Friday, April 22, 2022

மறுமகன் விஷ்ணுவின் 11வது பிறந்தநாள் - 26-04-2022 (புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்)

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/5aQsAs0Q6SM


11வது பிறந்தநாள் வாழ்த்து (26-04-2022)
====================================

பெயர்: விஷ்ணு சபரீஷ் 
பெற்றோர் பெயர்: நே. சுரேந்தர் - சோபனா 
சொந்த ஊர் - சிவகங்கை 
இருப்பு - பரமக்குடி

என் மறுமகன் விஷ்ணு சபரீஷ் தன்னுடைய 11வது பிறந்தநாளை தன்னுடைய இல்லத்தில் பரமக்குடியில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கிறார். அவரை அப்பா நே. சுரேந்தர், அம்மா சோபனா, தங்கை பிரகதி, தாய்மாமன்  முனைவென்றி நா. வேல்முருகன், அத்தை ஆனந்தி, மாமன் மகள்கள் ரிதன்யா, நிறைமதி மற்றும் அம்மப்பா த. நாகராசன், அம்மம்மா கமலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.




பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி கூட்டத்திலே
பக்கம்வந்து போனவனே 
புத்தம்புது தோட்டத்திலே
புதுமலராய் பூத்தவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

எந்நாளும் சந்தோசமாய்
எங்கவீட்டு மருமகனே
சொன்னாலும் பாட்டுக்குள்ளே 
சொக்கும் முத்தம் தருபவனே

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

எட்டியோடும் குட்டிப்பையா 
எங்க வீட்டு சுட்டிப்பையா 
பட்டிதொட்டி கலகலக்கும் 
நம்ம பாட்டு தூள் பறக்கும்

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

துள்ளியோடும் செல்லக்குட்டி
பள்ளியோடும் வெல்லக்கட்டி
வெள்ள மனம் நல்ல குணம்
விஷ்ணு எங்க செல்லக்குட்டி 

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
ஏ ஏ பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

Saturday, April 16, 2022

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

நான் பாடிய பாடலை கேட்டு மகிழ, பார்த்து மகிழ, பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

இந்த பாடலின் பல இடங்களில் சந்தம் துள்ளி விளையாடியிருக்கிறது. 

ஆங்கில வார்த்தையான "Orion" என்பது நம்முடைய தமிழின் ஓரையோன் என்ற வார்த்தையிலிருந்தே வந்திருக்கிறது. ஓரையோன் என்பது உலகின் முதல் சித்தனான சிவனையே குறிக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களும் விஞ்ஞானிகளுமான கீழ்க்கண்ட சித்தர்களை இந்த தமிழ் சித்திரைப் புத்தாண்டில்  நினைவு கூறவேண்டும். 

1. சிவன்
-------------

சித்தரான சிவன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், இரும்பை உருக்கி காய்ச்சும் தொழில்நுட்பத்தை உலகிற்கு முதன்முதலில் உருக்கு வேதமென்று (ரிக் வேதம்) நமக்களித்தவர் சிவன்தான். ஆல மரத்தடியில் அமர்ந்தே சிவன் போதித்தார். அதனாலேயே, நம்முடைய கோயிலுக்கு ஆலயம் (ஆல் + அயம்) என்ற பெயரும் வந்தது.

2. முருகன் 
----------------

வேலை தன்னகத்தே வைத்த முருகன் வேல் + தன் -> வேந்தன் என ஆரம்ப காலகட்டத்தில் அழைக்கப்பட்டு பின்னர் அரசாட்சி செய்யும் மன்னர்களுக்கும் வேந்தன் என்ற பெயர் பொதுவானது.

சித்தரான முருகன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே. குமரிக்கண்ட அழிவின்போது, நம் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தின் கதிர்காமம் வந்து அங்கே முருகன் முதன்முதலில் விவசாயத்தைத் தொடங்கி வைத்தார். இனத்தைப் பெருக்க இரும்புச் சத்து மிகுந்த முருங்கை மரத்தின் இலைகளை, காய்களை உண்ணச் சொன்னார். தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற படைத்தளபதி என்றபோதும் கொல்லாமையை போதித்தவர். மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தியவர். சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக அறுகோண நட்சத்திர வழிபாட்டை (star of david) உருவாக்கியவர்  முருகனே.

3. இராவணன் (இரவு + வானன்) 
-------------------------------------------------

சித்தரான இராவணன் நமக்கு அருளியவை அளப்பரியவை. அவற்றில், புஷ்பக விமானம் என்ற விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் இவரே. ஆனால், இராவணன் கண்டறிந்த விமானம் சார்ந்த தொழில்நுட்பத்தை ரைட் சகோதரர்கள் தான் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

4. கும்ப கரணன்
--------------------------

சிவலிங்க வழிபாட்டிற்கு மாற்றாக கும்ப வழிபாட்டை உருவாக்கியவர்  கும்ப கரணனே.

5. இந்திரன்
------------------

லெகிமம் கரிமம் அணிமம் மகிமம் வியாபியம் என்ற பஞ்சமா சித்திகள் அதாவது ஐந்திறன் -> இந்திரன், ஐந்திற சித்தன் -> இந்திர சித்தன் -> இந்திரஜித் -> இந்திரசித். ஆக இந்திரனும் இந்திரஜித்தும் ஒருவனே. அவன் இராவணனின் மகனே.

சக்கரத்தைக் கண்டறிந்தவர் இந்திரனே. தவ வலிமையினால் உடலை இலகுவாக்கி லெகிமம் சக்தியின் மூலம் மேகங்களுக்கு மேலே பறந்து மழை வரப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வாராம் இந்திரன். அதனாலேயே இந்திரலோகம் மேகங்களுக்கிடையே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

6. கிருஷ்ணன்
----------------------

நல்ல கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் -> கிருட்டிணன் -> கிருஷ்ணன்.

7. தர்மன், பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தரைபதி என்ற திரௌபதி (பாஞ்சாலி)

8. விஷ்ணு என்ற திருமால்
-----------------------------------------

அனைவர் வீட்டிலும் வசிப்பவன் -> வீட்டினன் -> வீ ட்ணு -> விஷ்ணு.

விஷ்ணு விண்ணாராய்ச்சி செய்த சித்தர். அவர் கண்டறிந்த புவியீர்ப்பு விசை குறித்தான பல அறிவியல் உண்மைகள் (e=mc2) நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கண்டுபிடித்ததாக உண்மைகள் மறைக்கப்பட்டன.

9. பிள்ளையார் மற்றும் முருகனின் ஏழு சப்த கன்னிகள்
------------------------------------------------------------------------------------------

பிள்ளையார் ஆசீவத்தைக் குறிக்கும் ஒரு உருவகக் கடவுளே.


மேற்ச்சொன்னவற்றை முடிந்தவரை இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். தமிழர் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.

தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி

ஆதிசிவனாய் பாதியுமையாய்
சோதியில் தானே - அப்பன்
ஆதியில் தோன்றி நீதியும் போதித்த
தத்துவ ஞானி
போதிமரமாய் ஆலமரத்தில்
போதித்த தெக்கன் - அவனே
சித்தமு மொத்தமும் சிந்தையில் வைத்த
சிவந்த முக்கண்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரும்பை உருக்கும் தொழிலின் நுட்பம்
அறிந்த சிவன் - அதனை
உருக்கு வேதமாய் தொகுத்தே அளித்த
அறிவின் மகன்
பிரம்பை எடுத்த குருவின் வடிவம்
தக்சினா மூர்த்தி - உனையே
மறந்த பிறப்பை சிறந்ததென்று 
சொல்லாது கீர்த்தி

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

நீரூழியில் கடல் பேரலையில் அழிந்த
குமரிக்கண்டம் - அங்கே
அழிவின் விளிம்பில் தவித்த மக்களை
காத்த கந்தன்
கதிர்காமம் தஞ்சம் விவசாயம் செய்த
கதிர்வேலன் - இவன்
முருங்கை வைத்து இனத்தை வளர்த்த
மொழிக்காவலன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

தற்காப்புக்காக போர்க்கலைகள் கற்ற 
படைத்தளபதி - சித்தன்
முற்போக்காக அகிம்சையை போதித்த
மக்கள் அதிபதி 
முருக னழகன் கடம்பன் கந்தன்
வேல் தன் - வேந்தன்
அறுபடைகளில் மருகி உருகும் மக்கள்
பாலகன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்த
இரவு வானன் - இராவணன்
இசையை அறிந்து மொத்தமும் கற்ற
யாழின் பாணன்
பறப்பதற்கு புஷ்பக விமானம் கண்டிட்ட
சித்தன் - தமிழர்
உறவின் நிலங்கள் உரிமை காத்த
சிவனின் பக்தன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

கருத்தினன் கிருட்டினன் கிருஷ்ணன் மன்னன்
அழகுக் கண்ணன் - எங்கள் 
மக்களைக் காக்க சகுனியைக் கொன்ற
இனக்காவலன்
விவசாயம் செழிக்க பாண்டியர் ஐவர்
பக்கத்தில் நின்றான் - பாரதப்
போரினில் குறவர் கௌரவர் தோற்றிடத் தானே
உதவி செய்தான் 

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

திருமாலின் பெருமை மறந்தாருக் கில்லை
அருமை பெருமை - திருச்
சிறார் பள்ளியில் குருகுலச் சித்தர்கள் தந்த
விஷ்ணுவின் கருணை
ஆலமர மெங்கும் அரசமர மெங்கும்
பிள்ளையார் வைத்தான் - அவனே
ஆசீவகச் சித்தன் பாம்புப் பஞ்சாங்கம் தந்த 
பாரத ராசன்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்

இன்னும் சித்தர்கள் பலர் வாழ்த்திட்ட
எங்கள் குமரிக்கண்டம் - அவர்கள்
சிறப்பைப் பாடியே குதித்து ஆடியே
கும்பிட வந்தோம்
மண்ணில் சித்திரைத் தமிழர் புத்தாண்டை
நாமும் கொண்டாடுகிறோம் - எங்கள்
மண்ணில் சித்தர்கள் செய்த அற்புதங்களையே
நினைத்தே வாழ்வோம்

சித்திரை மாதம் சித்தர்கள் பாதம்
சித்திரை மாதம் - மண்ணில்
உத்தமர் வாழ சத்தியம் ஆள
உத்தரவாதம்
கத்தியு மந்த இரத்தமுந் தந்த
முத்திய கலி - போய்
சித்தமு மந்த முக்தியுந் தந்த 
சத்திய வழி

Monday, February 28, 2022

எனக்காகப் பிறந்தவள்

விழியத்தைக் காண - https://www.youtube.com/watch?v=I8c_CJBBwtA




எனக்காகப் பிறந்தவளே
என் மனதில் நிறைந்தவளே
உனக்காக நானிருப்பேன்
உன்னுள்ளே நிறைந்திருப்பேன்

ஆண்குழந்தை நமக்கில்லை
ஆனாலும் குறைவில்லை
எனையுன் பிள்ளையென
ஏற்றுக்கொண்ட என்னுயிரே

எனக்குத்தான் பசியென்றால்
துடித்தே தான் சமைக்கின்றாய்
கொஞ்சமெனக்குக் காய்ச்சலென்றால்
நெஞ்சந்தான் பதறுகின்றாய்

சண்டை போட்டுத் திட்டினாலும்
சமாதானம் செய்வதற்கு
முதலில் வந்து நானழுவேன்
பிறகுனையே சிரிக்க வைப்பேன்

இன்றுனக்குப் பிறந்தநாள்
எனக்கின்று சிறந்த நாள்
மனையாளே இனியவளே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

Tuesday, January 25, 2022

வெள்ளையாடை தேவதைகள்

கவி பாடிய காணொளி - https://youtu.be/hI4ZhReRR6Y


வெள்ளைநிறச் சீருடையில் 
வந்தாளெங்கள் தேவதையே
முல்லைமலர் சிரிப்புடனே
முகமெல்லாம் புன்னகையே

உணவும் மறந்து உறக்கம் மறந்து
உயிர்கள் காத்திடும் தேவதைகள்
கனவும் கலைந்து கணவன் மறந்து
கருணை பொங்கும் காவியங்கள்

குடும்பம் மறந்து குழந்தை மறந்து
புன்னகை செய்யும் தாதியர்கள்
கவலை மறந்து கண்ணீர் மறைத்து
நோய்கள் விரட்டும் தூதுவர்கள்

கொட்டும் மழையை அடிக்கும் வெயிலைக்
கடந்தே செல்லும் காவலர்கள்
சொட்டும் கண்ணீர் உடல்வலி தாங்கி
பிணிகள் போக்கும் செவிலியர்கள்

ஊரும் அடங்க வீட்டில் முடங்க
கொடும்நோய் தீர்க்கும் ஓவியங்கள்
சிறுநீர் அடக்கி அமர மறந்து
நடந்தே திரியும் நல்லுள்ளங்கள்

உதிரப்போக்கும் கால்கள் வழிய
உயிரும் உருக உதிரமும் உருக
விடுப்பென்பதே கனவில் மட்டும்
மூன்றுநாள் கடந்தும் ரத்தம் சொட்டும்

உன்னைப்போல செவிலியர் பார்த்தால்
அன்னையைப் பார்த்தது போலாகும்
கண்ணைமூடி விசமும் குடித்து
உன் கை பட்டால் நோய்தீரும்

மண்ணில் வாழும் கடவுளையெல்லாம்
உன்றன் உருவில் காண்கின்றேன்
எல்லையில்லா ஆனந்தம் பெருகி
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்


Friday, January 14, 2022

வயலோடு உறவாடி... புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளுக்கான காணொளி - https://youtu.be/OfQaLfJHcQ4

என்னிடமிருந்து வெளிவந்த புத்தம்புது மெட்டு இது. நான் ஒரு ஆகச் சிறந்த பாடகனுமில்லை. எனக்கு இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கவிதைகளை, பாடல்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். சிறுவயதில் என் அம்மா, அப்பா சொல்லித் தந்த தமிழ், சிறுவயதில் பாடசாலை வகுப்பறைகளில் நான் உன்னிப்பாக கவனித்தவை இவை மட்டுமே தமிழ் மீது தீராத காதலை உண்டாக்க வைத்தவை. மற்றபடி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நான் கணினித்துறையில் படித்தமையால் தமிழை தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது. 

இருந்தபோதிலும் சமீப காலமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, இணையம் வழியே தூய தமிழ் தேசியம் குறித்த ஆராய்ச்சிக் காணொளிகள், கட்டுரைகள் போன்றவற்றை படித்ததன் விளைவாய் கவனித்ததன் விளைவாய், நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன் "நாம் ஆரம்ப காலகட்டத்தில் நம்முடைய கவிதைகளில், கவிதை நூல்களில் தவறான வரலாற்றை முன்னுதாரணமாக பல இடங்களில் உவமையாக எழுதியிருக்கிறோம். இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது. உவமையாகச் சொல்ல வேண்டிய இடங்களில் தமிழர் சார்ந்த உண்மை வரலாற்றை மட்டுமே முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டும். ஒரு போதும் நாம் சிறுவயதில் படித்த தமிழர்களைப் பற்றிய தவறான, கட்டுக் கதையான வரலாற்றை எந்த இடத்திலும் என்னையறிமல் கூட என் கவிதைகளில், பாடல்களில், பதிவுகளில் வெளிவந்து விடக்கூடாது, எழுதக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

நம்மிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில் அதாவது ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்தால் போதும். அந்த வார்த்தைகளே தனக்குள் ஒரு மெட்டை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு நம்மை துள்ளலிசையோடு மெல்லிசையோடு பாட வைத்து விடும். அப்படித்தான் இந்தப் பாடலும். 

நான் கவிதை எழுதத் துவங்கிய 2004 ஆண்டு தொடங்கி என்னுடைய கவிதைகளை எழுதும் போதும் சரி, எழுதி முடித்தவுடன் மனதிற்குள் வாசிக்கும் போதும் சரி, என்னுடைய பெரும்பாலான கவிதைகள் பாடல்களாக ஏதோவொரு மெட்டுடன் ஒலித்ததை நான் கவனித்தே வந்திருக்கிறேன். அன்று முதல் கடந்த ஆண்டு வரை "நாம் எழுதும் கவிதைகளும் சரி. நமக்கு கிடைக்கும் மெட்டும் சரி, படிக்கும் வாசகர்களாலும் அதே மெட்டை பாடலாக பாடி உணர முடியும்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 அன்று என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடலை குரல் பதிவாக பகிரியில் (whatsapp) என் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். 

மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/04/blog-post_25.html

நான் B.Sc (C.S) படிக்கும்போது என்னோடு எமனேஸ்வரத்திலிருந்து B.Com படித்த என் நண்பர் சபரீஷ் பாண்டியன் பதில் அனுப்பியிருந்தார் "நீ அனுப்பியதை நாங்களாவே வாசித்திருந்தால் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும். ஆனால், நீ குரல் பதிவில் அனுப்பியதை கேட்ட பிறகு தான் அந்த மெட்டோடு கேட்கும் பாடல் வரிகள் இனிமையாகவும் கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் ".

இவரின் பதிலை கேட்ட பிறகுதான் "நமக்குக் கிடைத்த மெட்டோடு பாடலை நாமோ அல்லது யாரோ ஒருவரோ பாடிக் காட்டினாலோ தான் வாசகர்களுக்குப் புரிகிறது. அவர்களாகவே வாசித்தால் பெரும்பான்மையோருக்கு அந்த மெட்டு புலப்படுவதில்லை. அவர்களுக்கு பாடிக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்" என்ற பேருண்மையை புரிந்து கொண்டேன். 

இந்தக் காணொளி என்னுடைய இரண்டாவது காணொளி. என்னுடைய முதல் காணொளி என் இரண்டாவது மகள் நிறைமதிக்கு எழுதிய பாடல் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/07/blog-post.html

ஒரு இசையமைப்பாளரின் அடிப்படைத் திறமையே புதிது புதிதான மெட்டுக்களை உருவாக்குவது தான். குறிப்பிட்ட உணர்விற்கேற்ப குறிப்பிட்ட மெட்டு தான் பாடலுக்கு அடிப்படை. அதன் பிறகுதான், பாடல் வரிகள், பக்க வாத்தியங்கள், துணை இசைக்கருவிகள் அனைத்தும். மெட்டு மக்களுக்குப் பிடித்திருந்தால், அந்தப் பாடல் வெற்றியடைகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.

கடந்த செப்டம்பர் 19, 2021 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. பாடல் முதலில் வெளிவந்ததா மெட்டு முதலில் வெளிவந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மெட்டோடு சேர்ந்தே பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெளிவந்தன.

இந்தப் பாடல் உருவான விதத்தை இங்கு சொல்வது மிகவும் விறுவிறுப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இங்கு தொடர்ந்து சொல்கிறேன்.

கடந்த செப்டம்பர் 18, 2021 சனி மாலை 3.30 மணிக்கு மஞ்சள்பட்டினத்தில் இருக்கும் என் வீட்டிலிருந்து என் இரு சக்கர வாகனத்தில்  (bike) முனைவென்றிக்கு என் அம்மாச்சிக்கு (அம்மம்மா) சாப்பாடு கொடுத்து விட்டு நெல் விதைத்த வயலையும் பார்த்தது விட்டு வரலாம் என கிளம்பி ஊர் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே உள்ள எங்கள் வயலை பார்த்தேன். அப்போது தான் நெல் விதைத்திருந்தோம். பயிர்கள் முளை விட்ட நிலையில் மழையில்லாமல் கருகிப் போயிருந்தன. மிகவும் நான் அப்போது அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதே வேதனையோடு அம்மாச்சியைப் பார்க்க வீடு வந்து சேர்ந்தேன். மாலை 4 மணிக்கு வீடு வந்தபிறகு வயலில் விழுந்து கிடந்த பனம்பழத்தை ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ருசித்துத் தின்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். 

எங்கள் கடை மற்றும் வீட்டிற்கு எதிரே உள்ள முருகன் கோயிலின் கோபுரத்தை புகைப்படக் கருவியால் பத்தி செய்து கொண்டிருந்தார். நான் "நீங்கள் யார்?" என்று கேட்டேன். இரண்டு நபர்களில் ஒருவர் என்னருகே வந்து "என் பெயர் இராஜேந்திரன். நான் ஒரு தமிழ் பேராசிரியர். கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறேன். இங்கு முனைவென்றி கொளஞ்சித் திடலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியை நான் கண்டறிந்தேன். இது குறித்து பதிவு செய்து செய்தியாக வெளியிட News TN என்ற ஊடகத்திலிருந்து வந்தவர் அவர்" என சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்ன செய்திகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரியாமலும் மிகவும் நம்ப முடியாமல் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவர்கள் சென்ற பிறகு மாலை 5 மணியளவில் கடுமையான மழை. மாலை 5  மணிக்குத் துவங்கி 7.30 மணி வரை இரண்டரை மணி நேரமாக வெளுத்து வாங்கியது. 

எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சற்றுமுன் தான் கருகிய பயிர்களை பார்த்து விட்டு "மழை பெய்தால் தான் பயிர்கள் பிழைக்கும். மழை பெய்ய வேண்டும்." என வேண்டிக் கொண்டே மிகவும் மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வேதனையில் இருந்த எனக்கு இரண்டரை மணி நேரமாக பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாலை ஆறு மணிக்கு இருள் சூழ்வதற்குள் மஞ்சள்பட்டணம் செல்ல வேண்டும் என நினைத்த எனக்கு இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவிற்கு வாசலில் அன்று வெள்ளம் கரை புரண்டோடியது. அதனால் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமக்குடிக்கு செல்லும் பேருந்தில் இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். "கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பயிர்கள் நன்றாக வந்து விடும்." என்ற மகிழ்ச்சியில் உறங்கினேன். 

அடுத்த நாள் ஞாயிறு அன்று அதிகாலை 3 மணிக்கு என்னை தூக்கத்திலிருந்து என்னுடைய மன மகிழ்ச்சி என்னை எழுப்பி ஒரு மெட்டையும் "வயலோடு உறவாடி" என்று இந்தக் பாடலையும் தட்டச்சு செய்ய வைத்தது. இந்தப் பாடலை எழுதும்போது எனக்குக் கிடைத்த மெட்டும் பாடல் வரிகளும் என்னை அளவு கடந்த மகிழ்ச்சியை அடைய வைத்தன. சில நாட்கள் கழித்து, முகநூலிலும் தினமணி, indian express போன்ற செய்தித்தாள்களிலும், youtube லும் என் சொந்த ஊர் முனைவென்றியைப் பற்றி 3500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியைப் பற்றி செய்திகள் வெளிவந்ததை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. அன்று இராஜேந்திரன் சொன்ன செய்திகள் முழுமையாகப் புரிந்தன. 

முதுமக்கள் தாழி பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இந்தப் பாடல் வரிகளில் என் ஊரைப் பற்றியும் வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தபோது ஏதோவொரு உள்ளுணர்வும் என் ஊரின் மேல் உள்ள அளவு கடந்த பற்றுமே என் ஊரைப் பற்றியும் இந்தப் பாடலில் எழுத வைத்திருக்கின்றன என்பதை அதன்பிறகு உணர்ந்து மகிழ்ந்தேன்.

அதன்பிறகு என் ஊர் முனைவென்றியின் முதுமக்கள் தாழி குறித்து நான் நேரில் சென்று எடுத்த புகைப்படத்துடன் கூடிய என்னுடைய பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

வைகை ஆற்றின்  நீர் ஆயூர் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயின் கரையில் தான் எங்கள் வயல் அமைந்துள்ளது. ஆனாலும் அந்த நீரை எங்கள் வயலுக்கு பாய்ச்ச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். முனைவென்றி கண்மாயும் எங்கள் வயலிலிருந்து சுமார் மூன்று மைல் கல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாய்ச்சலாம் என நினைத்தால் அந்த நீர் எங்கள் வயலுக்கு வருவதற்கு பழைய வாய்க்காலும் பாராமரிக்கப் படவில்லை. அதைத்தாண்டியும் வரும் வழியில் உள்ள வயல் காரர்கள் மறைத்துக் கொள்வார்கள். எனவே எங்கள் ஊர் கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவது என்பது கடினமான ஒன்று. மழையை மட்டுமே நம்பி நாங்கள் நெல் விவசாயத்தை மேற்கொள்கிறோம். எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டிலிருந்த படியே வேலை (work from home) என்பதால் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் கடந்த 2020 ல் வயலில் நான் களையெடுத்தேன். நாற்று நட்டேன். உதவி செய்தேன். அதோடு கடந்த ஆண்டு எங்கள் ஊரிலும் சரி சென்னையிலும் சரி நல்ல மழை. ஆனால் இந்த 2021 ல் கடந்த செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையைப் போல் சென்னையில் பெய்தாலும் எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் எங்கள் வயல் நான்கில் மூன்று பங்கு பயிர்கள் கருகி வீணானது.

செப்டம்பர் 18 அன்று இரண்டரை மணி நேரம் பெய்த மழையால் நான் அடைந்த மகிழ்ச்சி தொடர்ந்து இன்று வரை நிலைக்கவில்லை. நான் எழுதிய இந்தப் பாடலை கடந்த செப்டெம்பருக்குப் பின் நான் சென்னையில் அதிக நாட்களும் பரமக்குடியில் எப்பொழுதாவதும் இருக்கும்படியான சூழலாலும் அதன்பிறகு "சென்னையில் வீடுகளில் நீர் புகும் அளவிற்கு பெய்த தேவையில்லாத மழை நம்மூரில் பெய்யாமல் போனதே. விவசாயத்திற்குத் தேவையான குறிப்பிட்ட கால அளவில் தேவைப்படும் மழைநீர் போன ஆண்டைப் போல் இந்த ஆண்டு பெய்யவில்லையே" என்ற வருத்தத்தாலும் இந்தப் பாடலை காணொளியாக பதிவு செய்யாமல், செய்ய மனம் வராமல் வைத்திருந்தேன். 

இன்று தமிழர் திருநாள். நம் வயல் தான் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணானது. மற்ற வயல்கள் நல்ல செழிப்புடன் இருக்கிறதே என்ற மன மகிழ்வோடு விவசாயத் தொழில்நுட்பத்தை கதிர்காமத்தில் முதலில் தொடங்கிய நம் முப்பாட்டன் முருகனை வணங்கி இந்தப் பாடலையும் காணொளியையும் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.


பொன்வண்டின் பாட்டு பூங்காற்றும் கேட்டு
மண்வாசம் பார்த்து மனமெங்கும் பாட்டு

கன்னங்கள் வழிந்திடும் நீர்
எண்ணங்கள் உயர்ந்திடும் பார்
வண்ணங்கள் நிறைத்திடும் ஊர்
சின்னங்கள் காத்திடும் பேர்

ஏ இடியிடிக்குது மின்னலடிக்குது
மழையடிக்குது சாரலடிக்குது
கொடைபிடிக்கல கூந்தல் நனையுது
உள்ளம் மகிழுது பள்ளம் நிறையுது
உயிர் உருகுது பயிர் செழிக்குது
பச்சை தெரியுது உச்சி குளிருது

இளந்தென்னைக் காற்று இதமான பாட்டு
உளவானில் நேற்று உருவான பாட்டு

மண்ணுக்குள் புதைந்திடும் வேர்
கண்ணுக்குள் ஒளிந்திடும் நீர்
மண்மீது நிலைத்திடும் வார்
மழையாகப் பொழிந்திடும் கார்

ஏ உச்சி வெளுக்குது மச்சும் குளிருது
வெயிலடிக்குது குளிரடிக்குது
மரமசையுது இலையசையுது
மின்னலடிக்குது இடியிடிக்குது
மறுபடியுமிங்கு மழையடிக்குது
மனம் குளிருது சனம் மகிழுது

என்னோடு ஆடும் மழையிங்கு பாடும்
மண்ணோடு கூடும் மண்வாசம் பாடும்

கண்கூசும் அழகினைப் பார்
வெண்மேகம் தவழ்ந்திடும் ஊர்
என்தேகம் சிலிர்த்திடும் பார்
என்னுள்ளம் மகிழ்ந்திடும் பார்

ஏ தென்றலடிக்குது சிலுசிலுக்குது
நீர் உயருது நெல் உயருது
வரப்புயருது வளம் கொழிக்குது
நலம் பெருகுது உளமுருகுது
இறையருளிது மறைபொருளிது
மழை பொழியுது மனம் குளிருது
(பொன்வண்டின் பாட்டு)

Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...

Wednesday, October 27, 2021

உன் சுவாசக் காற்றாய்...

 உன் 
அன்பு மழையில்
நனைந்து நனைந்து
கரைந்துருகிக் கொண்டிருக்கிறேன்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க...

உருகி உருகி - நீயெனைப் 
பருகிப் பருகி
உன் இதழ்வழி
தொண்டைக்குழி நனைக்கிறேன்
நான்.

உன் இதழோரேம்
உடல்சூட்டால் 
நான் சில துளிகளாய்
ஆவியாகி 
காற்றோடு கலந்து
உன் மூச்சின்வழி
உன் இதயம்தொட்டு
உன் நுரையீரல் தொட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும் 
உன் சுவாசக் காற்றாய்...

Friday, October 22, 2021

(பாகம் - இரண்டு) கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

இந்தப் பதிவின் முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/05/2021.html

கடந்த ஐந்து மாதங்களாக எழுத வேண்டும் எழுத வேண்டுமென முயற்சித்து முதலாம் பாகத்தில் விடுபட்ட விவரங்களை முதலில் சொல்லி முடித்துவிட்டு பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்.

குறவர்கள் அதாவது யூத பிராமணர்களின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகிற குறவர்கள் அன்றைய தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ( அதாவது இன்றைய கேரளம் ) வாழ்ந்தனர்.

மகாபாரதப்போர் நடைபெறக் காரணமாக இருந்தவன் யூதனான சகுனி என்பவன் தான். அன்றே மக்கட்தொகையை கட்டுப்படுத்த குறிப்பாக, தமிழர்களை அழித்தொழிக்க தமிழர்களுக்குள் இருந்த சிறிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி  மகாபாரதப் போரை நடத்த, தூண்டி விட்டவன் யூதனான சகுனி தான்.

தமிழர்களுக்கிடையே இருந்த அந்த சிறிய பிரச்சனை என்ன? இந்தப் பதிவின் முதலாம் பாகத்தில் நான் இதனை விவரித்திருந்தாலும் இப்போது இன்னும் விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.

அன்றைய தமிழகத்தில் அதாவது தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குக் கிழக்கே திருநெல்வேலியை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்த சித்தர் இராவணனின் வம்சாவளிகளான மள்ளர்கள் அதாவது பாண்டியர்கள் (யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட பாண்டவர்கள்) முருகன் மற்றும் குபேரனின் அடியொற்றி விவாசாயத் தொழில்நுட்பத்தைச் செய்ய காட்டைக் கொளுத்தி நிலத்தைத் திருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்தனர். 

விவாசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் ஈழத்தின் கதிர்காமத்தில் கண்டுபிடித்துத் தொடங்கி வைத்தவர் நம்முடைய முப்பாட்டன் முருகனே. அதேபோல் விவசாயத்தால்,ஈழ நாட்டையே யாழ்ப்பாணத்திலிருந்து செழிக்க வைத்து, நாமெல்லாம் பணக்காரக் கடவுளென அழைக்கப்படும் சித்தர் மற்றும் அரசரான குபேரன். அவர் ஆட்சி செய்த யாழ்ப்பாணம் ஈழத்தின் வடக்கே அமைந்திருப்பதால் தான், வடக்கு திசையை குபேர திசையென்றும் குபேர மூலையென்றும் வாழ்க்கை சாத்திரம் என்ற வாஸ்து சாஸ்த்திரத்தில் நாம் அழைக்கிறோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மேற்கே அதாவது இன்றைய கேரளத்தில் வாழ்ந்தவர்கள் தான் குறவர்கள் அதாவது யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கௌரவர்கள். குறவர்கள் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் மலையேறினர். மலை ஏறர் என்ற சொல்லில் உள்ள ஏறர் என்ற சொல்லே சேரர் என்றாகி சேரலம் என்றாகி கேரளம் என்றானது.

பாண்டியர்கள் வாழ்ந்த திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ள கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப் பட்டனர். அதாவது, திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப்பட்டனர். 

தலித் என்ற வார்த்தை தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டியவர்கள் யூத பிராமணர்களும் தெலுங்கர்களும் தான். சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டு சாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளையும் தமிழர்களின் குல தெய்வ வழிபாட்டையும் அழித்தவர்கள் தெலுங்கர்களும் யூத பிராமணர்களும் தான்.

நாம் வணங்கும் ஆதிசிவனே பறையர் குலம் தான். விஜயநகரப் பேரரசு என்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததோ அன்று தொடங்கியது இந்த சாதிக் கலவரங்கள். தூண்டி விட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தேறிகளான யூத பிராமணர்களும் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களும் தான். சாதிக் கலவரங்களை தூண்டிய யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் தமிழ்நாட்டிற்குள் வாழ்ந்துகொண்டு சாதிக்கலவரத்தைத் தூண்டிவிடும் பிறமொழியாளர்களும் தான் தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்களே தவிர, ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடமிருந்து குலம் குடிப் பட்டங்களை அல்ல, சாதிகளை அல்ல. குலம் குடிப் பட்டங்களை, சாதிகளை ஒழித்தால் தமிழன் வரலாறு இல்லாத அநாதையாகி தமிழினம் அழிந்து போகும்.

பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் என்று யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் கடந்த காலங்களில் தூண்டிவிட்ட சாதிக்கலவரங்களுக்கு காரணம் யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என்று சொல்வதை விட்டு விட்டு, சாதிக் கலவரங்களை காட்டிக் காட்டி, பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர், தமிழனுக்கு எதிரி தமிழனே என்று சொல்லிச் சொல்லி விஜயநகரப் பேரரசு, பரசுராமனின் கலவரப் படையெடுப்பு (களப்பிரர் படையெடுப்பு) போன்ற தெலுங்கர்களால் தமிழர்களுக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட சாதிப்பகையை ஊதிப் பெரிதாக்கும் வேலையைத்தான் கர்ணன் திரைப்படம் மூலம் மாரிசெல்வராஜூம், பா. ரஞ்சித் போன்ற தெலுங்கனும் தொடர்ந்து படமெடுத்து வருகின்றனர்.

உண்மையில் பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர் அல்ல, பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் அல்ல.

பறையர், முக்குலத்தோர், பள்ளர், கோனார், வன்னியர் என ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதிரி யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என இதைப் பற்றி திரைப்படங்களில் பேசுங்கள். இந்த உண்மைகளை எந்தவொரு இயக்குநரும் திரைப்படங்களாக எடுக்கப் போவதில்லை. ஏனெனில், தமிழ் திரைப்படங்களை, தமிழக அரசியலை என ஒட்டுமொத்த தமிழகத்தையுமே மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள் யூதர்களும் திராவிடம் என்ற பெயரில் பிறமொழியாளர்களும் குறிப்பாக தெலுங்கர்களும் தான்.

உண்மையில்  பறையர்கள், பள்ளர்கள் என் சகோதரர்கள். இந்த உண்மை கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியத் துவங்கியது. அதுவும் உலக அரசியல் (world politics) குறித்தும் புவிசார் அரசியல் (geo politics) குறித்தும் தெரிந்துகொள்ளத் துவங்கிய பின்புதான். மாரி செல்வராஜ் என்பவர் ஒரு தெலுங்கராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.



நன்றி:-

தமிழ் சிந்தனையாளர் பேரவை.

Monday, October 4, 2021

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு. செய்தி.

செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to

நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.

செய்தி.

நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.

எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.

எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."

முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.

கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.

Friday, July 30, 2021

செல்லக்குட்டி நிறைமதி

என் இரண்டாவது மகள் நிறைமதியின் பிறந்தநாளிற்கான பாடல் - https://www.youtube.com/watch?v=dntXiT9ohs8


ஆட்டம்போடும் சேட்டக்குட்டி பாட்டுப்பாடும் ஆட்டுக்குட்டி
வாடியம்மா வாடி - எங்க
வாசமுள்ள தாயி
கூட்டம்கூடும் பாட்டுப்படி கூடச்சேர்ந்து ஆட்டம்பிடி
தேடியுகம் தேடி - பெத்த
தெய்வ முத்துமாரி

செல்லமடி வெல்லமடி செல்லக்குட்டி நிறைமதி
ஆடியோடி வாடி - எங்க
ஆயி மகமாயி
கள்ளமில்லா உள்ளமடி கன்னுக்குட்டி நிறைமதி
கூடி விளையாடி - எங்க
குறும்பான தேனீ

கன்னமதில் வண்ணமடி எண்ணமதில் நிறைமதி
பாடலாகப் பாடி - எங்கும்
பரவசமாய் ஆடி
கண்ணெதிரே என்னுலகம் உன்னுருவம் நிறைமதி
காற்றாக மாறி - எங்கும்
ஊற்றாக ஊறி

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி நெஞ்சமதில் நிறைமதி
வானவில்லைத் தேடி - எங்கும்
காணவில்லை வாடி
கொஞ்சுமொழி விஞ்சுமெழில் தஞ்சமடி நிறைமதி
கோலமயில் வாடி - எங்க
குலசாமித் தாயி

கால்முளைத்த தென்றலொன்று கண்ணெதிரே நிற்குதிங்கு
கூவுங்குயில் வாடி - இங்கு
கட்டிமுத்தம் தாடி
எல்லையில்லா அன்பினிலே எங்கும்நிறைக் கடவுளரே 
இறைவனையே பாடி - அன்பில்
இறையருளைத் தேடி

Tuesday, June 15, 2021

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட என் அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே செத்தால் நல்லது.

 கடந்த  இரண்டு மாதங்களாக என் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் படித்துப் படித்துச் சொன்னேன் "தடுப்பூசி இப்போது போடவேண்டாம். தடுப்பூசி என்பது எலிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சோதனை செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும் ஆறு மாதங்களுக்குள் அவசர அவரசமாக உயிர் பயம் காட்டி போட்டுக்கொள்ளச் சொல்லி விளம்பரப் படுத்தப் படுகிறது, மறைமுகமாக நிர்பந்திக்கப் படுகிறது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை உங்களை சுற்றி நடப்பவற்றை உற்றுநோக்குங்கள் (Observe). பிறகு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி சிந்திக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்து போனது நினைவிருக்கிறதல்லவா?" என்று. ஆனாலும் இன்று மதியம் அலைபேசியில் பேசியபோது என் வீட்டில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க கிழவனான என் அப்பாவும் கிழவியான என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அப்படியே இணைப்பை துண்டித்து  விட்டேன்.


பெற்ற மகன் சொன்ன அன்பான வார்த்தைகளை காது கொடுத்துக் கூட கேட்காத இவர்கள் இருவரும் இருந்தாலென்ன செத்தால் எனக்கென்ன? படிக்காத மடையர்கள் என்றாலும் பரவாயில்லை. என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். என் அப்பா அரசாங்கத்தில் உயர்பதவில் வகித்துவிட்டு ஓயவூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். 


என் மனதில் எவ்வளவு வேதனையும் வலியுமிருந்தால் இவர்கள் இருவரும் செத்தால் நல்லது என்று சொல்கிறேன்.


"நான் தான் படித்துப் படித்துச் சொன்னேனே? பிறகெதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். "மற்றவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்களும் போட்டுக் கொண்டோம்." என்றார்கள். "மற்றவர்கள் மலத்தை அள்ளித் தின்றால் நீங்களும் மலத்தை அள்ளித் தின்பீர்களா?" என்று கேட்டு விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.


இவர்கள் இருவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்ததன் மூலம் இவர்கள் செத்து அதன்மூலம் இந்த கோரோனோ தடுப்பூசி நாடகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்பதால் ஒரு வகையில் பார்த்தால் என் அப்பன் வேல்முருகன் என் குடும்பத்தில் இவர்கள் இருவரையும் பலி கொடுக்க முடிவெடுத்து விட்டான் போலும்.


 இது இப்படி இருக்க, அடுத்து மூன்றாவது அலை வருமாம். அது குழந்தைகளைத் தான் தாக்குமாம். கோரோனோவை பரப்பி விட்ட உலகை ஆளும் வர்க்கங்களுக்குத் தெரியாதா? கோரோனோ அடுத்து யாரைத் தாக்குமென்று?


சும்மா சொன்னால், கோரோனோ தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்? உயிர்பயம் காட்டினால் தான் போட்டுக் கொள்வார்கள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக உணர்ந்தே செயல்படுகிறது உலக ஆதிக்க வர்க்கம். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உலக வல்லாதிக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய் தான் இந்த கோரோனோ.


ஐந்தாண்டுகளுக்கொருமுறை நாம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். தேர்தலில் வாக்களிக்க நமக்கு தரப்படும் பணம் நம்முடைய வரிப்பணம் தான். அதை வாங்கிக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நல்ல தலைவர்கள் தான் தங்களுடைய மக்களைப் பற்றியும் அவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் நாம் நல்ல தரகர்களை அதாவது அரசியல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். 


அரசியல்வாதி என்பவன் வேறு. தலைவன் என்பவன் வேறு.


தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களை பலி கொடுத்தாவது தங்களுடைய தரகுக்கூலியை (commission) பெறத் துடிப்பவர்கள்.


நான் அரசாங்கத்தை மதிக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகளை அல்ல.


அரசாங்கம் சொல்வன செய்வன வற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள். அரசாங்கத்தை சந்தேகப்படுங்கள். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள் தான்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு வைத்த பெயர் வேல்முருகன். என் முப்பாட்டன் வேல்முருகனைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, ஒன்றாம் வகுப்பு சேரும்போது என் அப்பா வைத்த சுரேஷ்குமார் என்ற பெயரை வேல்முருகன் என்று என்னுடைய உண்மையான பெயராக எனக்கு  வைத்துக்கொண்டேன்.


குறிப்பாக குழந்தைகளும் திருமணமாகாதவர்களும் தடுப்பூசி போட வேண்டாம். உங்களுக்கு குழந்தை பிறப்பதில் இந்த தடுப்பூசி சிக்கல்கள் உண்டாக்குவதன் மூலம் உங்கள் வம்சமே இனி இல்லாமல் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் உலக இரகசியக் குழுக்களின் நோக்கம் உலக மக்கட்தொகையை குறைப்பது தான் (World depopulation agenda 2030).


Saturday, May 29, 2021

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

உண்மையில் மகாபாரதம் நடந்த இடம் திருவெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான். கேரள மலைக்குறவர்கள் 100 பேர் தான் கௌரவர்கள். குறவர் என்ற பெயரைத்தான் யூத பிராமணன் கௌரவர் என்று மாற்றி வைத்துள்ளான். பாண்டியர் என்ற பெயரைத்தான் பாண்டவர் என்று மாற்றி வைத்துள்ளான் யூத பிராமணன். மகாபாரதப் போர் நடந்த இடம் வட இந்தியாவில் உள்ள குருஷேத்ரம் என்று கதை கட்டியுள்ளான் யூத பிராமணன். 

ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் எப்படி மனைவியாக இருக்க முடியும்? திரௌபதி என்பது தரை + பதி தான். அதாவது, தரைக்கு அதிபதி. அதாவது, இந்த தமிழர் நிலம் தான் பெண்ணாக உருவகப் படுத்தப் பட்ட திரௌபதி. இந்தத் தரைக்கு அதிபதிகள் தரையில் விவசாயம் செய்த இராவண வாரிசுகளான பாண்டியர்கள். குறவர்கள் மலைகளில், குகைகளில் வாழ்ந்தவர்கள். 

பாண்டியர்கள் விவசாயம் செய்ய காட்டின் ஒரு பகுதியை கொளுத்த முற்பட்டனர். குறவர்கள் காட்டைக் கொளுத்தக் கூடாது என்று சண்டையிட்டனர். சித்தரான கிருஷ்ணன் அதாவது கண்ணன் (கண்ணபிரான்) பாண்டியர்களுக்கு ஆதரவாக நின்று பாண்டியர்களை வெற்றி பெற வைத்தார். இந்தப் போரே உண்மையான மகாபாரதப் போர்.

சீதை என்பது ஊட்டி மலைப்பகுதியை குறித்த பெயர். ஊட்டி மலைப் பகுதியைத்தான் சீதை என்ற பெண்ணாக உருவகப் படுத்தினான் யூதன். தமிழர்களை அழிக்க வந்த யூத பிரமணன் இராமன். பத்துக் கலைகளில் சிறந்தவர் சித்தரானான இராவணன். இதனாலேயே பத்துக்கலை இராவணன் என்று சொல்லி காலப் போக்கில் பத்துத்தலை இராவணன் என்றானது. இரா + வானன் அதாவது இரவில் வானத்தை ஆராய்பவன் என்ற பொருளில் இராவணன் என்ற பெயர். தமிழகத்தை குறிப்பாக ஊட்டி மலைப் பகுதியை கைப்பற்ற வந்த யூத பிராமணனான இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் ராமன் தோற்கடிக்கப் பட்டான். இந்தப் போரே இராவணீயப் போர். இதைத்தான் இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன். கம்பர் என்பவரும் யூத பிராமணனின் கட்டாயத்தின் பேரில் உண்மை வரலாற்றை மறைத்து இராமாயணம் என்ற பொய்யை பிரபலப் படுத்தினார். உண்மையில் கதாநாயகனின் பெயரை வைத்துத்தான் காவியத்தின் தலைப்பு கொண்டாடப் பட வேண்டும். இங்கு இராமன் தோற்கடிக்கப் பட்டான். அந்த அவமானம் தாங்காமல் இராமன் இராவணீஸ்வரக் (இராமேஸ்வர) கடலில் தற்கொலை செய்துகொண்டான். தோற்றவனை, தமிழினத் துரோகியை இராமன் என்ற கடவுளாக்கி, இராவணீயப் போர்  என்பதை மறைத்து தற்கொலை செய்து கொண்டவனின் பெயரால் இராவணீயப் போரை இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன்.

 எனவே, நமது கடவுளர் யார் யார்? என்று தெரிந்து கொண்டு அவர்களை மட்டும் வழிபடுங்கள். 

பராசக்தியை வழிபடுங்கள். துர்க்கை என்பவள் கேடுகெட்டவள். துர்க்கையை கடவுளாக்கி வழிபடாதீர்கள்.

நேற்று இரவுதான் கர்ணன் (2021) திரைப்படம் பார்த்தேன். படத்தில் நாயகன் பெயர் கர்ணன். நாயகி பெயர் திரௌபதி. வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் பெயர் கண்ணபிரான். கதைக்களம் திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை. இன்னும் சில பாத்திரங்களின் பெயர்கள் வடமலையான், எமன், துரியோதனன், இன்னும் பல.... அதிர்ந்து போனேன்.

கதைக்கரு என்னவென்றால் ஆதிக்க வர்க்க வன்மமும் பகையும், தனிமனித வன்மமும் பகையும், வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் தலைக்கனத்தால், ஆதிக்க குணத்தால் வரும் விளைவுகள், கொஞ்சம் சாதிச் சீண்டல்கள், மோதல்கள். இந்தக் கதைக்கருவில் மகாபாரத வரலாற்று உண்மை நாயகர்களின் பெயர்கள் ஏன் வருகின்றன? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்கு யார் வைக்கின்றனர்? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் வைக்க வேண்டுமென யார் முடிவு செய்கின்றனர்? ஏன் கதைக்கருவிற்கு சம்பந்தமில்லாமல் கதாப்பாத்திரங்களுக்கு பெயர்களை வைக்கின்றனர்? இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் கர்ணன் கண்ணபிரானை கழுத்தை அறுத்துக் கொலை செய்வது போல வரும்.

திரைப்படத்தின் இடை இடையே வில்லனாக வரும் கண்ணபிரான் மகாபாரதத்தில் உள்ள பெயர்களைச் சொல்லி கிண்டலடிப்பது போல காட்சிகள் வருகின்றன. ஊர் பெரியவர்களுக்கு மகாபாரதப் பெயர்களான குறிப்பாக துரியோதனன் பெயரைச் சொல்லி ஏன் இந்தப் பெயரை வைத்தாய் என்று சொல்லி வில்லனான கண்ணபிரான் அங்கு வந்த அனைவரையும் அடித்து மொட்டைமாடி வெயிலில் தண்டனை கொடுப்பது போல காட்சிகள் வருகின்றன.

படத்தின் பெயரை ஏன் கர்ணன் என வைத்திருக்கின்றனர்?

கதைக்கருவிற்கும் ஒருசில காட்சிகளுக்கும் காதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கும் வேறு ஏதேதோ அர்த்தங்கள் சொல்லி முன்னறிவிப்பு செய்வது போலவே தெரிகிறது. நீங்களும் அந்தப் படத்தைப் பாருங்கள்.

சாதியை, சாதிக் கலவரத்தை காட்சிப்படுத்திப் படுத்தியே கர்ணன், அசுரன், காலா, பரியேறும் பெருமாள் போன்று படங்களை எடுத்து தமிழர்களில் ஒவ்வொரு சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்க் குடிகளுக்குள் நீ அவனுக்குப் பகை, அவன் உனக்குப் பகை என்பதை மக்கள் மனங்களில் பதிய வைத்து  தமிழர்கள் மத்தியில் நிரந்தரப் பகையுணர்வை ஏற்படுத்தி தமிழன் தன்னுடைய முன்னோர்களால் தான் இந்த சாதிக் கலவரங்கள் தூண்டப்பட்டன என்று தன்னைத் தானே இழிபிறவியாக கருதிக்கொண்டு கூனிக்குறுகி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குளிர் காய்ந்து கொண்டும் கல்லா கட்டிக் கொண்டுமிருக்கிறது இந்த தமிழ் திரைப்படத் துறை.

 ஆனால்,சாதிக்கலவரங்களும் இனவெறித் தாக்குதல்களும் ஆதிக்க வர்க்க யூத பிராமணர்களாலும் அவர்களின் வேட்டை நாய்களான நாயுடு நாயக்கர் போன்ற தெலுங்கர்களாலும் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் வந்தபிறகு தான், பரசுராமனின் கலவரப் (களப்பிரர்) படையெடுப்பின் பின்னர் தான் என்பது தான் உண்மை. இந்த உண்மையை தமிழ் திரைப்படத் துறை ஏன் சொல்ல மறுக்கிறது? ஏனெனில் தமிழினத்தின் மீதான வன்மம் காரணமாகவே பொய்யான பிரச்சாரங்களை கதைக்கருவாக புகுத்தி உலக அரசியலை மறைமுகமாகச் சொல்லி (உதாரணத்திற்கு தசாவதாரம், விஸ்வரூபம், ,அன்பே சிவம் ) பாமரத் தமிழர்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் அறியாமையை தொடர்ந்து நீட்டித்து தமிழர்களை தங்களின் உண்மையான வரலாற்றைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றனர்.

சாதிப் பட்டங்களைக் கொண்டு மட்டும் தான், வேற்றினத்தவரிடமிருந்து தமிழரை வேறுபடுத்திக் காட்டமுடியும். சாதிகள் என்பது தமிழரின் வரலாற்றை பதிந்து வைத்திருக்கும் அடையாளங்கள். தமிழர் வரலாற்றின் திறவுகோலே சாதி தான். சாதி ஒழிப்பு என்பது தமிழர் ஒழிப்பில் முடியும்!

பொதுவாக தடுப்பூசி என்பது இரண்டு மூன்று ஆண்டுகள் எலிகளுக்கு, மற்ற பிராணிகளுக்கு சோதனைகள் செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்குச் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசியை மட்டும் உயிர் பயம் காட்டி ஏன் கண்டுபிடித்த ஆறு மாத காலங்களுக்குள் மனிதர்களுக்கு செலுத்துகிறார்கள்? நாம் தான் யோசிக்க வேண்டும்.

கொரோனா நோய் என்பது உண்மை. அது தானாக பரவ வில்லை. அந்த நோய் சீனாவிலிருந்து அமெரிக்க இரகசியக் குழுக்கள் மூலமாக பரப்பப் பட்டிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

பொதுவாகவே இரகசியக் குழுக்கள் தங்களின் திட்டங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்டி வைத்து மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் செயல்படுத்துவார்கள். முதலில் பொது மக்களுக்கு மறைமுகமாக பிரச்சினைகளை உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு கொரோனா நோய் தொற்று. சில மாதங்கள் கழித்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லுவான். அரசாங்கத்தை விட்டு சொல்ல வைப்பான். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசி. அது சரி, இந்த கொரோனா தடுப்பூசியினால் யாருக்கு என்ன லாபம்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் ஒரு மாநாட்டில் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசியுள்ளான். இணையத்தில் world depopulation agenda 2030 என தேடிப்பாருங்கள். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கினால் மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமல்லவா? இதற்காகத்தான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பேசினானா?

உலக மக்கட்தொகையை 700 கோடிகளிலிருந்து 400 கோடிகளாக அதாவது பாதியாக குறைப்பதே world depopulation agenda 2030 என்று உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரகசியக் குழுக்களின் (இல்லுமினாட்டிகளின்) மறைமுகத் திட்டம். 

இராவணீயப் போரின் (இராமாயணப் போரின்) பழிவாங்கலே முதலாம் உலகப் போர். மகாபாரதப் போரின் பழிவாங்கலே இரண்டாம் உலகப்போர்.

உலகின் முதல் சித்தர் என அறியப்படுகிற ஆதிசிவனை குறவர் என்றும் குறவன் என்றும் குறவோன் என்றும் அழைப்போம். அந்த சிவனை வணங்கிய சித்தரான இராவணனையும் குறவோன் என்றே அழைக்கிறோம். அந்த குறவோன் தான் crown (மகுடம்) என்றாகி கொரோனா என்றானது. ஆக, இராவணீயப் போரில் இராவணனால் தோற்கடிக்கப் பட்ட யூதனான இராமனுக்காக யூத இரகசியக் குழுக்களால் தன்னுடைய யூத இராமனை தோற்கடித்த இராவணனை கொரோனா வைரஸாக உருவகப் படுத்தி இராவணனை பழிவாங்கவே இந்த கொரோனாவை பரப்பி விட்டதும் கொரோனா தடுப்பூசி நாடகமும்.

எனவே, கொரோனா தடுப்பூசிக்கும் மலட்டுத் தன்மைக்கும் உலக அரசியலுக்கும் இராமாயண மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, May 15, 2021

மறுமகளே தாயீ

அம்முக்குட்டி அழகுக்குட்டி
அருகில் நீயும் வாடி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
அழகு முத்தம் தாடி

பொம்முக்குட்டி புஜ்ஜுக்குட்டி
பூனைக்குட்டி வாடி
கண்ணுக்குட்டி கவிதைப்பெட்டி
கட்டிமுத்தம் தாடி

அழகுச்சிலை மெழுகுச்சிலை
அன்புமொழி ஆயீ
முழுவதுவாய் மனதில் நிறை
மறுமகளே தாயீ

கொஞ்சுமயில் கூவும்குயில்
குலவிளக்கே வாடி
நெஞ்சமதில் விஞ்சுமெழில்
முழுநிலவே வாடி

வாப்பட்டி கருப்பட்டி
வாயாடிப்பிள்ள
அடம்பிடித்து அழுதாலே 
பிள்ளையில்ல தொல்ல 

பிறந்தநாளில் பரிசாக
புத்தம்புது பாட்டு
பத்திரமா வச்சுக்கோ
காதோரம் கேட்டு 

Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு

Sunday, April 25, 2021

மறுமகனுக்குப் பிறந்தநாள் (26-04-2021) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/yRLzL3E2rNo


சுட்டித் தம்பி மறுமகனே
கட்டி முத்தம் தருபவனே
குட்டிமுயற்க் குட்டிபோல
எட்டியோடும் அரும்பிவனே

செல்ல மச்சக்காள - சிவ
கங்கைச் சீமையாள
நல்லப்பிள்ள போல - சேட்டை
செய்யும் வெட்டிவேல

கள்ளமில்லா உள்ளம் - கரை
கடக்குமன்பு வெள்ளம்
செல்லமழகுச் செல்லம் - இது
சீனிக்கரும்பு வெல்லம்

ஆட்டம் போடும் பாட்டு - எங்கும்
கூட்டம் கூடும் கேட்டு
வேட்டு வெடி வேட்டு - நீ
போட்டுத் தாளம் போட்டு

முத்துமணி மால - இவன்
முத்தந்தரும் காள
சொத்துசுகம் ஆள - பிறந்த
செல்லமச்சக் காள

பிறந்தநாளில் வாழ்த்தி - புகழ்
பாடுமுந்தன் கீர்த்தி - தலை 
சிறந்துவாழ வாழ்த்தி - இறையை
பணிந்துதலை தாழ்த்தி

Sunday, April 11, 2021

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக
சத்தியம் நித்தமும் பெருக
சித்தர்கள் அருளைத் தருக
உத்தமர் உள்ளமும் உருக

சித்தர் ஓரையும் சிவனே
சித்திரை மாதமும் அவனே
சித்தமும் நித்தமும் சிவனே
சிந்தையில் திகழொளி பவனே

திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்
திருவே சரணம் என்றென்றும்
ஒருநாள் உனையே நினைக்க 
உருகும்  மனமும் தினமும்

சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம் 
அதுவே நமக்கு முதற்ச்சங்கம்
முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்

திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்
கருணை வடிவே பெருங்கடலே
கனமும் தினமும் உம்நினைவே

இராவணன் மகனே இந்திரசித்தன்
இராவண இந்திர இரட்டையர்  மீனம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்
உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்

தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்
சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும் 
தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Tuesday, September 1, 2020

ஆசிரியர் தினம்

அன்புவழி அழகுமொழி கற்பிக்கும் குருவே
அறியாமை அழிக்கின்ற ஆண்டவனின் உருவே
மண்மேலே கற்பித்தல் முதலான தேவை
மனதிற்கு நிறைவாக மகிழ்வான சேவை

கண்போலே கல்விதனை கற்பித்தல் நலமே
அன்பாலே உலகமெலாம் ஆளுங்கல்வி வளமே
உன்போலே ஆசிரியர் உலகமெலாம் வாழ்க
தன்னிகரு மில்லாதத் தமிழ்போலே ஆள்க

ஆடுகின்ற ஓடுகின்ற அரும்புகளே நிற்க
அறியாமை இருள்நீங்க அனுதினமும் கற்க
பாடுகின்ற குயில்போல பரவசமும் வேண்டும்
பரவசமாய் பாடங்களை படித்திடவும் வேண்டும்

இப்போது தேவையிந்த இணையவழிக் கல்வி
எப்போதும் இளமையாக இருக்குந்தமிழ்ச் செல்வி
தப்பேதும் இல்லையிங்கு தமிழ்வழியே கல்வி
தமிழிலுள்ள அறிவியலை தரணிதனில் சொல்லி

மழலையரே நம்முடைய எதிர்கால உடைமை
மனமுவந்து கற்பித்தல் மகத்தான கடமை
மழலைகளில் பாகுபாடு என்பதுவே மடமை
மண்ணிலிந்த கல்வியது  மனிதர்களின் உரிமை


Thursday, July 30, 2020

நிறைமதி

அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய்
நிலவாய் பிறந்த நிறைமதி வா வா
மலராய் மணமாய் மனதில் நிறைவாய்
வழியாய் ஒளியாய் வான்மதி வா வா

சங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய்
எங்கள் மகளாய் இறையே வா வா
பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்
எங்கும் எழிலாய் எழில்மதி வா வா

பகலவன் ஒளியாய் பௌர்ணமி நிலவாய்
அகிலாய் அகலாய் அழகே வா வா
மகளிவள் ஆற்றாய் மனதில் ஊற்றாய்
முகிலாய் மழையாய் மலர்மதி வா வா

காற்றில் ஒலியாய் கவிதைக் குயிலாய்
கவியாய் தெறிப்பாய் கவிமதி வா வா
பாட்டில் இசையாய் பைந்தமிழ் மொழியாய்
பாட்டாய் காற்றாய் புகழ்மதி வா வா

மழலை குறும்பாய் மலரும் அரும்பாய்
மணியே அணியே மகிழ்மதி வா வா
விழியில் நிறைவாய் வெகுளிச் சிரிப்பாய்
வளமாய் நலமாய் வளர்மதி வா வா

பாப்பா நீயும் சிரித்தா லழகு
பாசம் கொண்டே பார்த்தா லழகு
அப்பா என்றே அழைக்கும் நாளே
அப்பா எனக்கும் அழகோ அழகு

உலகம் உன்னால் அழகோ அழகு
அழகே நீயும் அழகோ அழகு
மழலை மொழியில் மணக்கும் தமிழும்
மகளே உன்னால் அழகோ அழகு

கண்கள் அழகு கால்கள் அழகு
சிரித்தே மயக்கும் செயல்கள் அழகு
முன்னால் தெரியும் முயற்குட்டிப் பற்கள்
மகளே அவையும் அழகோ அழகு

Wednesday, July 8, 2020

முழுநிலவின் முகக்கவசம்

முழுநிலவின் அழகை
மேகங்கள் மறைப்பதைப் போலவே
உன் முக அழகை
முகக் கவசமது
மறைக்கிறது

நானும்
ஏமார்ந்துதான் போகிறேன்
முழுநிலவின் அழகை
இரசிக்க வந்து
ஏமார்ந்து போகும்
குழந்தையை போல...

ஆனாலும் புரிகிறது
மறைப்பது
பாதுகாப்புக் கவசமென்பதால்...


Friday, April 3, 2020

என் மறுமகளே

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

பொன்னான பெண்ணழகே கண்ணான கண்ணழகே
பொக்கைவாய் சிரிப்பழகே புதுமையான மொழியழகே
பெண்ணாகப் பேரழகே பேரழகின் அழகழகே
அமுதூறும் வாயழகே அழகூறும் சேயழகே
(......அம்மாயி)

தத்திவரும் நடையழகே தாமரைப்பூ முகமழகே
புத்தியுரைத் தமிழழகே புத்தம்புது மலரழகே
தத்தைமொழிப் பேச்சுழகே தாலாட்டும் பாட்டழகே
முத்துமுத்தாய் பல்லழகே முழுநிலவின் முகமழகே
(......அம்மாயி)

மாமனென்று நீயழைக்க மனமெங்கும் மகிழ்வாகும்
பூமணக்கும் காய்கனியும் பிஞ்சுமலர் சிரிப்பினிலே
ஆமெனக்கு அதிசயமே அழகான சித்திரமே
வாமனனாய் வடிவெடுத்த என்தங்கை மகளே வா

அத்தையென நீயுரைக்க உறவிங்கே அழகாகும்
முத்துமுத்தாய் நீபேச முழுநிலவின் புகழ் மங்கும்
சொத்துசுகம் அதிகமில்லை சோகமிங் கெனக்கில்லை
தத்தையிவள் தமிழ்பேச சித்தமதில் கர்வமடி
(......அம்மாயி)

அம்மாயி பொம்மாயி வாடியம்மா வா
ஆத்தா என் மறுமகளே வாடியம்மா வா
அம்மாடி அழகுச்சிலை வாடியம்மா வா
அமுதூறும் வாயாலே முத்தமொன்று தா

Thursday, November 28, 2019

கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்? வீடுகளில் நாம் தீபமேற்றுவது ஏன்?






கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.

அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.

ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?

முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.

ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.

கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.

விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.

விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான்  நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர். 

ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.

மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.

முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.

நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.

Friday, July 5, 2019

Oh my baby

Yesterday night i wrote the following english rhyme to my daughter Ritanya Servai.



👉 Oh my baby


Oh my baby oh my baby
Writing poems is my hobby

See my face see my face
Life is not a running race
God is only our own boss
Live your life like a sage

Come for a while come for a while
On your face keep always smile
Make your life with a different style
Live with pleasure in my soil

Oh my baby oh my baby
Writing poems is my hobby

ஒரு வருடத்திற்கு முன்பு மெரினா கடற்கரையில் என் மகள் ரிதன்யா சேர்வையோடு நான்...
























Tuesday, July 2, 2019

முப்பாட்டன் கதிர்காம முருகனும் விந்தணுவின் வடிவில் முருகன் கைகளில் உள்ள வேலும் கிறித்தவ இசுலாமியனின் பூர்வீகமும்

என்னுடைய சமீபத்திய பதிவுகள்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு என்னுடைய முப்பாட்டன் முருகனின் பெயரையே சொல்லி "வேல்முருகன்" என்று பெயர் வைத்தாள். வேல்முருகன் என்பதே என்னுடைய ஜாதகத்தில் இருக்கும் பெயர்.

என்னுடைய முதற்பெயர் முனைவென்றி நா. வேல்முருகன் என்பதே.

என்னுடைய முதற்பெயர் வேல்முருகன் என்ற என் முப்பாட்டன் பெயர் தான். என் பெயரை நா. வேல்முருகன் சேர்வை என்று சான்றிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆறு வயதில் என்னை முதல் வகுப்பில் சேர்க்கப் போகும்போது என்னுடைய அப்பா எனக்கு சுரேஷ்குமார் என்று பெயர் மாற்றம் செய்ததாக கூறினாள் என்னுடைய அம்மா.

ஆணின் விந்தணுவின் வடிவிலேயே தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் என்னுடைய முப்பாட்டன் முருகன். குமரிக் கண்ட அழிவின் போது தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தில் உள்ள கதிர்காமத்திற்கு வந்து குடியேறி விவசாயத் தொழில் நுட்பத்தை முதன்முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே.

நீருழிப் பேரழிவால் மக்கட்தொகை குறைந்ததைக் கண்டு முருகன் மக்கட்தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் வளர்க்கச் சொல்லி அதன் இலைகளை காய்களை உண்ணும்படி சொன்னார் முருகன். அந்த மரத்தின் பெயர் முருகன் மரம். அந்த மரமே இன்று நாம் வளர்க்கும் முருங்கை மரம். 

விந்தணுவின் வடிவத்தை ஒரு விஞ்ஞானி போல் ஆராய்ச்சி செய்து தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் முப்பாட்டன் முருகன்.

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஒரு வெள்ளைக்காரர் இங்கு வந்து நூறு ஆண்டுகள் தங்கிய பிறகு அவரின் பேரன் தமிழ் மொழி மீது பற்றுதலால் தனுடைய பேரை தூய தமிழில் வைப்பதால் அவரை நாம் தமிழராக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பூர்வ குடிகளே தூய தமிழர்கள்.தமிழரின் பூர்வ குடிகளை எப்படி தெரிந்து கொள்வது? தமிழரின் குலம் மற்றும் குடி அதாவது தமிழரின் ஜாதி அடையாளங்களை தேடுங்கள். தூய தமிழரை இனங்காணலாம்.

தமிழில் பெயர் வைக்கும் அனைவரையும் தமிழாராய் பார்க்கும் பெருந்தன்மை மனம் உள்ளதாலேயே தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழன் வீழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார பலமின்றி அடிமையாகக் கிடக்கிறான்.

இங்குள்ள பெரும்பான்மை தமிழர்கள் கிறித்தவர்களாகவும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியவர்கள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர். தமிழர்கள் குல தெய்வ வழிபாட்டாளர்கள். அதாவது, தமிழர்கள் பெருங்கோயில்களுக்குச் செல்லும் வழமை இல்லாதவர்கள். ஆதித்தமிழர்கள் ஆசிவக மார்க்கத்தை பின்பற்றியவர்கள். ஆசிவகத்தின் பாலைவன வடிவமே இசுலாம்.

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் நம்மை எல்லாம் அவன் வசதிக்காக இந்துவாக, கிறித்தவனாக, இசுலாமாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு பிரிவினர் தாங்கள் இந்துக்கள் அல்லர், தாங்கள் லிங்காயத்துக்கள் என்று சொல்லி பிரிந்ததை நினைவு படுத்தினால் கொஞ்சமாவது அந்தந்த தேசிய இனங்களின் தொன்மையும் வரலாறும் புரியும்.

சாதி என்பது தமிழனின் குலம் மற்றும் குடி சார்ந்த அடையாளம். தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிற இனத்தவர்  குறிப்பாக தெலுங்கர்களும் யூத  பிராமணர்களும் ஊடுருவியுள்ளனர். பிற இனத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு என்னுடைய குலம் மற்றும் குடிப்பட்டம் ஏனைய ஒரு சில கருவிகளோடு சேர்ந்து ஒரு கருவியாக செயல்படுகிறது.

வெங்காய ராமசாமி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி இல்லாத சாதிக் கலவரத்தை தூண்டி தமிழர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள குல மற்றும் குடி வரலாற்றைத் தாங்கி நிற்கும் சாதிப் பட்டத்தை அழித்து தமிழ் தேசிய வரலாற்றை அழிக்கும் வேலையை தொடங்கி வைத்தவரே வெங்காய ராமசாமி தான்.

அடுத்தடுத்த பதிவுகளில் வெங்காய ராமசாமியின் துரோகங்களை விரிவாக சொல்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்.

Sunday, June 30, 2019

👉 ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு. தமிழர்கள் இந்துக்கள் அல்லர். குலதெய்வ வழிபாட்டாளர்கள்.

என்னுடைய கீழ்க்கண்ட சமீபத்திய பதிவுகளை படித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்.

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/06/blog-post_11.html

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/06/blog-post.html

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/05/blog-post.html

தமிழ் தேசியத்தின் எதிரிகள் திராவிடர்களும் ஆரியர்களுமே. எதிரிகள் என்று சொல்வதை விட துரோகிகள் என்றே சொல்லலாம்.

உலகின் இல்லுமினாட்டிகள் அமெரிக்காவின் பின்னால் இரகசியமாக அமர்ந்துகொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்  படைத்துக் கொண்டிருக்கும்  இரகசியக்  குழுக்கள் என்ற பயங்கரவாதக் குழுக்களே. இதனை நான் சொல்லவில்லை. அதே அமெரிக்க இரகசியக் குழுக்களிலிருந்து நல்லவராக திருந்தி வெளியே வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி தான் படுகொலை ஆவதற்கு முன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் சுருக்கம் தான்.

ஆக, உலகை இரகசியமாக ஆட்டிப் படிப்பவர்கள் இல்லுமினாட்டிகள். இந்தியாவின் இல்லுமினாட்டிகள் பாஜக வும் RSS ம் இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும் காங்கிரசும் தான்.

தமிழர்களின் இல்லுமினாட்டிகள் ஆரியர்களும் திராவிடர்களும்.

ஐயா முத்துராமலிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகள்.
"ஆரியர்களும் திராவிடர்களும் இரகசியமாக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஒருநாள் இருவரும் கை குலுக்கி கட்டிப்பிடித்து ஒன்றாய் சங்கமிப்பார்கள்."

ஆரியர்கள் என்றால் அரிய வகை உயிரினம், அரிய வகை மனித இனம் என்ற பொருளில்  அரியவர்கள் என்று பொருள் பட உண்டான சொல். அரியவர்கள் அதாவது அரியர்கள் என்ற சொல்லே மருவி ஆரியர் என்றானது.

ஆரியர்கள் என்ற சொல் யூத பிராமணர்களை குறிக்கும் சொல். இந்தியாவின் வடக்கு எல்லை வழியே இந்தியாவிற்குள் நுழைந்து தமிழ்நாட்டிற்குள் நுழைந்த யூத பிராமணர்கள் அரிய வகை மனித இனமாக அதாவது சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். இன்றும் யூத பிராமணர் என்ற ஆரியர்கள் சிறுபான்மை இனம் தான்.

திராவிடர்கள் = திரி + வடுகர்கள்.

திரி என்றால் மூன்று என்று பொருள். திரி என்ற தூய தமிழ் வார்த்தையே ஆங்கிலத்தில் three என்று உண்டானது.

உதாரணத்திற்கு நாம் தமிழில் திரிகடுகம் என்று படித்திருப்போம். திரி என்ற தமிழ் வார்த்தைக்கு மூன்று என்று பொருள். ஈழத்தில் திருகோணமலை என்ற ஊர் உள்ளது. திருகோணமலை என்றால் முக்கோண மலை என்று பொருள்.

திரி என்றால் மூன்று என்று பொருள்.

வடுகர்கள் என்றால் இந்தியாவின் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள். இந்தியாவின் வடக்கில் இருந்து வந்தவர்கள் வடக்கர்கள் என்ற சொல் மருவி வடுகர்கள் என்றானது.

திரி வடுகர்கள் அதாவது திராவிடர்கள் என்றால் மூன்று நிலப்பரப்புகளில் வாழ்ந்த வடுகர்கள் என்று பொருள்.

ஆகவே, தமிழர்களாகிய நாம் வேறு, திராவிடர்கள் வேறு.

திராவிடம் என்ற பெயரில் திருடர் முன்னேற்றக் கழகமும் (திமுக) அனைத்திந்திய திருடர் முன்னேற்றக் கழகமும் (அதிமுக) செய்யும் நுண்ணரசியலை, தமிழர்களாகிய நமக்கு அவர்கள் செய்யும் துரோகங்களை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு நாம் முட்டாள்களாக வாழ்கிறோம்.

இலங்கையில் கடந்த 2008 - 09 ல் நடந்த ஈழ இனப்படுகொலையின் போது  திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர் கருணாநிதி தமிழர்களாகிய நமக்கு செய்த துரோகத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் காணொளி. ( https://youtu.be/Ts9Y_PQv0u0 )

ஆரியமும் திராவிடமும் ஒன்று என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் இன்னொன்று சொல்கிறேன்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த யூத பிராமணர். அதாவது, இவர் ஒரு ஆரியர்.

ஆரியர்களும் திராவிடர்களும் எதிரிகள் என்றால் ராகுல் திராவிட் என்ற ஆரியர் தன்னுடைய பெயரை ராகுல் திராவிடர் என்று திராவிடத்தின் பெயரை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்தால் புரியும் தேவர் ஐயா திராவிடத்தையும் ஆரியத்தையும் பற்றி சொன்னது எவ்வளவு உண்மையென்று.

திராவிட் என்ற வார்த்தையும் திராவிடம் என்ற வார்த்தையும் ஒன்று தான்.

எனவே நான் சொல்கிறேன், "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு." என்று.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள், 30,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினியை இலவசமாக வழங்கிய அதிமுக வின் கன்னட ஜெயலலிதா விற்கு இலவசமாக வழங்க வேண்டிய தண்ணீரை இலவசமாக வழங்க முடியவில்லை. 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர் என்று விற்பனை செய்வதன் மூலம் தண்ணீர் மிகப்பெரிய சந்தைப்பொருள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நம்மால் மடிக்கணினி இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியுமா? புரிந்து கொள்ளுங்கள், திராவிடம் என்ற பெயரில் அதிமுக வும் திமுக வும் செய்யும் நுண்ணரசியலை.

தமிழர்களே, விழித்துக் கொள்ளுங்கள், தமிழ்நாடு பாலைவனமாகுமுன் விழித்துக் கொள்ளுங்கள்.

https://youtu.be/Ts9Y_PQv0u0

- முனைவென்றி நா. சுரேஸ்குமார் சேர்வை.