Friday, March 10, 2023

வாத்தி (2023) திரைப்படம் சொல்லும் சித்தர் முருகனின் உண்மை வரலாறு




நான் ஏற்கனவே எழுதிய


என்ற பதிவினை வாசித்து விட்டு தொடருங்கள்.


சற்றுமுன் "வாத்தி" திரைப்படம் பார்த்தேன். வாத்தி என்ற வார்த்தை நம்முடைய அறிவியல் விஞ்ஞானியான முருகனையே குறிக்கும்.

சித்தர் முருகன் குருகுலம் நடத்தியவர். அன்றைய குமரிக்கண்டத் தமிழர்களின் குருவாக, ஆசானாக, வாத்தியாக விளங்கியவர்.

இந்த படத்தில் முருகன் பற்றி நமக்குத் தெரியாத சில மறைமுக செய்திகள் உள்ளன.

படத்தில் வாத்தியாக நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகனான பாலமுருகன். முருகன் உருவாக்கிய சப்த கன்னிகளில் ஒரு பெண் தெய்வம் மீனாட்சி எனும் பச்சையம்மாள். இந்தத் திரைப்படத்தில் வரும் வாத்தி என்ற கதாப்பாத்திரத்தின் காதலி மற்றும் மனைவி கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி.

நான் இந்தப் பதிவில் சொல்வது கற்பனையெனில், இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் பாலமுருகன் என்றும் கதாநாயகியின் பெயர் மீனாட்சி என்றும் சொல்லி வைத்தாற்போல் ஏன் வைக்க வேண்டும்?

முருகனே கூட்டல், கழித்தல் தொடங்கி sin, cos tan,  போன்ற பல கணிதக் கோட்பாடுகளை மட்டுமல்ல இயற்பியல் வேதியியல் கோட்பாடுகளையும் கண்டறிந்தார் என்பது நமக்கு ஏற்கனவே தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் மூலம் தெரிந்ததே.

மேற்சொன்னதை நிறுவும் விதமாக இப்படத்தில் வாத்தியான நம் அப்பன் முருகனான பாலமுருகன் கணிதத்தோடு சேர்த்து வேதியியல் மற்றும் இயற்பியலையும் கற்பிப்பது போல காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் தெலுங்கர். காதநாயகன் தனுஷ் தெலுங்கர், காதநாயகி மலையாளி, நடித்த பிற அனைவரும் தமிழர் அல்லாதோர்.

இதன்மூலம் தமிழர் அல்லாத பிறமொழியாளர்களுக்கு, குறிப்பாக தெலுங்கர்களுக்கு நம்முடைய தமிழர்களின் பழைய வரலாறு அனைத்தும் தமிழர்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஆனால், கடைசி வரை தமிழன் தன்னுடைய உண்மை வரலாறு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் வேதனை.

நம்முடைய விஞ்ஞானிகளான

சிவன்
முருகன்
இராவணன்
கும்ப கர்ணன்
இந்திரன்
கிருஷ்ணன்
விஷ்ணு

போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பரசுராமனின் களப்பிரர் என்ற கலவரப் படையெடுப்பின் மூலம் முக்கால் வாசியும், முகலாயப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை காக்க வருகிறோம் என்று சொல்லி விஜய நகர தெலுங்கு வடுகர்கள் இங்கு வந்து மீதமுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சுவடு தெரியாமல் அழித்ததோடு நம் சித்தர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மேலை நாட்டு யூதர்கள் கண்டுபிடித்ததாக (உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசையை கண்டறிந்த விஷ்ணுவுக்கு பதில் அவர் பெயரை குறிக்கும் படி ஐசக் நியூட்டன் என்பது போல) பொய் வரலாறு எழுதி அதையே இன்று வரை நம் பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நம் சித்தர் விஷ்ணு என்பதற்கு பதில் ஐசக் நியூட்டன் என்பது போன்ற பொய்களையே நாம் இன்று வரை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அழித்த பரசுராமன் போன்ற யூத பிராமண வாரிசுகளுக்கும் விஜய நகரப் பேரரசின் வாரிசுகளான தெலுங்கு வடுகர்களுக்கும் நம் உண்மை வரலாறு நன்றாகவே தெரியும். அவற்றையெல்லாம் திரைப்படங்களில் காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

No comments: