Sunday, September 18, 2011

இன்று என் தமிழகம்!

அன்று என் தமிழகத்தைப் பார்த்து மாகாகவி பாரதி பாடிவைத்தான்
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே’
என்று.

இன்று என் தமிழகத்தைப் பார்த்து இப்படித்தான் பாடத் தோன்றுகிறது எனக்கு.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்ப
பீர்வந்து பாயுது வாயினிலே’
மாகாகவி பாரதியே, என்னை மன்னித்து விடு உன் பாடலின் முதலிரண்டு வரிகளை நான் remix செய்ததற்கு.


பட்டிதொட்டி எங்கும்
புட்டிதொடாதவன்
ஆண்மகனில்லை!
இன்று என் தமிழகத்தில்...

பிச்சைக்காரன்கூட
பிச்சை கேட்பது
பசிப்பிணிக்கு
மருந்து வாங்குவதற்கல்ல...
மூன்றுவேளையும் மூச்சுமுட்ட
மதுவருந்தவே...

அரிசி மண்ணெண்ணெய் வாங்க
நியாயவிலைக்கடைகளில்
வரிசையில் நின்ற காலம்போய்
இன்று
டாஸ்மாக் கடைகளில்
டிராபிக் ஜாம்!!

கோடிகளையும்
சம்பாதித்துக் கொடுக்கிறது
கேடிகளையும்
உருவாக்கி விடுகிறது
டாஸ்மாக்!
பணமா?
குணமா?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!

நடைபாதைகளில்
பயணிகள் நடக்கத் தடை(!)
கடைக்காரர்களின்
கண்மூடித்தனமான ஆக்கிரமிப்புகள்!
எப்போதும்
திருவிழாக்கோலம் பூண்டபடியே...
மாநகர சாலைகள்!!

பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளில்
பான்பராக் எச்சில்கறை!

சாக்கடை நறுமணம்(!) வீசும்
கூவ ஆறுகள்!!

அண்ணாந்து
பார்த்து வியக்கும்
ஏரோப்ளேன் உயரத்தில்
தங்கத்தின் விலை!

இராக்கெட் வேகத்தில்
விலைவாசிஏற்றம்!

கோடிகளில் ஊழல்!
டைம்பாஸ் காதல்!!

தாலாட்டி வளர்த்த
தாத்தாவும் பாட்டியும்
தள்ளாடும் வயதிலும்
தனிமையில் கிராமத்தில்...

எங்கள் ஊர்
பேருந்துகளின் கால்களில்
செருப்புகள் இல்லை!
அப்படியே செருப்புகள் அணிந்து
அனுமதிக்கப்பட்ட எடையை விட
அளவுக்கதிகமாய்
தலையிலும் முதுகிலும்
தோள்களிலும் சுமந்துகொண்டு
பார்வை மங்கிய கண்களுடன்
ஒவ்வொரு அடியையும்
மிகுந்த எச்சரிக்கையுடன்
எடுத்துவைத்தாலும்
செருப்புகளையும் மீறி
பேருந்துகளின் கால்களை
பதம்பார்க்கத் தவறுவதில்லை
எங்கள் ஊர் கூ(தா)ர்ச் சாலைகள்!

குடிநீர் இல்லாக் 
கிராமங்களில்கூட
மூன்றுவேளையும் குடிப்பதற்கு
சாராயம்!
அவசியம் எது?
அனாவசியம் எது?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!

சந்தி சிரிக்கிறது
இவ்வுலகம்
என் தமிழகத்தைப் பார்த்து!
சிந்திக்க வைக்கிறது
இன்று என் தமிழகம்
எனைப் பார்த்து!!

No comments: