக் கண்டு மனதளவில் வேதனை அடைந்தேன். 

இன்னும் பலர் தலித்திய ஆதரவாளர்களாக இருந்தனர். 

தலித்தியம், திராவிடம், தான் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த வெங்காய ராமசாமி போன்ற எல்லாமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கப் பிறந்த சித்தாந்தங்கள்.

மத்திய அரசின் பால புரஸ்கார் விருது வாங்கிய ஐயா மு. முருகேஷ் மேடையேறுவதற்கு முன் பேசும்போது "இசைப் பாடகர் கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்" என்று என்னையும் இரண்டு முறை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆனால், அவரும் திராவிட ஆதரவாளர் என்று அறிந்தவுடன் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அதன் பிறகு சில தினங்கள் கழித்து பச்சையப்பன் கல்லூரி குறித்தான whatsapp குழுமத்தில் இருந்த அனைவரையும் என்னுடைய "தமிழினத்தின் வேர்தேடி..." என்ற என் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன்.
நம் இந்த குழுமத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திராவிட, தலித்திய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்திருக்கின்றனர்.

அதில் சிலர் இந்த நம் whatsapp குழுவை விட்டு வெளியேறி விட்டனர்.

விழிப்புணர்வில்லாத அந்த திராவிட, தலித்திய, வெங்காய ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்னால் முடிந்த தூய தமிழ் தேசியக் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது மொழியை வைத்து பொழுதுபோக்குவது அல்ல, பிழைப்புவாதம் அல்ல. 

இலக்கு + இயம் - ஒரு இலக்கை எடுத்து இயம்புதல், கூறுதல்.

இலக்கியம் என்பது அந்த மொழியையும் மொழி பேசும் இனத்தையும் உள்ளன்போடு நேசிப்பதுமே ஆகும்.

இன்று இலக்கியம் என்பது தமிழர்களை அழிக்க வந்த ஆளும் திராவிட, பிராமண சக்திகளை புகழ் பாடுவதும் அவர்களின் காலடி தொழுவதுமாகிப் போனதும் தான் வேதனை.

இலக்கியம் என்பது தூய தமிழ் தேசியத்தை காக்கும் விதமாக இயங்க வேண்டும். மாறாக அந்த இனத்தின் அழிவிற்கு துணை போகும் கூட்டத்தை ஆதரிக்குமெனில், இனம் அழிந்து மொழி எப்படி வாழும்? மொழி இல்லாமல் இலக்கியத்தின் பயனென்ன?

Sunday, March 2, 2025

என் விழியில் பூவாக - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/08mibC8f0IU?feature=share



என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்

கனவு முழுதும் கலைந்து போக 
கவிஞன் மனமும் கவிதை பாட
நினைவு முழுதும் உன்னைச் சேர்க்க
நிலவும் வந்து உளவு பார்க்க 

என் விழியில் பூவாக
நீ மலர்கிறாய்
என் செவியில் தேனாக
நீ பாய்கிறாய்
---

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்

உறவு என்று உன்னைத்தேட
உலகம் என்று உன்னை நாட 
மலர்கள் மீது பார்வை செல்ல
மனமும் முழுதும் மகிழ்வில் துள்ள 

கண் திறந்து பார்த்தாலே
எதிரில் நிற்கிறாய்
என் வானில் நிலவாக 
நீ தோன்றினாய்
---

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 

வெல்லம் உன்னை செல்லம் கொஞ்ச
உள்ளம் எங்கும் வெள்ளம் ஆக
கள்ளம் இல்லா உள்ளம் நீயே 
கொள்ளை அழகு கொஞ்சும் தாயே

பால் வண்ணம் மாறாமல்
பாசம் கொள்கிறாய்
வேல் விழியால் என் நெஞ்சை 
குத்திச் செல்கிறாய் 
---

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்

மரணம் என்று ஒன்றும் இல்லை 
மனதில் காதல் கொண்ட பிள்ளை 
பயணம் தொடரும் கவலை இல்லை
பாசம் பொங்கும் அன்பின் எல்லை 

என் இதயம் முழுதாக 
நீ நிறைகிறாய் 
என் தேசம் எங்கெங்கும்
நீ விரைகிறாய்
---

Sunday, February 9, 2025

நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆங்கில மொழி

https://www.facebook.com/reel/1669755110278065?mibextid=rS40aB7S9Ucbxw6v

இந்த விழியம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. ஆங்கில மற்றும் பிற மொழிகளின் பெரும்பாலான வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை தான்.

உதாரணத்திற்கு,

அரிசி - rice 

பின்னுதல் - பின்னு - ஸ்பின்னு - spin 

பஞ்சு - ஸ்பஞ்சு - sponge

பீடு நடை (வேகமான நடை) - பீடு (வேகம்) - ஸ்பீடு - speed

தமிழ் வார்த்தைகளுக்கு முன் ஸ் என்ற உச்சரிப்பைச் சேர்த்து பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

என் அம்மாச்சி அடிக்கடி முட்டி வலிக்கிறது என்று சொல்வதற்கு பதில் கிண்ணி வலிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உருவத்தில் சின்னக் கிண்ணம் போலத்தான் முட்டி இருக்கும்.

முட்டிக்கு அதாவது கிண்ணிக்கு ஆங்கிலத்தில் knee. அதாவது, கிண்ணி -> knee. இந்த knee யில் k என்ற எழுத்தை க் என்று உச்சரிக்கக் கூடாது என்று k silence என்று கிண்ணி  யை knee யாக மாற்றியிருக்கிறான் வெள்ளைக்கார யூதன்.

இதே போல் மதுரை என்று சொல்வதற்கு பதில் மருதைக்கு போறியா? என்று கேட்க நான் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மதுரை முன்னொரு காலத்தில் மருத நிலமாக அதாவது ஐந்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமாக அதாவது விவசாய நிலமாக இருந்திருக்கிறது.

மதுரையை மதுரை என்று சொல்லத் தெரியவில்லையே என்று என் அம்மாச்சியை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் தான் புரிந்தது மதுரை அல்ல மருதை என்று.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வட்டார வழக்கு கொச்சைத் தமிழை நான் வெறுத்தேன். முனைவென்றியை முனவண்டி என்று சொல்வது, மதுரையை மருதை என்று சொல்வது, முகத்தை மூஞ்சி என்று சொல்வது போன்ற பல. ஆனால், காலப்போக்கில் இந்த வட்டார வழக்கு கொச்சைத் தமிழ், நம் வரலாற்றை உள்ளடக்கியிருக்கிறது என்று புரிய ஆரம்பித்த போது கொச்சைத் தமிழையும் நான் நேசிக்கத் தொடங்கினேன்.

என் அம்மாச்சியின் இறுதி நாட்களில் சென்னையிலிருந்து என் சொந்த ஊரான முனைவென்றிக்கு என் அம்மாச்சியை பார்க்க வந்திருந்த போது என் மகள்கள் இருவரிடமும் "நம் குல தெய்வத்தை வணங்க ஐந்து மணி நேரம் பயணம் செய்து தஞ்சாவூர், நீடாமங்கலம் அருகில் போய் தான் பார்க்க வேண்டும். பாட்டி தான் நம்மூரில் இப்போது நம் குல தெய்வம் ஆயியாராம்மன். காலில் விழுந்து வணங்குங்கள்." என்று சொல்ல காலைத் தொட்டு வணங்கி நாங்கள் மூவரும் திருநீர் வாங்கினோம்.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

Tuesday, December 24, 2024

இராவணன் கண்ட சிந்தாமணி மருத்துவம் - சித்த மருத்துவத்தின் முன்னோடி

நன்றி: இணையம்






சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

பெரும் சிவ பக்தரான ராவணன், இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்த அரசர். இவரின் இயற்பெயர் சிவதாசன் நிலவழகிப் பாண்டியன். இவரின் பிற பெயர்கள் தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேசுவரன், திரிலோக அதிபதி.

இசை, வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் முதலான பத்து கலைகளில் நிகரற்று விளங்கினார். 27 நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் மருத்துவ நூல்களும் முக்கியமானவை. மிகச்சிறந்த மருத்துவராகவும் நமக்கு பல மருத்துவ குறிப்பு களையும் அவர் தந்துள்ளார்.

ராவணன் வைத்திய முறையை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம்.

1. மக்கள் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நடைமுறை (பாட்டி) வைத்தியம்.

2. சித்த மருத்துவம்.

கோமாவில், அதாவது ஆழ்நிலை மயக்கத்தில் இருப்பவர்களை சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகள் இல்லை. ஆனால் ராவணனின் மருத்துவத்தில் அதற்கு தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இவரின் மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு.

ராவணன் தன் மனைவி மண்டோதரி கருவுற்றிருக்கும் சமயத்தில், ‘பெண்கள் கருவுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம், குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அதனை நூலாக இயற்றியுள்ளார்.

பதினோறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பெரும் நோயினால், பல குழந்தைகள் இறந்து போயின. பல மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், குழந்தை மருத்துவம் தொடர்பான பல மருத்துவ நூல்களை ஆராய்ந்தனர். அப்போது ‘ராவண குமார தந்த்ரா’ என்ற நூலில் கிடைத்த மிகப்பழைய மருத்துவ சிகிச்சையை கையாண்டனர். அம்மருத்துவ முறையில் கூறப்பட்டபடி மருந்துகளை அரைத்துக் கொடுத்தனர். அம்மருந்துகளை உண்ட குழந்தைகளும் முழுமையாக குணமடைந்தனர்.

இம் மருத்துவநூல் குழந்தை களுக்காக, ராவணனால் எழுதப் பட்டதால் அவரது பெயரிலேயே ‘ராவண குமார தந்த்ரா’ என்று அழைத் தனர். இதற்கு “ராவண பிரக்தவல சூத்திரா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நிகழ்வினை ‘David Gordon White’ என்பவர், தன்னுடைய ‘The Alchemical Body Siddha Traditions in india’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களும், பிறப்புறுப்பில் ஏற்படும் புண்களும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் ‘அர்க்க பரிக் ஷா’ என்ற நூல், மனித உடம்பிலுள்ள நரம்புகளை (துடிப்பு பரிசோதனை விவரம்) பற்றிய சிகிச்சை முறைகளை கூறும் ‘நாடி பரிக் ஷா’, ‘நாடி விஜன்னா’ ஆகிய நூல்கள், மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் (சிக்கலான நோய்களுக்கான ஒவ்வொரு மூலிகையின் பயன்பாடு மற்றும் அளவு மற்றும் குணப்படுத்துதல்) கூறும் “அர்க்க சாஸ்திரா” என்ற நூல், காயங்களை உடனடியாக குணப்படுத்தக்கூடிய சிந்துரம் மருத்துவம், அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகள், உட்புற பயன்பாட்டிற்காக நறுமண தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகள் பற்றிய “அர்க்க பிரகாஷா” என்ற நூல் என பல மருத்துவ நூல்களையும் ராவணன் படைத்துள்ளார்.

அவர் தனது அறிவார்ந்த படைப்பு களின் சிறந்த தொகுப்பான ‘ராவண சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.

மேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். அவற்றை நேரிடையாக எடுத்துக்கொண்டால் அம்மருந்தின் தன்மையால் அவற்றின் மீது வெறுப்பும், குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் என்பதால் அம்மருந்துகளை உணவில் சேர்த்து உண்ண விழைகிறார். மூன்று பொருட்களையும், அவற்றுடன் ஐந்து வேர்களையும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இதனை “தூணபகா” என்பர். அதாவது “து” என்றால் மூன்று, “பகா” என்றால் ஐந்து. அம்மருந்து பொருள் வேறொன்றுமல்ல தமிழர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் ‘கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி’ ஆகும். இதனை ‘சிறுபஞ்சமூலம்’ என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (லவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, நம் உணவில் சேர்க்கப்படும் சீரகம். (சீர்+அகம்) அகத்தை சீராக வைப்பதற்கு சீரகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக அஜீரண கோளாறுகள், செரிமானத் தடை போன்ற பிரச்சினைகளுக்கு சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.

என் அம்மாவின் குல தெய்வம் என் ஊர் முனைவென்றியில் உள்ள வீரபத்திர சாமியாகிய இராவணன் தான். 

என் ஊர் முனைவென்றியில் வீரபத்திர சாமியை சிவனின் இன்னொரு வடிவமாகத்தான் வணங்குகின்றனர். 

இராவணன் தான் வீரபத்திரன் என்பது என் ஊரில் உள்ள பலருக்கும் புதிய செய்தி. இதனை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காலப்போக்கில் உண்மை புரியும்.

Tuesday, October 15, 2024

செயற்கை மழை மற்றும் Red Alert நாடகங்கள் - இல்லுமினாட்டி யூத பிராமண பிண்டாரிகளின் அட்டூழியங்கள்

2015 ஆம் ஆண்டு யூத பிராமண ஜெயலலிதாவால் சென்னையில்  உண்டாக்கப் பட்ட செயற்கை வெள்ளம். - https://youtube.com/shorts/_bg4Xz3tYp0?si=fDKG1BbZ_GztWcEW









இந்த ஆண்டும் 2+0+2+4 = 8 கிருஷ்ணனை குறிக்கும் ஆண்டு.

தன்னுடைய முன்னோனான சகுனியை மகாபாரதப் போரில் கொன்ற கிருஷ்ணனை பழிவாங்கும் நோக்கில் மழைக்காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இயற்கை மழை என்ற பெயரில் செயற்கை மழையை உண்டாக்கி red alert என்று மக்களை துன்புறுத்துகின்றனர் ஐயர், ஐயங்கார் எனும் இல்லுமினாட்டி யூத பிராமண பிண்டாரிகள்.

காலம் காலமாய் தமிழர்களை பழிவாங்க, அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மன நோயாளிகள் இந்த யூத பிராமண பிண்டாரிகள். 

இது குறித்து இந்த ஆண்டு கிருஷ்ணனின் ஆண்டு என்பதால் கிருஷ்ணனின் வம்சாவழிகளான நம்மை துன்புறுத்த டிசம்பரில் அதிக மழை பொழிய வைப்பார்கள் என ஐயா பாண்டியன் ஏற்கனவே பலமுறை எச்சரித்திருந்தார். இப்போது அக்டோபர் மாதமே யூத பிராமண பின்டாரிகள் செயற்கை மழையை உண்டாக்கி நம்மை துன்புறுத்தி, சிரித்து மகிழத் துவங்கி விட்டனர்.

அறிவியலின் முன்னோடியான நம் தமிழர்கள் மற்றும் தமிழ் பாரம்பரியம் நீடூழி வாழ வேண்டுமென நாம் நம் சித்தர்களை மனமுருகி வேண்டுவோம். 

🙏

Tuesday, July 30, 2024

கத்துங்கிளி நிறைமதி

எங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கு இன்று ( 31-07-2024) பிறந்தநாள் - https://www.youtube.com/shorts/MKxWXnrboV4



தத்தையிவள் முத்துமகள்
தத்தித்தத்தி நடப்பாள்
கத்துங்குயில் வித்தைகளை
கற்றுப் புகழ் படைப்பாள்
முத்துதிரும் அத்தைமகள்
பெத்தெடுத்த சிறப்பாய்
எத்திசையுங் கத்துங்கிளி 
முத்துமணி பறப்பாள் 

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி
நெஞ்சமதை மயக்கும்
கொஞ்சிக் கொஞ்சித் துஞ்சுமெழில்
நெஞ்சைத் துளைதுளைக்கும்
மஞ்சள் வெயில் கொஞ்சும் குயில்
கெஞ்சிக் கெஞ்சி அழைக்கும்
நெஞ்சமதில் மஞ்சமிட்டு 
மங்கையிவள் உறக்கம் 

கண்ணெதிரே கண்மணியே
பெண் குழந்தை ஜொலிப்பாள்
மண்ணுலகில் என்னுலகாய்
என் மகளே இருப்பாள்
என்னெதிரே கண்கள்வழி 
பெண்ணிலவே விழிப்பாள்
பொன்னுதிரும் புன்னகையே
இன்பமதில் திளைப்பாள்